Sunday, March 28, 2021

திருவாசகம் - அன்னைப் பத்து

    

 அன்னைப் பத்து (திருவாசகம்) - Annaipathu (Thiruvasagam)


வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதரிந் நாதனார் அன்னே என்னும். 1 கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர் உள்நின் றுருக்குவர் அன்னே என்னும் உள்நின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக் கண்ணீர் தருவரால் அன்னே என்னும். 2 நித்த மணாளர் நிரம்ப அழகியர் சித்தத் திருப்பரால் அன்னே என்னும் சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும். 3 ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் வேடம் இருந்தவா றன்னே என்னும் வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் வாடும் இதுவென்னே அன்னே என்னும். 4 நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் பாண்டிநன் னாடரால் அன்னே என்னும் பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும். 5 உன்னற் கரியசீர் உத்தர மங்கையர் மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும் மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார் என்ன அதியசம் அன்னே என்னும். 6 வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர் பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும் பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென் உள்ளங் கவர்வரால் அன்னே என்னும். 7 தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர் ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும் ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில் தாள மிருந்தவா றன்னே என்னும். 8 தையலோர் பங்கினர் தாபத வேடத்தர் ஐயம் புகுவரால் அன்னே என்னும் ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம் நையுமிது வென்னே அன்னே என்னும். 9 கொன்றை மதியமும் கூவிள மத்தமும் துன்றிய சென்னியர் அன்னே என்னும் துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே இன்றெனக் கானவா றன்னே என்னும்.

திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் நாத விந்து (பழநி)

திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் நாத விந்து  (பழநி)

நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

Sunday, March 14, 2021

#கோவிந்தா_என்று_உளப்பூர்வமாகச்_சொன்னால்_பெருமாள்_ஓடி_வருவார்''

 #கோவிந்தா_என்று_உளப்பூர்வமாகச்_சொன்னால்_பெருமாள்_ஓடி_வருவார்''


பெருமாள் பக்தர் ஒருவர் அதிகாலை நீராடி, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி பெருமாளைத் தரிசிப்பார். ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார்.
ஒரு குருவிடம் சென்று, ""குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு குறையில்லை. இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன்'' என்றார்.

குரு அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து,""தம்பி! உன் குடும்பம் நலமா? ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா?'' என்று கேட்டார்.
அந்த நபரோ, ""பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை...?''என்றார்.

உடனே பெருமாள் பக்தர் ஆச்சரியத்துடன், ""எனக்கு அந்த மந்திரம் தெரியாதே! அதைச் சொல்லேன்!'' என்றார்.
வந்தவர்,""கோவிந்தா! கோவிந்தா!'' என்றார்.

பக்திமான் ஏமாற்றத்துடன்,""இது தானா! நான் தினமும் விஷ்ணு சகஸ்ரநாமமமே சொல்கிறேன். அதை விடவா இது பெரிது?'' என்றார்.
குரு அவரிடம்,""நீ தவறாக நினைக்கிறாய். ஆயிரம் பெயர்களால் விஷ்ணுவை வணங்குவதே சகஸ்ரநாமம். இது பீஷ்மர் அர்ஜூனனுக்கு உபதேசித்தது. இதைப் போல அற்புதம் வேறில்லை. ஆனால், எல்லாரும் பீஷ்மராக முடியுமா? பாமரனும், பெருமாள் அருள் பெற சொல்லப்பட்டதே கோவிந்த நாமம். திரவுபதியின் மானம் காத்தது அதுவே. எந்த மந்திரமும் அறியாதவன் கூட "கோவிந்தா' என்று உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள் ஓடி வருவார்'' என்றார் குரு. பக்தரின் மனதில் தெளிவு பிறந்தது.

பகவானின் மற்ற நாமங்கள் எல்லாவற்றையும் விட கோவிந்த நாமம் ஏற்றமானதா?

ஆம் மிகவும் ஏற்றமானது அந்த கோவிந்த நாமம்

இதை பெரியாளவரின் பெண்பிள்ளை கோதைஆண்டாள் தனது திருப்பாவை பாசுரத்தின் முடிவில் மிக அழகாக விவரித்துள்ளாள்

எப்படியானால்

ஆண்டாள் தனதுதிருப்பாவை 27வது பாசுரத்தில்

"கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" என்றும்,

28வது பாசுரத்தில்
"குறைவொன்றுமில்லாத கோவிந்தா" என்றும்,

நேற்றய 29வது பாசுரத்தில் "இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா" என்றும்

மூன்று முறை வரிசையாக கோவிந்த நாமம் பாடுகிறார்.

"கறவைகள் பின்சென்று" பாசுரத்தில் கோவிந்தனை
"குறைவொன்றுமில்லாத கோவிந்தா"என்று அழைத்து விட்டு

கூடவே
"அன்பினால் உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே" என்று வேண்டுகிறார் ஆண்டாள்

அப்படியானால் ஆண்டாள் பகவானை சிறுபெயரை வைத்து அழைத்துள்ளாளா

பார்ப்போம்
ஆண்டாள் முந்தைய 24 திருப்பாவை பாசுரங்களிலும் பகவானை அழைத்த சிறு பெயர்கள் இதோ:

1)நாராயணன்,
2)பரமன்
3)உத்தமன்
4)கண்ணன்
5)பத்மநாபன்
6)மாயன்
7) யமுனைத்துறைவன் 8)தாமோதரன்
9) நாராயணன்மூர்த்தி
10)கேசவன்
11)தேவாதிதேவன்
12)மாதவன்
13)வைகுந்தன்
14) புண்ணியன்
15)மணிவண்ணன்
16)மனத்துக்கினியான்
17)மணிவண்ணன்
18)உம்பர்கோமான்
19)மலர்மார்பன்
20)கலி
21) விமலன்
22)ஊற்றமுடையாய்
23)பெரியாய்
24) சுடர்

இந்த உன்னதமான பெயர்களையே ஆண்டாள் சிறுபேர் என்கிறாள் என்றால்,கோவிந்த நாமத்தின் மகிமையைச் சொல்லவும் வேண்டுமோ?

சொல்லுவோம் தினமும் கோவிந்தா கோவிந்தா என்ற பகவத் நாமாவை
தொலைப்போம் நம் ஜென்மத்தை!!

"கோவிந்தா கோவிந்தா கோவிந்தா"

யாருக்கு மறுபிறவி கிடையாது? கருட புராண ரகசியம்

 யாருக்கு மறுபிறவி கிடையாது? கருட புராண ரகசியம்



பொதுவாக மனிதர்கள் பல பிறவி எடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது. அப்படியானால் மறுபிறவியில் இருந்து விடுபட வழியே இல்லையா? யாருக்கெல்லாம் மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும்.

இது குறித்த சில தகவல்கள் சாஸ்திரங்கள், கருட புராணம் போன்றவற்றில் உள்ளன. வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்ப்போம்.

பொதுவாக ஒரு ஆத்மா இந்த பூமியில் அனுபவிக்க வேண்டிய அணைத்து கர்மவினைகளையும் அனுபவித்து முடித்துவிட்டால் அந்த ஆத்மாவிற்கு மறுபிறவி ஏற்படாது.

தனக்கென்ன எந்த ஒரு ஆசையும் இல்லாமல் பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை.
தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க, ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

இறைவனை மனதில் நிறுத்திக்கொண்டு, பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு எப்பொழுது இறைவனின் எண்ணத்தோடு வாழும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.

நமது சாஸ்திரத்தின்படி இவ்வுலகில் வாழும் அனைவரும் பிரமாத்மாவில் இருந்து வந்த ஜீவன்கள் தான். நிச்சயம் ஒருநாள் இந்த ஜீவன்கள் பரமாத்மாவை அடைந்தே தீர வேண்டும். அது ஒரு பிறவியிலும் நடக்கலாம் அல்லது ஓராயிரம் பிறவியிலும் நடக்கலாம். அனால் நிச்சயம் ஒரு நாள் அது நடக்கும்.

சிரவண விரதம் & சிரவண தீபம்👇👇

 சிரவண விரதம் & சிரவண தீபம்👇👇


https://youtu.be/RSgdbp3TZe0

https://youtu.be/RSgdbp3TZe0

#ஒப்பில்லாத_பெருமான் நம் #ஒப்பில்லியப்ப_பெருமாள்

பாடல் வரிகள்

🙏நிறைய பேரின் குலதெய்வம் 🙏

🙏ஒப்பில்லியப்பன் கோவிலில் இன்று14/1/2021 வியாழக்கிழமை தைப்பொங்கல் தினம் திருவோணம் நட்சத்திரம் அன்று தரிசித்து போன்ற உணர்வு பெறுவோம் . பெருமாள் விரைவில் நேரில் தரிசிக்க வழி விடுவார் !

🙏ஓம் நமோ நாராயணாய🙏

🙏ஒப்பிலாத பெருமாள் நம் ஒப்பில்லியப்பத் திருமால்
ஒப்பிலாத பெருமாள் நம் ஒப்பில்லியப்பத் திருமால்

உலகினிலே பல கலையும் உயர் பொருளும் உதவிடுவார்
உலகினிலே பல கலையும் உயர் பொருளும் உதவிடுவார்

நம் ஒப்பிலாத பெருமாள் நம் ஒப்பில்லியப்பத் திருமால்

எப்பொழுதும் அருள்வார் அவர் எப்பதமும் தருவார்
எப்பொழுதும் அருள்வார் அவர் எப்பதமும் தருவார்

எழுந்து மலர்ந்து எழிலுடனே நிமிர்ந்து நிற்பார் பொலிவுடனே
எழுந்து மலர்ந்து எழிலுடனே நிமிர்ந்து நிற்பார் பொலிவுடனே

எதிர் வருவார் துயர் களை வார்
பதம் பணிவோம் பணி புரிவோம்

எதிர் வருவார் துயர் களை வார்
பதம் பணிவோம் பணி புரிவோம்

என்றென்றும் புகழ் பாடி இன்புற்றே வாழ்ந்திருப்போம்
என்றென்றும் புகழ் பாடி இன்புற்றே வாழ்ந்திருப்போம்

நம் ஒப்பிலாத பெருமாள் நம் ஒப்பிலியப்பத் திருமால்

ஏழுமலை இங்கிருக்க ஏகாந்தம் எதிரிருக்க
ஏழுமலை இங்கிருக்க ஏகாந்தம் எதிரிருக்க

ஏது குறை ஏது வினை ஏது பயம் என்றிருப்போம்
ஏது குறை ஏது வினை ஏது பயம் என்றிருப்போம்

இருளை களைந்து ஒளி தருவார் அருளை அடைந்து வழி பெறுவோம்
இருளை களைந்து ஒளி தருவார் அருளை அடைந்து வழி பெறுவோம்

இன்பமெல்லாம் தந்திடுவார் அன்பு மனம் கொண்டிடுவார்
இன்பமெல்லாம் தந்திடுவார் அன்பு மனம் கொண்டிடுவார்

எம்பெருமான் நம் பெருமான் இணை அடியே துணை நமக்கு
எம்பெருமான் நம் பெருமான் இணை அடியே துணை நமக்கு

எங்கள் பிரான் தயவிருக்க எது வரினும் நாம் அஞ்சோம்
எங்கள் பிரான் தயவிருக்க எது வரினும் நாம் அஞ்சோம்

எப்பொழுதும் நாம் மறவோம் ஒப்பில்லியப்பத்தானை
எப்பொழுதும் நாம் மறவோம் உப்பிலியப்பத்தானை

இருளை களைந்து ஒளி தருவார் அருளை அடைந்து வழி பெறுவோம்

நம் ஒப்பிலாத பெருமாள் நம் உப்பிலியப்பத் திருமால்

உலகினிலே பல கலையும் உயர் பொருளும் உதவிடுவார்

நம் ஒப்பிலாத பெருமாள் நம் உப்பிலியப்பத் திருமால்

நம் உப்பிலியப்பத் திருமால்.🙏🙏

🙏ஒம் நமோ நாராயணா🙏

🌷ஒவ்வொரு மாதமும் சிரவணத் திருநாளில் நீராடி விரதம் இருந்து உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்த பின்னர், அதனை உண்டு விரதம் முடிப்பதே சிரவண விரதமாகும்.

🌷தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். ஆகாச நகரம், #திருவிண்ணகர் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. பக்தர்கள் நினைத்ததை நடத்தி வைப்பவர் உப்பிலியப்பன்.

🌷இத்தலத்திற்கு வந்து ஸ்ரீனிவாசனை சரணடைந்தோர் அவரது அருளை பரிபூரணமாய் பெறுவது திண்ணம். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

🌷108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஒப்பில்லியப்பன் கோயிலில் #மாதாமாதம்_சிரவணம் என்ற விழா பிரசித்தம்.

🙏🙏🌷சிறப்பு என்னன்னா '#மாம்_ஏகம்_சரணம்_வ்ரஜ'

#என்னை_சரணைந்தால்_உன்னை_நான்_காப்பேன் என்ற சரமச்லோகப்பகுதி,

எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.🙏🙏🌷

🌷ஒவ்வொரு மாதமும் சிரவணத் திருநாளில் பகல் 11 மணிக்கு சிரவண தீபம் தரிசனம் செய்யலாம்.

🌷இத்திருநாளில் விரதம் இருந்து நீராடி, உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்த பின்னர், அதனை உண்டு விரதம் முடிப்பதே சிரவண விரதமாகும்.

🌷பக்தர்கள் இந்த விரதத்தை தங்களது வீடுகளிலும் கடைப்பிடிக்கலாம். குருவாயூரைப் போன்று இங்கும் துலாபாரம் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உப்பு தவிர தங்கள் வேண்டுதலுக்கேற்ப அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்தலாம்.

🌷ஒப்பில்லியப்பனுக்குப் படைக்கப்படும் உப்பில்லாத உணவையே பிரசாதமாக உண்டு வருக்கிறார்கள் .

🙏பூமி நாச்சியார் பகவானுக்கு சமைக்கும்போது உப்புப் போட மறந்துவிட்டதால் பெருமாள் உப்பில்லாமலே படைப்பதாக ஐதீகம்.🙏

🌷ஒப்பில்லியப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் சிரவண நக்ஷத்திரத்தன்று சிரவண தீபம் எடுத்து குறி சொல்வது விசேஷம். பெருமாளுக்கு நெய் தீபம் பிரகாரமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

🌷கும்பகோணத்தில் இருந்து தெற்கில் 7 கிலோ மீட்டர் தூரத்திலும், காரைக்கால், திருநள்ளாறு செல்லும் சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திலும், ராகு தலமான திருநாகேஸ்வரம் கோவிலுக்கு மிக அருகிலும் ஒப்பிலியப்பன் கோவில் அமைந்துள்ளது.

ஓம் நமோ நாராயணா 🙏🙏

சிரவண விரதம் சிரவண தீபம்👇👇

https://youtu.be/RSgdbp3TZe0

நாராயணா நீயே கதி ஐயா

 திருப்பாற்கடல் எம்பெருமானே நாராயணா அருட்பெருங்கடலே ஆனந்த வாழ்வைத் தருவாயே


வாடிடும் பக்தரைத் தேடியே சென்று வரம்பலத் தந்து அருள்பவனே நாராயணா
நாடிடும் பக்தர்கள் வேண்டிடும் வரத்தை உடனுக்குடனே கொடுப்பவரே

நலம் பலம் வளம் பொருள் புத்தி புகழ் நல்லன எல்லாம் தந்து அருள்பவனே
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனம்தந்து மகிழ்ச்சி தருபவரே

தொல்லைப் போக்கி துன்பம் நீக்கி மகிழ்ச்சி வாழ்வு தந்துவிடு ஐயா

நெய்தீபம் ஏற்றியவர் மனமெல்லாம் வந்திடும் நெய்யாய் நெகிழ்ந்து உருகுது ஐயா

கற்பூர தீபம் ஏற்றியவர் பாவங்கள் கற்பூர ஜோதியில் கரையுது ஐயா

எண்ணெய் விளக்கு ஏற்றிடும் அவரவர் எண்ணங்கள் என்றும் ஈடேறு ஐயா
ஓம் நமோ நாராயணா நீயே கதி ஐயா 🙏🙏🙏

தூணிலுமிருப்பார் துரும்பிலு மிருப்பார்

தூணிலுமிருப்பார் துரும்பிலு மிருப்பார்

துரிதமாய் அருள்வார் நாராயணன்.

ஆணவம் அழிப்பார் அன்பாய் வருவார்
ஆபத்பாந்தவன் நரசிம்மன்.

உன்னிலுமிருப்பார் என்னிலுமிருப்பார்
உத்தம புருஷன் நாராயணன்

பக்தரைக் காப்பார் பாபத்தை போக்கும்
பட்டொளி வேந்தன் பராபரன்.

உள்ளிலும் இருப்பார் வெளியிலுமிருப்பார்
ஊழ்வினை அழிப்பார் நாராயணன்

எள்ளிலும் இருப்பார் புல்லிலும் இருப்பார்
பார்புகழ் வேந்தன் ப்ரபாகரன்.

சித்தராகிருப்பார் சீறிப் பாய்வார்
சிந்தையில் இருப்பார் ஸ்ரீனிவாசன்

பாபத்தை அழிப்பார் பக்தியை அருள்வார்
ஆனந்தஜோதி ஆலிலையான்.

அன்னையைக் காப்பார் தந்தையைக் காப்பார்
அன்பர்க்கு அன்பன் நரசிம்மன்

சிசுவைக் காப்பார் சிந்தையில் நிற்பார்
ப்ரதோஷ நாயகன் நரசிம்மன்.
 
லட்சுமி நரசிம்மா நீயே கதி ஐயா 🙏🙏🙏

ஏற்றுக்கொள் என் தெய்வமே ..

 பொன்னான என் தெய்வமே கொஞ்சி மகிழ குழந்தைகள் தந்தாய்...

வளமோடு வாழ செல்வங்கள் தந்தாய்..
 
உன்னை காண விழிகளை தந்தாய்.. 

உன் மலை நடக்க பாதங்கள் தந்தாய் ..

உன் புகழ்பாட குரல் தந்தாய்.. வாழ்க்கையில் பல கலைகள் தந்தாய் ...

எல்லாம் நீயே தருகிறாயா !!

நான் உனக்கு என்ன தருவேன்? 

என் மூச்சுக் காற்றைத் தவிர வேறொன்றும் என்னிடம் இல்லை.. 

ஏனென்றால் எல்லாம் உன்னுடையது , 

என் மூச்சுக் காற்றை உனக்குத் தர காத்துக்கொண்டு உள்ளேன் ,,

ஏற்றுக்கொள் என் தெய்வமே ..

*கண்ணனின் கதை கேளுங்க!*

 🍀சர்வம் விஷ்ணு மயம் 🍀

*கண்ணனின் கதை கேளுங்க!*

கண்ணபரமாத்மாவின் கதையைக் கேட்பதால் என்ன லாபம்? என்ற சந்தேகம் ஒரு ராஜாவுக்கு ஏற்பட்டது. மந்திரியிடம் இதுபற்றி கேட்டான். என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்! பரீட்சித்து மகாராஜாவுக்கு சுகப்பிரம்ம முனிவர் கண்ணனின் கதையை சொன்னார். அதைக் கேட்டு ராஜா ஆத்மஞானம் (உலக வாழ்வில் இருந்து விடுதலை பெறுதல்) பெற்றார். அந்தக்கதைகளின் தொகுப்பே ஸ்ரீமத் பாகவதம் என்னும் புகழ் பெற்ற நூலாக இருக்கிறது. இது உங்களுக்கு தெரியாதா? என்றார் மந்திரி. அப்படியா! அப்படியானால், நானும் உடனடியாக ஆத்மஞானம் பெற்றாக வேண்டும். பாகவதம் தெரிந்த பண்டிதர் ஒருவரை அரண்மனைக்கு வரச்சொல்லுங்கள். அவருக்கு தகுந்த சன்மானம் கொடுங்கள், என்று உத்தரவு போட்டான். அந்த ஊரிலேயே சிறந்த ஒரு பண்டிதரை அரண்மனைக்கு வரவழைத்தனர். அவருக்கு பாகவதம் அத்துப்படி. வரிக்கு வரி அருமையான வியாக்கியானம் தருவார். அவர், தனக்கு நிறைய சன்மானம் கிடைக்கும் ஆசையில், அரண்மனைக்கு சந்தோஷமாக வந்தார். தன் திறமையையெல்லாம் காட்டி, ராஜாவுக்கு கதை சொன்னார். தினமும் கை நிறைய அல்ல...பை நிறைய தங்கக்காசுகளை அள்ளிச் சென்றார்.

இரண்டு மாதம் கழிந்தது. ராஜாவுக்கு ஆத்மஞானம் வரும் வழியைக் காணவில்லை. அவன் பண்டிதரிடம்,யோவ் பண்டிதரே! என்னிடம் தினமும் பை நிறைய தங்கம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறீரா! இந்தக் கதையைக் கேட்டால், ஆத்மஞானம் வரும் என்றார்கள். எனக்கு இதுவரை வரவில்லையே! இதற்கான காரணத்தை நாளைக்குள் எனக்கு சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், உம்மை... என்று உறுமினான். பண்டிதர் நடுங்கிப்போய் விட்டார். வீட்டுக்கு கவலையுடன் வந்த பண்டிதரை அவரது பத்து வயது மகள் பார்த்தாள். நடந்ததை அறிந்தாள். அப்பா! இந்த சின்ன விஷயத்துக்குப் போயா கவலைப்படுகிறீர்கள்? என்னை நாளை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள். இதை நானே சமாளித்து விடுவேன். நிம்மதியாக போய் உறங்குங்கள். அந்தக் கண்ணன் இதற்கு ஒரு வழி காட்டுவான், என்றாள். இவள் என்ன உளறுகிறாள்? என்று எண்ணியபடியே பண்டிதர் படுக்கப் போனார். கஷ்டம் வந்ததும் கண்ணனின் நினைப்பும் அவருக்கு வந்துவிட்டது. கனவில் கண்ணன் வந்து, பயப்படாதே! நானிருக்கிறேன் என்று சொல்வது போல் இருந்தது.

மறுநாள், மகளுடன் அரண்மனைக்கு சென்றார். மன்னனிடம் அந்தச்சிறுமி,மன்னா! நேற்று என் தந்தையிடம் தாங்கள் கேட்ட கேள்விக்குரிய பதிலைச் சொல்லவே வந்துள்ளேன், என்றதும், சிறுமியான நீ இந்த பெரிய விஷயத்துக்கு எப்படி பதில் சொல்வாய்? என்றான் மன்னன் ஆச்சரியமாக. மன்னா! நான் சொல்வதைச் செய்யுங்கள். இரண்டு கயிறுகளை எடுத்து வரச்சொல்லுங்கள். நம் இருவரையும் இந்த தூண்களில் கட்டி வைக்கச் சொல்லுங்கள், என்றாள். அரசன் அதிர்ந்தான். இருப்பினும் அவள் சொன்னபடி இருவரையும் காவலர்கள் தூணில் கட்டினர். மன்னா! இப்போது நீங்களே வந்து என்னை அவிழ்த்துவிடுங்கள், என்றாள். உனக்கு பைத்தியமா! கட்டப்பட்டிருக்கும் என்னால் உன்னை எப்படி அவிழ்த்து விட முடியும்? என்ற மன்னனிடம்,நீங்கள் சொன்னது போல், இருவரும் கட்டப்பட்டிருந்தால் ஒருவரை ஒருவர் விடுவிக்க முடியாது. அதுபோல், என் தந்தையும் குடும்பம் என்ற தழையால் கட்டப்பட்டிருக்கிறார். நீங்களும் ஆட்சி, அதிகாரம், சுகபோகம் என்ற பந்தத்தால் கட்டப்பட்டுள்ளீர்கள். பந்தங்களில் இருந்து விடுபட்ட ஒருவரிடம், பந்தத்தை அறுத்த ஒருவன் பாகவதம் கேட்டால் தான் ஆத்மஞானம் பெற முடியும். கண்ணனின் கதையைப்படித்தால் போதாது. அவனை அடைய கோபியர்கள் எல்லாவற்றையும் துறந்தார்களோ, அப்படி நீங்களும் எல்லாவற்றையும் துறக்க வேண்டும் புரிகிறதா! என்றாள். மன்னன் தன் தவறை உணர்ந்தான். தனக்கு உண்மைநிலையை உணர்த்திய சிறுமியை வாழ்த்தினான்.
🌿சர்வமும் ஸ்ரீ கிருஷ்ண அர்ப்பணம்...

🌹 கிருஷ்ணார்பணம்!

 🌹 கிருஷ்ணார்பணம்!


”சர்வம் கிருஷ்ணார்பணம்” இந்த வாக்கியத்தை முதலில் கூறியது யார்?

சர்வம் கிருஷ்ணார்பணம் என்று சொன்னவன் கர்ணன்.

பரசுராம் என்ற பிரமணரின் சாபத்தால் பாரத போரில் தோற்ற கர்ணன்:

முன்னொருநாளில் அந்தணரால் கொடுக்கப்பட்ட சாபத்தால் போர் தருவாயில் கர்ணனின் தேர் சகதியில் சிக்கிக் கொள்கிறது.

பரசுராமரின் சாபத்தால் முக்கியமான தருணத்தில் அஸ்திரத்திற்கான மந்திரம் கர்ணனுக்கு மறந்து போகிறது.

கர்ணன் உடல் மீது அர்ஜுனனின் அம்புகள் தைத்தது. ஆனாலும் உயிர் பிரியவில்லை.

அந்தனராக வந்த கிருஷ்ண பகவான்:

பின்பு கிருஷ்ணபகவான் அந்தணர் வேடத்தில் கர்ணன் முன் தோன்றி தான் மலைகளில் தவம் பூண்டிருப்பதாகவும் கர்ணனின் கொடை குறித்து அறிந்ததால் கர்ணனிடன் யாசகம் பெற வேண்டி வந்ததாக உரைக்கிறார்.

இந்த இடத்தில் கிருஷ்ண பரமாத்மா பொய் உரைப்பதாக தோன்றும். ஆனால் அவ்வாரு அல்ல.

பகவான் அனைவர் மனதிலும் நித்தம் நித்தம் தவம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.

அதை நாம்தான் உணர மறுக்கிறோம்

சர்வம் கிருஷ்ணார்பனம்:

யாசகம் கேட்டு வந்திருப்பது அந்தனர் அல்ல கிருஷ்ணர்தான் என்றுணர்ந்த கர்ணன். என்னிடம் இல்லாததை கேட்டு என்னை இல்லை என்று சொல்ல வைத்துவிடாதே என்று அந்தனர் வேடம் பூண்ட கிருஷ்ண பரமாத்மாவை பணிகிறான்.

கிருஷ்ணரும் “நீர் செய்த புண்ணியத்தை கொடுப்பாயா” என்று வினவிகிறார்.

அதற்கு கர்ணன் “நான் செய்த, செய்யும், செய்யப் போகும் புண்ணியம் அனைத்தையும் உனக்கு தருகிறேன்” என்று இதயத்தில் தைத்த அம்பை எடுத்து தனது குருதியின் வாயிலாக தர்மம் செய்கிறான்.

அந்த சமயத்தில் கிருஷ்ணரை பார்த்து சர்வம் கிருஷ்ணார்பணம் என்று கூறுகிறான்.

யாசகத்தை பெற்றுக் கொண்டு தனது விஸ்வரூபத்தை கர்ணனுக்கு காட்டுகிறார்.

கர்ணன் பரவச நிலை அடைந்து “எனக்கு முக்தி வேண்டும் அப்படி முக்தி இல்லை என்றால் வரும் பிறப்புகளிலும் இல்லை என்று சொல்லா இதயம் வேண்டும் என்று வரம் கேட்கிறான்.

கிருஷ்ணரும் அருள்கிறார்.

இங்கே யாசகம் கொடுக்கும் போது கிருஷ்ணரின் கை தாழ்கிறது. கர்ணனின் கை உயருகிறது.

கர்ணனுக்கு ஒரு ஆசை உண்டு அது யாதெனில் எல்லாருக்கு யாசகம் செய்தாயிற்று, கிருஷ்ண பகவானுக்கு மட்டும் யாசகம் செய்யவில்லை என்பதுதான்.

பகவான் கிருஷ்ணன் தன் பக்தனுக்காக இங்கே தன்னை தாழ்த்திக் கொள்கிறார்.

நாமும் பக்தியுடன் பகவானிடம் வேண்டினால் கண்டிப்பாக நமது காலத்துக்குள் அதனை நமக்கு தந்து அருளுவான்.

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி பாடல்

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி பாடல் !!ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி வருகை பாடல்!!உலகமெல்லாம் காத்து நிற்கும் தேவிமகாலக்ஷ்மி


உலகமெல்லாம் காத்து நிற்கும் தேவிமகாலக்ஷ்மி
உன்பாதம் சரணடைந்தோம் அஷ்டலக்ஷ்மி
உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலெக்ஷ்மி
கலையாவும் நிறைந்தவளே அஷ்டலக்ஷ்மி
நிலையான அருட்செல்வம் அருள்பவள் அவளே
உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே !

ஸ்ரீ லக்ஷ்மி!!

பாற்கடலில் தேவர் அமுதம் கடையும் போது
பாரெல்லாம் வியந்திட நாரணி உதித்தாள்
நாரணனும் தேவியை மார்பினில் தாங்கி நின்றார்
பூரணியும் பூவுலகைக் காக்க வந்தாள்
அவளே ஸ்ரீ லக்ஷ்மி தேவி லக்ஷ்மி!

1. ஸ்ரீ ஆதிலக்ஷ்மி!!

இரு கண்கள் திருக்கரங்கள் கொண்டவள் அவளே
இகபரசுகம் யாவும் கொடுப்பவள் அவளே
அபயம் அளிப்பவளே ஆதிலக்ஷ்மி அவளே
ஆபரணம் அணிந்த ஒளிக்கதிர் ராணி அவளே
எழில் மலரத் தோரணங்கள் சூழ்பவள் அவளே
அழகிய தாமரைமேல் வாழ்பவள் அவளே
மஞ்சள் நிறஉடை தரித்து மலர்மாலை அணிந்தவளே
மங்களம் நிறைந்தவளே வல்லமை மிகுந்தவளே
ஆதிலக்ஷ்மி அன்னை ஆதிலக்ஷ்மி!

2. ஸ்ரீ சந்தானலக்ஷ்மி!!

ஜடாமகுடம் அணிந்து காட்சி தந்தாள்
அன்னை இடுப்பினில் சுகுமாரனை ஏந்தி நின்றாள்
வீரம் மிகுந்த அபயக் கரங்கள் இரண்டிலே
பூரணக் கும்பமும் வைரக் கங்கணமும் விளங்க
அழகிய மாதரும் தீ பமும் தாங்கியே
எழில் வெண் சாமரம் வீசியிருக்க
முத்திழைத்த உரையோடு துலங்கும்
சக்தியோடு எழில் ராணியாக
சந்தானலக்ஷ்மி அவதரித்தாள்
அவள் சந்தான சௌபாக்கியம் தந்திடுவாள்!

3. ஸ்ரீ கஜலக்ஷ்மி!!

பொன்னிறக் குடம் தாங்கி
வெண்ணிறயானை யிரண்டு
தன்னிரு துதிக் கையினால்
அபிஷேக நீர் கொண்டு
அன்னைக்கு நீராட்ட
அலங்கார தேவதையாய்
வெண்பட்டு புடவையுடன் காட்சி தந்தாள்
கரங்கள் நான்கும் உடையவளாம் கஜலக்ஷ்மி
திருக்கரத்தில் ஞானமுத்திரை உடையவளாம் கஜலக்ஷ்மி
இரவும் பகலும் துதிப்பவர்க்கே கஜலக்ஷ்மி
அரச போகம் தந்திடுவாள் கஜலக்ஷ்மி!

4. ஸ்ரீ தனலக்ஷ்மி!!

செல்வ திருமகளாம் மோகனவல்லி
எல்லோரும் கொண்டாடும் வேதவல்லி
எண் கரங்களில் சங்கு சக்கரம்
வில்லும் அம்பும் தாமரை
மின்னும் கரங்களில் நிறைகுடம்
தளிர்த் தாம்பூலம் அணிஸ்யாமாளை
வரத முத்திரை காட்டியே பொருள் செல்வம்
வழங்கிடும் அம்பிகை
மாமனோகர தேவி மார்பினில்
ஒற்றைவடப் பொன்னட்டிகை
சிரத்தினில் மணி மகுடமும்
தாங்கிடும் சிந்தாமணி - பல
வரங்கள் வழங்கிடும் ரமாமணி - அவள்
வரதராஜ சிகாமணி அவள்தான் தனலக்ஷ்மி!

5. ஸ்ரீ தான்யலக்ஷ்மி!!

ஆற்றோரம் தன்னில் சுகாசனத்தில் அமர்ந்து
போற்று மன்பரைக் கண்டு மலர்ச்சியும் கொண்டுஎழில்
வாழை மரங்கள் மலர்தேன் பொழிந்து பூஜிக்க
ஆழ்கடல் அன்னையவள் காட்சி தந்தாள்
இடக்கை மேல்புறத்தில் செழுங்கரும்பை யேந்தி
இகத்தினில் நிலவளம் செழிக்க வந்தாள்
அவள்தான் தான்யலக்ஷ்மி! தான்யலக்ஷ்மி!

6. ஸ்ரீ விஜயலக்ஷ்மி!!

சிங்கார முடிதனிலே அலங்காரக் கூந்தல்
செம்மேனியில் சிறந்த பொன்னாபரணங்கள்
அங்குச பாசமும் பல ஆயுதம் கையில் கொண்டு
செங்கோல் செலுத்தும் ராஜவடிவம் கொண்டாள்
அன்னையின் முகம் தன்னில் தவழ்ந்திடும்மந்தஹாசம்
அன்னைப் பறவை தாங்கும் அழகிய மலர்ப்பாதம்
அன்பரைக் காத்து நிற்கும் அவளது தாய்ப்பாசம்
துன்பங்கள் நேராமல் காத்திடும் அவள் நேசம்
விஜயலக்ஷ்மி தேவி விஜயலக்ஷ்மி !

7. ஸ்ரீ மகாலக்ஷ்மி!!

நிறைந்திடும் அழகோடு வளரும் பொன்மேனியாள்
அறம், பொருள், வீடு, இன்பம் தரும்
நான்கு கரம் கொண்டாள்
அழகிய மலர் கொண்டு யானைகள் வணங்கி நிற்க
எழிலாக காட்சி தந்தாள் எங்கள் தாய்
சௌபாக்கியம் தரும் தெய்வம் தேவி லக்ஷ்மி
அபயக்கரம் நீட்டி அணைக்கும் மகாலக்ஷ்மி !

8. ஸ்ரீ வீரலக்ஷ்மி!!

ஒன்பது பனைமரங்கள் அடுத்து நிற்க தேவி
சிம்மாசனத்தின்மேல் அமர்ந்திருக்க
வெற்றி எட்டு கைகளிலும் சூலம்
கபாலம் கொண்டாள்
நற்கதியும் நமக்கருள நானிலத்தில் அவதரித்தாள்
பொற்பதம் பணிந்தவர்க்கு பொன்னாவரம் தந்து
வெற்றியுடன் வாழவைப்பாள் வீரலக்ஷ்மி
வரவேண்டும் வரவேண்டும் அஷ்டலக்ஷ்மி
அருளைத் தரவேண்டும் தரவேண்டும் ஆதிலக்ஷ்மி
சந்ததியைத் தந்திடுவாய் சந்தான லக்ஷ்மி
எண்ணும் பல யோகங்கள் தருவாயே கஜலக்ஷ்மி
தனம் பெருக மனமும் மகிழ காண்பாராய் தனலக்ஷ்மி
மனம் குளிர நிலம் செழிக்க நீயருள்வாய் தான்யலக்ஷ்மி
கலைகளில் வெற்றிதனைக் காண அருள் விஜயலக்ஷ்மி
சகல சௌபாக்கியம் தந்திடு மகாலக்ஷ்மி
உலகெங்கும் வீரத்தை நீயருள்வாய் வீரலக்ஷ்மி
உன்நாமம் சொல்பவர்க்கு அருள்புரிவாய் அஷ்டலக்ஷ்மி

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி வருகை பாடல்!!

எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம்
கொட்டுவகை நானறிந்தேன் கோலமயி லானவளே
வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதி லெட்சுமி
வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்!

சிந்தைனைக்குச் செவிசாய்த்துச் சீக்கிரமென் னில்லம்வந்து
உந்தனருள் தந்திருந்தால் உலகமெனைப் பாராட்டும்
வந்தமர்ந்து உறவாடி வரங்கள்பல தருவதற்கே
சந்தான லெட்சுமியே தான் வருவாய் இதுசமயம்!

யானையிரு புறமும் நிற்கும் ஆரணங்கே உனைத்தொழுதால்
காணுமொருபோ கமெலாம் காசினியில் கிடைக்குமென்பார்
தேனிருக்கும் கவியுரைத்தேன் தேர்ந்தகஜ லெட்சுமியே
வானிருக்கும் நிலவாகி வருவாய் இதுசமயம்!

அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம்
உன்றனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ
இன்றோடு துயர்விலக இனியதன லெட்சுமியே
மன்றாடிக் கேட்கிறேன் வருவாய் இதுசமயம்!

எங்கள்பசி தீர்ப்பதற்கு இனியவயல் அத்தனையும்
தங்கநிறக் கதிராகித் தழைத்துச் சிரிப்பவளே
பங்குபெறும் வாழ்க்கையினைப் பார்தான்ய லெட்சுமியே
மங்களமாய் என்னில்லம் வருவாய் இதுசமயம்!

கற்றுநான் புகழடைந்து காசியினில் எந்நாளும்
வெற்றியின்மேல் வெற்றிபெற வேணுமென்று கேட்கிறேன்
பற்றுவைத்தேன் உன்னிடத்தில் பார்விஜய லெட்சுமியே
வற்றாத அருட்கடலே வருவாய் இதுசமயம்!

நெஞ்சிற் கவலையெல்லாம் நிழல்போல் தொடர்ந்ததனால்
தஞ்சமென உனையடைந்தேன் தாமரைபோல் நிற்பவளே
அஞ்சாது வரம் கொடுக்கும் அழகுமகா லெட்சுமியே
வஞ்சமில்லா தெனக்கருள வருவாய் இதுசமயம்!

ஏழுவித லெட்சுமிகள் என்னில்லம் வந்தாலும்
சூழுகிற பகையொழிக்கும் தூயவளும் நீதானே
வாழும் வழிகாட்டிடவே வாவீர லெட்சுமியே
மாலையிட்டு போற்றுகிறேன் வருவாய் இதுசமயம்!

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மிதிருவடிகளை போற்றுவோம் . ஸ்ரீ அஷ்டலக்ஷ்மிதிருவடிகளே சரணம்

💫❄️💫ஆன்மீகம் அறிவோம்💫❄️💫

 💫❄️💫ஆன்மீகம் அறிவோம்💫❄️💫


🪆கண்ணன் இன்றும் மன்னனாக ஆட்சி செய்யும் திருத்தலம் துவாரகை.

🪆விநாயகப் பெருமானுக்குரிய கணேச பஞ்சரத்னத்தைப் பாடியவர்,ஆதிசங்கரர்.

🪆தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை
அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)என்று குறிப்பிடுவர்.

🪆வெற்றியைத் தரும் முருகப்பெருமானுக்குரிய தமிழ் மந்திரம்,
"வேலு(ம்) மயிலும் துணை".

🪆ராமபிரானுக்காகப் போர் புரியக் கிளம்பிய ஆழ்வார்,குலசேகராழ்வார்.

🪆சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் 108.சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர் காரைக்காலம்மையார்.

🪆"மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே'என்று நடராஜரிடம் வேண்டியவர்,அப்பர்.(திருநாவுக்கரசர்)

🪆நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகனின் அடையாளம் ஆணவம்.(ஆணவம் அடங்கினால் ஆனந்தம் உண்டாகும்)

🪆பஞ்ச சபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்,குற்றாலம்.நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம் சங்கார தாண்டவம்.

🪆இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை
வெள்ளியம்பலத்தில்(மதுரை)காணலாம்.

🪆மாலை வேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம் பிரதோஷ நடனம்.

🪆நடராஜருக்குரிய விரத நாட்கள் திருவாதிரை,கார்த்திகை சோமவாரம்.திருவாதிரை பிரசாதம்,களி.

🪆சூரிய தேவனை
நவக்கிரக நாயகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

🪆தசரதருக்காக புத்திரகாமேஷ்டியாகம் செய்த ரிஷி
ரிஷ்யசிருங்கர்.

🪆பிரகலாதன் என்பதன் பொருள், எல்லோராலும் நேசிக்கப்படுபவன்.

🪆திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்,தாயுமானசுவாமி.

🪆வண்டு வடிவில் இறைவனை பூஜித்த முனிவர்,பிருங்கி.

🪆திருமூலர் எழுதிய திருமந்திரம் திருமுறையாகும்,பத்தாம் திருமுறை.

🪆தமிழ் வியாசர் என்று அழைக்கப்படுபவர்,நாதமுனிகள்.(நாலாயிர திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர்)

🪆முருகன் தலங்களில் மலையில்லாத மலைக் கோவில் சுவாமிமலை.(மலை அமைப்பில் கட்டப்பட்டகோவில்)

🪆விபூதி என்பதன் நேரடியான பொருள்,மேலான செல்வம்.

🪆சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம் கஞ்சனூர்.

🪆ஜோதிர் லிங்கத்தலங்கள் மொத்தம் 12.

🪆மதுரையில் உள்ள சித்தரின் பெயர் சுந்தரானந்தர்.

🪆ராமநாமத்தை கருட புராணம்
அமுதம் என்று குறிப்பிடுகிறது.

🪆திருவாய்மொழியைப் பாடிய ஆழ்வார்,நம்மாழ்வார்.

🪆சர்க்கரைப் பந்தலில் தேன்மழை எனப்படும் பாகவதப் பகுதி பத்தாம் பகுதியான கிருஷ்ணரின் வரலாறு.

🪆இறைவனும் இறைநாமமும் ஒன்றே என்று கூறியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

🪆கர்நாடகத்தில் உள்ள ஒரே பாடல் பெற்ற சிவத்தலம் திருக்கோகர்ணம்.

🪆பிரளய வெள்ளத்தில் அமிர்த கும்பத்தை வீழ்த்தியவர் கிராதமூர்த்தி.(வேடுவராக வந்த சிவன்)

🪆கும்பகோணத்தில் அருளும் மங்களாம் பிகை மந்திரபீடேஸ்வரி பீடம்.

🪆கும்பேசர் குறவஞ்சி எழுதிய புலவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்.

🪆கும்பகோணம் தலத்தின் விசேஷமான தீர்த்தங்கள் காவிரியாறு,மகாமகக் குளம்.

🪆கும்பகோணத்தைத் குடமூக்கு,குடந்தை என்றும் அழைப்பர்.

🪆ஆழ்வார் என்று அழைக்கப்படும் பெருமாள் கும்பகோணம் ஆராவமு தாழ்வார்,சாரங்கபாணிப்பெருமாள்.

🪆சாரங்கபாணி கோவிலில் உள்ள இருவாசல்கள் உத்ராயண,தட்சிணாயன வாசல்கள்.

🪆திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம் ஆச்சாள்புரம்.(திருப்பெருமணநல்லூர்)

🪆நாவுக்கரசரின்உடன் பிறந்த சகோதரி திலகவதி.

🪆மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை,மங்கையர்க்கரசியார்.

🪆மாணிக்கவாசகர் அரிமர்த்தனபாண்டியன் அவையில் அமைச்சராக இருந்தார்.

🪆திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவ மன்னன்,மகேந்திர பல்லவன்.

🪆நடுக்கம் தீர்த்த விநாயகர் அருள்பாலிக்கும் சிவத்தலம் வேதாரண்யம்.

🪆பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடலை பெரியாழ்வார்
மதுரை கூடலழகர் கோவிலில் பாடினார்.

🪆சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம், தத்புருஷ முகம்.(கிழக்கு நோக்கிய முகம்)

🪆சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எட்டு.

🪆மகா சிவராத்திரியில் கோவிலில் நான்கு கால அபிஷேகம் நடக்கும்.

🪆வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும் விதம்,#நமசிவாய.

🪆முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை,#சிவாயநம என்று ஓத வேண்டும்.

🪆பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்,ராமேஸ்வரம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🙏🏼💫#அன்பே #சிவம்💫🙏🏼

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...