தூணிலுமிருப்பார் துரும்பிலு மிருப்பார்
துரிதமாய் அருள்வார் நாராயணன்.ஆணவம் அழிப்பார் அன்பாய் வருவார்
ஆபத்பாந்தவன் நரசிம்மன்.
உன்னிலுமிருப்பார் என்னிலுமிருப்பார்
உத்தம புருஷன் நாராயணன்
பக்தரைக் காப்பார் பாபத்தை போக்கும்
பட்டொளி வேந்தன் பராபரன்.
உள்ளிலும் இருப்பார் வெளியிலுமிருப்பார்
ஊழ்வினை அழிப்பார் நாராயணன்
எள்ளிலும் இருப்பார் புல்லிலும் இருப்பார்
பார்புகழ் வேந்தன் ப்ரபாகரன்.
சித்தராகிருப்பார் சீறிப் பாய்வார்
சிந்தையில் இருப்பார் ஸ்ரீனிவாசன்
பாபத்தை அழிப்பார் பக்தியை அருள்வார்
ஆனந்தஜோதி ஆலிலையான்.
அன்னையைக் காப்பார் தந்தையைக் காப்பார்
அன்பர்க்கு அன்பன் நரசிம்மன்
சிசுவைக் காப்பார் சிந்தையில் நிற்பார்
ப்ரதோஷ நாயகன் நரசிம்மன்.
லட்சுமி நரசிம்மா நீயே கதி ஐயா 🙏🙏🙏
No comments:
Post a Comment