திருப்பாற்கடல் எம்பெருமானே நாராயணா அருட்பெருங்கடலே ஆனந்த வாழ்வைத் தருவாயே
வாடிடும் பக்தரைத் தேடியே சென்று வரம்பலத் தந்து அருள்பவனே நாராயணா
நாடிடும் பக்தர்கள் வேண்டிடும் வரத்தை உடனுக்குடனே கொடுப்பவரே
நலம் பலம் வளம் பொருள் புத்தி புகழ் நல்லன எல்லாம் தந்து அருள்பவனே
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனம்தந்து மகிழ்ச்சி தருபவரே
தொல்லைப் போக்கி துன்பம் நீக்கி மகிழ்ச்சி வாழ்வு தந்துவிடு ஐயா
நெய்தீபம் ஏற்றியவர் மனமெல்லாம் வந்திடும் நெய்யாய் நெகிழ்ந்து உருகுது ஐயா
கற்பூர தீபம் ஏற்றியவர் பாவங்கள் கற்பூர ஜோதியில் கரையுது ஐயா
எண்ணெய் விளக்கு ஏற்றிடும் அவரவர் எண்ணங்கள் என்றும் ஈடேறு ஐயா
ஓம் நமோ நாராயணா நீயே கதி ஐயா 🙏🙏🙏
No comments:
Post a Comment