💫❄️💫ஆன்மீகம் அறிவோம்💫❄️💫
🪆கண்ணன் இன்றும் மன்னனாக ஆட்சி செய்யும் திருத்தலம் துவாரகை.
🪆விநாயகப் பெருமானுக்குரிய கணேச பஞ்சரத்னத்தைப் பாடியவர்,ஆதிசங்கரர்.
🪆தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை
அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)என்று குறிப்பிடுவர்.
🪆வெற்றியைத் தரும் முருகப்பெருமானுக்குரிய தமிழ் மந்திரம்,
"வேலு(ம்) மயிலும் துணை".
🪆ராமபிரானுக்காகப் போர் புரியக் கிளம்பிய ஆழ்வார்,குலசேகராழ்வார்.
🪆சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் 108.சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர் காரைக்காலம்மையார்.
🪆"மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே'என்று நடராஜரிடம் வேண்டியவர்,அப்பர்.(திருநாவுக்கரசர்)
🪆நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகனின் அடையாளம் ஆணவம்.(ஆணவம் அடங்கினால் ஆனந்தம் உண்டாகும்)
🪆பஞ்ச சபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்,குற்றாலம்.நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம் சங்கார தாண்டவம்.
🪆இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை
வெள்ளியம்பலத்தில்(மதுரை)காணலாம்.
🪆மாலை வேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம் பிரதோஷ நடனம்.
🪆நடராஜருக்குரிய விரத நாட்கள் திருவாதிரை,கார்த்திகை சோமவாரம்.திருவாதிரை பிரசாதம்,களி.
🪆சூரிய தேவனை
நவக்கிரக நாயகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
🪆தசரதருக்காக புத்திரகாமேஷ்டியாகம் செய்த ரிஷி
ரிஷ்யசிருங்கர்.
🪆பிரகலாதன் என்பதன் பொருள், எல்லோராலும் நேசிக்கப்படுபவன்.
🪆திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்,தாயுமானசுவாமி.
🪆வண்டு வடிவில் இறைவனை பூஜித்த முனிவர்,பிருங்கி.
🪆திருமூலர் எழுதிய திருமந்திரம் திருமுறையாகும்,பத்தாம் திருமுறை.
🪆தமிழ் வியாசர் என்று அழைக்கப்படுபவர்,நாதமுனிகள்.(நாலாயிர திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர்)
🪆முருகன் தலங்களில் மலையில்லாத மலைக் கோவில் சுவாமிமலை.(மலை அமைப்பில் கட்டப்பட்டகோவில்)
🪆விபூதி என்பதன் நேரடியான பொருள்,மேலான செல்வம்.
🪆சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம் கஞ்சனூர்.
🪆ஜோதிர் லிங்கத்தலங்கள் மொத்தம் 12.
🪆மதுரையில் உள்ள சித்தரின் பெயர் சுந்தரானந்தர்.
🪆ராமநாமத்தை கருட புராணம்
அமுதம் என்று குறிப்பிடுகிறது.
🪆திருவாய்மொழியைப் பாடிய ஆழ்வார்,நம்மாழ்வார்.
🪆சர்க்கரைப் பந்தலில் தேன்மழை எனப்படும் பாகவதப் பகுதி பத்தாம் பகுதியான கிருஷ்ணரின் வரலாறு.
🪆இறைவனும் இறைநாமமும் ஒன்றே என்று கூறியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
🪆கர்நாடகத்தில் உள்ள ஒரே பாடல் பெற்ற சிவத்தலம் திருக்கோகர்ணம்.
🪆பிரளய வெள்ளத்தில் அமிர்த கும்பத்தை வீழ்த்தியவர் கிராதமூர்த்தி.(வேடுவராக வந்த சிவன்)
🪆கும்பகோணத்தில் அருளும் மங்களாம் பிகை மந்திரபீடேஸ்வரி பீடம்.
🪆கும்பேசர் குறவஞ்சி எழுதிய புலவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்.
🪆கும்பகோணம் தலத்தின் விசேஷமான தீர்த்தங்கள் காவிரியாறு,மகாமகக் குளம்.
🪆கும்பகோணத்தைத் குடமூக்கு,குடந்தை என்றும் அழைப்பர்.
🪆ஆழ்வார் என்று அழைக்கப்படும் பெருமாள் கும்பகோணம் ஆராவமு தாழ்வார்,சாரங்கபாணிப்பெருமாள்.
🪆சாரங்கபாணி கோவிலில் உள்ள இருவாசல்கள் உத்ராயண,தட்சிணாயன வாசல்கள்.
🪆திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம் ஆச்சாள்புரம்.(திருப்பெருமணநல்லூர்)
🪆நாவுக்கரசரின்உடன் பிறந்த சகோதரி திலகவதி.
🪆மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை,மங்கையர்க்கரசியார்.
🪆மாணிக்கவாசகர் அரிமர்த்தனபாண்டியன் அவையில் அமைச்சராக இருந்தார்.
🪆திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவ மன்னன்,மகேந்திர பல்லவன்.
🪆நடுக்கம் தீர்த்த விநாயகர் அருள்பாலிக்கும் சிவத்தலம் வேதாரண்யம்.
🪆பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடலை பெரியாழ்வார்
மதுரை கூடலழகர் கோவிலில் பாடினார்.
🪆சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம், தத்புருஷ முகம்.(கிழக்கு நோக்கிய முகம்)
🪆சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எட்டு.
🪆மகா சிவராத்திரியில் கோவிலில் நான்கு கால அபிஷேகம் நடக்கும்.
🪆வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும் விதம்,#நமசிவாய.
🪆முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை,#சிவாயநம என்று ஓத வேண்டும்.
🪆பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்,ராமேஸ்வரம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🙏🏼💫#அன்பே #சிவம்💫🙏🏼
No comments:
Post a Comment