பொன்னான என் தெய்வமே கொஞ்சி மகிழ குழந்தைகள் தந்தாய்...
வளமோடு வாழ செல்வங்கள் தந்தாய்..உன்னை காண விழிகளை தந்தாய்..
உன் மலை நடக்க பாதங்கள் தந்தாய் ..
உன் புகழ்பாட குரல் தந்தாய்.. வாழ்க்கையில் பல கலைகள் தந்தாய் ...
எல்லாம் நீயே தருகிறாயா !!
நான் உனக்கு என்ன தருவேன்?
என் மூச்சுக் காற்றைத் தவிர வேறொன்றும் என்னிடம் இல்லை..
ஏனென்றால் எல்லாம் உன்னுடையது ,
என் மூச்சுக் காற்றை உனக்குத் தர காத்துக்கொண்டு உள்ளேன் ,,
ஏற்றுக்கொள் என் தெய்வமே ..
No comments:
Post a Comment