Monday, April 30, 2018

நரசிம்ம_ஜெயந்தி

#நரசிம்ம_ஜெயந்தி

விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்தது நரசிம்ம அவதாரம். ஏனெனில், ஒரு பக்தனின் சொல்லைக் காப்பாற்ற விஷ்ணு இந்த அவதாரத்தை  நிகழ்த்தினார். மனிதனுக்கு வாக்கு சுத்தம் மிக முக்கியம். ஒன்றைச் சொன்னால், அதைச் செய்தாக வேண்டும். வாக்கு தவறினால் அவனுக்கு மதிப்பு போய்விடும்.  தசரதர் கைகேயிக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற, தன் உயிரையும் கொடுத்ததால் தான், இன்றும் நம் உள்ளங்களில் உயர்ந்து நிற்கிறார். இதே போல,  பிரகலாதனின் வார்த்தையைக் காப்பாற்ற கம்பத்தை உடைத்துக் கொண்டு வெளிப்பட்டார் நரசிம்மன். ''அடேய் பிரகலாதா! எங்கேயடா இருக்கிறான் உன்  விஷ்ணு? என்று கேட்கிறான் இரண்யன். ''தந்தையே! அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான். ஏன்...எங்கும் வியாபித்திருக்கிறான். ஒவ்வொரு  துகளிலும் அவன் உட்கார்ந்திருக்கிறான், என்றான் பிரகலாதன். இதைக்கேட்ட விஷ்ணு பரபரப்பாகி விட்டார். ''இந்தப் பொடியன், நாம் எங்கிருக்கிறோம் என  கையைக் காட்டுவானோ! அங்கிருந்து உடனே வெளிப்பட்டாக வேண்டுமே! எனவே, எல்லாப் பொருள்களிலும் நிறைந்து காத்துக் கிடந்தான்.

பிரகலாதன் தூணைக் கை காட்ட, இரணியன் அதை உடைத்தான். மனித உடலும், சிம்ம முகமும் கொண்டு நரசிம்மனாய் அவன் வெளிப்பட்டான். 'நரன் என்றால்  'மனிதன். 'சிம்மம் என்றால் 'சிங்கம். இதனால் தான் அவனை 'நரசிம்மன் என்றும், 'நரசிங்கன் என்றும் சொல்வார்கள். மதுரை அருகே அவன் கோயில்  கொண்டுள்ள ஊருக்கே 'நரசிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். தூணிலிருந்து வெளிப்பட்ட அந்தக் கருணைக்கடல், இரணிய வதத்தை முடித்த பிறகு,  பிரகலாதனிடம், ''நீ ஏன் தூணைக் காட்டினாய், துரும்பைக் காட்டியிருக்கக் கூடாதா? என்றான். ''ஏன் இப்படி சொல்கிறீர்கள்? என்ற பிரகலாதனிடம், தூண்  என்பதால், இரணியன் அதை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. துரும்பு என்றால் அதைக் கிள்ளியெறிந்தவுடன் பிரசன்னமாகி இருப்பேனே!  என்றானாம். ஆம்.. நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை. அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும்.

லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை தினமும் 108 தடவைசொல்லி வழிபடுவோர் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஜ்வாலாஹோபில மாலோல க்ரோடா காரஸ் ச பார்கவ
யோகா நந்தஸ் சத்ரவடு: பாவனோ நவமூர்த்தய:

பகவான் நரசிம்மராக ஆவிர்பவித்து ஒன்பதுவித வடிவங்களில் நவ நரசிம்மர்களாக அஹோபில க்ஷேத்திரத்தில் காட்சி தருகிறார். அந்த நவரூபங்களைத்  தியானிப்போம்.

பிரகலாதன் அவதரித்த கதை

பிரகலாதன் சொன்ன சொல்லை நிரூபிப்பதற்காக மகாவிஷ்ணு உடனே எடுத்தது நரசிம்ம அவதாரம். அத்தகைய சிறந்த பக்தனான பிரகலாதன் முற்பிறவியில்  கயவனாக - கள்வனாக - மக்களுக்கு துன்பங்கள் இழைத்த மகாபாவியாக வாழ்ந்து வந்தான். அப்பொழுது அவன் பெயர் சுவேதன். அவன் தன் இறுதிக் காலத்தில்  தவறுகளை எண்ணி வருந்தி, தன்னை மன்னித்தருளுமாறு மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தான். தனக்கு எந்த வடிவிலாவது காட்சி தந்து அருளுமாறு  வேண்டினான். ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்துக் கொண்டேயிருந்தான். அப்போது ஓர் அசரீரி வாக்கு, இந்தப் பிறவியில் நீ  என்னை தரிசிக்க இயலாது; உன் அடுத்த பிறவியில் நீ அழைத்ததும் வருவேன் என்று ஒலித்தது. குரல் வந்த திசை நோக்கி கைகூப்பிய வண்ணம் உயிர்விட்டான் சுவேதன்.

இந்த சுவேதன்தான் அடுத்த பிறவியில் இரணியனுக்கு மகனாகப் பிறந்தான். யார் இந்த இரணியன்? வைகுண்டத்தில் துவாரபாலகர்களாக ஜயனும் விஜயனும்  சேவகம் செய்தார்கள். இருவரும் ஒரே உருவ அமைப்பு கொண்டவர்கள். வைகுண்டத்தில் ஏழு வாசல்கள் உண்டு. ஏழாவது வாசலைக் கடந்தால்தான் உள்ளே  அரியாசனம் ஹரியான மகாவிஷ்ணுவின் ஆசனம். அந்த வாயிலின் இரு பக்கத்திலும் ஜயனும் விஜயனும் துவாரபாலகர்களாக இருக்கும்போது, சனகாதி  முனிவர்கள் இளம் பாலகர்கள் வடிவத்தில் அங்கு வந்தார்கள். அந்த முனிவர்களை உள்ளே அனுமதிக்காமல் ஜயனும் விஜயனும் தடுத்தனர். அதனால்  கோபம்கொண்ட முனிவர்கள், காமம், குரோதம், லோபம் என்ற மூன்று சத்ருக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பூலோகத்தில் பன்னிரண்டு பிறவிகள் எடுக்கக்  கடவீர்கள் என்று சபித்தனர். இதையறிந்த மகாவிஷ்ணு அங்கே வந்தார். முனிவர்கள், மகாவிஷ்ணுவை வணங்கி நடந்ததைக் கூறினர்.

முனிவர்களின் சாபத்தை ஜயனும் விஜயனும் அனுபவித்தே ஆகவேண்டும். இருந்தாலும் அவ்விருவரும் தங்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கவே,  அவர்களுக்கு இரங்கிய பகவான், துவாரபாலகர்களே, என்னைப் போற்றி வழிபட்டு பன்னிரண்டு பிறவிகள் பூலோகத்தில் வாழ்ந்து அதன்பின் வைகுண்டம்  திரும்பிவர விருப்பமா? அல்லது பூலோகத்தில் மூன்று பிறவிகள் எடுத்து என்னை நிந்தித்து வைகுண்டம் திரும்பிவர விருப்பமா? என்று கேட்டார். பகவானே  தங்களைப் பிரிந்து பூலோகத்தில் பன்னிரண்டு பிறவிகள் இருக்கமுடியாது. உங்களை நிந்தனை செய்தாலும் பரவாயில்லை; மூன்று பிறவிகள் போதும். தங்கள்  திருக்கரங்களால் வதமாகி வைகுண்டம் வரவிரும்புகிறோம் என்றனர். மகா விஷ்ணுவும் அருளினார்.

இந்த நிலையில் பூவுலகில் பிரஜாதிபதி என்னும் முனிவர் மாலை நேர பூஜை செய்துகொண்டிருந்தார். அச்சமயம் அவரது மனைவி திதி அவரைக் கட்டித்  தழுவினாள். அதன்விளைவால் அவர்களுக்கு இரண்டு அசுர குணம்கொண்ட மக்கள் பிறந்தார்கள். அவர்களே இரண்யாட்சன், இரண்ய கசிபு என்ற இரணியன்.  பிறக்கும்போதே அவர்கள் கரிய நிறமும் முரட்டு குணம் கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்கள் வளரவளர தேவர்கள் அஞ்சினர். இந்த இருவரும்  கடுந்தவம் புரிந்து அரிய வரங்களைப் பெற்றார்கள். ஒரு சமயம் இரண்யாட்சன், மகாவிஷ்ணுவுக்கு எவ்வளவு பலம் உள்ளதென்று அறிய வைகுண்டம் சென்றான்.  அங்கே அவர் இல்லை. தேடிப் பார்த்தான். அப்போது பூமி உருண்டையாக இருப்பதைக் கண்டான். அதைத் தூக்கிச்சென்று பாதாள உலகில் ஒளித்து வைத்தான்.  பூமாதேவி, பகவானே காப்பாற்று என்று அபயக்குரல் கொடுத்தாள்.

உடனே மகாவிஷ்ணு பூமி எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து, வராக (பன்றி) அவதாரம் எடுத்து பாதாளம் சென்று, இரண்யாட்சனைக்  கொன்றுவிட்டு, பூமியை தன் கொம்பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். (மகாவிஷ்ணு வராகராய் காட்சி தந்ததைக் கண்ட பூமாதேவி, அவரை  ஆரத்தழுவினாள். அதனால் மகிழ்ந்த ஸ்ரீவராகர் அவளைத் தானும் தழுவினார். இப்படி அவர்கள் ஆலிங்கனம் செய்து கொண்ட காலம் தேவ வருஷம் என்கிறது  புராணம். அதன்விளைவாக ஒரு மகன் பிறந்தான். அவன்தான் நரகாசுரன்.) இரண்யாட்சன் வதம் செய்யப்பட்டதை அறிந்து இரணியன் மகாவிஷ்ணுமீது  கடுங்கோபம் கொண்டான். அவரை அழிக்க எண்ணிய அவன், அதற்கான வலிமைபெற தவம் செய்வதற்காக மந்தாரமலையின் குகையினுள் நுழைந்து அமர்ந்தான்.  அப்போது, அவன் மனைவி லீலாவதி கர்ப்பவதியாக இருந்தாள்.

இதுதான் தக்கசமயமென்று நராத முனிவர் இரணியனின் அரண்மனைக்கு வந்தார். அப்போது லீலாவதி மஞ்சத்தில் படுத்து நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள்.  உடனே நாரதர் கர்ப்பத்திலிருக்கும் சிசுவுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார். ஸ்ரீமன் நாராயணன் தான் ஈரேழு உலகத்திற்கும் அதிபதி என்று உபதேசித்ததுடன், ஓம் நமோ நாராயணாய என்ற மகாவிஷ்ணுவின் மூல மந்திரத்தையும் உபதேசித்தார். தாயின் கர்ப்பத்திலிருந்த குழந்தை நாரதரின் உபதேசத்தை உன்னிப்பாகக்  கேட்டதுடன், அப்பொழுதே ஓம் நமோ நாராயணாய என்று முணுமுணுக்க ஆரம்பித்தது. இரணியனின் மனைவி லீலாவதி பிரசவித்தாள். ஓர் அழகிய தெய்வாம்சம் நிறைந்த குழந்தை சுபநாளில் பிறந்தது. அந்தக் குழந்தைதான் பிரகலாதன். தவம் செய்து பல வரங்கள் பெற்ற இரணியன், அனைவரும் தன்னைத்தான்  வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அவன் கட்டளைக்கு அடிபணியாதவரை பாதாளச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான். வருடங்கள் கடந்தன.  பிரகலாதன் அசுர குலத்தில் பிறந்தாலும் ஓம் நமோ நாராயணாய என்று எட்டெழுத்து மந்திரத்தை எப்போதும் ஜெபித்துக் கொண்டிருந்தான். இதனைக்கண்ட  இரணியன், அந்தப் பெயரை உச்சரிக்காதே. இந்த உலகங்கள் அனைத்திற்கும் நானே அதிபதி. என் பெயரைச் சொல். இரண்யாய நமஹ என்று சொல் என்று  கட்டாயப்படுத்தினான். ஆனால் பிரகலாதனோ மகா விஷ்ணுவே தெய்வம் என்பதில் உறுதியாக இருந்தான். எத்தகைய அச்சுறுத்தலுக்கும் தண்டனைக்கும் அவன்  அஞ்சவில்லை. வெறுத்துப்போன இரணியன் தன் தங்கை ஹோலிகாவை அழைத்து, இவனை நெருப்பு வளையத்திற்குள் அழைத்துச் சென்று பஸ்பமாக்கிவிடு  என்று உத்தரவிட்டான்.

இந்த ஹோலிகா நெருப்பால் பாதிக்கப்படாத வரம் பெற்றவள். அவள் அண்ணன் சொல்படி பயங்கரமாக எரிந்து கொண்டிருந்த நெருப்பு வளையத்திற்குள்  பிரகலாதனை அழைத்துச் சென்றாள். அப்போதும் பிரகலாதன் கைகளைக் கூப்பிக் கொண்டு 'ஓம் நமோ நாராயணாய' என்று ஜெபித்துக் கொண்டே சென்றான். ஆனால்,  தீய எண்ணத்துடன் நெருப்பு வளையத்திற்குள் நுழைந்த ஹோலிகா பஸ்பமானாள். நாராயணன் திருநாமத்தை ஜெபித்துக் கொண்டே சென்ற பிரகலாதன் பொலிவுடன் வெளிவந்தான். இரணியனின் கோபம் எல்லை கடந்தது. அவன் பிரகலாதனிடம், உன் நாராயணன் எங்கே உளான்? அவனைக் காட்டு என்று கையில்  வைத்திருந்த கதையைச் சுழற்றினான். ஸ்ரீமன் நாராயணன் தூணிலும் உளான்; துரும்பிலும் உளான் என்றதும், அருகிலிருந்த தூணில் பலம்கொண்டு தன்கதையால் தாக்கினான்.

அந்த வேளை பிரதோஷ காலமாகும். பகல்பொழுது மறையும் காலம். இரவும் பகலும் இல்லாத வேளை. நரசிம்மர் அந்தத் தூணிலிருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற வரத்தினை அறிந்த நரசிம்மர் அந்தப் பிரதோஷ வேளையில் அறைக்கு உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் ஆகாயத்திலும் பூமியிலும் இல்லாமல் தம் மடியின்மீது படுக்கவைத்து, ஆயுதத்தால் கொல்லாமல் தன் கூர்மையான கைகளின் நகங்களால், அவன் மார்பினைப் பிளந்து, குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொண்டு இரணியனை சம்ஹாரம் செய்தார். இந்தக் காட்சியைக் கண்ட பிரகலாதன், தன் எதிரே சிங்கமுகத்துடனும் மனித உடலுடனும் காட்சிதந்த நரசிம்மமூர்த்தியை கைகூப்பி வணங்கினான். அப்போது தன் முற்பிறவி நினைவுக்கு வந்தது.

பகவானே, கடந்த பிறவியில் நான் வேண்டிக்கொண்டதன் பயனால் இப்பிறவியில் எனக்காக நரசிம்ம அவதாரம் எடுத்து அருள்புரிந்தீர் என்று தாள்பணிந்தான்  பிரகலாதன். மனித உடலும் சிங்கமுகமும் கொண்ட நரசிம்மமூர்த்தி சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் காட்சி தருகிறார்.

நரசிம்மமூர்த்தி திருத்தலங்கள் :

பெரும்பாலும் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சிதரும் நரசிம்மர்,

* திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டத்திலுள்ள பொன்னியன் மேடு என்ற திருத்தலத்தில் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் அருள்புரிகிறார். ஏழு அடி உயரத்தில் காட்சிதரும் இவர் நான்கு கரங்களுடன் திகழ்கிறார்.

* நாமக்கல் மாவட்டம் குடைவரைக் கோவிலில் நரசிம்மர் மூலவராக வீராசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சிதருகிறார். இரணியன் வயிற்றைப் பிளந்த கைகள் என்பதற்கேற்ப சிவப்பு நீரோட்டத்துடனும் நகங்கள் ரத்தக்கறைச் சிவப்புடனும் உள்ளதை தரிசிக்கலாம்.

கோவிந்தராஜ பெருமா

பெருமாளை அடைய விரும்புபவர்களே!! காட்டில் சென்று தவமெல்லாம் செய்ய வேண்டாம்!!!. சிதம்பரம் கோவிலுக்கு சென்று #சித்திரக்கூடத்தில் பள்ளிகொண்டிருக்கும் கோவிந்தராஜனை வழிபடுங்கள்.


-
"#ஊன்_வாட உண்ணாது உயிர் காவல் இட்டு
உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா
தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே
கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடை போய்த்
தேன் ஆட மாடக் கொடி ஆடு
தில்லைத் #திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே."
-
#விளக்கம்:- வானுலகை தம்முடையதாக கொண்டு ஆள வேண்டியிருப்பவர்களே! உடல் வாடும் அளவுக்கு உண்ணாமல், உயிர் மட்டும் போகாமல் பாதுகாத்து கொண்டு, உடலில் பிரியாத கண், காது, மூக்கு, வாய், தோல் இவை ஐந்து புலன்களும் நொந்து தாங்கள் வாட வாட தவமெல்லாம் செய்ய வேண்டாம்!. மரம், செடி, கொடிகள் ஆட, அதை பார்த்து மயில் கூட்டங்கள் நடனம் ஆட, அருகே கயல் மீன்கள் துள்ளி விளையாடும் வாய்க்கால் நீர் நிறைந்த வயல்களின் மேலே சிறகடித்து பறக்கும் தேன் உண்ட வண்டுகள் ஆட, பெரிய மாளிகைகள் மேலே கட்டபட்டிருக்கும் கொடி ஆடும், சிதம்பரம் எனப்படும் தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேருங்களேன்!.
-
கோவிந்தராஜ பெருமாள் திவ்ய திருவடிகளே சரணம்..!

Good read about Swami Vedanta Desigar

Kavitharkika Simhaya Kalyana Gunasaaline
Srimathe Vedanta Gurave Namaha🙏


This is Vedhantha Desikar Story appeared in Ananda Vikatan Deepavali malar in 70s..
He is Venkatanatha of thuppul. Popularly known to be 'Vedantha Deshika'/Vedanthacharya. A great philosopher, preceptor hailing from the Ramanuja Sampradaya.
He used to go on 'ooncha vrtthi'-collecting of alms. Once few gold coins were mixed along. His wife asks him what are these 'glittering pieces' she finds amidst the rice. Deshika says 'they' are 'worms' and takes a twig n separates them!
It shows the immense 'Vairagya' that he had.
Mr.Gopulu has wonderfully represented the same in the art, he in fact depicts that deshika does not even use his hand to touch those gold coins and uses a stick to push them away just like the way one would use a stick to drive away the worms.
To throw more light kindly read on 'Vairagya Panchaka' a wonderful stotra composed by Deshika for enlightenment.

Thank you.

Tuesday, April 10, 2018

இறப்பும்-மறு-பிறப்பும்-எப்படி-நிகழ்கிறது

இறப்பும்-மறு-பிறப்பும்-எப்படி-நிகழ்கிறது
★★★★★★★★★★★★★★★

முதலில் இறப்பு என்றால் என்ன என்பதை காண்போம்.

இறப்பு என்பது பழுதடைந்த உடல் செயல் இழப்பதையே இறப்பு அல்லது மரணம் என்று கூறுகிறார்கள்.


நாம் எப்படி சட்டை கிழிந்து விட்டால் அந்த சட்டையை தூக்கி எரிந்து விட்டு புது சட்டை போட்டு கொள்கிறோமோ அதே போல் ஆன்மா உம் புது உடலை எடுக்கும்.


புது உடலை எடுக்கும் நிகழ்சியை மறு பிறப்பு என்று கூறுகிறார்கள்.


ஆனால் இந்த மறு பிறப்பு என்பது உடனே நிகழ்ந்து  விடாது.


ஒரு உடலை ஆன்மா விட்ட வுடன் அந்த ஆன்மா அந்த உடலுடன் இருந்த போது என்னென்ன கர்மங்கள் செய்ததோ அதற்க்கு தகுந்தாற்போல் அது பாவ புண்ணியத்தை சுமந்து கொண்டு இருக்கும்.

மேலும் கர்ம வாசனைகளும் சுமந்து இருக்கும். கர்ம வாசனை என்றால் நல்ல எண்ணம் இருந்தால் அதுவும் ஆன்மா வுடன் சேர்ந்து செல்லும். கெட்ட எண்ணம் இருந்தால் அதுவும் ஆன்மா வுடன் சேர்ந்து செல்லும்.


இப்படி ஓர் உடலை விட்டவுடன் ஆன்மா அந்த உடலின் பாவ புண்ணியம் மற்றும்  கர்ம வாசனை இவற்றை சுமந்து செல்லும்.


கருட புராண சாஸ்த்ர படி இந்த ஆன்மா யம தூதர்களால் எடுத்து செல்லப்பட்டு செய்த பாவத்திற்கு உண்டான தண்டனைகளை அனுபவிக்க விடுவார்கள்.


புண்ணிய காரியங்கள் செய்து இருந்தால் அதற்க்கு உண்டான சுப பலனையும் அந்த ஆன்மா அனுபவிக்கும்.


பாவ புண்ணியங்கள் தீர்ந்த பிறகு அந்த ஆன்மா மீண்டும் மேகங்களில் தூக்கி எறியப்படும்.


மேகங்களின் மழையால் அந்த ஆன்மா பூமியை வந்து அடையும்.


பூமியில் விழுந்த வுடன் அந்த ஆன்மா தண்ணீரோடு தண்ணீராக இருந்து தானியங்களை வளர செய்யும்.


அந்த தானியம் உயிரினத்தின் உடலில் உணவாக செல்லும்.


உடலின் உள்ளே உணவாக சென்ற அந்த ஆன்மா உயிர் அணுவாக மாறும்.


அந்த ஆணின் உயிர் அணு கலவியின் போது பெண்ணின் உடலில் செலுத்த படும் போது அந்த ஆன்மா ஒரு உடலை பெரும்.


அந்த உடல் அந்த பெண்ணின் வயிற்றில் வளரும்.


பிறகு வெளியே வரும்.


மீதி உள்ள கர்மத்தை வெளியே வந்த வுடன் செய்யும்.


குறிப்பு : ஒரு மனிதன் இறந்த உடன் , அந்த ஆன்மா
எடுத்து செல்லப்பட்டு
பாவ  புண்ணியத்திற்கு உண்டான தீய சுப பலனை அனுபவித்த பிறகு கூட ஏன் அவன் மீண்டும் பிறக்க வேண்டும்.


ஏனெனில் அவன் இன்னும் உண்மையை உணரவில்லை. தான் ஆன்மா என்று உணர வில்லை . மேலும் மேலும் பொன் பொருள் போகம் இவற்றில் விருப்பம் கொண்டு இந்த உலகத்தில் கட்டபடுகிறான்.


இறைவனே கதி என்று இறைவனையே நோக்கி செல்பவர்கள் விரைவில் இறைவனை அடைவார்கள். மீண்டும் பிறக்க மாட்டார்கள்.

திருவோண_விரதம்

🍀#திருவோண_விரதம்🍀
-
🍀#திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது. ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய #திருவோணமும், சிவனுக்குரிய 🍀#திருவாதிரையும் மட்டுமே ‘‘திரு’’ என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மாவலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.🍀
-
🍀மாவலி சக்கரவர்த்திக்கு முக்திப் பேற்றினை வழங்கிய திருவோணத்தன்று, மக்கள் வாழ்வில் அனைத்து நலனும் பெற வேண்டி பெருமாளை நோக்கி விரதம் இருந்து வழிபடுகின்றனர். சந்தோஷ வாழ்வு அருளும் திருவோண விரதத்தை கேரள மக்கள் ‘ஓணம் பண்டிகையாக" கொண்டாடி மகிழ்கின்றனர்.🍀
-
🍀திருவிண்ணகர் எனப்படும் ஒப்பிலியப்பன் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஒப்பில்லா அப்பனான ஒப்பிலியப்பன், திருப்பதி பாலாஜியின் அண்ணனாவார். ஒரு முறை மகாலக்ஷ்மியின் ஒரு அம்சமான பூமாதேவி, தானும் பெருமாளின் மார்பில் இடம் பெற வேண்டியபோது, பூமியில் மார்கண்டேய மகரிஷியின் மகளாக பிறக்க அருள் புரிந்தார் விஷ்ணு.🍀
-
🍀மார்கண்டேய மகரிஷியிடம் அவர் மகளாகப் பிறந்துள்ள “துளசி“ யை மணமுடித்து தரச்சொல்லி வேண்டினார் வயதான தோற்றத்தில் வந்த மகாவிஷ்ணு. அந்தக் கிழவருக்கு தன் சிறிய வயது மகளை கொடுக்க விருப்பமில்லாமல், “என் மகளுக்கு சரியாக உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாது. அவளைத் திருமணம் செய்தால் உங்களுக்கு சௌகரியப்படாது“ என்று ஏதோ ஒரு காரணத்தை கூறி மறுத்தவரிடம், பெருமாளோ“ அதனால் என்ன, இனிமேல் நான் உப்பே போடாமல் அனைத்தையும் உண்கிறேன்“ என்று வாக்களித்து, விடாமல் பூமாதேவியை மணந்து கொண்டு விட்டார்.🍀
-
🍀அதன் பிறகே, வந்தவர் மகாவிஷ்ணு என்பதை அறிந்த மகரிஷி, மகிழ்ச்சி அடைந்தார். இதனால் அன்றிலிருந்து உப்பிலியப்பன் - உப்பு இல்லாத அப்பன் என்றும் அழைக்கப்பட்டு, அந்தக் கோவிலில் படைக்கப்படும் எந்த ஒரு உணவிலும் உப்பு சேர்க்கப்படுவதில்லை. விஷ்ணு பெண் கேட்டு வந்த நாள், பங்குனி மாத திருவோண நட்சத்திரம். பெருமாளுக்கும் துளசி என்னும் பூமாதேவிக்கும் திருமணம் நடந்தது, ஐப்பசி மாத திருவோணத்தில்.🍀
-
🍀இதனால் ஒவ்வொரு மாத திருவோண (ஸ்ரவண) நட்ச்சதிரத்தன்று, இக்கோவிலில் அகண்ட தீபம், வால் தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன. இதை தரிசிக்கும் மக்களுக்கு குறைவில்லாத செல்வமும், அனைத்துத் துயர்களும் நீங்குமென்றும் நம்பிக்கை உள்ளது. இதனால் ஒவ்வொரு ஸ்ரவண (திருவோண) நட்சத்திரத்திற்கும் விரதம் இருந்து வேண்டியதைப் பெறலாம் .ஏதேனும் வேண்டுதல் வைத்து, குறிப்பிட்ட சில மாதங்களுக்கோ அல்லது வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு மாத ஸ்ரவண நட்சதிரத்தன்றோ விரதம் இருக்கலாம்.🍀
-
🍀திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும்.🍀
-
-
|| ----------- 🍀ஓம் நமோ நாராயணாய🍀 ----------- ||

Wednesday, April 4, 2018

*ராமாயாணத்திலிருந்து கற்க வேண்டியவை*


*ராமாயாணத்திலிருந்து கற்க வேண்டியவை*

*ராமன்*
தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன்.
படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன்.
மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன்.
தன் மனைவி தவறு இழைக்காதவள் அதனால் அதிலிருந்து மீண்டு வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன்.

*சீதை*
வசதியாக வாழ்ந்திருந்தாலும் கணவன் இருக்கும் இடம் சொர்க்கமாக நினைத்து காட்டுக்கு பின் தொடர்ந்தவள்.

*தசரதன்*
பல மனைவிகள் கொண்டவன். கதை எழுதப்பட்ட காலத்தை கொண்டு பார்த்தால் ஒரு மனைவி சட்டம் இல்லாதிருந்திருக்கும். ஒரு மனைவி சட்டம் சமீபத்தில் வந்ததது தான்.
தன் மகன் மேல் அதிக பாசம் கொண்டிருந்தவன். தன் மனைவியிடம் செய்து கொடுத்த சத்தியம் காக்க உயிர் துறந்தவன்.

*லக்ஷமணன்*
சகோதர பாசம். சகோதர மதிப்பு. தம்பியுடையான படைக்கு அஞ்சான். அண்ணி தாயுக்கு சமம் என்பதை உணர்த்தியவன். இதற்கு நேர் எதிர் வாலி.தம்பி மனைவியை அபகரித்தவன்.

*பரதன்*
தாய் செய்தது தவறு என்று எடுத்துக் காட்டியவன். அண்ணனுடைய நாற்காலிக்கு ஆசை படாதவன்.

*கைகேயி - முதல் பாதி*
தன் கணவனுடைய இன்னொரு மனைவிக்கு பிறந்தவனாக இருந்தாலும் ராமனை தன் மகன் போல் பாவித்தவள்.
இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால் இன்று சித்தியரால் முதல் மனைவி பிள்ளைகளுக்கு வரும் கஷ்டம் வராது. இரண்டாவது பாதி கைகேயி படி நடக்கக்கூடாது என்பதற்காக ஒரு நேர்மறையான பாத்திரம்.
கூடவே இருந்தவர்கள் என்றாலும் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டால் ஆபத்து தான் என்பதை உணர்த்திய பாத்திரம்.

*கூனி-மந்தரை*
யார் வீட்டில் உண்கிறோமோ அவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது

*சூர்பனகை*
திருமணமான ஆணின் மீது ஆசை கொள்ளக் கூடாது.

*ராவணன்*
இசையில் தேர்ந்தவன். தெய்வ பக்தி கொண்டவன். பிறர் மனை நோக்குதல் பாவம் என்று உணர்த்த ஒரு பாத்திரம். அப்படியே அவளை கடத்தி வந்த தப்பு செய்தாலும் கடைசி வரை அவளை தொடாமல் கண்ணியம் காத்தவன்.
பாடம் - ஒரு பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது. ஒரு ஹீரோ கதையில் இருந்தால் ஒரு வில்லனும் உண்டு. அதற்கு அடிவகுத்தவை இக்கதைகள். இன்னும் சினிமாவில் இதே தொடர்கின்றன. ராமாயணத்தில் வந்த ஒவ்வொரு வரியையும் வைத்து ஆயிரம் படங்கள் வந்தாயிற்று.

*மண்டோதரி*
கணவன் தவறான பாதையில் சென்றாலும் கடைசி வரை எப்படியாவது அவனை நேர்வழிக்கு கொண்டு வர முடியும் என்று நம்பியவள். அதில் தோற்று பாடம் கற்பித்தவள்.

*கும்பகர்ணன்*
தவறே செய்திருந்தாலும் சகோதரன் பக்கம் நின்றவன். சகோரத்துவத்தில் இது ஒரு வகை. லக்ஷமணனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.

*விபீஷணன்*
தவறே செய்திருந்தாலும் தர்மத்தின் பக்கம் நின்றவன். சகோதரத்தில் இதுவும் ஒரு வகை தான். இது துரோகமா என்று வாதிட முடியும். ஆனால் கடைசியில் ராவணன் குலம் தழைத்தது இவனால் தான். தர்மத்தின் பக்கம் நின்றதால் இவன் பரதனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.

*வாலி*
தம்பி மனைவியை தன் மனைவியாக எண்ணுவது தவறு.

*சுக்ரீவன்*
அண்ணனால் தவறாக எண்ணப்பட்ட ஒரு பாத்திரம். அண்ணன் மகனை இளவரசனாக்கி சகல மரியாதையோடு நடத்தியவன்.

*அனுமான்*
தலைவன் - தொண்டனுக்கு இடையில் இருக்கும் ஒரு அற்புத பந்தம்.சேவையில் உயர்ந்தவன். தன் தலைவன் மீது அசரா நம்பிக்கை கொண்டவன். தன் தலைவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன். எதிலும் தன் தலைவனையே கண்டவன்.

*புஷ்பகவிமானம்*
இன்றைய விமானத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வித்திட்ட ஒரு கதை.

*வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றது*
நல்ல பட்டிமன்ற தலைப்பு. வாலி ஒரு குரங்கு. ராமன் மனிதன். வேட்டையில் எந்த ஒரு சட்டத்தையும் மீறவில்லை ராமன். ராமன் ஒரு ஹீரோ என்பதால் மறைந்திருந்து கொன்றது சற்று ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம்.
ராமாயணத்தில் வரும் பல துணைகதைகளும் நல்ல விஷயங்களை சொல்லவே முயன்றிருக்கின்றன.

Good read....

மானுடரர்கள் அனைவருக்கும் ஜீவகாருண்ம் அவசியம்..பசித்தோருக்கு அன்னமிடுங்கள்..ஐயம் இட்டு உண்போம்..நாம் சோ்த்து வைக்கும் உண்மையான சொத்து நம்முடைய தா்மங்கள்..ஒவ்வொன்றிற்கும் ஒரு அளவுகோல் உள்ளது..தானத்திற்கு மட்டுமே அளவில்லை.

..வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கண்டு மலைக்காதீர்கள்..சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும் மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன..பேராசை கொள்வதால் இன்பத்தை எதிர்பாா்த்து அன்றாட மகிழ்ச்சிகளைத் தொலைத்துக் கொண்டு வருகின்றோம்...ஆண்டவன் எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான அழகிய முகத்தினை கொடுத்துள்ளார். அதில் சிரிப்பை நாமாகத்தான் வரவழைத்துக்கொள்ள வே்ணடும்

..எவரையும் பழி வாங்கும் எண்ணம் கொள்ள வேண்டாம்...மிகப்பெரிய அளவில் உ ங்களுக்கு துன்பம் ஒருவர் செய்திருந்தாலும் இறைவனிடம் சமா்ப்பித்து நிம்மதியாக இருங்கள்..அவன் கொடுக்கும் தண்டனையே அவர்களுக்கு பாடமாக அமையும்....நீங்கள் பழி வாங்க வேண்டும் என நினைப்பது அற்ப ஆனந்தம்காணும் செயலாகும்....இன்றைய நற்சிந்தனைகளுடன் வாழ்ந்து மகிழ்வுறுவோம்....வணக்கம்.....

ஸ்ரீ ஸுக்தம் ஒரு விளக்கம்

ஸ்ரீஸூக்தம்.....!!!

ஸ்ரீ ஸுக்தம் ஒரு விளக்கம்:-

பாற்கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமி தரித்திரத்தை போக்கி தனத்தை அளிக்கும் சக்தி பெற்றவள்.

இல்லாமை என்ற சொல்லை இல்லாமல் செய்பவள். அதோடு ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே.

ஸ்ரீ ஸுக்தத்தை தினமும் பாராயணம் செய்தால் வாழ்க்கை வளம் பெரும். மந்திர பாராயணம் செய்ய முடியாதவர்கள் தினம் தோறும்
இந்த மந்திரத்தை செவி வழி கேட்டாலே திருமகளின் திருவருளை பெறமுடியும்.

உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற செல்வத்திருமகளை பிரார்த்திப்போமாக !!

ஸ்ரீ ஸுக்தம் ஸ்லோகம்- 1

ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்
ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம் :
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்
ஜாதவேதோ ம ஆவகா |


விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் நமக்கும் கிட்டும்படி தேவியை வேண்டுவோம்.

ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 2

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ -
மநபகாமிநீம் : l
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம்
காமஸ்வம் புருஷாநஹம் Il

பொருள் விளக்கம் :-

லக்ஷ்மி கடாட்சம் நம்மிடம் இருந்தால் நாம் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடையமுடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் நம்மை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரிய வேண்டுவோம்.

ஸ்ரீ ஸுக்தம் ஸ்லோகம்- 3

அஸ்வபூர்வாம் ரத - மத்யாம்
ஹஸ்திநாத -ப்ரபோதிநீம் : |
ஸ்ரியம் தேவீமுபஹ்வயே
ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம் ||


குதிரைப்படை முன்னால் செல்கிறது. நடுவில் தேர்ப்படை போகிறது. யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை நம்மிடம் வருமாறு தேவியை வேண்டுவோம். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி நம்மை வந்தடையட்டும்.

ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 4

காம் ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாரா
மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம் : l
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம்
தாமிஹோ பஹ்வயே ஸ்ரியம் Il


மகிழ்வான தோற்றத்தை உடையவளும், எப்பொழுதும் புன்முறுவலுடன் காட்சி தருபவளும், பொன்மயமான பிரகாரம்போல் ஒளிரும் தேகத்தை உடையவளும், யானைகளின் திருமஞ்சன நீரினால் நனைந்த திருமேனியை உடையவளும், திசை எங்கும் தன் ஒளியைப் பரப்புபவளும், குறைவில்லாத நிறைவை உடையவளும், தன்னைப் போலவே பக்தர்களும் நிறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவளும், தாமரைப் பூவில் வசிப்பவளும், தாமரை போன்ற நிறம் உடையவளும், ஸ்ரீ என்ற பெயரை உடையவளுமான லட்சுமிதேவியை நம் இருப்பிடத்திற்கு அழைக்க பிரார்த்திப்போம்.

ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 5

சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம்
ஸ்ரியம் லோகே தேவஜூஷ்டா - முதாராம் :
தாம் பத்மிநீமீம் ஸரண-மஹம் ப்ரபத்யே
அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே

பக்தர்களை மகிழ்விப்பவளும், ஒளியாய் பிரகாசிப்பவளும், அனைத்து உலகங்களிலும் புகழப்படுபவளும், பக்தர்களைத் தேடி வந்து அருள்பவளும், தேவர்களால் துதிக்கப்பட்டவளும், உதாரகுணம் நிறைந்தவளும், சக்கரம்போல் வட்டமான தாமரைப் பூவை கையில் தரித்திருப்பவளும், வேத, இதிகாச புராணங்களில் போற்றப்படுபவளுமான தேவியை  சரணடைவோம். 
நம்முடைய வறுமை அழியட்டும்.
நமக்கு அருள் கிடைக்கட்டும்.

ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 6

ஆதித்ய - வர்ணே தபஸோ திஜாதோ
வநஸ்பதிஸ்தவ வ்ருக்ஷத பில்வ:
தஸ்ய பலாநி தபஸா நுதந்து மாயாந்த
ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ


சூரியனைப் போல் ஒளிநிறைந்தவளே ! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வ மரம் உண்டாகியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப் போல மனங்களின் உள்ளேயும், வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும் வறுமையையும் போக்கி எங்களுக்கு அருளவேண்டும்.

ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 7

உபைது மாம் தேவஸக
கீர்திஸ்ச மணிநா ஸஹ :
ப்ராதுர் பூதோ ஸ்மி ராஷ்ட்ரே -
ஸ்மித் கீர்த்திம்ருத்திம் ததாது மே :


தேவஸக -குபேரனும் ,

கீர்திஸ்ச -புகழின் தேவனும் ,

மணிநா ஸஹ -என்னை நாடி வர வேண்டும் .

அஸ்மின் -இந்த ,

ராஷ்ட்ரே‌-நாட்டில் ,

ப்ராதுர் பூத அஸ்மின் -பிறந்திருக்கிறேன் .

மே -எனக்கு ,

கீர்த்திம்- பெருமையும் ,

ரிதிம் -செல்வமும் ,

ததாது - வழங்குவாய் .

செல்வத்திர்க்குத் தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர வேண்டும்.

உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் .

ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் - 8

க்ஷுத்பி பாஸாமலாம் ஜ்யேஷ்டா
 மலஷ்மீம் நாசயாம்யஹம் |
அபூதி மஸம்ருத்திம் ச ஸர்வாம்
நிர்ணுத மே க்ருஹாத் ||

க்ஷுத்பி பாஸாமலாம் -பசியினாலும் தாகத்தினாலும் இளைத்தவளும் ,

ஜ்யேஷ்டாம-( உனக்கு மூத்தவளும் ), முன்னால் பிறந்தவளுமான ,

அலக்ஷ்மீம் -செல்வதிலிருந்து விலகிய மூதேவியை ,

அஹம் -நான் ,

மே க்ருஹாத் -எனது இல்லத்திலிருந்து

நாசயாமி -விலக்குகிறேன் .

சர்வாம் -எல்லா ,

அபூதிம் -ஏழ்மையையும் ,

அசம்ருத்திம் ச -வறுமையையும் ,

நிர்ணுத -அகற்றி அருளுக .

பசி தாகத்தினால் மெலிந்தவளும் ,லக்ஷ்மிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விளக்குகிறேன் .

எனது இல்லத்திலிருந்து அனைத்து எழ்மைகளையும் வறுமைகளையும் அகற்றி அருள்வாய் .

ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் (9)

 கந்தத்வாராம் துராதர்ஷாம்
 நித்யபுஷ்டாம் கரீஷிணீம் |
 ஈஶ்வரீம்கும் ஸர்வபூதானாம்
 தாமிஹோபஹ்வயே ச்ரியம் ||

கந்தத்வாராம் - நறுமணத்தின் இருப்பிடமானவளும்

துராதர்ஷாம் -வெல்லவே முடியாதவளும்

நித்ய புஷ்டாம் -நிதமும் வலிமையை தருபவளும்

கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும்

ஸர்வ பூதானாம் -எல்லா உயிர்களுக்கும்

ஈஸ்வரீம் -தலைவியும் ஆன

தாமாஸ்ரியம் -அந்த மகாலக்ஷ்மியை

இஹ -இங்கே

உபஹ்வையே– எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்

நறுமணத்தின் இருப்பிடமானவளும் , எவராலும் வெல்லப்பட முடியாதவளும் , என்றும் இனிமையைத் தருபவளும்,
அனைத்தும் நிறைந்தவளும் ,அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்

ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~10

மநஸ:  காமமாகூதிம் வாசஸ் ஸத்யமசிமஹி |
பசூனாம் ரூபமாநஸ்ய மயி ஶ்ரீ ச்ரயதாம் யச: ||

ஸ்ரீ -திருமகளே !

மநஸ: -மனத்தில் எழும்

காமம் -ஆசைகளையும் ,

ஆகூதிம் -தருமத்திற்கு முரணாகாத ஆசைகளையும் ,மகிழ்ச்சிகளையும் ,

வாக்-வாக்கில் ,

சத்யம் -உணமையையும் ,

பசூனாம் -பசுக்களாலும் ,

அந்யச்ய -உணவினாலும் ,

அசீமகி ,-அனுபவிக்க வேண்டும் .

மயி -எனக்கு ,

கீர்த்தி -பெருமை ,

ஸ்ரயதாம் -உண்டாகட்டும்

திருமகளே ! தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும் , மகிழ்ச்சியையும் , வாக்கில் உண்மையையும்,பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால் ,ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும் .

எனக்கு புகழ் உண்டாகட்டும் .

ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~11

கர்தமேன ப்ரஜாபூதா
மயி ஸம்பவ கர்தம |
ச்ரியம் வாஸய மே குலே
மாதரம் பத்மமாலிநீம் ||

கர்தமேன - கர்த்தமரே (கர்தம முனிவரே ),

கர்தமேன -உமக்கு (கர்த்தமராகிய )

பிரஜா பூதா -மகளாய்ப் பிறந்த மகாலக்ஷ்மி ,

மயி -எனக்கு ,என்னிடம்,

சம்பவ -தோன்ற வேண்டும்

பத்ம மாலிநீம் -தாமரைப்பூக்களினால் ஆன மாலை அணிந்தவளும் ,

ச்ரியம் -செல்வத்திற்கு தலைவியுமான

மாதாம் -அன்னையும்

மே -என் ,

குலே- என் குலத்தில் ,

வாசய -தங்கச் செய்ய வேண்டும் .

கர்த்தமரே ! உமது மகளான மஹாலக்ஷ்மி என்னிடம் வர வேண்டும் . தாமரை மாலை அணிந்தவளும் , செல்வத்தின் தலைவியும் , அன்னையுமாகிய அவளை என் குலத்தில் தங்கச் செய்ய வேண்டும்.

நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய் .

ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~12

ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே |
நி சதேவீம் மாதரம்  ச்ரியம் வாஸய மே குலே ||

சிக்லீத -சிக்லீதரே (முனிவர்,லக்ஷ்மியின் மகன் )

ஆப: - தண்ணீர்

ஸ்நிக்தானி  - சிறந்த உணவுப் பொருள்களை

ஸ்ருஜந்து -விளைவிக்கட்டும்

மே -எனது

க்ருஹே -எனது இல்லத்தில்

வஸ -வசிக்க வேண்டும் .

ச -மேலும்

தேவீம் -தேவியும்

மாதரம் -உலகிற்கு அன்னையும் ஆன

ச்ரியம் -உங்கள் தாயாகிய திருமகளை

மே -என்

குலே -குலத்தில் ,

வாசய – எப்போழுதும் வாழும்படி அருள வேண்டும்

லக்ஷ்மியின் மகனான சிக்லீதரே !
நீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் .நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும் .தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும் .

ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~ 13

ஆர்த்ராம் யஃ கரிணீம் யஷ்டிம்
பிங்கலாம் பத்மமாலினீம் |
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ||

ஜாத வேத -அக்னியே !

ய-யார் ,

ஆர்த்ராம் -கருனைநிரம்பிய மனத்தவளும் ,

கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரமானவளும் ,

யஷ்டீம் -தருமத்தை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும் ,

பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,

பத்ம மாலீநீம் -தாமரை மாலை அணிந்தவளும் ,

சந்திராம் -நிலவைப் போன்றவளும் ,

ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான ,

லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை ,

மே -என்னிடம் ,

ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.

அக்னியே !

கருணை நிரம்பியவளும் ,செயல் திறத்தில் கம்பீரமானவளும் ,நீதியை நிலை நிறுத்த செங்கோல்ஏந்தியவளும் ,
குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,தாமரை மாலை அணிபவளும் , நிலவை போன்றவளும் , பொன் மயமானவளுமான திருமகளை ,என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .

ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~ 14

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ||

ஜாத வேத -அக்னியே !

ஆர்த்ராம் -கருணை நிரம்பிய மனமுடயவளும் ,

புஷ்கரிணீம் -தாமரை மலர்கள் நிரம்பிய தடாகத்தில் வசிப்பவளும் ,

புஷ்டிம்-உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும் ,

ஸூவர்ணாம் -உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும் ,

ஹேம மாலீனினீம் -பொன் மாலை அணிந்தவளும் ,

சூர்யாம் - பகலவன் போல் பிரகாசிக்கின்றவளும் ,

ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான,

லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை ,

மே -என்னிடம் ,

ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.

அக்னியே !

கருணை நிரம்பிய மனதை உடையவளும் ,தாமரை மலரில் உறைபவளும் , உணவூட்டி அனைவரையும்  வளர்ப்பவளும், உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும் , பொன் மாலை அணிந்தவளும், பகலவன் போல் பிராகாசிக்கின்றவளும் ,பொன் மயமானவளுமான திருமகளை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .

ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~ 15

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மனபகாமினீம் யஸ்யாம் |
ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோ-ஸ்வானு விந்தேயம் புருஷானஹம் ||

ஜாத வேத -அக்னியே !

யஸ்யாம் -யாரால் ,

பிரபூதம் -அளவிட முடியா

ஹிரண்யம் -பொன்னும் ,

காவஹ -பசுக்களும்

தாஸ்ய -பணிப் பெண்டிரும்

அஸ்வான் -குதிரைகளும்

புருஷான் -பணியாட்களும் ,

அஹம் -நான் ,

விந்தேயம்-பெறுவேனோ,

தாம் -அந்த ,

லக்ஷ்மீம் -திருமகளை

மே அனபகாமீநீம் -என்னிடமிருந்து விலகாதிருக்குமாறு ,

ஆவஹ -செய்தருள வேண்டும் .

அக்னி தேவனே !
யாரால் அளவிட முடியாத பொன்னும் , பசுக்களும் ,பணிப்பெண்டிரும் ,குதிரைகளும் மற்றும் பணியாட்களையும் நான் பெறுவேனோ , அந்த திருமகள் ,என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும் .

ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் நிறைவு....

பத்மப்ரியே பத்மினி பத்மஹஸ்தே பத்மாலயே பத்மதளாயதாக்ஷி |
விச்வப்ரியே விஷ்ணு மநோகூலே த்வத்பாத பத்மம் மயிஸந்நிதஸ்வ ||

பொருள் விளக்கம் :-

தாமரையில் பிரியம் உள்ளவளே. தாமரைக்குச் சொந்தக்காரியே. தாமரையைக் கையில் தரித்தவளே. தாமரையில் வசிப்பவளே. தாமரை போல் நீண்ட கண்களை உடையவளே. உலகத்து மக்களால் விரும்பப்படுபவளே. விஷ்ணுவின் மனத்திற்குப் ப்ரியமானவளே. உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை எங்கள் தலைமேல் எப்போதும் இருக்கச் செய்வாயாக.

ச்ரியை ஜாத ச்ரிய ஆநிர்யாய ச்ரியம் வயோ ஜநித்ருப்யோ ததாது |
ச்ரியம் வஸாநா அம்ருதத்வமாயந் பவந்தி ஸத்யஸ்ஸமிதா மிதத்யூத் ||

பொருள் விளக்கம் :-

லட்சுமி தேவியின் விளையாட்டால் செய்யப்பட்ட இந்த உலகம் பிரகாசமானது. உலகில் பிறந்தவர்களுக்கு எல்லா ஐஸ்வர்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வல்லது. அவளை உபாசனை செய்பவர்கள் ஜனன மரணமில்லாத பிரம்மானந்தத்தை அடைவார்கள். இன்றும் நாளையும், (எப்பொழுதும்) சுயமான பிரகாசமான நிலையை அடைவார்கள். இல்லத்தில் சகல போகமும், பரத்தில் மோட்சமும் அடைவார்கள்.

ஸந்ததம்ருசா விஷட்க்ருத்யம் ஸந்தத்தம் ஸந்தீயதே ப்ரஜயா பசூபி:
ய ஏவம் வேத
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணுபத்னீ ச தீமஹி |
தன்னோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் ||

பொருள் விளக்கம் :-
எல்லா நன்மையும் திருமகளேதான் – இவ்வாறு அறிபவன் திருமகளை அடைகிறான்.  அப்படி செய்பவனுக்கு ஸகல விதமான செல்வமும் கிடைக்கிறது. இவ்வாறு அறிய வேண்டும்.

இந்த உலகங்கள் அனைத்தும் ஸ்ரீமகாவிஷ்ணு, லக்ஷ்மிதேவி இருவரையும் சேர்ந்தவை. அதனால் பெரிய பிராட்டியானதேவியை உபாசனை செய்கிறோம். விஷ்ணு பத்தினியை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த லக்ஷ்மிதான் தூண்டிவிடவேண்டும். லட்சுமி நாராயணரை வழிபடுவதற்கான புத்தியையும், அதை நிறைவேற்ற சக்தியையும் எங்களுக்கு தந்து அருளவேண்டும்.

ஸ்ரீ ஸுக்தம் ஸ்லோகம் சம்பூர்ணம்......

Tuesday, April 3, 2018

ஸ்ரீ ராமனின் பாதுகைகள்...

ஸ்ரீ ராமனின் பாதுகைகள் : -- ( படித்ததில் பிடித்தது )

சீதையை மணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினார் ராமபிரான்... நாட்டு மக்கள் எல்லோரும் ராமபிரானை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான். அவன் கைகளில் ராமனுக்கே அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகான இரு பாதுகைகள் இருந்தன.

வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப்பொருட்களைத் தந்துகொண்டிருந்தார்கள். அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது. எல்லோரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும்போது, தான் மட்டும் அற்ப காலணிகளையா தருவது? என "நினைத்தவன், ராமரைப் பார்க்கப் போகாமலே திரும்ப யத்தனித்தான்.

அதனை கவனித்து விட்ட ராமபிரான்,
அவனை அருகே அழைத்தார். உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே! ராமர் சொல்ல, அவரது அன்பில் நெகிழ்ந்து போனான் மித்ரபந்து.

ராமபிரான் வனவாசம் செல்லப் புறப்பட்ட போது, தாயே!, வன வாசம் செல்லும் போது எதையுமே எடுத்துச் செல்வது கூடாது தான். இருப்பினும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்ல அனுமதியுங்கள்! என்று கேட்டு அனுமதி வாங்கினார். கூட்டத்தில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த மித்ரபந்துவை நோக்கினார். விலை உயர்ந்த எந்தப் பரிசும் எனக்குப் பயன் படவில்லை. நீ அளித்த காலணிகள் தான் என் கால்களைக் காக்கப் போகின்றன! என்றார்.

உண்மை அன்பின் அடையாளமான அந்தப் பாதுகைகளே பின்னர், அயோத்தியின் அரியணையில் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஆட்சியும் செய்தன.

கடவுளுக்கு யார், என்ன செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல.

நீங்கள் உங்களால் முடிந்ததை மனப்பூர்வமான பக்தியுடன் அன்புடன் அவரது திருவடிகளில் சமர்ப்பியுங்கள். அது தான் கடவுளை சந்தோஷப் படுத்தும். இறைவனுக்கு மிகப் பிரியமானதாகவும் இருக்கும். ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம்.

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...