ஸ்ரீஸூக்தம்.....!!!
ஸ்ரீ ஸுக்தம் ஒரு விளக்கம்:-
பாற்கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமி தரித்திரத்தை போக்கி தனத்தை அளிக்கும் சக்தி பெற்றவள்.
இல்லாமை என்ற சொல்லை இல்லாமல் செய்பவள். அதோடு ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே.
ஸ்ரீ ஸுக்தத்தை தினமும் பாராயணம் செய்தால் வாழ்க்கை வளம் பெரும். மந்திர பாராயணம் செய்ய முடியாதவர்கள் தினம் தோறும்
இந்த மந்திரத்தை செவி வழி கேட்டாலே திருமகளின் திருவருளை பெறமுடியும்.
உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற செல்வத்திருமகளை பிரார்த்திப்போமாக !!
ஸ்ரீ ஸுக்தம் ஸ்லோகம்- 1
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்
ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம் :
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்
ஜாதவேதோ ம ஆவகா |
விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் நமக்கும் கிட்டும்படி தேவியை வேண்டுவோம்.
ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 2
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ -
மநபகாமிநீம் : l
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம்
காமஸ்வம் புருஷாநஹம் Il
பொருள் விளக்கம் :-
லக்ஷ்மி கடாட்சம் நம்மிடம் இருந்தால் நாம் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடையமுடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் நம்மை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரிய வேண்டுவோம்.
ஸ்ரீ ஸுக்தம் ஸ்லோகம்- 3
அஸ்வபூர்வாம் ரத - மத்யாம்
ஹஸ்திநாத -ப்ரபோதிநீம் : |
ஸ்ரியம் தேவீமுபஹ்வயே
ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம் ||
குதிரைப்படை முன்னால் செல்கிறது. நடுவில் தேர்ப்படை போகிறது. யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை நம்மிடம் வருமாறு தேவியை வேண்டுவோம். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி நம்மை வந்தடையட்டும்.
ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 4
காம் ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாரா
மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம் : l
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம்
தாமிஹோ பஹ்வயே ஸ்ரியம் Il
மகிழ்வான தோற்றத்தை உடையவளும், எப்பொழுதும் புன்முறுவலுடன் காட்சி தருபவளும், பொன்மயமான பிரகாரம்போல் ஒளிரும் தேகத்தை உடையவளும், யானைகளின் திருமஞ்சன நீரினால் நனைந்த திருமேனியை உடையவளும், திசை எங்கும் தன் ஒளியைப் பரப்புபவளும், குறைவில்லாத நிறைவை உடையவளும், தன்னைப் போலவே பக்தர்களும் நிறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவளும், தாமரைப் பூவில் வசிப்பவளும், தாமரை போன்ற நிறம் உடையவளும், ஸ்ரீ என்ற பெயரை உடையவளுமான லட்சுமிதேவியை நம் இருப்பிடத்திற்கு அழைக்க பிரார்த்திப்போம்.
ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 5
சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம்
ஸ்ரியம் லோகே தேவஜூஷ்டா - முதாராம் :
தாம் பத்மிநீமீம் ஸரண-மஹம் ப்ரபத்யே
அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே
பக்தர்களை மகிழ்விப்பவளும், ஒளியாய் பிரகாசிப்பவளும், அனைத்து உலகங்களிலும் புகழப்படுபவளும், பக்தர்களைத் தேடி வந்து அருள்பவளும், தேவர்களால் துதிக்கப்பட்டவளும், உதாரகுணம் நிறைந்தவளும், சக்கரம்போல் வட்டமான தாமரைப் பூவை கையில் தரித்திருப்பவளும், வேத, இதிகாச புராணங்களில் போற்றப்படுபவளுமான தேவியை சரணடைவோம்.
நம்முடைய வறுமை அழியட்டும்.
நமக்கு அருள் கிடைக்கட்டும்.
ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 6
ஆதித்ய - வர்ணே தபஸோ திஜாதோ
வநஸ்பதிஸ்தவ வ்ருக்ஷத பில்வ:
தஸ்ய பலாநி தபஸா நுதந்து மாயாந்த
ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ
சூரியனைப் போல் ஒளிநிறைந்தவளே ! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வ மரம் உண்டாகியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப் போல மனங்களின் உள்ளேயும், வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும் வறுமையையும் போக்கி எங்களுக்கு அருளவேண்டும்.
ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 7
உபைது மாம் தேவஸக
கீர்திஸ்ச மணிநா ஸஹ :
ப்ராதுர் பூதோ ஸ்மி ராஷ்ட்ரே -
ஸ்மித் கீர்த்திம்ருத்திம் ததாது மே :
தேவஸக -குபேரனும் ,
கீர்திஸ்ச -புகழின் தேவனும் ,
மணிநா ஸஹ -என்னை நாடி வர வேண்டும் .
அஸ்மின் -இந்த ,
ராஷ்ட்ரே-நாட்டில் ,
ப்ராதுர் பூத அஸ்மின் -பிறந்திருக்கிறேன் .
மே -எனக்கு ,
கீர்த்திம்- பெருமையும் ,
ரிதிம் -செல்வமும் ,
ததாது - வழங்குவாய் .
செல்வத்திர்க்குத் தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர வேண்டும்.
உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் - 8
க்ஷுத்பி பாஸாமலாம் ஜ்யேஷ்டா
மலஷ்மீம் நாசயாம்யஹம் |
அபூதி மஸம்ருத்திம் ச ஸர்வாம்
நிர்ணுத மே க்ருஹாத் ||
க்ஷுத்பி பாஸாமலாம் -பசியினாலும் தாகத்தினாலும் இளைத்தவளும் ,
ஜ்யேஷ்டாம-( உனக்கு மூத்தவளும் ), முன்னால் பிறந்தவளுமான ,
அலக்ஷ்மீம் -செல்வதிலிருந்து விலகிய மூதேவியை ,
அஹம் -நான் ,
மே க்ருஹாத் -எனது இல்லத்திலிருந்து
நாசயாமி -விலக்குகிறேன் .
சர்வாம் -எல்லா ,
அபூதிம் -ஏழ்மையையும் ,
அசம்ருத்திம் ச -வறுமையையும் ,
நிர்ணுத -அகற்றி அருளுக .
பசி தாகத்தினால் மெலிந்தவளும் ,லக்ஷ்மிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விளக்குகிறேன் .
எனது இல்லத்திலிருந்து அனைத்து எழ்மைகளையும் வறுமைகளையும் அகற்றி அருள்வாய் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் (9)
கந்தத்வாராம் துராதர்ஷாம்
நித்யபுஷ்டாம் கரீஷிணீம் |
ஈஶ்வரீம்கும் ஸர்வபூதானாம்
தாமிஹோபஹ்வயே ச்ரியம் ||
கந்தத்வாராம் - நறுமணத்தின் இருப்பிடமானவளும்
துராதர்ஷாம் -வெல்லவே முடியாதவளும்
நித்ய புஷ்டாம் -நிதமும் வலிமையை தருபவளும்
கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும்
ஸர்வ பூதானாம் -எல்லா உயிர்களுக்கும்
ஈஸ்வரீம் -தலைவியும் ஆன
தாமாஸ்ரியம் -அந்த மகாலக்ஷ்மியை
இஹ -இங்கே
உபஹ்வையே– எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்
நறுமணத்தின் இருப்பிடமானவளும் , எவராலும் வெல்லப்பட முடியாதவளும் , என்றும் இனிமையைத் தருபவளும்,
அனைத்தும் நிறைந்தவளும் ,அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~10
மநஸ: காமமாகூதிம் வாசஸ் ஸத்யமசிமஹி |
பசூனாம் ரூபமாநஸ்ய மயி ஶ்ரீ ச்ரயதாம் யச: ||
ஸ்ரீ -திருமகளே !
மநஸ: -மனத்தில் எழும்
காமம் -ஆசைகளையும் ,
ஆகூதிம் -தருமத்திற்கு முரணாகாத ஆசைகளையும் ,மகிழ்ச்சிகளையும் ,
வாக்-வாக்கில் ,
சத்யம் -உணமையையும் ,
பசூனாம் -பசுக்களாலும் ,
அந்யச்ய -உணவினாலும் ,
அசீமகி ,-அனுபவிக்க வேண்டும் .
மயி -எனக்கு ,
கீர்த்தி -பெருமை ,
ஸ்ரயதாம் -உண்டாகட்டும்
திருமகளே ! தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும் , மகிழ்ச்சியையும் , வாக்கில் உண்மையையும்,பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால் ,ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும் .
எனக்கு புகழ் உண்டாகட்டும் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~11
கர்தமேன ப்ரஜாபூதா
மயி ஸம்பவ கர்தம |
ச்ரியம் வாஸய மே குலே
மாதரம் பத்மமாலிநீம் ||
கர்தமேன - கர்த்தமரே (கர்தம முனிவரே ),
கர்தமேன -உமக்கு (கர்த்தமராகிய )
பிரஜா பூதா -மகளாய்ப் பிறந்த மகாலக்ஷ்மி ,
மயி -எனக்கு ,என்னிடம்,
சம்பவ -தோன்ற வேண்டும்
பத்ம மாலிநீம் -தாமரைப்பூக்களினால் ஆன மாலை அணிந்தவளும் ,
ச்ரியம் -செல்வத்திற்கு தலைவியுமான
மாதாம் -அன்னையும்
மே -என் ,
குலே- என் குலத்தில் ,
வாசய -தங்கச் செய்ய வேண்டும் .
கர்த்தமரே ! உமது மகளான மஹாலக்ஷ்மி என்னிடம் வர வேண்டும் . தாமரை மாலை அணிந்தவளும் , செல்வத்தின் தலைவியும் , அன்னையுமாகிய அவளை என் குலத்தில் தங்கச் செய்ய வேண்டும்.
நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~12
ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே |
நி சதேவீம் மாதரம் ச்ரியம் வாஸய மே குலே ||
சிக்லீத -சிக்லீதரே (முனிவர்,லக்ஷ்மியின் மகன் )
ஆப: - தண்ணீர்
ஸ்நிக்தானி - சிறந்த உணவுப் பொருள்களை
ஸ்ருஜந்து -விளைவிக்கட்டும்
மே -எனது
க்ருஹே -எனது இல்லத்தில்
வஸ -வசிக்க வேண்டும் .
ச -மேலும்
தேவீம் -தேவியும்
மாதரம் -உலகிற்கு அன்னையும் ஆன
ச்ரியம் -உங்கள் தாயாகிய திருமகளை
மே -என்
குலே -குலத்தில் ,
வாசய – எப்போழுதும் வாழும்படி அருள வேண்டும்
லக்ஷ்மியின் மகனான சிக்லீதரே !
நீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் .நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும் .தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~ 13
ஆர்த்ராம் யஃ கரிணீம் யஷ்டிம்
பிங்கலாம் பத்மமாலினீம் |
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ||
ஜாத வேத -அக்னியே !
ய-யார் ,
ஆர்த்ராம் -கருனைநிரம்பிய மனத்தவளும் ,
கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரமானவளும் ,
யஷ்டீம் -தருமத்தை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும் ,
பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,
பத்ம மாலீநீம் -தாமரை மாலை அணிந்தவளும் ,
சந்திராம் -நிலவைப் போன்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான ,
லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை ,
மே -என்னிடம் ,
ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.
அக்னியே !
கருணை நிரம்பியவளும் ,செயல் திறத்தில் கம்பீரமானவளும் ,நீதியை நிலை நிறுத்த செங்கோல்ஏந்தியவளும் ,
குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,தாமரை மாலை அணிபவளும் , நிலவை போன்றவளும் , பொன் மயமானவளுமான திருமகளை ,என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~ 14
ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ||
ஜாத வேத -அக்னியே !
ஆர்த்ராம் -கருணை நிரம்பிய மனமுடயவளும் ,
புஷ்கரிணீம் -தாமரை மலர்கள் நிரம்பிய தடாகத்தில் வசிப்பவளும் ,
புஷ்டிம்-உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும் ,
ஸூவர்ணாம் -உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும் ,
ஹேம மாலீனினீம் -பொன் மாலை அணிந்தவளும் ,
சூர்யாம் - பகலவன் போல் பிரகாசிக்கின்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான,
லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை ,
மே -என்னிடம் ,
ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.
அக்னியே !
கருணை நிரம்பிய மனதை உடையவளும் ,தாமரை மலரில் உறைபவளும் , உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும், உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும் , பொன் மாலை அணிந்தவளும், பகலவன் போல் பிராகாசிக்கின்றவளும் ,பொன் மயமானவளுமான திருமகளை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~ 15
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மனபகாமினீம் யஸ்யாம் |
ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோ-ஸ்வானு விந்தேயம் புருஷானஹம் ||
ஜாத வேத -அக்னியே !
யஸ்யாம் -யாரால் ,
பிரபூதம் -அளவிட முடியா
ஹிரண்யம் -பொன்னும் ,
காவஹ -பசுக்களும்
தாஸ்ய -பணிப் பெண்டிரும்
அஸ்வான் -குதிரைகளும்
புருஷான் -பணியாட்களும் ,
அஹம் -நான் ,
விந்தேயம்-பெறுவேனோ,
தாம் -அந்த ,
லக்ஷ்மீம் -திருமகளை
மே அனபகாமீநீம் -என்னிடமிருந்து விலகாதிருக்குமாறு ,
ஆவஹ -செய்தருள வேண்டும் .
அக்னி தேவனே !
யாரால் அளவிட முடியாத பொன்னும் , பசுக்களும் ,பணிப்பெண்டிரும் ,குதிரைகளும் மற்றும் பணியாட்களையும் நான் பெறுவேனோ , அந்த திருமகள் ,என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் நிறைவு....
பத்மப்ரியே பத்மினி பத்மஹஸ்தே பத்மாலயே பத்மதளாயதாக்ஷி |
விச்வப்ரியே விஷ்ணு மநோகூலே த்வத்பாத பத்மம் மயிஸந்நிதஸ்வ ||
பொருள் விளக்கம் :-
தாமரையில் பிரியம் உள்ளவளே. தாமரைக்குச் சொந்தக்காரியே. தாமரையைக் கையில் தரித்தவளே. தாமரையில் வசிப்பவளே. தாமரை போல் நீண்ட கண்களை உடையவளே. உலகத்து மக்களால் விரும்பப்படுபவளே. விஷ்ணுவின் மனத்திற்குப் ப்ரியமானவளே. உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை எங்கள் தலைமேல் எப்போதும் இருக்கச் செய்வாயாக.
ச்ரியை ஜாத ச்ரிய ஆநிர்யாய ச்ரியம் வயோ ஜநித்ருப்யோ ததாது |
ச்ரியம் வஸாநா அம்ருதத்வமாயந் பவந்தி ஸத்யஸ்ஸமிதா மிதத்யூத் ||
பொருள் விளக்கம் :-
லட்சுமி தேவியின் விளையாட்டால் செய்யப்பட்ட இந்த உலகம் பிரகாசமானது. உலகில் பிறந்தவர்களுக்கு எல்லா ஐஸ்வர்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வல்லது. அவளை உபாசனை செய்பவர்கள் ஜனன மரணமில்லாத பிரம்மானந்தத்தை அடைவார்கள். இன்றும் நாளையும், (எப்பொழுதும்) சுயமான பிரகாசமான நிலையை அடைவார்கள். இல்லத்தில் சகல போகமும், பரத்தில் மோட்சமும் அடைவார்கள்.
ஸந்ததம்ருசா விஷட்க்ருத்யம் ஸந்தத்தம் ஸந்தீயதே ப்ரஜயா பசூபி:
ய ஏவம் வேத
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணுபத்னீ ச தீமஹி |
தன்னோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் ||
பொருள் விளக்கம் :-
எல்லா நன்மையும் திருமகளேதான் – இவ்வாறு அறிபவன் திருமகளை அடைகிறான். அப்படி செய்பவனுக்கு ஸகல விதமான செல்வமும் கிடைக்கிறது. இவ்வாறு அறிய வேண்டும்.
இந்த உலகங்கள் அனைத்தும் ஸ்ரீமகாவிஷ்ணு, லக்ஷ்மிதேவி இருவரையும் சேர்ந்தவை. அதனால் பெரிய பிராட்டியானதேவியை உபாசனை செய்கிறோம். விஷ்ணு பத்தினியை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த லக்ஷ்மிதான் தூண்டிவிடவேண்டும். லட்சுமி நாராயணரை வழிபடுவதற்கான புத்தியையும், அதை நிறைவேற்ற சக்தியையும் எங்களுக்கு தந்து அருளவேண்டும்.
ஸ்ரீ ஸுக்தம் ஸ்லோகம் சம்பூர்ணம்......
ஸ்ரீ ஸுக்தம் ஒரு விளக்கம்:-
பாற்கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமி தரித்திரத்தை போக்கி தனத்தை அளிக்கும் சக்தி பெற்றவள்.
இல்லாமை என்ற சொல்லை இல்லாமல் செய்பவள். அதோடு ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே.
ஸ்ரீ ஸுக்தத்தை தினமும் பாராயணம் செய்தால் வாழ்க்கை வளம் பெரும். மந்திர பாராயணம் செய்ய முடியாதவர்கள் தினம் தோறும்
இந்த மந்திரத்தை செவி வழி கேட்டாலே திருமகளின் திருவருளை பெறமுடியும்.
உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற செல்வத்திருமகளை பிரார்த்திப்போமாக !!
ஸ்ரீ ஸுக்தம் ஸ்லோகம்- 1
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்
ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம் :
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்
ஜாதவேதோ ம ஆவகா |
விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் நமக்கும் கிட்டும்படி தேவியை வேண்டுவோம்.
ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 2
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ -
மநபகாமிநீம் : l
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம்
காமஸ்வம் புருஷாநஹம் Il
பொருள் விளக்கம் :-
லக்ஷ்மி கடாட்சம் நம்மிடம் இருந்தால் நாம் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடையமுடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் நம்மை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரிய வேண்டுவோம்.
ஸ்ரீ ஸுக்தம் ஸ்லோகம்- 3
அஸ்வபூர்வாம் ரத - மத்யாம்
ஹஸ்திநாத -ப்ரபோதிநீம் : |
ஸ்ரியம் தேவீமுபஹ்வயே
ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம் ||
குதிரைப்படை முன்னால் செல்கிறது. நடுவில் தேர்ப்படை போகிறது. யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை நம்மிடம் வருமாறு தேவியை வேண்டுவோம். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி நம்மை வந்தடையட்டும்.
ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 4
காம் ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாரா
மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம் : l
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம்
தாமிஹோ பஹ்வயே ஸ்ரியம் Il
மகிழ்வான தோற்றத்தை உடையவளும், எப்பொழுதும் புன்முறுவலுடன் காட்சி தருபவளும், பொன்மயமான பிரகாரம்போல் ஒளிரும் தேகத்தை உடையவளும், யானைகளின் திருமஞ்சன நீரினால் நனைந்த திருமேனியை உடையவளும், திசை எங்கும் தன் ஒளியைப் பரப்புபவளும், குறைவில்லாத நிறைவை உடையவளும், தன்னைப் போலவே பக்தர்களும் நிறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவளும், தாமரைப் பூவில் வசிப்பவளும், தாமரை போன்ற நிறம் உடையவளும், ஸ்ரீ என்ற பெயரை உடையவளுமான லட்சுமிதேவியை நம் இருப்பிடத்திற்கு அழைக்க பிரார்த்திப்போம்.
ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 5
சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம்
ஸ்ரியம் லோகே தேவஜூஷ்டா - முதாராம் :
தாம் பத்மிநீமீம் ஸரண-மஹம் ப்ரபத்யே
அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே
பக்தர்களை மகிழ்விப்பவளும், ஒளியாய் பிரகாசிப்பவளும், அனைத்து உலகங்களிலும் புகழப்படுபவளும், பக்தர்களைத் தேடி வந்து அருள்பவளும், தேவர்களால் துதிக்கப்பட்டவளும், உதாரகுணம் நிறைந்தவளும், சக்கரம்போல் வட்டமான தாமரைப் பூவை கையில் தரித்திருப்பவளும், வேத, இதிகாச புராணங்களில் போற்றப்படுபவளுமான தேவியை சரணடைவோம்.
நம்முடைய வறுமை அழியட்டும்.
நமக்கு அருள் கிடைக்கட்டும்.
ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 6
ஆதித்ய - வர்ணே தபஸோ திஜாதோ
வநஸ்பதிஸ்தவ வ்ருக்ஷத பில்வ:
தஸ்ய பலாநி தபஸா நுதந்து மாயாந்த
ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ
சூரியனைப் போல் ஒளிநிறைந்தவளே ! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வ மரம் உண்டாகியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப் போல மனங்களின் உள்ளேயும், வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும் வறுமையையும் போக்கி எங்களுக்கு அருளவேண்டும்.
ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 7
உபைது மாம் தேவஸக
கீர்திஸ்ச மணிநா ஸஹ :
ப்ராதுர் பூதோ ஸ்மி ராஷ்ட்ரே -
ஸ்மித் கீர்த்திம்ருத்திம் ததாது மே :
தேவஸக -குபேரனும் ,
கீர்திஸ்ச -புகழின் தேவனும் ,
மணிநா ஸஹ -என்னை நாடி வர வேண்டும் .
அஸ்மின் -இந்த ,
ராஷ்ட்ரே-நாட்டில் ,
ப்ராதுர் பூத அஸ்மின் -பிறந்திருக்கிறேன் .
மே -எனக்கு ,
கீர்த்திம்- பெருமையும் ,
ரிதிம் -செல்வமும் ,
ததாது - வழங்குவாய் .
செல்வத்திர்க்குத் தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர வேண்டும்.
உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் - 8
க்ஷுத்பி பாஸாமலாம் ஜ்யேஷ்டா
மலஷ்மீம் நாசயாம்யஹம் |
அபூதி மஸம்ருத்திம் ச ஸர்வாம்
நிர்ணுத மே க்ருஹாத் ||
க்ஷுத்பி பாஸாமலாம் -பசியினாலும் தாகத்தினாலும் இளைத்தவளும் ,
ஜ்யேஷ்டாம-( உனக்கு மூத்தவளும் ), முன்னால் பிறந்தவளுமான ,
அலக்ஷ்மீம் -செல்வதிலிருந்து விலகிய மூதேவியை ,
அஹம் -நான் ,
மே க்ருஹாத் -எனது இல்லத்திலிருந்து
நாசயாமி -விலக்குகிறேன் .
சர்வாம் -எல்லா ,
அபூதிம் -ஏழ்மையையும் ,
அசம்ருத்திம் ச -வறுமையையும் ,
நிர்ணுத -அகற்றி அருளுக .
பசி தாகத்தினால் மெலிந்தவளும் ,லக்ஷ்மிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விளக்குகிறேன் .
எனது இல்லத்திலிருந்து அனைத்து எழ்மைகளையும் வறுமைகளையும் அகற்றி அருள்வாய் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் (9)
கந்தத்வாராம் துராதர்ஷாம்
நித்யபுஷ்டாம் கரீஷிணீம் |
ஈஶ்வரீம்கும் ஸர்வபூதானாம்
தாமிஹோபஹ்வயே ச்ரியம் ||
கந்தத்வாராம் - நறுமணத்தின் இருப்பிடமானவளும்
துராதர்ஷாம் -வெல்லவே முடியாதவளும்
நித்ய புஷ்டாம் -நிதமும் வலிமையை தருபவளும்
கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும்
ஸர்வ பூதானாம் -எல்லா உயிர்களுக்கும்
ஈஸ்வரீம் -தலைவியும் ஆன
தாமாஸ்ரியம் -அந்த மகாலக்ஷ்மியை
இஹ -இங்கே
உபஹ்வையே– எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்
நறுமணத்தின் இருப்பிடமானவளும் , எவராலும் வெல்லப்பட முடியாதவளும் , என்றும் இனிமையைத் தருபவளும்,
அனைத்தும் நிறைந்தவளும் ,அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~10
மநஸ: காமமாகூதிம் வாசஸ் ஸத்யமசிமஹி |
பசூனாம் ரூபமாநஸ்ய மயி ஶ்ரீ ச்ரயதாம் யச: ||
ஸ்ரீ -திருமகளே !
மநஸ: -மனத்தில் எழும்
காமம் -ஆசைகளையும் ,
ஆகூதிம் -தருமத்திற்கு முரணாகாத ஆசைகளையும் ,மகிழ்ச்சிகளையும் ,
வாக்-வாக்கில் ,
சத்யம் -உணமையையும் ,
பசூனாம் -பசுக்களாலும் ,
அந்யச்ய -உணவினாலும் ,
அசீமகி ,-அனுபவிக்க வேண்டும் .
மயி -எனக்கு ,
கீர்த்தி -பெருமை ,
ஸ்ரயதாம் -உண்டாகட்டும்
திருமகளே ! தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும் , மகிழ்ச்சியையும் , வாக்கில் உண்மையையும்,பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால் ,ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும் .
எனக்கு புகழ் உண்டாகட்டும் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~11
கர்தமேன ப்ரஜாபூதா
மயி ஸம்பவ கர்தம |
ச்ரியம் வாஸய மே குலே
மாதரம் பத்மமாலிநீம் ||
கர்தமேன - கர்த்தமரே (கர்தம முனிவரே ),
கர்தமேன -உமக்கு (கர்த்தமராகிய )
பிரஜா பூதா -மகளாய்ப் பிறந்த மகாலக்ஷ்மி ,
மயி -எனக்கு ,என்னிடம்,
சம்பவ -தோன்ற வேண்டும்
பத்ம மாலிநீம் -தாமரைப்பூக்களினால் ஆன மாலை அணிந்தவளும் ,
ச்ரியம் -செல்வத்திற்கு தலைவியுமான
மாதாம் -அன்னையும்
மே -என் ,
குலே- என் குலத்தில் ,
வாசய -தங்கச் செய்ய வேண்டும் .
கர்த்தமரே ! உமது மகளான மஹாலக்ஷ்மி என்னிடம் வர வேண்டும் . தாமரை மாலை அணிந்தவளும் , செல்வத்தின் தலைவியும் , அன்னையுமாகிய அவளை என் குலத்தில் தங்கச் செய்ய வேண்டும்.
நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~12
ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே |
நி சதேவீம் மாதரம் ச்ரியம் வாஸய மே குலே ||
சிக்லீத -சிக்லீதரே (முனிவர்,லக்ஷ்மியின் மகன் )
ஆப: - தண்ணீர்
ஸ்நிக்தானி - சிறந்த உணவுப் பொருள்களை
ஸ்ருஜந்து -விளைவிக்கட்டும்
மே -எனது
க்ருஹே -எனது இல்லத்தில்
வஸ -வசிக்க வேண்டும் .
ச -மேலும்
தேவீம் -தேவியும்
மாதரம் -உலகிற்கு அன்னையும் ஆன
ச்ரியம் -உங்கள் தாயாகிய திருமகளை
மே -என்
குலே -குலத்தில் ,
வாசய – எப்போழுதும் வாழும்படி அருள வேண்டும்
லக்ஷ்மியின் மகனான சிக்லீதரே !
நீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் .நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும் .தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~ 13
ஆர்த்ராம் யஃ கரிணீம் யஷ்டிம்
பிங்கலாம் பத்மமாலினீம் |
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ||
ஜாத வேத -அக்னியே !
ய-யார் ,
ஆர்த்ராம் -கருனைநிரம்பிய மனத்தவளும் ,
கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரமானவளும் ,
யஷ்டீம் -தருமத்தை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும் ,
பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,
பத்ம மாலீநீம் -தாமரை மாலை அணிந்தவளும் ,
சந்திராம் -நிலவைப் போன்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான ,
லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை ,
மே -என்னிடம் ,
ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.
அக்னியே !
கருணை நிரம்பியவளும் ,செயல் திறத்தில் கம்பீரமானவளும் ,நீதியை நிலை நிறுத்த செங்கோல்ஏந்தியவளும் ,
குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,தாமரை மாலை அணிபவளும் , நிலவை போன்றவளும் , பொன் மயமானவளுமான திருமகளை ,என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~ 14
ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ||
ஜாத வேத -அக்னியே !
ஆர்த்ராம் -கருணை நிரம்பிய மனமுடயவளும் ,
புஷ்கரிணீம் -தாமரை மலர்கள் நிரம்பிய தடாகத்தில் வசிப்பவளும் ,
புஷ்டிம்-உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும் ,
ஸூவர்ணாம் -உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும் ,
ஹேம மாலீனினீம் -பொன் மாலை அணிந்தவளும் ,
சூர்யாம் - பகலவன் போல் பிரகாசிக்கின்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான,
லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை ,
மே -என்னிடம் ,
ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.
அக்னியே !
கருணை நிரம்பிய மனதை உடையவளும் ,தாமரை மலரில் உறைபவளும் , உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும், உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும் , பொன் மாலை அணிந்தவளும், பகலவன் போல் பிராகாசிக்கின்றவளும் ,பொன் மயமானவளுமான திருமகளை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~ 15
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மனபகாமினீம் யஸ்யாம் |
ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோ-ஸ்வானு விந்தேயம் புருஷானஹம் ||
ஜாத வேத -அக்னியே !
யஸ்யாம் -யாரால் ,
பிரபூதம் -அளவிட முடியா
ஹிரண்யம் -பொன்னும் ,
காவஹ -பசுக்களும்
தாஸ்ய -பணிப் பெண்டிரும்
அஸ்வான் -குதிரைகளும்
புருஷான் -பணியாட்களும் ,
அஹம் -நான் ,
விந்தேயம்-பெறுவேனோ,
தாம் -அந்த ,
லக்ஷ்மீம் -திருமகளை
மே அனபகாமீநீம் -என்னிடமிருந்து விலகாதிருக்குமாறு ,
ஆவஹ -செய்தருள வேண்டும் .
அக்னி தேவனே !
யாரால் அளவிட முடியாத பொன்னும் , பசுக்களும் ,பணிப்பெண்டிரும் ,குதிரைகளும் மற்றும் பணியாட்களையும் நான் பெறுவேனோ , அந்த திருமகள் ,என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும் .
ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் நிறைவு....
பத்மப்ரியே பத்மினி பத்மஹஸ்தே பத்மாலயே பத்மதளாயதாக்ஷி |
விச்வப்ரியே விஷ்ணு மநோகூலே த்வத்பாத பத்மம் மயிஸந்நிதஸ்வ ||
பொருள் விளக்கம் :-
தாமரையில் பிரியம் உள்ளவளே. தாமரைக்குச் சொந்தக்காரியே. தாமரையைக் கையில் தரித்தவளே. தாமரையில் வசிப்பவளே. தாமரை போல் நீண்ட கண்களை உடையவளே. உலகத்து மக்களால் விரும்பப்படுபவளே. விஷ்ணுவின் மனத்திற்குப் ப்ரியமானவளே. உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை எங்கள் தலைமேல் எப்போதும் இருக்கச் செய்வாயாக.
ச்ரியை ஜாத ச்ரிய ஆநிர்யாய ச்ரியம் வயோ ஜநித்ருப்யோ ததாது |
ச்ரியம் வஸாநா அம்ருதத்வமாயந் பவந்தி ஸத்யஸ்ஸமிதா மிதத்யூத் ||
பொருள் விளக்கம் :-
லட்சுமி தேவியின் விளையாட்டால் செய்யப்பட்ட இந்த உலகம் பிரகாசமானது. உலகில் பிறந்தவர்களுக்கு எல்லா ஐஸ்வர்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வல்லது. அவளை உபாசனை செய்பவர்கள் ஜனன மரணமில்லாத பிரம்மானந்தத்தை அடைவார்கள். இன்றும் நாளையும், (எப்பொழுதும்) சுயமான பிரகாசமான நிலையை அடைவார்கள். இல்லத்தில் சகல போகமும், பரத்தில் மோட்சமும் அடைவார்கள்.
ஸந்ததம்ருசா விஷட்க்ருத்யம் ஸந்தத்தம் ஸந்தீயதே ப்ரஜயா பசூபி:
ய ஏவம் வேத
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணுபத்னீ ச தீமஹி |
தன்னோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் ||
பொருள் விளக்கம் :-
எல்லா நன்மையும் திருமகளேதான் – இவ்வாறு அறிபவன் திருமகளை அடைகிறான். அப்படி செய்பவனுக்கு ஸகல விதமான செல்வமும் கிடைக்கிறது. இவ்வாறு அறிய வேண்டும்.
இந்த உலகங்கள் அனைத்தும் ஸ்ரீமகாவிஷ்ணு, லக்ஷ்மிதேவி இருவரையும் சேர்ந்தவை. அதனால் பெரிய பிராட்டியானதேவியை உபாசனை செய்கிறோம். விஷ்ணு பத்தினியை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த லக்ஷ்மிதான் தூண்டிவிடவேண்டும். லட்சுமி நாராயணரை வழிபடுவதற்கான புத்தியையும், அதை நிறைவேற்ற சக்தியையும் எங்களுக்கு தந்து அருளவேண்டும்.
ஸ்ரீ ஸுக்தம் ஸ்லோகம் சம்பூர்ணம்......
No comments:
Post a Comment