Monday, April 30, 2018

கோவிந்தராஜ பெருமா

பெருமாளை அடைய விரும்புபவர்களே!! காட்டில் சென்று தவமெல்லாம் செய்ய வேண்டாம்!!!. சிதம்பரம் கோவிலுக்கு சென்று #சித்திரக்கூடத்தில் பள்ளிகொண்டிருக்கும் கோவிந்தராஜனை வழிபடுங்கள்.


-
"#ஊன்_வாட உண்ணாது உயிர் காவல் இட்டு
உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா
தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே
கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடை போய்த்
தேன் ஆட மாடக் கொடி ஆடு
தில்லைத் #திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே."
-
#விளக்கம்:- வானுலகை தம்முடையதாக கொண்டு ஆள வேண்டியிருப்பவர்களே! உடல் வாடும் அளவுக்கு உண்ணாமல், உயிர் மட்டும் போகாமல் பாதுகாத்து கொண்டு, உடலில் பிரியாத கண், காது, மூக்கு, வாய், தோல் இவை ஐந்து புலன்களும் நொந்து தாங்கள் வாட வாட தவமெல்லாம் செய்ய வேண்டாம்!. மரம், செடி, கொடிகள் ஆட, அதை பார்த்து மயில் கூட்டங்கள் நடனம் ஆட, அருகே கயல் மீன்கள் துள்ளி விளையாடும் வாய்க்கால் நீர் நிறைந்த வயல்களின் மேலே சிறகடித்து பறக்கும் தேன் உண்ட வண்டுகள் ஆட, பெரிய மாளிகைகள் மேலே கட்டபட்டிருக்கும் கொடி ஆடும், சிதம்பரம் எனப்படும் தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேருங்களேன்!.
-
கோவிந்தராஜ பெருமாள் திவ்ய திருவடிகளே சரணம்..!

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...