சலங்கை கட்டி ஓடி ஓடி வாறாய்
எந்தன் தாமரை கண்ணா
ஆடி ஆடி வாராய்
உந்தன் பிஞ்சு பாதம் தேடி தேடி நாங்கள்
உந்தன் திவ்ய நாமம் பாடி பாடி
வந்தேன்
சலங்கை....
தேவகி நந்தன ராதா ஜீவன
கேசவா ஹரே மாதவா
பூதன மர்தன பாப வினாசக
கேசவா ஹரே மாதவா
கோகுல பாலனே ஓடி வாராயோ
கோபால பாலனே ஆடி வாராய்
சலங்கை....
கம்ச வி மர்த்தன காளிங்க நர்த்தன கேசவா ஹரே மாதவா
ஆச்ரி வதஸ்தல ஆபத் பாந்தவ
கேசவா ஹரே மாதவா
கீதாம் ருதமே ஓடி வாராய்
ஆனந்த கீதமே பாடி வாராய்
சலங்கை...
பாண்டவ ரக்ஷக பாப விநாசக
கேசவா ஹரே மாதவா
பாகவதப்ரிய பங்கச லோசன
கேசவா ஹரே மாதவா
ஓம்கார நாதமே ஓடி வாராய்
ஹிருத யா நந்தமே பாடிவாராய்
சலங்கை..
No comments:
Post a Comment