Sunday, October 24, 2021

குரு ஸ்துதி

 குரு ஸ்துதி, 

|| ஸ்ரீ குருப்யோ நம: ||

ஜகத்குரு ஸ்ரீ  ஸ்ரீ  சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்துதி

இந்த ஸ்லோகமானது நமது காஞ்சி காமகோடி 69வது பீடாதிபதி புது பெரியவாளான
ஸ்ரீ ஶ்ரீ ஜெயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளியதாகும்.

1.       அபாரகருணா ஸிந்தும்
          ஞானதம் சாந்தரூபிணம்
          ஸ்ரீசந்த்ரசேகர குரும்
          ப்ரணமாமி முதாந்வஹம்

2.       குருவார ஸபாத்வாரா
          சாஸ்தா ஸம்ரக்ஷணம் க்ருதம்
          அநூராதா ஸபாத்வாரா
          வேத ஸம்ரக்ஷணம் க்ருதம்

3.       மார்கசீர்ஷ மாஸவரே
          ஸ்தோத்ரபாட ப்ரசாரணம்
          வேதபாஷ்ய ப்ரசாரார்த்தம்
          ரத்நோத்ஸவ நிதி: க்ருத:

4.       கர்மகாண்ட ப்ரசாரார்த்தம்
          வேததர்மஸபா க்ருதா
          வேதாந்தார்த்த ப்ரசாரார்த்தம்
          வித்யாரண்ய நிதி: க்ருத:

5.       சிலாலேக ப்ரசாரார்த்தம்
          உட்டங்கித நிதி: க்ருத:
          கோப்ராஹ்மண     
          ஹிதார்த்தாய
          வேதரக்ஷண கோநிதி:

6.       கோசாலா பாடசாலா ச
          குருபிஸ் தத்ர நிர்மிதே
          பாலிகாநாம் விவாஹார்த்தம்
          கந்யாதன நிதி: க்ருத:

7.       தேவார்ச்சகாநாம்
           ஸாஹ்யார்த்தம்
          கச்சிமூதூர் நிதி: க்ருத:
          பாலாவ்ருத்தாதுராணாம் ச
          வ்யவஸ்த்தா பரிபாலனே

8.       அநாதப்ரேத ஸம்ஸ்காராத்
          அச்வமேத பலம் லபேத்
          இதி வாக்யாநுஸாரேண
          வ்யவஸ்த்தா தத்ர கல்பிதா

9.       யத்ர ஸ்ரீ பகவத்பாதை:
          க்ஷேத்ர பர்யடனம் க்ருதம்
          தத்ர தேஷாம் சிலாமூர்த்திம்
          ப்ரதிஷ்ட்டாப்ய சுபம் க்ருதம்

10.    பக்தவாஜிசாபி
          ஸித்த்யர்த்தம்
          நாம தாரக லேகனம்
          ராஜதம் ச ரதம் க்ருத்வா
          காமாக்ஷ்யா: பரிவாஹணம்

11.    காமாக்ஷ்யம்பா விமாநஸ்ய
          ஸ்வர்ணபத்ரைஸ்
          ஸமாவ்ருதி:
          ததைவோத்ஸவ காமாக்ஷயா:
          ஸ்வர்ணவர்ம பரிஷ்க்ருதி:

12.     லலிதாநாம ஸாஹஸ்ர
          ஸ்வர்ணமாலா விராஜதே
          ஸ்ரீதேவ்யா: பர்வகாலேஷு
          ஸுவர்ண ரத சாஸனம்

13.    சிதம்பர நடேசஸ்ய
          சுவைடூர்ய கிரீடகம்
          கரே-அபயப்ரதே பாதே
          குஞ்சிதே ரத்னபூஷணம்

14.    முஷ்டி தண்டுல தானேன
          தரித்ராணாம் ச போஜனம்
          ருக்ணாலயே பகவத:
          ப்ரஸாத விநியோஜநம்

15.    லோகக்ஷேம ஹிதார்த்தாய
          குருபிர் பஹுதத் க்ருதாம்
          ஸ்மரன் தத்வந்தனம் குர்வன்
          ஜன்ம ஸாபல்யமாப்னுயாத்.

----ஜகத்குரு. ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர ஜெயேந்திர சங்கர




நம்புங்கள் நரசிம்மனை நல்லதே நடக்கும்

நம்புங்கள் நரசிம்மனை நல்லதே நடக்கும்


நாளை என்பது நரசிம்மர் இடமில்லை, நரசிம்மரை விட உயர்ந்த தெய்வம் வேறு இல்லை, லஷ்மி நரஸிம்ஹ சரணம் ப்ராத்யே

ஸ்ரீ_நரசிம்ஹர்_அட்சரமாலை

ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜயஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ
அனாதரக்ஷக நரசிம்ஹ
ஆபத் பாந்தவ நரசிம்ஹ.

இஷ்டார்த்தப்ரத நரசிம்ஹ
ஈஷ்பரேஷ நரசிம்ஹ
உக்ரஸ்வரூப நரசிம்ஹ
ஊர்த்வாபாஹூ நரசிம்ஹ.

எல்லாரூப நரசிம்ஹ
ஐஸ்வர்யப்ரத நரசிம்ஹ
ஓங்கார ரூப நரசிம்ஹ
ஔஷத நாம நரசிம்ஹ.

அம்பரவாஸ நரசிம்ஹ
காமஜனக நரசிம்ஹ
கிரீடதாரி நரசிம்ஹ
ககபதிவாஸன நரசிம்ஹ.

கதாதரனே நரசிம்ஹ
கர்ப்ப நிர்ப்பேதந நரசிம்ஹ
கிரிதரவாஸ நரசிம்ஹ
கௌதம பூஜித நரசிம்ஹ.

கடிகாசல ஸ்ரீ நரசிம்ஹ
சதுர்புஜனே நரசிம்ஹ
சதுராயுத்தர நரசிம்ஹ
ஜ்யோதிஸ்வரூப நரசிம்ஹ.

தந்தே தாயியு நரசிம்ஹ
த்ரிநேத்ரதாரி நரசிம்ஹ
தநுஜா மர்த்தன நரசிம்ஹ
தீனநாத நரசிம்ஹ.

துக்க நிவாரக நரசிம்ஹ
தேவாதி தேவ நரசிம்ஹ
ஜ்ஞானப்ரதனே நரசிம்ஹ
நரகிரி ரூப நரசிம்ஹ.

நர நாராயண நரசிம்ஹ
நித்யானந்த நரசிம்ஹ
நரம்றாகரூப நரசிம்ஹ
நாமகிரீஷ நரசிம்ஹ.

பங்கஜானன நரசிம்ஹ
பாண்டுரங்க நரசிம்ஹ
ப்ரஹ்லாத வரத நரசிம்ஹ
பிநாகதாரி நரசிம்ஹ.

புராணபுருஷ நரசிம்ஹ
பவபயஹரண நரசிம்ஹ
பக்தஜன ப்ரிய நரசிம்ஹ
பக்தோத்தார நரசிம்ஹ.

பக்தானுக்ரஹ நரசிம்ஹ
பக்தரக்ஷக நரசிம்ஹ
முநிஜன ஸேவித நரசிம்ஹ
ம்ருகரூபதாரி நரசிம்ஹ.

யக்ஞ புருஷ நரசிம்ஹ
ரங்கநாத நரசிம்ஹ
லக்ஷ்மீ ரமணா நரசிம்ஹ
வங்கிபுரிஷ நரசிம்ஹ.

சாந்தமூர்த்தி நரசிம்ஹ
ஷட்வர்கதாரி நரசிம்ஹ
சர்வ மங்கள நரசிம்ஹ
சித்திபுருஷ நரசிம்ஹ.

சங்கடஹர நரசிம்ஹ
சாளிக்ராம நரசிம்ஹ
ஹரிநாராயண நரசிம்ஹ
க்ஷேமகாரி நரசிம்ஹ.

ஜெய ஜெயலக்ஷ்மீ நரசிம்ஹ
ஜெயசுப மங்கள நரசிம்ஹ
ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜயஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ..

🙏🙏🙏🙏

நாராயண! நாராயண!

 நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக்கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது.


சர்வ சம்பத்தும் வந்து சேரும்.

அந்நியோன்யம் வளரும்.

துர்தேவதைகள் பிரவேசிக்காது...

நம் சித்தத்திலும் நுழையாது.

"கீதைக்குச் சமானமாக ஏதாவது உலகத்திலே உண்டா?" என்று கேட்டால்,
அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான்.

இன்னும் கேட்டால், கீதையைவிட உயர்வானது.

கீதையைச் சொன்னது பகவான்.

அந்த பகவத்சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய ஞானி (பீஷ்மர்) சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ரநாமம்.

பகவானைக் காட்டிலும் ஞானி உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்.

வேதமே சொல்கிறது.

‘யக்ஞமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே போதும்.

யக்ஞம் பண்ணின பலன் கிடைக்கும்...!!!

நாராயண! நாராயண!

*ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது*.

 🕉🔔🔯


*"சடாரி என்ற வார்த்தை எப்படி வந்தது அது தமிழ் வார்த்தையா?
  நாம் அனைவருமே தெரிந்து கொள்வோம்..."*

*ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது*.

🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹

பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து

சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.

ஒரு குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.

🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹

வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வார்.
நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் வேதம் தமிழ் செய்த மாறன் என்று புகழப்படுகிறார்.
இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர்.

நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில் காரியார் மற்றும் உடைய நங்கைக்கு மகனாகப் பிறந்தார்.

உலக வழக்கப்படி குழந்தை பிறந்தவுடன் அழும். ஆனால் இவரோ இவை எவற்றையும் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தார். எனவே அவரை மாறன் என்று அழைத்தனர்.

🔷🔹🔷🔹🌸🐚🌸🔹🔷🔹🔷

ஒவ்வொரு உயிரினமும் இந்நிலவுகில் பிறக்கும்பொழுது, அதன் உச்சந் தலையில் முதன் முதலாக இந்நிலவுலகக் காற்று படும்.

இக்காற்று பட்டவுடன், அக்குழந்தைக்கு முன் ஜென்ம நினைவுகள் மறக்கும்.

மீண்டும் இந்நிலவுலக மாயையில் சிக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். மாயையை உருவாக்கும் சடம் என்னும் இக்காற்று உச்சந்தலையில் படுவதாலேயே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்று சொல்லப்படுகிறது.

சடவாயுவின் சேர்க்கையினாலே நம் மனம் பக்தியில் ஈடுபடுவதில்லை.

🌐💠🌀🔶✨🔔✨🔶🌀💠🌐

ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வார்
தம் தாயின் கருப்பையில் இருக்கும்போதே தம்மைச் சேர வந்த அந்த
சடம் என்னும் இக்காற்றை கோப மாக முறைத்ததால் சடகோபன் என்று அழைக்கப்படுகிறார்.

பிறவிச்சூழலில் இருந்து விடுதலை பெற்றதால் பரந்தாமனையே நினைந்து வாழ்ந்து வந்தார். இவரை திருமாலின் திருவடி அம்சம் என்றும் கூறுவதுண்டு.

அதனால், பெருமாள் சன்னதியில் பெருமாளின் திருவடியில் இருப்பதும் சடகோபம் (சடாரி) என்று பெயர் பெறுகிறது.

சடாரியை தலையில் தாங்கினால்,
நம் மனம் பந்தபாசங்கள் நீங்கப் பெற்று பக்தியில் திளைக்கும்.

🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁

சடம் + ஹரி ( பாதம் ) சடாரி என்று அழைக்கப்படுகிறது.

ஆகவே சடாரி எனப்படும் நம்மாழ்வாரையே பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது.

எனவேதான் சடாரி நம் தலையில் வைக்கும் பொழுது பேரானந்தம் நம் மனதில் ஏற்படுகிறது.

ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது,
சக்கரமும் சங்கும் என் சகோதரர்களாக பரதன், சத்ருகன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும்.

அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள்.

🦚🐄🦚🐄🦚🐄🦚🐄🦚🐄🦚

அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது" என்றார் பகவான்.
பகவான் சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், அவரின் திருப் பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே.

சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம்முடைய 'நான்' என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும், என்பதே சடாரி சாதித்தலின் பின்னணியில் உள்ள தாத்பரியம்...

🌸🌿🌸🌿🌻🐚🌻🌿🌸🌿🌸

சடாரி வைக்கும் பொழுது பணிந்து புருவங்களுக்கு நடுவில் வலக்கை நடுவிரல் வைத்து நாசி , வாய் பொத்தி குனிந்து பெருமாளின் திருபாதத்தினை ஏற்றுகொள்ள வேண்டும்...!!!

இனி நாம் கோவிலுக்கு செல்லும் போது,இதை நம் குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
நம் இந்து மதத்தின் சம்பிரதாயங்களுக்குப் பின் வாழ்வியல் தத்துவங்கள் அடங்கியுள்ளது என்பதை நாம் உணர்ந்துப் போற்ற வேண்டும்...!!!

*"சர்வம் கிருஷ்ணார்ப்பணம்"*

🙏🌹🙏

பெருமாள்களில்_அழகன்_யார்?

 பெருமாள்களில்_அழகன்_யார்?


🌹 🌿 நரஸிம்மமா,
🌹 🌿 ராகவ சிம்ஹமமா
🌹 🌿 யாதவ சிம்ஹமமா

🌹 🌿 ஆழ்வாரின் தீர்ப்பு.

🌹 🌿 ஆழ்வார்களிலே, நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி ஒன்றை வைத்தாராம்.

1).   மத்ஸ்ய
2).   கூர்ம
3).   வராஹ
4).   நரசிம்ம
5).   வாமன
6).   பரசுராம
7).   ஸ்ரீராம
8).   பலராம
9).   கிருஷ்ண
10). கல்கி

🌹 🌿 அவதாரங்களை வரவழைத்தார்.

🌹 🌿 முதல் சுற்றில் ............

மத்ஸ்ய, கூர்ம, வராஹ
மூன்று அவதாரங்களும் முறையே
மீன், ஆமை, பன்றி ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், அழகுப்  போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி, நிராகரித்து விட்டார்.

🌹 🌿 நரசிம்மருக்குத் தலை சிங்கம் போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால், அவரை நிராகரிக்கவில்லை.

🌹 🌿 நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள்.

🌹 🌿 இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார்.

🌹 🌿 மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி, மூவடி நிலம் கேட்டு விட்டுப் பெரிய காலால், மூவுலகையும்  அளந்தவர் நீங்கள்.

🌹 🌿 அதுபோலப் போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு.

🌹 🌿 எனவே உங்களை நிராகரிக்கிறேன்!”, என்றார்  திருமழிசைப் பிரான்.

🌹 🌿 பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும், கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார்.

🌹 🌿 பலராமன், கண்ணன் இருவரையும் பார்த்து,  “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது.

🌹 🌿 யாராவது ஒருவர் மட்டும் இருங்கள்!” என்று கூறினார்.

🌹 🌿 தம்பிக்காக பலராமன்
போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

🌹 🌿 கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால்,
“நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி அவரையும்  நிராகரித்துவிட்டார்.

🌹 🌿 இறுதியாக

🌹 🌿  நரசிம்மன்
🌹 🌿  ராமன்
🌹 🌿  கண்ணன்

🌹 🌿 மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள்.

🌹 🌿 மூவரையும் பரீட்சித்துப் பார்த்த திருமழிசைப் பிரான், “நரசிம்மர்தான் அழகு!” என்று தீர்ப்பளித்தார்.

🌹 🌿 “ராமன் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான  மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்பதில் சந்தேகமில்லை.

🌹 🌿 ஆனால், மனிதனாகவே
வாழ்ந்ததால் ஒரு வண்ணானின் பேச்சுக்காக தன் தேவியையே துறந்தார்.

🌹 🌿 அதனால் ஆழ்வாரால் நிராகரிக்கப்பட்டார்

🌹 🌿 கண்ணன் கோபிகைகளை எல்லாம் மயக்கிய அழகன் என்பதிலும் சந்தேகமில்லை.

🌹 🌿 ஆனால், அந்த கோபிகைகளையும் விரக வேதனையில் தவிக்க விட்டுச் சென்று விட்டார்.

🌹 🌿 ஆனால், ஆபத்தில்
யார் நமக்கு உதவி செய்கிறார்களோ, அவர்கள்தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள்.

🌹 🌿 பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும் போது, உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள், நரசிம்மர்.

🌹 🌿 எனவே அவர்தான் அழகு!” என்று கூறினார்.

🌹 🌿 இருவரும்
ராகவ யாதவ சிம்ஹம் என்ற பெயர்களையே சூட்டிக் கொண்டாலும்,
செயலாலே நரஸிம்ஹனே வென்றான்.

🌹 🌿 பெருமாள் திருமேனியில் உள்ள அனைத்து அங்கங்களும் அழகாக இருந்தாலும், அவரது திருவடிகளையே நாம் கொண்டாடுகிறோம்.

🌹 🌿 ஏனெனில், நமக்குத்  துன்பங்கள் நேரும்போது அவன் திருவடிகளைத்தான் நினைத்துக் கொள்கிறோம்.

🌹 🌿 துயரறு சுடரடியான அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக்  காக்கின்றன!!

🌹 🌿 எனவே அவைதான்
மிகவும் அழகு.

🌹 🌿 அவ்வாறே, ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர்தான் அவதாரங்களுக்குள் அழகானவர்.

🌹 🌿 *இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய, நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.*

🌹 🌿 *அழகியான் தானே*
*அரி உருவன் தானே*
*பழகியான் தாளே பணிமின் - குழவியாய்த்தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே*
*மீனாய் உயிரளிக்கும் வித்து.*

🌹 🌿 - என்ற பாசுரத்தில் அரி எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார்.

🌹 🌿 அதனால்தான், அழகிய ராமன், அழகிய கண்ணன் முதலிய பெயர்களை நாம் கேள்விப்பட்டதில்லை.

🌹 🌿 *ஆனால், நரசிம்மர் மட்டும் ‘அழகிய சிங்கர்’ என்று  அழைக்கப்படுகிறார்.*

🌹 🌿 அத்தகைய அழகனாக விளங்குவதால், நரசிம்மருக்கு *‘ஸ்ரீமான்’* என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது.

🌹 🌿 ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள்.

🌹 🌿 மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்?

🌹 🌿 ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டு களிக்க வேண்டுமெனில், திருமார்பில் இருந்தபடி காணமுடியாது.

🌹 🌿 மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்?

🌹 🌿 அதனால்தான்...

🌹 🌿 ஸ்ரீமானின்  மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள்.


🌻🌺🌹சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🌼🌻🌺🌹

 🌹🌺 "  எனக்கு மட்டும்.....கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறார் .

அடுத்தவர்கள் எல்லாம்  நிம்மதியாக வாழ்கிறார்களே’ என புலம்புவர்களுக்கு பீஷ்மர் - விளக்கும் எளிய கதை 🌹🌺
----------------------------------------------------------------------

🌹🌺“  நம்மில் பலருக்கு, மனிதில் எப்போதும் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கும். ‘எனக்கு மட்டும், கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறார் .
அடுத்தவர்கள் எல்லாம்  நிம்மதியாக வாழ்கிறார்களே’ என புலம்புவர்.

🌺இதே போன்ற எண்ணம், மஹாபாரதத்தில், பாண்டவர்களுக்கும் ஏற்பட்டது.

🌺குருஷேத்திர யுத்தம் முடிந்து விட்டது. பிதாமகர் பீஷ்மர், அம்பு படுக்கையில் படுத்திருந்தார்.

🌺தை மாத ரத ஸப்தமி நாளில் இறப்பதற்காக காத்திருந்தார்.

🌺ஒருநாள், தருமன் உட்பட பாண்டவர்கள், பீஷ்மரை சந்தித்தனர்.

🌺நலம் விசாரித்த பீஷ்மர், ‘உங்கள் லட்சியம் நிறைவேறி விட்டதா' என்று கேட்டார்.

🌺இதற்கு தருமன் சிரித்தான்.
‘தாத்தா! நாங்கள் தருமத்தின் பாதையில்தானே நின்றோம்.

🌺எங்களுக்கு உள்ள பங்கை தர மறுத்து துரியோதனன் துன்புறுத்தினான்.தருமம் வெல்ல, நாங்கள் அடைந்த கஷ்டங்கள், துயரங்கள் உங்களுக்கு தெரியாதா?.

🌺அவ்வளவு கஷ்டங்கள் அடைய, நாங்கள் செய்த தவறு என்ன ?.
தவறு செய்த துரியோதனன், கடைசி வரையில் மகிழ்ச்சியாக தானே இருந்தான்’ என, கேட்டான் தருமன்.

🌺மற்ற நான்கு பேரும், ‘ஆமாம் தாத்தா, நல்ல வழியில் நடந்தால், கஷ்டங்கள் அனுபவிக்கதான் வேண்டுமா‘ என, கேட்டனர். பீஷ்மர் சிரித்து விட்டு, பதில் அளித்தார்.

🌺'பேரக் குழந்தைகளே!
நீங்கள் வாழ்வில் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்து விட்டுதான், இன்று வெற்றி பெற்று உள்ளீர்கள்.

🌺இதை நான் மறுக்கவில்லை.
ஆனால், இவ்வளவு கஷ்டங்கள் வந்த போதும்,நீங்கள் நிம்மதியை இழக்கவில்லை.

🌺அதர்ம பாதையில் செல்லவில்லை.
கஷ்டங்கள் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் நீங்கள் மகிழ்ச்சியை இழந்தீர்களா?.

🌺13 ஆண்டு வன வாசம் இருந்த போது கூட நீங்கள் மகிழ்ச்சியாகதான் இருந்தீர்கள்.

🌺ஆனால், துரியோதனன் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கவில்லை.
ஆனால், அவன் நிம்மதியாக இருந்தானா?.

🌺எந்நேரமும் உங்களை பற்றியே நினைத்துக் கொண்டு, உள்ளூர பயந்து கொண்டே இருந்தான்.

🌺உங்களுக்கு தீமை செய்வதில்தான், அவனது முழு எண்ணமும் சிந்தனையும் இருந்தன.

🌺துரியோதனனால், உங்களுக்கு துன்பம் ஏற்பட்ட போதேல்லாம், உங்களை கிருஷ்ண பரமாத்மா காப்பாற்றினார்.

🌺நல்ல எண்ணங்களுடன் நீங்கள் இருந்ததால், உங்கள் பக்கம் கடைசி வரை இறைவன் கூடவே இருந்தான்.
ஆனால், துரியோதனன் பக்கம் அவன் ஒரு போதும் இல்லை.

🌺நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பது, அவர்களின் திறமையை வெளிப்படுத்ததான்.

🌺பல கஷ்டங்களை அனுபவித்த போதும், நீங்கள் தருமத்தின் பாதையை விட்டு அகலாமல் இருந்ததால், பெரும் பெயரும் புகழும் பெற்றுள்ளீர்கள் என கூறி முடித்தார் பீஷ்மர். உண்மைதான்.

🌺ஆண்டவன் நமக்கு கஷ்டம் கொடுக்கிறான் என்றால், அவன் நம்மை கை விட மாட்டான் என்ற நம்பிக்கை திடமாக இருந்தாலே போதும் மனதில் எந்த சந்தேகமும் துளி கூட வராது. இதுவே பகவத்கீதை சொல்லும்  உண்மையான சரணாகதியின் சாரம் 🌹🌺
------------------------------------------------------------------------
🌻🌺🌹சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🌼🌻🌺🌹

சம்பவாமி யுகே யுகே!

 சம்பவாமி யுகே யுகே!


அர்ஜுனன் கேட்கிறான்:

🌷பகவானே! சூரியன் உங்களுக்கு முன்னால் பிறந்தவன். நீங்கள் சூரியனுக்குப் பிறகு பிறந்தீர்கள். ஆனால் முதலில் நீங்கள் சூரியனுக்கு உபதேசித்ததாகக் கூறுகிறீர்கள். இதை நான் எவ்வாறு புரிந்து கொள்வது?

ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்:

🌷அர்ஜுனா கேள்! நானும், நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.

🌷நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன். இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் நான் அவதாரம் செய்கிறேன்.

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் மேலும் கூறுகிறார்..

🙏"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்-பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்"🙏🙏

🌷அர்ஜுனா! உலகில் தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்.

🙏"பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!"🙏🙏

🌷நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்.

🌷என்னுடைய தெய்வீகமான பிறப்பு, செயல் ஆகியவற்றை உள்ளபடி அறிந்தவன் இந்த மனித உடலைவிட்டு நீங்கிய பிறகு மறுபிறவி அடைவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை வந்து அடைகிறான்.

🌷காமம், ஆசை, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவர்களும், என்னையே நினைத்து, என்னையே சரணாக அடைந்து, ஞானமாகிய அக்னிப் பரீட்சையால் பொசுக்கப்பட்டு புனிதர்களாய்ப் பலர் என்னுடன் ஒன்றாகி ஐக்கியம் அடைந்திருக்கிறார்கள்.

🌷மனிதர்கள் எந்த வழியில் என்னை நாடினாலும், அதே வழியில் நான் அவர்களுக்கு அருள் புரிகிறேன். அர்ஜுனா! மக்கள் எங்கும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

🌷இங்கே ஒரு விஷயம் கவனிக்கத்தக்கதாகிறது. பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் "நானும், நீயும் இதுவரை பல பிறவிகள் எடுத்துள்ளோம். அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்" என்று உரைக்கிறார்.

🌷பல பிறவிகள் என்று சொல்லும் போது பெரும்பாலும் அதில் நம்பிக்கை உண்டாவதில்லை. ஏனெனில் நம்முடைய இன்றைய இருப்பிற்கு முன்னால் என்ன இருந்தது என்றும் அதற்கு பின்னால் என்ன இருக்கப் போகிறது என்றும் நமக்குத் தெரிவதில்லை. அதனால் நமக்கு அதில் நம்பிக்கை உண்டாவதில்லை. ஆனால் பல பிறவிகள் இருப்பது உண்மை என்பதையே பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் எடுத்துரைக்கிறார்.

🌷உபநிஷத்துக்கள் முழுவதுமே ஆத்மாவின் நிரந்தரத் தன்மையையும் பிறவி மற்றும் மறுபிறவி பற்றிய தத்துவ போதனைகளையே எடுத்துச் சொல்கின்றன. அவை இன்றைய வாழ்விருப்பின் தன்மைக்கேற்ப 'நீ மறுபிறவி அடைவாய்' என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

🌷உதாரணமாக சில விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். இரண்டரை வயது குழந்தை தன்னுடைய முற்பிறவி பற்றி கூறுவதும் நான் இன்னார், எனது மனைவி இவள் நான் இந்த ஊர்க்காரர் என்று சொல்வது அவை ஆராயப்படும் போது நிஜமாக இருப்பதும் நடந்திருக்கிறது. அவர்களின் உடல் அழிந்திருக்கிறதே தவிற ஆத்மா அழிவதில்லை. மீண்டும் பிறப்பெய்தி இருக்கிறது.

🌷ஒரு குழந்தை பிறந்தது முதல் மூன்று அல்லது நான்கு வயது வரை புனர்ஜென்ம ஞாபம் இருக்கும். பிறகு அவை வாழும் சூழ்நிலைகளுக்குத் தகுந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகளை இழந்து விடும். மிகச்சிலரே அவற்றைப் பேசும் அளவுக்கு ஆற்றல் கொண்டிருப்பார்கள். பலருக்கு அவை எது பற்றிய நினைவு என்பதையே உணர முடியாது. இவையாவும் மனிதன் ஜென்ம ஜென்மங்களாக பிறப்பெடுப்பதையே காட்டுகிறது.

🌷சில குழந்தைகள் மழலைப் பேச்சு மாறுவதற்குள்ளாகவே சிறந்த அறிவாற்றலை வெளிப்படுத்துவார்கள். அவர்களின் பூர்வ ஜென்ம தொடர்ச்சியாகவே அது கருதப்படுகிறது.

🌷சிலர் குழந்தைப் பருவத்திலேயே மிகவும் கோபக்காரர்களாகவும், திருடும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சில குழந்தைகள் மிகவும் சாந்தமான குணம் கொண்டதாக இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக இருக்கும். இவை யாவும் முற்பிறவியில் அவர்களின் இயல்புகளை ஒட்டியே அமைவதாகக் கூறப்படுகிறது.

🌷ஆக நம்மைப் போன்ற பிறவிப்பெருங்கடலில் சிக்கி நிரந்தர நினைவுகள் மறந்து போனவர்களால் அவற்றை ஞாபகப் படுத்தி பார்ப்பது இயலாததாகி இருக்கிறது. எனவே "'அவற்றை எல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்" என்று பகவான் அர்ஜுனனுக்கு எடுத்துக் கூறுவது நமக்கே சொல்வதாகும்.

🌷ஸ்ரீ க்ருஷ்ணரின் பிறப்பிற்கும் நமது பிறப்பிற்கும் அதுவே வித்தியாசம்.

🌷 அவர் அறிந்தே பிறக்கிறார்.
நாம் அறியாமல் (அறியாமையால்) பிறக்கிறோம்.

🌷"நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், குறைவு இல்லாத தன்மை உடையவன். இருந்தும் கூட என் இயல்பை அடக்கிக் கொண்டு என்னுடைய மாயா சக்தியினால் நான் அவதாரம் செய்கிறேன்", அதாவது நிரந்தரமான தன்மையை உடையவர் தனது சக்தியினால் பிறப்பை உணர்ந்து அவதரிக்கிறார்.

🌷ஆக எப்பொழுது தொடர்ச்சியான சாதகத்தால் நாம் பிறப்பையும் இறப்பையும் உணரும் தன்மையைப் பெறுகிறோமோ அப்பொழுது நாமும் ஸ்ரீ க்ருஷ்ணராகியிருப்போம்.

🌷அப்படியென்றால் 'மறுபிறவி அடையாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்' என்ற கேள்வி உண்டானால் மறக்காமல் கீதையைப் படியுங்கள். கீதை முழுவதிலும் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் பாதை காட்டுகிறார்.

படிப்போம், தொடர்வோம்!

ஹரே கிருஷ்ணா 

#பகவத்கீதை_கூறும் #அற்புதமான_போதனைகள்

 #பகவத்கீதை_கூறும்

#அற்புதமான_போதனைகள்

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே..
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.

11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.

21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்❗

31. வாழ்வை கண்டு களி❗
32. ரசனையோடு வாழ்❗
33. வாழ்க்கை வாழ்வதற்கே❗

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்

🥳வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.

சூடிக்கொடுத்த மாலையால் பகவானுக்கே விலங்கிட்டாள்

 சூடிக்கொடுத்த மாலையால் பகவானுக்கே விலங்கிட்டாள்

பெருமாள் வராக அவதாரம் எடுத்து அசுரர்களை அழித்த பிறகும், பூமிதேவி அழுதாள். வராஹமூர்த்தி தேவியிடம்,"அசுரர்களிடம் இருந்து உன்னைக் காப்பாற்றிய பின்னும் ஏன் அழுகிறாய்?,'' என்று கேட்டார். ""நான் கூக்குரலிட்டபோது ஓடிவந்தீர்கள்! என்னுடைய பிள்ளைகளான எத்தனையோ கோடி உயிர்கள் இங்கு அவஸ்தைப்படுகிறார்கள். என்னைக் காப்பாற்றியது போல அவர்களையும் காப்பாற்ற வேண்டும்,'' என்று பிரார்த்தித்தாள். அப்படிப்பட்ட எல்லையில்லாத அன்பு கொண்ட பூமாதாவே, கோதை என்னும் பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தாள்.
* தாயார்களில் பொறுமை மிக்கவள் பூமிபிராட்டி. நாம் எவ்வளவு தப்பு பண்ணினாலும் அதை பெருமாளிடத்தில் சொல்ல மாட்டாள். ஆனால், நாம் துளி நல்லது செய்து விட்டாலும் அதை பெரிதுபடுத்தி விடுவாள். அவ்வளவு காருண்யம் கொண்ட பிராட்டியே, மனித வடிவெடுத்து ஆண்டாளாக நமக்கு வழிகாட்டி அருள்புரிந்தாள்.
* ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி மூவரும் சூழ்ந்திருந்த போது, பெருமாள் அவர்களிடம், ""பூலோகத்தில் அக்கிரமம் பெருகிவிட்டது. பகவத்கீதையை உபதேசம் செய்தும் கூட யாரும் திருந்தவில்லை. இனி நீங்கள் தான் பூலோகத்தில் அவதரித்து உலகத்தை திருத்தவேண்டும்'' என்று கேட்டார். அப்போது பூமிதேவி, ""அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி,'' என்று முந்திக் கொண்டு நின்றாள்.
* பூலோகத்தில் பூமாதேவி அவதரித்தபோது "கோதை' எனப்பட்டாள். இதற்கு "நல்ல வாக்கைக் கொடுப்பவள்' என்று பொருள். திவ்ய மங்களமான கோதையை தியானிப்பவர்க்கு மற்றவர்க்கு நலம் தரும் பேச்சுத்திறனும், ஞானமும் உண்டாகும்.
* கோதை கட்டிய மாலைகள் இரண்டு. பாக்களால் கட்டிய பாமாலையையும், பூக்களால் தொடுத்த பூமாலையையும். அவள் திருமாலின் திருவடிகளிலேயே சமர்ப்பித்தாள். திருமாலைத் தன்னிடத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்ய பூக்களைத் தூதாக அனுப்பினாள். ""என்னுடைய அன்பை எம்பெருமானிடத்தில் தெரியப்படுத்தி அவன் அனுக்கிரஹத்தை எனக்கு உண்டு பண்ணுங்கள்,'' என்று பிரார்த்தித்துக் கொண்டாள்.
* கோதைக்கு என்ன ஏற்றம்! தான் சூடிக்கொடுத்த மாலையால் பகவானுக்கே விலங்கிட்டாள். அவளது திருமேனியில் சாத்திய பொருட்களை நாம் உபயோகிக்கிறோம். ஆனால், அவன் விரும்புவது என்ன? கோதை சூடிய மாலையை அணிந்து கொள்ள விரும்புகிறான். நம்மைப் பூட்டியிருக்கும் விலங்குகள் அனைத்தையும் களைபவனுக்கே, ஆண்டாள் விலங்கிட்டிருக்கிறாள்.
* உய்யக்கொண்டார்,""சூடிக்கொடுத்தாளைச் சொல்லு'' என்று நம்மைப் பார்த்து வேண்டுகிறார். ஆண்டாளின் திருவடிகளை மனதால் நினைத்து, அவள் பெயரைச் சொல்லி சரணாகதி அடைந்து விட்டால் குறைவில்லாத வாழ்வும், இப்பூமியில் பிறப்பெடுக்காத உயர்கதியும் உண்டாகும்.
முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார்

அஷ்ட லஷ்மி ஸ்துதி

அஷ்ட லஷ்மி ஸ்துதி


யா தேவி சர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ ஷூதா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ த்ருதி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ லக்ஷ்மீ ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ..


ஹரிபக்த ஸந்த ஜாலே ஹோ அனேக

 ஹரிபக்த ஸந்த ஜாலே ஹோ அனேக

த்யாமாஜீ நிஷ்டங்க காஹீம் ஐக
சுக வாமதேவ செளனக நாரத
அஜாமேள ப்ரஹலாத விபீஷ்ண
த்ருவ பராசர வ்யாச புண்டலீக
அர்ஜூன வால்மிக அம்பரீச
ருக்மாங்கத பீஷ்ம பக தாலப் யஸூத
ஸீபி ஹனுமந்த பரிக்ஷீதி
கச்யயாதி அத்ரி கெளதம வசிஷ்ட
பரத்வாஜ ச்ரேஷ்ட மார்க்கண்டேய
பளீ க்ருபாச்சார்ய இந்ர ஸூர்ய சந்ர
ப்ரம்ம ஆணி ருத்ர பூர்ண பக்த
ஸர்வாச ஏக ஆகே மீ கிங்கர
ம்ஹணே ஞானேஸ்வர வைஷ்ணவாஸீ

பொருள் :
அந்த ஶ்ரீ ஹரியை நித்யமாக சிரேஷ்டடையாக வழிபடுபவர்கள் சிலரை கூறுகிறேன் கேளுங்கள் சுகர் வாமதேவர் செளனகர் நாரதர் அஜாமிளன் பிரகலாதர்    விபீஷ்ணர்  துருவர் பராசரர்  வியாசர் புண்டலீகர் அர்ச்சுனன் வால்மீகி அம்பரீசன் ருக்மாங்கதன் பீஷ்மர் பகன் தாலர் சூதர்  சிபி அனுமன் பரீட்சித் காசியப்பர் அத்திரி கெளதமர் வசிஷ்டர் பரத்வாஜர் சிரேஷ்டரான மார்க்கெண்டேயர் பலி க்ருபாச்சார்யர் இந்திரன் சூரியன் சந்திரன் ப்ரம்மன் சிவன் இவர்கள் பூர்ணரான ஶ்ரீ வைட்ணவர்கள்  ஆவார்கள் இவர்கள் அனைவருக்கும் ஞானேஸ்வரரான நான் வேலையாள் ஆவேன்..

இதில் பாண்டுரங்க அவதாரமான  ஞானேஸ்வரர்
1.ஞான மார்க்கத்தை கை கொண்ட துருவரையும்
2.பக்தி மார்க்கத்தை கை கொண்ட பிரகலாதரையும்
3.சரணாகதியை கை கொண்ட விபிஷ்ணரையும்
4.நாமஸ்மரணத்தை கை கொண்ட அஜாமேளனையும்

பூர்ணரான நித்ய பக்தர்கள் என்றே குறிபிட்டு உள்ளார்  ஆகையால் இதில் கலியில் மிக மிக எளியது..

நாமஸ்மரணமே சாதனம் என்று வாழ்ந்தும் காட்டி உள்ளார்..

நாமமே பலம் நாமமே சாதனம்

இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி






 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...