Sunday, October 24, 2021

🌻🌺🌹சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🌼🌻🌺🌹

 🌹🌺 "  எனக்கு மட்டும்.....கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறார் .

அடுத்தவர்கள் எல்லாம்  நிம்மதியாக வாழ்கிறார்களே’ என புலம்புவர்களுக்கு பீஷ்மர் - விளக்கும் எளிய கதை 🌹🌺
----------------------------------------------------------------------

🌹🌺“  நம்மில் பலருக்கு, மனிதில் எப்போதும் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கும். ‘எனக்கு மட்டும், கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறார் .
அடுத்தவர்கள் எல்லாம்  நிம்மதியாக வாழ்கிறார்களே’ என புலம்புவர்.

🌺இதே போன்ற எண்ணம், மஹாபாரதத்தில், பாண்டவர்களுக்கும் ஏற்பட்டது.

🌺குருஷேத்திர யுத்தம் முடிந்து விட்டது. பிதாமகர் பீஷ்மர், அம்பு படுக்கையில் படுத்திருந்தார்.

🌺தை மாத ரத ஸப்தமி நாளில் இறப்பதற்காக காத்திருந்தார்.

🌺ஒருநாள், தருமன் உட்பட பாண்டவர்கள், பீஷ்மரை சந்தித்தனர்.

🌺நலம் விசாரித்த பீஷ்மர், ‘உங்கள் லட்சியம் நிறைவேறி விட்டதா' என்று கேட்டார்.

🌺இதற்கு தருமன் சிரித்தான்.
‘தாத்தா! நாங்கள் தருமத்தின் பாதையில்தானே நின்றோம்.

🌺எங்களுக்கு உள்ள பங்கை தர மறுத்து துரியோதனன் துன்புறுத்தினான்.தருமம் வெல்ல, நாங்கள் அடைந்த கஷ்டங்கள், துயரங்கள் உங்களுக்கு தெரியாதா?.

🌺அவ்வளவு கஷ்டங்கள் அடைய, நாங்கள் செய்த தவறு என்ன ?.
தவறு செய்த துரியோதனன், கடைசி வரையில் மகிழ்ச்சியாக தானே இருந்தான்’ என, கேட்டான் தருமன்.

🌺மற்ற நான்கு பேரும், ‘ஆமாம் தாத்தா, நல்ல வழியில் நடந்தால், கஷ்டங்கள் அனுபவிக்கதான் வேண்டுமா‘ என, கேட்டனர். பீஷ்மர் சிரித்து விட்டு, பதில் அளித்தார்.

🌺'பேரக் குழந்தைகளே!
நீங்கள் வாழ்வில் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்து விட்டுதான், இன்று வெற்றி பெற்று உள்ளீர்கள்.

🌺இதை நான் மறுக்கவில்லை.
ஆனால், இவ்வளவு கஷ்டங்கள் வந்த போதும்,நீங்கள் நிம்மதியை இழக்கவில்லை.

🌺அதர்ம பாதையில் செல்லவில்லை.
கஷ்டங்கள் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் நீங்கள் மகிழ்ச்சியை இழந்தீர்களா?.

🌺13 ஆண்டு வன வாசம் இருந்த போது கூட நீங்கள் மகிழ்ச்சியாகதான் இருந்தீர்கள்.

🌺ஆனால், துரியோதனன் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கவில்லை.
ஆனால், அவன் நிம்மதியாக இருந்தானா?.

🌺எந்நேரமும் உங்களை பற்றியே நினைத்துக் கொண்டு, உள்ளூர பயந்து கொண்டே இருந்தான்.

🌺உங்களுக்கு தீமை செய்வதில்தான், அவனது முழு எண்ணமும் சிந்தனையும் இருந்தன.

🌺துரியோதனனால், உங்களுக்கு துன்பம் ஏற்பட்ட போதேல்லாம், உங்களை கிருஷ்ண பரமாத்மா காப்பாற்றினார்.

🌺நல்ல எண்ணங்களுடன் நீங்கள் இருந்ததால், உங்கள் பக்கம் கடைசி வரை இறைவன் கூடவே இருந்தான்.
ஆனால், துரியோதனன் பக்கம் அவன் ஒரு போதும் இல்லை.

🌺நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பது, அவர்களின் திறமையை வெளிப்படுத்ததான்.

🌺பல கஷ்டங்களை அனுபவித்த போதும், நீங்கள் தருமத்தின் பாதையை விட்டு அகலாமல் இருந்ததால், பெரும் பெயரும் புகழும் பெற்றுள்ளீர்கள் என கூறி முடித்தார் பீஷ்மர். உண்மைதான்.

🌺ஆண்டவன் நமக்கு கஷ்டம் கொடுக்கிறான் என்றால், அவன் நம்மை கை விட மாட்டான் என்ற நம்பிக்கை திடமாக இருந்தாலே போதும் மனதில் எந்த சந்தேகமும் துளி கூட வராது. இதுவே பகவத்கீதை சொல்லும்  உண்மையான சரணாகதியின் சாரம் 🌹🌺
------------------------------------------------------------------------
🌻🌺🌹சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🌼🌻🌺🌹

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...