Sunday, October 24, 2021

பெருமாள்களில்_அழகன்_யார்?

 பெருமாள்களில்_அழகன்_யார்?


🌹 🌿 நரஸிம்மமா,
🌹 🌿 ராகவ சிம்ஹமமா
🌹 🌿 யாதவ சிம்ஹமமா

🌹 🌿 ஆழ்வாரின் தீர்ப்பு.

🌹 🌿 ஆழ்வார்களிலே, நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி ஒன்றை வைத்தாராம்.

1).   மத்ஸ்ய
2).   கூர்ம
3).   வராஹ
4).   நரசிம்ம
5).   வாமன
6).   பரசுராம
7).   ஸ்ரீராம
8).   பலராம
9).   கிருஷ்ண
10). கல்கி

🌹 🌿 அவதாரங்களை வரவழைத்தார்.

🌹 🌿 முதல் சுற்றில் ............

மத்ஸ்ய, கூர்ம, வராஹ
மூன்று அவதாரங்களும் முறையே
மீன், ஆமை, பன்றி ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், அழகுப்  போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி, நிராகரித்து விட்டார்.

🌹 🌿 நரசிம்மருக்குத் தலை சிங்கம் போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால், அவரை நிராகரிக்கவில்லை.

🌹 🌿 நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள்.

🌹 🌿 இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார்.

🌹 🌿 மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி, மூவடி நிலம் கேட்டு விட்டுப் பெரிய காலால், மூவுலகையும்  அளந்தவர் நீங்கள்.

🌹 🌿 அதுபோலப் போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு.

🌹 🌿 எனவே உங்களை நிராகரிக்கிறேன்!”, என்றார்  திருமழிசைப் பிரான்.

🌹 🌿 பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும், கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார்.

🌹 🌿 பலராமன், கண்ணன் இருவரையும் பார்த்து,  “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது.

🌹 🌿 யாராவது ஒருவர் மட்டும் இருங்கள்!” என்று கூறினார்.

🌹 🌿 தம்பிக்காக பலராமன்
போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

🌹 🌿 கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால்,
“நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி அவரையும்  நிராகரித்துவிட்டார்.

🌹 🌿 இறுதியாக

🌹 🌿  நரசிம்மன்
🌹 🌿  ராமன்
🌹 🌿  கண்ணன்

🌹 🌿 மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள்.

🌹 🌿 மூவரையும் பரீட்சித்துப் பார்த்த திருமழிசைப் பிரான், “நரசிம்மர்தான் அழகு!” என்று தீர்ப்பளித்தார்.

🌹 🌿 “ராமன் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான  மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்பதில் சந்தேகமில்லை.

🌹 🌿 ஆனால், மனிதனாகவே
வாழ்ந்ததால் ஒரு வண்ணானின் பேச்சுக்காக தன் தேவியையே துறந்தார்.

🌹 🌿 அதனால் ஆழ்வாரால் நிராகரிக்கப்பட்டார்

🌹 🌿 கண்ணன் கோபிகைகளை எல்லாம் மயக்கிய அழகன் என்பதிலும் சந்தேகமில்லை.

🌹 🌿 ஆனால், அந்த கோபிகைகளையும் விரக வேதனையில் தவிக்க விட்டுச் சென்று விட்டார்.

🌹 🌿 ஆனால், ஆபத்தில்
யார் நமக்கு உதவி செய்கிறார்களோ, அவர்கள்தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள்.

🌹 🌿 பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும் போது, உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள், நரசிம்மர்.

🌹 🌿 எனவே அவர்தான் அழகு!” என்று கூறினார்.

🌹 🌿 இருவரும்
ராகவ யாதவ சிம்ஹம் என்ற பெயர்களையே சூட்டிக் கொண்டாலும்,
செயலாலே நரஸிம்ஹனே வென்றான்.

🌹 🌿 பெருமாள் திருமேனியில் உள்ள அனைத்து அங்கங்களும் அழகாக இருந்தாலும், அவரது திருவடிகளையே நாம் கொண்டாடுகிறோம்.

🌹 🌿 ஏனெனில், நமக்குத்  துன்பங்கள் நேரும்போது அவன் திருவடிகளைத்தான் நினைத்துக் கொள்கிறோம்.

🌹 🌿 துயரறு சுடரடியான அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக்  காக்கின்றன!!

🌹 🌿 எனவே அவைதான்
மிகவும் அழகு.

🌹 🌿 அவ்வாறே, ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர்தான் அவதாரங்களுக்குள் அழகானவர்.

🌹 🌿 *இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய, நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.*

🌹 🌿 *அழகியான் தானே*
*அரி உருவன் தானே*
*பழகியான் தாளே பணிமின் - குழவியாய்த்தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே*
*மீனாய் உயிரளிக்கும் வித்து.*

🌹 🌿 - என்ற பாசுரத்தில் அரி எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார்.

🌹 🌿 அதனால்தான், அழகிய ராமன், அழகிய கண்ணன் முதலிய பெயர்களை நாம் கேள்விப்பட்டதில்லை.

🌹 🌿 *ஆனால், நரசிம்மர் மட்டும் ‘அழகிய சிங்கர்’ என்று  அழைக்கப்படுகிறார்.*

🌹 🌿 அத்தகைய அழகனாக விளங்குவதால், நரசிம்மருக்கு *‘ஸ்ரீமான்’* என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது.

🌹 🌿 ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள்.

🌹 🌿 மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்?

🌹 🌿 ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டு களிக்க வேண்டுமெனில், திருமார்பில் இருந்தபடி காணமுடியாது.

🌹 🌿 மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்?

🌹 🌿 அதனால்தான்...

🌹 🌿 ஸ்ரீமானின்  மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள்.


No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...