ஹரிபக்த ஸந்த ஜாலே ஹோ அனேக
த்யாமாஜீ நிஷ்டங்க காஹீம் ஐகசுக வாமதேவ செளனக நாரத
அஜாமேள ப்ரஹலாத விபீஷ்ண
த்ருவ பராசர வ்யாச புண்டலீக
அர்ஜூன வால்மிக அம்பரீச
ருக்மாங்கத பீஷ்ம பக தாலப் யஸூத
ஸீபி ஹனுமந்த பரிக்ஷீதி
கச்யயாதி அத்ரி கெளதம வசிஷ்ட
பரத்வாஜ ச்ரேஷ்ட மார்க்கண்டேய
பளீ க்ருபாச்சார்ய இந்ர ஸூர்ய சந்ர
ப்ரம்ம ஆணி ருத்ர பூர்ண பக்த
ஸர்வாச ஏக ஆகே மீ கிங்கர
ம்ஹணே ஞானேஸ்வர வைஷ்ணவாஸீ
பொருள் :
அந்த ஶ்ரீ ஹரியை நித்யமாக சிரேஷ்டடையாக வழிபடுபவர்கள் சிலரை கூறுகிறேன் கேளுங்கள் சுகர் வாமதேவர் செளனகர் நாரதர் அஜாமிளன் பிரகலாதர் விபீஷ்ணர் துருவர் பராசரர் வியாசர் புண்டலீகர் அர்ச்சுனன் வால்மீகி அம்பரீசன் ருக்மாங்கதன் பீஷ்மர் பகன் தாலர் சூதர் சிபி அனுமன் பரீட்சித் காசியப்பர் அத்திரி கெளதமர் வசிஷ்டர் பரத்வாஜர் சிரேஷ்டரான மார்க்கெண்டேயர் பலி க்ருபாச்சார்யர் இந்திரன் சூரியன் சந்திரன் ப்ரம்மன் சிவன் இவர்கள் பூர்ணரான ஶ்ரீ வைட்ணவர்கள் ஆவார்கள் இவர்கள் அனைவருக்கும் ஞானேஸ்வரரான நான் வேலையாள் ஆவேன்..
இதில் பாண்டுரங்க அவதாரமான ஞானேஸ்வரர்
1.ஞான மார்க்கத்தை கை கொண்ட துருவரையும்
2.பக்தி மார்க்கத்தை கை கொண்ட பிரகலாதரையும்
3.சரணாகதியை கை கொண்ட விபிஷ்ணரையும்
4.நாமஸ்மரணத்தை கை கொண்ட அஜாமேளனையும்
பூர்ணரான நித்ய பக்தர்கள் என்றே குறிபிட்டு உள்ளார் ஆகையால் இதில் கலியில் மிக மிக எளியது..
நாமஸ்மரணமே சாதனம் என்று வாழ்ந்தும் காட்டி உள்ளார்..
நாமமே பலம் நாமமே சாதனம்
இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி
No comments:
Post a Comment