ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார் திருவடிகளே சரணம்
Thursday, May 31, 2018
Tuesday, May 15, 2018
ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் கிளி
ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் கிளி
காலை 10 மணி வாக்கில் கிளி கட்ட உக்காருவேன். அதுக்கு முன்னாலேயே இலைகள், நார், பூ, மூங்கில் குச்சி எல்லாம்போய் சேகரிச்சுட்டு வந்து, தயாராக வச்சுக்கிட்டுத்தான் உக்காருவேன். நானேதான் போய் அதையெல்லாம் சேகரிச்சுட்டு வருவேன். பிளாஸ்டிக் போன்ற எந்த செயற்கைப் பொருளாகவும் இல்லாமல் ரசாயனம், கோந்து போன்று எதுவும் கலக்காமல் இலை, பூ , நார், மூங்கில் மட்டுமே கொண்டு செய்யப்படும் அற்புதம் அது!
"இது ஒரு நுணுக்கமான வேலை. இதை ஆண்கள்தான் செய்யணும். இதுவரை எந்தப் பெண்ணும் கிளி கட்டித்தந்ததா தகவல் இல்லை. எங்க விட்டுப் பெண்கள் விருப்பப்பட்டு கட்டி தரோம்'நு சொன்னாக்கூட நாங்க அனுமதிக்கிறதில்லை.
ஆண்டாள் அம்மாவுக்காக தினசரி ஒரு புது கிளி செய்வோம். ஒரு கிளி கட்டுறதுக்கு அஞ்சு, ஆறு மணி நேரமாகும். வேறு யார் உதவியும் இல்லாம, நான் ஒருத்தந்தான் செய்வேன். கிளி செய்ய சில இலைகளும், பூக்களும், வாழைநாரும் மட்டும்தான் பயன்படுத்துவேன்.
முதலில், வாழையிலைச் சருகுகளை வச்சு, கிளி உருவம் வர்ற மாதிரி, நாரால சுத்தி கட்டிப்பேன். கிளி உருவத்துக்கு கொண்டு வந்ததும், மரவள்லிக்கிழங்குச் செடியின் இலைகளை, சருகைச் சுத்தி கட்டுவேன். அந்த இலை ரொம்ப மெல்லிசா இருக்கும். நல்லா பதிவாக வச்சுக் கட்ட வரும். கிளி உடல் நிறத்துக்குப் பொருத்தமாக தற்றுபமாக இருக்கும். கிளியோட உடல் முழுமை அடைஞ்சதும், கிளியின் மூக்கு மாதிரி வைப்பேன். செக்கச்செவேல்னு , அச்சு அசல் கிளிமூக்கு மாதிரியே இருக்கும். கண்ணுக்கு, 'காக்காப்பொன்'(மைக்கா) வைப்பேன். அதையும் கடைகள்ல வாங்கமாட்டேன். கிணறு வெட்டறபோது, வெளிய வர்ற கல்லு சில்லுகள்ல 'காக்காப்பொன்' கிடைக்கும். அதனால, கிணறு வெட்டும் இடங்க்ளுக்குப் போய், அதைத் தேடி எடுத்து சேகரித்து வெச்சுப்பேன். கிளியின் கண்ணுக்கு அதை வச்சு ஒட்டிவிட்டா, அப்படியே அச்சு அசல் கண் மாதிரியே இருக்கும். செயற்க்கைப்பொருளோ, கடையில் வாங்கிய பொருளோ எதுவுமே உபயோகிக்கிறதில்லை. தாயாருக்கு சாத்தறதாச்சே! அதனால, பசை, எச்சில்னு எதுவும் தொடக்கூடாது. லேசா தண்ணி தொட்டு ஒட்டிவிட்டாலே காக்காப்பொன் நல்லா ஒட்டிக்கும். பசை தேவையே இல்லை.
அடுத்ததா, றெக்கை. அதுக்குப் பனை ஓலை, நந்தியாவட்டை இலை, செவ்வரலி இலைகளை வச்சுக் கட்டுவோம். வாலுக்கும் அந்த இலைகளும், பனை ஓலையும்தான்.
இப்போ, கிளியோட முக்கால்வாசி வேலை முடிஞ்சிடும். கடைசியா கால் கட்டணும். சின்னதா ரெண்டு மூங்கில் குச்சிகளை பென்சில் மாதிரி கூர்மையா சீவி, காலுக்கு வச்சுக் கட்டிடுவோம். அதைக் குத்தி வைக்கிறதுக்கு, பூச்செண்டு செய்யணும். அதுக்கு நந்தியாவட்டைப் பூ, செவ்வரளிப்பூ ரெண்டையும் வச்சு செண்டு தயார் பண்ணி, அதுல மூங்கில் கால்களோடு இருக்கும் கிளியைக் குத்தி நிறுத்திட்டோம்னா, தயாருக்கான அன்றைய கிளி ரெடி!" எனபக்திப் பரவசம் பொங்க சொல்கிறார் ராமர்.
இனி ராமர் தரும் • பச்சைக் கிளியை • தினசரி மாலை 6.30. மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையின் போது தாயார் ஆண்டாளின் இடது தோளில் சார்த்துவது வழக்கம். அந்தக் கிளி, இரவு அர்த்தசாமப் பூஜை வரை ஆண்டாளின் தோளில் வீற்றிருக்கும். அதற்குப் பிறகு ஆண்டாளுக்குச் சார்த்தப்பட்ட மாலை முதலானவற்றைக் களையும் 'படி களைதல்' எனும் நிகழ்வின்போது, கிளியும் அகற்றப்படும்.
முதல் நாள் மலையில் சார்த்தப்பட்டுக் களையப்பட்ட கிளி, மறுநாள் உபயதாரர் அல்லது கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு பிரசாதத்துடன் வைத்து கொடுக்கப்படுகிறது. ஆண்டாளின் தோளில் 3 மணி நேரம் இருப்பதால், மிகுந்த புனிதப் பொருளாகக் கருதப்படுகிறது இந்த கிளி.
ஆண்டாள் தோளில் இருக்கும் கிளி மிகவும் சக்தி வாய்ந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆண்டாளிடம் வைக்கும் கோரிக்கைகளை கிளி மூலமாகத்தான் பெருமாளிடம் தாயார் சொல்வதாக ஐதீகம். ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் தோளில் செல்லமாக, உரிமையோடு தொற்றிக் கதை பேசும் அந்தக் கிளி, கல்லில் செதுக்கப்பட்டதோ, உலோகமோ அல்லது வேறு செயற்கை இழைப் பொருட்களால் ஆனதோ அல்ல. மேலும், எல்லா நாளும் இருப்பதும் ஒரே கிளியும் அல்ல; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிளி ஆண்டாளின் தோளில் தொற்றிக்கொள்கிறது!
காலை 10 மணி வாக்கில் கிளி கட்ட உக்காருவேன். அதுக்கு முன்னாலேயே இலைகள், நார், பூ, மூங்கில் குச்சி எல்லாம்போய் சேகரிச்சுட்டு வந்து, தயாராக வச்சுக்கிட்டுத்தான் உக்காருவேன். நானேதான் போய் அதையெல்லாம் சேகரிச்சுட்டு வருவேன். பிளாஸ்டிக் போன்ற எந்த செயற்கைப் பொருளாகவும் இல்லாமல் ரசாயனம், கோந்து போன்று எதுவும் கலக்காமல் இலை, பூ , நார், மூங்கில் மட்டுமே கொண்டு செய்யப்படும் அற்புதம் அது!
"இது ஒரு நுணுக்கமான வேலை. இதை ஆண்கள்தான் செய்யணும். இதுவரை எந்தப் பெண்ணும் கிளி கட்டித்தந்ததா தகவல் இல்லை. எங்க விட்டுப் பெண்கள் விருப்பப்பட்டு கட்டி தரோம்'நு சொன்னாக்கூட நாங்க அனுமதிக்கிறதில்லை.
ஆண்டாள் அம்மாவுக்காக தினசரி ஒரு புது கிளி செய்வோம். ஒரு கிளி கட்டுறதுக்கு அஞ்சு, ஆறு மணி நேரமாகும். வேறு யார் உதவியும் இல்லாம, நான் ஒருத்தந்தான் செய்வேன். கிளி செய்ய சில இலைகளும், பூக்களும், வாழைநாரும் மட்டும்தான் பயன்படுத்துவேன்.
முதலில், வாழையிலைச் சருகுகளை வச்சு, கிளி உருவம் வர்ற மாதிரி, நாரால சுத்தி கட்டிப்பேன். கிளி உருவத்துக்கு கொண்டு வந்ததும், மரவள்லிக்கிழங்குச் செடியின் இலைகளை, சருகைச் சுத்தி கட்டுவேன். அந்த இலை ரொம்ப மெல்லிசா இருக்கும். நல்லா பதிவாக வச்சுக் கட்ட வரும். கிளி உடல் நிறத்துக்குப் பொருத்தமாக தற்றுபமாக இருக்கும். கிளியோட உடல் முழுமை அடைஞ்சதும், கிளியின் மூக்கு மாதிரி வைப்பேன். செக்கச்செவேல்னு , அச்சு அசல் கிளிமூக்கு மாதிரியே இருக்கும். கண்ணுக்கு, 'காக்காப்பொன்'(மைக்கா) வைப்பேன். அதையும் கடைகள்ல வாங்கமாட்டேன். கிணறு வெட்டறபோது, வெளிய வர்ற கல்லு சில்லுகள்ல 'காக்காப்பொன்' கிடைக்கும். அதனால, கிணறு வெட்டும் இடங்க்ளுக்குப் போய், அதைத் தேடி எடுத்து சேகரித்து வெச்சுப்பேன். கிளியின் கண்ணுக்கு அதை வச்சு ஒட்டிவிட்டா, அப்படியே அச்சு அசல் கண் மாதிரியே இருக்கும். செயற்க்கைப்பொருளோ, கடையில் வாங்கிய பொருளோ எதுவுமே உபயோகிக்கிறதில்லை. தாயாருக்கு சாத்தறதாச்சே! அதனால, பசை, எச்சில்னு எதுவும் தொடக்கூடாது. லேசா தண்ணி தொட்டு ஒட்டிவிட்டாலே காக்காப்பொன் நல்லா ஒட்டிக்கும். பசை தேவையே இல்லை.
அடுத்ததா, றெக்கை. அதுக்குப் பனை ஓலை, நந்தியாவட்டை இலை, செவ்வரலி இலைகளை வச்சுக் கட்டுவோம். வாலுக்கும் அந்த இலைகளும், பனை ஓலையும்தான்.
இப்போ, கிளியோட முக்கால்வாசி வேலை முடிஞ்சிடும். கடைசியா கால் கட்டணும். சின்னதா ரெண்டு மூங்கில் குச்சிகளை பென்சில் மாதிரி கூர்மையா சீவி, காலுக்கு வச்சுக் கட்டிடுவோம். அதைக் குத்தி வைக்கிறதுக்கு, பூச்செண்டு செய்யணும். அதுக்கு நந்தியாவட்டைப் பூ, செவ்வரளிப்பூ ரெண்டையும் வச்சு செண்டு தயார் பண்ணி, அதுல மூங்கில் கால்களோடு இருக்கும் கிளியைக் குத்தி நிறுத்திட்டோம்னா, தயாருக்கான அன்றைய கிளி ரெடி!" எனபக்திப் பரவசம் பொங்க சொல்கிறார் ராமர்.
இனி ராமர் தரும் • பச்சைக் கிளியை • தினசரி மாலை 6.30. மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையின் போது தாயார் ஆண்டாளின் இடது தோளில் சார்த்துவது வழக்கம். அந்தக் கிளி, இரவு அர்த்தசாமப் பூஜை வரை ஆண்டாளின் தோளில் வீற்றிருக்கும். அதற்குப் பிறகு ஆண்டாளுக்குச் சார்த்தப்பட்ட மாலை முதலானவற்றைக் களையும் 'படி களைதல்' எனும் நிகழ்வின்போது, கிளியும் அகற்றப்படும்.
முதல் நாள் மலையில் சார்த்தப்பட்டுக் களையப்பட்ட கிளி, மறுநாள் உபயதாரர் அல்லது கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு பிரசாதத்துடன் வைத்து கொடுக்கப்படுகிறது. ஆண்டாளின் தோளில் 3 மணி நேரம் இருப்பதால், மிகுந்த புனிதப் பொருளாகக் கருதப்படுகிறது இந்த கிளி.
ஆண்டாள் தோளில் இருக்கும் கிளி மிகவும் சக்தி வாய்ந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆண்டாளிடம் வைக்கும் கோரிக்கைகளை கிளி மூலமாகத்தான் பெருமாளிடம் தாயார் சொல்வதாக ஐதீகம். ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் தோளில் செல்லமாக, உரிமையோடு தொற்றிக் கதை பேசும் அந்தக் கிளி, கல்லில் செதுக்கப்பட்டதோ, உலோகமோ அல்லது வேறு செயற்கை இழைப் பொருட்களால் ஆனதோ அல்ல. மேலும், எல்லா நாளும் இருப்பதும் ஒரே கிளியும் அல்ல; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிளி ஆண்டாளின் தோளில் தொற்றிக்கொள்கிறது!
Saturday, May 12, 2018
அடக்கம் அமரருள் உய்க்கும்
ஒரு சமயம் பகவான் சற்று ஓய்வாக தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாதரக்ஷைகளையும் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று அகன்றார்.
பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளைக் கண்டு நகைத்தன.
“பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே;
எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார். இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? என்றும்,
“எங்களைப் போல் நீங்கள் அரியாசனத்தில் அமரமுடியாது.” என்றும் எள்ளி நகையாடின.
பகவானின் ஆயுதங்கள், மற்றும் அணிகலன்கள் ஒவ்வொன்றுக்கும் ஜீவன் உண்டு.
திருமாலின் கதாயுதமே பன்னிரு ஆழ்வார்களில் பூதத்தாழ்வாராக பிறந்தது.
சங்கு எனப்படும் பாஞ்ச சன்னியமே பொய்கையாழ்வாராக அவதரித்தது.
திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சமே பேயாழ்வாராக அவதரித்தது.
சக்கராயுதமே திருமழிசை ஆழ்வாராக அவதரித்தது.
பெரியாழ்வார் கருடனின் அம்சமாக அவதரித்தார்.
பரந்தாமனின் வில்லின் அம்சமாக பிறந்தவர் திருமங்கையாழ்வார்.
திருமாலின் ஸ்ரீவத்சத்தின் (மரு) அம்சமாக பிறந்தவர் திருப்பாணாழ்வார்.
கௌஸ்துவ மணியின் அம்சமாக பிறந்தவரே குலசேகராழ்வார்.)
கதைக்கு வருவோம்….
பகவான் திரும்பியதும் பாதரக்ஷைகள் அவரிடம் முறையிட்டன.
அவர், “கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் ஸ்ரீராமனாக நான் அவதரிக்கும்போது உங்கள் துயர் தீர்ப்பேன்.
உங்களைக் கண்டு நகைத்தவர்களே உங்களுக்குச் சேவை செய்ய, தலைமேல் சுமக்கச் செய்வேன்!” என்றார் கருணையுடன்.
சொன்னதை போல, இராமனாக பரம்பொருள் திரு அவதாரம் செய்த பின்பு, பரதன் முடி சூட வேண்டி கைகேயி செய்த சதியால் வனவாசம் சென்றுவிட, விஷயம் தெரிந்த பரதன், இராமன் இருக்கும் இடம் நோக்கி ஓடுகிறான்.
தன் தாய் செய்த தவறுக்கு வருந்தும் பரதன் இராமரை காட்டுக்கு போய் சந்தித்து மன்னிப்பு கோருகிறான்.
மீண்டும் அயோத்தி திரும்பி வந்து ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, இராமர் மறுத்துவிடுகிறார்.
“உங்கள் பாதுகைகளையாவது கொடுங்கள் அண்ணா. அதை சிம்மாசனத்தில் நிறுத்தி, அதன் பிரதிநிதியாக நான் ஆட்சி புரிகிறேன்.” என்று வேண்ட, மனமிறங்கிய அண்ணல், அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஸ்ரீ இராமரின் பாதரக்ஷைகளை சங்கு-சக்கரங்களின் அம்சமாகப் பிறந்த பரதனும் சத்ருக்னனும் தங்கள் தலைமேல் தாங்கி எடுத்துச் சென்று அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தனர்.
இராம ராஜ்ஜியத்தைவிட பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால் அது எந்தளவு சக்தி மிக்கது என்று யூகித்துக்கொள்ளுங்கள்.
இதன் நினைவாகவே இன்றும் பெருமாள் கோவில்களில் கிரீடத்தின் மேல் பாதுகைகள் உள்ள ‘சடாரி’
ஸ்ரீவைஷ்ணவர்களின் தோள்களில் முத்திரையாகப் பதித்திருக்கும் சங்கு-சக்கரங்களுக்கும், தலை மீதும் சாத்தப்படுகிறது.
மேலும் பகவானின் கால் பட்டல்ல, அவன் பாதுகை பட்டதாலேயே கல்லாக இருந்த அகலிகையும் சாபவிமோசனம் பெற்று எழுந்தாள்.
இறைவனின் பாதுகைகள் அத்தனை மகத்துவம் மிக்கது. கோவிலுக்கு சென்றால் பகவானின் திருவடிகளையே முதலில் பார்க்கவேண்டும்.
காலம் எப்போது யாரை எந்த உயரத்தில் வைக்கும் என்று கணிக்க முடியாது. யாரையும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.
இன்று நாம் அலட்சியமாக கருதுபவர்களை நாளை நாம் அண்ணாந்து பார்க்கும் நிலை வரலாம்.
அதை உணர்ந்து எப்போதும் அடக்கத்துடன் வாழ்ந்து, இந்த வாழ்க்கை அவன் போட்ட பிச்சை என்கிற எண்ணத்துடன் வாழ்ந்து வரவேண்டும்.
அபயமளிக்கும் குருவாயூர்
அபயமளிக்கும் குருவாயூர்
♒♒♒♒♒♒♒♒♒
🚩
பூலோக வைகுண்டமாகவும் பூமியில் இறைவன் இருக்கும் இடமாகவும் கருதப்படும் அற்புத திருத்தலம் இது.
🚩
கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே தன் தாய் தந்தையருக்கு இக்கோவிலில் குழந்தை வடிவத்தில் கிருஷ்ணன் காட்சி கொடுத்த சிறப்பு இக்கோவிலுக்கு உள்ளது.
🚩
108 திவ்யதேசங்கள் வரிசையில் இந்த கோவில் சேராது என்றாலும் வைணவர்களால் பெரிதும் வணங்கப்பட்டு வரும் இந்திய அளவில் மிகப்பெரிய வைணவஸ்தலம் இது.
🚩
தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
🚩
குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் குருவாயூர் என பெயர் பெற்றது.
மும்மூர்த்திகளின் அனுக்ரஹம் இந்த விக்கிரகத்துக்கு உண்டு என்பதால் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டால் அனைத்து நலன்களையும் நாம் பெறலாம் என்பது ஐதீகம்.
🚩
குருவாயூரப்பனை ஒரு குழந்தையாக பாவித்தே இக்கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.
🚩
அதிகாலையில் ஸ்ரீகுருவாயூரப்பனின் விஸ்வரூப தரிசனம் காண இங்கு கூடும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். குழந்தை கிருஷ்ணனை எந்த வேளையில் தரிசித்தாலும், அதிகாலையில் தரிசிப்பது கூடுதல் ஆனந்தம்!
🚩
இரவு மூன்று மணிக்கு நாதஸ்வர இன்னிசை ஒலிக்க, சங்கு முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர். அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு ‘நிர்மால்ய தரிசனம்’ என்று பெயர்.
🚩
நிர்மால்ய தரிசனத்தின்போது பகவானுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்கள், மாலைகள் இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகக் களைவர்.
🚩
விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் தைலாபிஷேகம் நடைபெறும். குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் கோவிலுக்குச் சொந்தமான செக்கில் ஆட்டப்பட்டதாகும்.
🚩
இதன் இறுதியில் தங்கக் கலசத்தில் உள்ள தூய நீரால் பூர்ணத் திருமஞ்சனம் செய்வர்.
கிட்டத்தட்ட இது கும்பாபிஷேகம் போல் ஆகும்.
🚩
இந்த அபிஷேகம் முடிந்த பின் நெல்பொரி, கதளிப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியமாகப் படைப்பர். அப்போது உன்னி கிருஷ்ணனாகத் தோற்றம் அளிப்பார்
🚩
சந்தன அபிஷேகத்தில் நீராடிய குருவாயூரப்பனை அன்றைய தினம் முழுதுவம் பக்தர்கள் தரிசிக்கலாம். சந்தன அபிஷேகம் நடந்த தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது.
.🚩
துலாபார நேர்ச்சைக்கடன் இங்கே பிரசித்தம். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப தங்கம், வெள்ளி, சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை எடைக்கு எடை செலுத்துகிறார்கள்.
🚩
அதுபோல் குழந்தைகளுக்கு முதல் அன்னமிடுதலும் இங்கே சிறப்பு. குழந்தைகளுக்கு முதன் முதலாக இங்கே அன்னம் ஊட்டினால் வாழ்நாள் முழுதும் அந்தக் குழந்தைக்கு ருசியான உணவு கிடைக்கும் என்றும், உணவுக்குப் பஞ்சம் வராது என்பதும், நோய் நொடிகள் எதுவும் வராது என்பதும் நம்பிக்கை.
🚩
ஒருநாள் சிறுவன் ஒருவன் தலைமைச் சிற்பியிடம் வந்து ‘‘இங்கு கிருஷ்ணனை, வேணு கோபாலனாக செதுக்கியிருக்கும் தூணை வையுங்கள்!’’ என்றான்.
🚩
‘‘அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இதுவரை வடிக்க வில்லையே!’’ என்றார். உடனே சிறுவன் சிற்ப வேலை நடக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று ஸ்ரீகிருஷ்ணர், வேணுகோபாலனாக விளங்கும் தூணைக் காட்டினான்.
🚩
வியப்படைந்த சிற்பி, திரும்பிப் பார்த்தபோது சிறுவனைக் காணவில்லை.
வந்தது ஸ்ரீகுருவாயூரப்பனே என்பதை உணர்ந்த தலைமைச் சிற்பி, அந்தத் தூணையே அங்கு நிறுவினார்.
🚩
கருவறையில், அணையாமல் எரியும் நெய் விளக்கு ஒளியில் ஜோதியாக மின்னுகிறான் ஸ்ரீகுருவாயூரப்பன்.
♒♒♒♒♒♒♒♒♒
🚩
பூலோக வைகுண்டமாகவும் பூமியில் இறைவன் இருக்கும் இடமாகவும் கருதப்படும் அற்புத திருத்தலம் இது.
🚩
கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே தன் தாய் தந்தையருக்கு இக்கோவிலில் குழந்தை வடிவத்தில் கிருஷ்ணன் காட்சி கொடுத்த சிறப்பு இக்கோவிலுக்கு உள்ளது.
🚩
108 திவ்யதேசங்கள் வரிசையில் இந்த கோவில் சேராது என்றாலும் வைணவர்களால் பெரிதும் வணங்கப்பட்டு வரும் இந்திய அளவில் மிகப்பெரிய வைணவஸ்தலம் இது.
🚩
தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
🚩
குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் குருவாயூர் என பெயர் பெற்றது.
மும்மூர்த்திகளின் அனுக்ரஹம் இந்த விக்கிரகத்துக்கு உண்டு என்பதால் ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டால் அனைத்து நலன்களையும் நாம் பெறலாம் என்பது ஐதீகம்.
🚩
குருவாயூரப்பனை ஒரு குழந்தையாக பாவித்தே இக்கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.
🚩
அதிகாலையில் ஸ்ரீகுருவாயூரப்பனின் விஸ்வரூப தரிசனம் காண இங்கு கூடும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். குழந்தை கிருஷ்ணனை எந்த வேளையில் தரிசித்தாலும், அதிகாலையில் தரிசிப்பது கூடுதல் ஆனந்தம்!
🚩
இரவு மூன்று மணிக்கு நாதஸ்வர இன்னிசை ஒலிக்க, சங்கு முழங்க குருவாயூரப்பனைத் திருப்பள்ளி எழச்செய்வர். அப்போது பகவான் காட்சி கொடுப்பதற்கு ‘நிர்மால்ய தரிசனம்’ என்று பெயர்.
🚩
நிர்மால்ய தரிசனத்தின்போது பகவானுக்கு முதல் நாள் அணிவித்திருந்த சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்கள், மாலைகள் இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகக் களைவர்.
🚩
விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் தைலாபிஷேகம் நடைபெறும். குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் கோவிலுக்குச் சொந்தமான செக்கில் ஆட்டப்பட்டதாகும்.
🚩
இதன் இறுதியில் தங்கக் கலசத்தில் உள்ள தூய நீரால் பூர்ணத் திருமஞ்சனம் செய்வர்.
கிட்டத்தட்ட இது கும்பாபிஷேகம் போல் ஆகும்.
🚩
இந்த அபிஷேகம் முடிந்த பின் நெல்பொரி, கதளிப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியமாகப் படைப்பர். அப்போது உன்னி கிருஷ்ணனாகத் தோற்றம் அளிப்பார்
🚩
சந்தன அபிஷேகத்தில் நீராடிய குருவாயூரப்பனை அன்றைய தினம் முழுதுவம் பக்தர்கள் தரிசிக்கலாம். சந்தன அபிஷேகம் நடந்த தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது.
.🚩
துலாபார நேர்ச்சைக்கடன் இங்கே பிரசித்தம். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப தங்கம், வெள்ளி, சர்க்கரை, கரும்பு, வெண்ணெய், பன்னீர், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை எடைக்கு எடை செலுத்துகிறார்கள்.
🚩
அதுபோல் குழந்தைகளுக்கு முதல் அன்னமிடுதலும் இங்கே சிறப்பு. குழந்தைகளுக்கு முதன் முதலாக இங்கே அன்னம் ஊட்டினால் வாழ்நாள் முழுதும் அந்தக் குழந்தைக்கு ருசியான உணவு கிடைக்கும் என்றும், உணவுக்குப் பஞ்சம் வராது என்பதும், நோய் நொடிகள் எதுவும் வராது என்பதும் நம்பிக்கை.
🚩
ஒருநாள் சிறுவன் ஒருவன் தலைமைச் சிற்பியிடம் வந்து ‘‘இங்கு கிருஷ்ணனை, வேணு கோபாலனாக செதுக்கியிருக்கும் தூணை வையுங்கள்!’’ என்றான்.
🚩
‘‘அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இதுவரை வடிக்க வில்லையே!’’ என்றார். உடனே சிறுவன் சிற்ப வேலை நடக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று ஸ்ரீகிருஷ்ணர், வேணுகோபாலனாக விளங்கும் தூணைக் காட்டினான்.
🚩
வியப்படைந்த சிற்பி, திரும்பிப் பார்த்தபோது சிறுவனைக் காணவில்லை.
வந்தது ஸ்ரீகுருவாயூரப்பனே என்பதை உணர்ந்த தலைமைச் சிற்பி, அந்தத் தூணையே அங்கு நிறுவினார்.
🚩
கருவறையில், அணையாமல் எரியும் நெய் விளக்கு ஒளியில் ஜோதியாக மின்னுகிறான் ஸ்ரீகுருவாயூரப்பன்.
Friday, May 11, 2018
பாவங்கள் போக்கும் பாப விமோசனி ஏகாதசி
#பாவங்கள்_போக்கும் #பாப_விமோசனி_ஏகாதசி
-
ஏகாதசி விரதமிருப்பவர்கள், பகவான் ஸ்ரீ விஷ்னுவை தரிசிப்பவர்கள், புனிதமான ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி மோட்சத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.
-
🍀காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம்.🍀
-
🍀ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.🍀
-
🍀மாதம் தோறும் வரும் ஏகாதசிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனிப் பெயரும், சிறப்பும் உண்டு. #சித்திரை_மாதம் - கிருஷ்ண (#தேய்பிறையில்) பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை #பாப_விமோசனி ஏகாதசியாக கொண்டாடுவர். பாப விமோசனி ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம்.🍀
-
🍀அர்ஜூனன் பரமாத்மா கிருஷ்ணரிடம் "மதுசூதனா! ஒவ்வொரு ஏகாதசி விரத மஹாத்மிய கதைகளைக் கேட்டு, மனம் ஆனந்தத்தால் உற்சாகம் அடைவதுடன் மற்ற ஏகாதசி மஹாத்மிய கதைகளையும் அறிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறது. ஸ்ரீ கிருஷ்ண கோபாலா! தாங்கள் கிருபை புரிந்து சித்திரை (சைத்ர) மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி விரத மஹாத்மியத்தை பற்றி கூற வேண்டுகிறேன். அந்த ஏகாதசி எந்தப் பெயரால் அழைக்கப்படுகின்றது, அன்று எந்த தெய்வத்திற்கு பூஜை ஆராதனை செய்ய வேண்டும், விரதம் அனுஷ்டிப்பதற்கான விதிமுறை, இவற்றைப் பற்றி தாங்கள் கருணையுடன் விஸ்தாரமாக எடுத்துரைக்க வேண்டும்" என்று வேண்டி நின்றான்.🍀
-
🍀பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜூனனின் வேண்டுகோளுக்கு இணங்கி "பாண்டு நந்தனா! ஒரு சமயம் ப்ருத்வியை (பூமி) ஆண்ட ராஜா மாந்தாதா, ரிஷி லோமசரிடம் இதே கேள்வியை கேட்டான். ராஜனின் கேள்விக்கு லோமச ரிஷி அளித்த பதிலை அப்படியே உனக்கு கூறுகிறேன் கேள் என்று கூறி சொல்லத் துவங்கினார்.🍀
-
🍀தர்மத்தின் மறைபொருளை (உள்ளார்ந்த ரகசிய) அறிந்த ஞானவானான மாந்தாதா, ரிஷி லோமசரிடம்," மஹரிஷி!, மனிதர்கள் தங்களது பாபத்திலிருந்து விமோசனம் பெற இயலுமா, முடியும் என்றால் எவ்விதம் அது சாத்தியமாகும். தயவுசெய்து மனிதர்கள் அனைவரும் எளிதில் தங்களது பாபங்களிலிருந்து விடுதலை பெற ஏதுவாக, ஏதேனும் சரளமான உபாயத்தை கூறி அருள வேண்டுகிறேன்." என்றான்.🍀
-
🍀அதற்கு லோமச ரிஷி, "ராஜன் சைத்ர(சித்திரை) மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியானது, பாபமோசினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் மனிதர்களின் சர்வ பாபங்களும் அழியப் பெறுவதுடன், நற்கதியும் கிட்டுகிறது. உனக்கு பாபமோசினி ஏகாதசி விரத மஹாத்மிய கதையைக் கூறுகிறேன். கவனமாக கேள்" என்றார்.🍀
-
🍀பழங்காலத்தில் "சைத்ர ரத்" என்னும் பெயர் கொண்ட அழகிய வனம் ஒன்று இருந்தது. அது அப்ஸர சுந்தரிகள், கந்தர்வ கின்னரர் இவர்கள் கூடி ஆனந்தமாக பொழுதை கழிக்கும் இடமாக இருந்து வந்தது. அங்கு ஒவ்வொரு விநாடியும், வஸந்த கால கொண்டாட்டம் போல் கழிந்து வந்தது. அங்கு எக்கணமும் வித வித மலர்கள் பூத்து சொரிந்து கொண்டு இருந்தது. சில சமயம் கந்தர்வ கன்னிகள், சில நேரங்களில் தேவேந்திரன் மற்ற தேவர்களுடன் அங்கு உல்லாசமாக கிரீடை புரியும் இடமாக அது அமைந்திருந்தது. இத்தனை உல்லாசக் கொண்டாங்கள் நடந்து வரும் இடமாக விளங்கினாலும், ரிஷி, முனிவர்கள் தவம் செய்யும் வனமாகவும் விளங்கியது. அப்பேர்ப்பட்ட வனத்தில் சிவபெருமானின் மீது மிகுந்த ப்ரேமையும், பக்தியும் கொண்ட மேதாவி என்னும் பெயர் கொண்ட ரிஷி ஒருவர் நெடுந்தவத்தில் ஆழ்ந்திருந்தார்.🍀
-
🍀வனத்திற்கு வரும் அநேக அப்சரஸ்கள், அவரைக் கண்டு மோகம் கொண்டு மயக்க விரும்பினாலும், அவருடைய நெடுங்கால தவ வலிமை நெருப்பு வளையம் போல் அவரை யாரும் நெருங்க விடாமல் காத்து வந்தது. மஞ்சுகோஷா என்னும் பெயர் கொண்ட அப்சரஸ் அவரை கண்டு மயங்கி மோகம் கொண்டாள், ஆனால் மற்ற அப்சரஸ்கள் போல் அவரருகில் சென்று விடாமல், அவர் தவத்தில் ஆழ்ந்திருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் குடில் அமைத்து, தினமும் அவர் கண் பார்வை படும் இடமாக அமர்ந்து வீணை இசையுடன், தன் மதுரமான குரலில் கானம் பாடி அவரை மயக்கும் முயற்சியில் ஈடுபட்டாள்.🍀
-
🍀அதே நேரம் காமதேவனும், சிவபக்தரான ரிஷி மேதாவியின் தவத்தை வெற்றி கொள்ள இதுவே சரியான தருணம் என்று தன் முயற்சியை ஆரம்பித்தான். மஞ்சுகோஷா அப்சரஸின் புருவத்தை வில்லாகவும், மயக்கும் பார்வையை வில்லின் நாணாகவும், கண்களை கணைகளாகவும், மன்மத கணைகளால் தாக்கப்பட்ட ரிஷியின் இலக்காக அப்சரஸின் கனத்த ஸ்தனங்களையும் கொண்டு ரிஷியின் தவத்தை பங்கம் செய்ய தயார் ஆனான். அக்கால கட்டத்தில் ரிஷி மேதாவி வாலிப பருவத்தினராகவும், திடகாத்திர தேக ஆரோக்கியத்துடனும் விளங்கினார். பொன்னிற மேனியில் வெள்ளை நிற பூணூல் துலங்க, முனிவர்களுக்கான தண்டத்தை கையில் ஏந்தி, அவர் மற்றொரு மன்மதனைப் போல் விளங்கினார்.🍀
-
🍀அப்சரஸ் மஞ்சுகோஷாவின் மயக்கும் குரலில் பாடப்பட்ட கானத்தின் இனிமை, அவள் அணிந்த அணிகலன்களில் பதிக்கப்பட்ட மணிகளின் ஒசை, வீணையின் இசைநயம் அனைத்தும் ஒரு சேர முனிவரை கவர்ந்தது. அவர் கண்களைத் திறந்து, எதிரே சற்று தூரத்தில் அமர்ந்து கானம் பாடிக் கொண்டிருந்த அப்சரஸ் மஞ்சுகோஷாவை கண்டார். அக்கணம் மன்மதன் தன் பாணங்களை விட, முனிவர், மஞ்சுகோஷாவின் மீதான மையலில் தன் நிலை மறந்து, கண் மூடாமல் அவள் அழகில் வியந்து நின்றார்.🍀
-
🍀அக்கணத்திற்காக இத்தனை காலம் காத்திருந்த அப்சரஸ் மெதுவாக மீட்டிக் கொண்டிருந்த வீணையை கீழே வைத்து விட்டு, முனிவரை நோக்கி அன்னம் போல் அடி மேல் அடி வைத்து நடந்து வந்தாள். மோகம் கொள்ள வைக்கும் கவர்ச்சியுடன் முனிவரை கொடியானது வலிமையான மரத்தை தழுவி படருவது போல், ஆலிங்கனம் செய்தாள். காண்பவர் மயங்கும் அவளது அழகிய தேக செளந்தர்யத்தில் மோகம் கொண்ட முனிவரும் அவளது ஆலிங்கனத்தில் சுய நினைவை இழந்து, தனது தவம், சிவபக்தி அனைத்தையும் மறந்து மோக மயக்கத்தில் மஞ்சுகோஷாவுடன் காம கேளிக்கையில் ஆழ்ந்தார்.🍀
-
🍀மன்மதனின் பிடியில் சிக்கிய முனிவர், பகல் - இரவு என்று நேரம் போவது அறியாமல் பல நாட்கள் மஞ்சுகோஷாவுடன் காதல் லீலையில் ஆழ்ந்திருந்தார். ஒரு நாள் மஞ்சுகோஷா முனிவரிடம் "முனிவரே வெகு நாட்களாகி விட்டது. நான் ஸ்வர்க்கலோகம் செல்வதற்கு அனுமதி கொடுங்கள்." என்றாள். மஞ்சுகோஷாவின் வார்த்தைகளைக் கேட்டு முனிவர் "சுந்தரி, சந்தியாகாலத்தில் தானே வந்தாய். அதற்குள் என்ன அவசரம். சூரிய உதயத்தில் செல்லலாம்." என்றார். முனிவரின் பதிலைக் கேட்டு மஞ்சுகோஷாவும், முனிவருடன் சிற்றின்ப விளையாட்டில் ஆழ்ந்தாள். இப்படி இருவரும் நீண்ட நாட்கள், நேரம் போவது அறியாமல் காதல் விளையாட்டில் பொழுதைக் கழித்தனர்.🍀
-
🍀ஒரு நாள் மீண்டும் மஞ்சுகோஷா முனிவரிடம் "தேவரீர் எனது இல்லம் இருக்கும் சொர்க்கலோகம் செல்ல அனுமதி அளிக்க வேண்டும்." என்று வேண்டினாள். அதற்கு முனிவர் "சுந்தரி, இன்னும் நேரம் ஆகவில்லை. அதற்குள் என்ன அவசரம். இன்னும் சற்று நேரம் பொறுத்திரு." என்றார். முனிவரின் பதிலைக் கேட்டு மஞ்சுகோஷா "ரிஷியே தங்களின் இரவு முடிவே இல்லாததாக இருக்கிறது. நாம் இருவரும் ஒன்றாக வாழ ஆரம்பித்து எத்தனை வருட காலம் ஆகிவிட்டது என்பதை நினைத்துப் பாருங்கள். அப்படி இருக்கையில், நான் இன்னும் என் இல்லத்திற்குச் செல்லாமல் தங்களுடன் இன்னும் அதிக நாள் இருப்பது உசிதமா என்பதை நீங்களே யோசித்து சொல்லுங்கள்." என்றாள்.🍀
-
🍀மஞ்சுகோஷாவின் "எத்தனை வருட காலம்" என்ற வார்த்தைகளைக் கேட்டு முனிவருக்கு காலத்தைப் பற்றி விழிப்புணர்வு உண்டாயிற்று. தான் எத்தனை வருட காலம் மஞ்சு கோஷாவுடன் கழித்துள்ளோம் என்பதை சிந்தித்துப் பார்க்க ஆரம்பித்தார். அப்போது தான், அவருக்கு "சிற்றின்பத்தில் தான் 57 வருடங்களை கழித்திருக்கிறோம்" என்னும் ஞானோதயம் உண்டாயிற்று. மஞ்சுகோஷா அவருக்கு தன்னை அழிக்க வந்த காலனின் சொரூபமாக தோன்றினாள். அழகினால் தன்னை மயக்கி, தன் தவத்தைக் கலைத்து இத்தனை வருட காலம் சிற்றின்பத்தில் தன்னை ஆழ்த்திய மஞ்சுகோஷாவின் மீது அவருக்கு அளவில்லா குரோதமும், கோபமும் உண்டாயிற்று. உதடுகள் துடி துடிக்க, உடல் பலவீனத்தால் நடு நடுங்க, ஆக்ரோஷத்துடன் "வஞ்சகி! தவத்தை கலைத்த பாதகி, மஹாபாபி, துராசாரி, நீ பிசாசினியாக கடவது" என்று சபித்தார்.🍀
-
🍀முனிவரின் சாபத்தால் பைசாசினி ஆக மாறிய மஞ்சுகோஷா மிகவும் வருத்ததுடன், "முனிவரே! என் மீதுள்ள கோபத்தை விட்டு விட்டு சாந்தமடையுங்கள். தயவுசெய்து இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்கான வழியை கூறி அருளுங்கள். சாதுக்களின் சத்சங்கம் நற்பலனை அளிக்கவல்லது என்று சான்றோர் கூறியுள்ளனர். நான் தங்களுடன் பல ஆண்டுகள் கழித்துள்ளேன். ஆகையால் குரோதத்தை விட்டொழித்து கருணையுடன் எனக்கு நல்வழி காட்டுங்கள். இல்லையெனில் மஞ்சுகோஷா முனிவர் மேதாவியுடன் பல ஆண்டு காலம் வாழ்ந்தும் நற்பலன் ஏதும் கிட்டாது பைசாசினியாக மாறினாள் என்ற அவப்பெயர் தான் மிஞ்சும்" என்று வேண்டினாள்.🍀
-
🍀மஞ்சுகோஷாவின் வார்த்தைகளைக் கேட்ட முனிவரும் சாந்தத்துடன் சிந்திக்கலானார். இதனால் தனக்கு ஏற்படப் போகும் அபகீர்த்தியைப் பற்றிய பயமும் உண்டாயிற்று. இறுதியில் மஞ்சுகோஷாவிடம் "நீ இழைத்த தீங்கு மன்னிக்க முடியாதது. இருந்தாலும் என் சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்கான வழியை கூறுகிறேன். கேள். சித்திரை (சைத்ர) மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதி பாப விமோசனி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று விரத விதிமுறைப்படி உபவாசத்துடன் விரதம் அனுஷ்டித்தால் நீ சாபத்திலிருந்து விடுதலை பெறலாம்." என்றார். பிறகு மஞ்சுகோஷாவிற்கு விரத விதிமுறைகளையும், அவற்றை எப்படி அனுஷ்டிப்பது என்பதனையும் எடுத்துரைத்தார்.🍀
-
🍀பிறகு தன் தவறுக்கான பிராயச்சித்தம் தேடி தன் தந்தை ச்யவன ரிஷியின் ஆசிரமத்திற்கு சென்று தந்தையின் முன் நின்றார். மகன் மேதாவியைக் கண்ட ச்யவன முனிவர் அவரிடம், "மகனே உனக்கு என்னவாயிற்று? தவத்தின் பலன் எல்லாம் அழிந்ததுடன், பிரம்மனுக்கு நிகரான உன் தேஜஸ்ஸூம் இழந்து காணப்படுகிறாயே?" என்று வினவினார்.🍀
-
🍀வெட்கத்தால் தலைகுனிந்து நின்ற மேதாவி முனிவர் "தந்தையே! நான் ஒரு அப்சரஸின் அழகில் மயங்கி அவளுடன் சிற்றின்பத்தில் 57 ஆண்டுகளை இழந்து மஹா பாபம் புரிந்துள்ளேன். அதன் காரணமாக என் தவ வலிமை, தேஜஸ் அனைத்தையும் இழந்து நிற்கிறேன். தாங்கள் தான் கருணை கூர்ந்து இந்த மஹா பாபத்திலிருந்து முக்தி பெறுவதற்கான உபாயத்தை கூற வேண்டும்." என்றார். இதைக் கேட்ட ச்யவன ரிஷி " மைந்தனே, மேதாவி! நீ சித்திரை (சைத்ர) மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் பாப விமோசனி ஏகாதசி விரதத்தை பக்தி சிரத்தையுடன் விதிப்பூர்வமாக உபவாசம் இருந்து அனுஷ்டித்தால் உன்னுடைய சகல பாபங்களும் அழிந்து மேன்மை பெறுவாய்." என்றார்.🍀
-
🍀தந்தையின் வார்த்தைக்கு ஏற்ப மேதாவி முனிவரும் பாப விமோசனி ஏகாதசி நாளன்று விதிபூர்வமாக, உபவாசத்துடன் விரதத்தை அனுஷ்டித்தார். பாப விமோசனி ஏகாதசி விரத பிரபாவத்தால் அவரின் அனைத்து பாபங்களும் அழிந்து, தான் இழந்த அனைத்தையும் பெற்றார். மஞ்சுகோஷாவும் மேதாவி முனிவர் அருளியபடி பாப விமோசனி ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து, அதன் புண்ணிய பலனால் பைசாச ரூபத்திலிருந்து விடுதலை பெற்று, அழகிய ரூபத்துடன் சொர்க்கலோகம் சென்றாள்.🍀
-
🍀லோமச ரிஷி ராஜனிடம் "ஹே ராஜன்! பாபவிமோசனி ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் அனைத்து பாபங்களும் அழியப் பெறுகின்றன. பாபவிமோசனி ஏகாதசி விரத மஹாத்மியத்தை படிப்பதாலும் அல்லது கேட்பதாலும் ஒராயிரம் பசுக்களை (கோ) தானம் செய்த புண்ணியபலன் கிட்டுகிறது. இவ்விரதத்தை விதிபூர்வத்துடன் அனுஷ்டிப்பதால் பிரம்மஹத்தி (பிராம்மணனை கொன்ற பாவம்), தங்கம் திருடுவதால் உண்டாகும் பாபம், மதுபானம் அருந்துவதால் ஏற்படும் பாபம், அகம்பாவத்துடன் நடப்பதால் உண்டாகும் பாபம் போன்ற கொடிய பாபங்கள் அழியப் பெறுவதுடன் இறுதியில் மோட்சப் பிராப்தியும் கிட்டுகிறது," என்றார்.🍀
-
#கதாசாரம்: 🍀இக்கதையிலிருந்து (ஸ்பஷ்டமாக) தெளிவாக தெரிவது என்னவென்றால் உடல் அழகு நிலையானது அல்ல. அப்படி இருக்க, தேக செளந்தர்யத்தின் மீது ஏற்பட்ட மையல், மேதாவி முனிவரை, தவசங்கல்பத்தை மறக்கச் செய்யும் கொடிய பாவத்தை செய்ய வைத்தது. ஆனால் கருணாமயமான பகவான் மஹாவிஷ்ணுவின் பாபவிமோசனி சக்தி இத்தகைய கொடிய பாவத்திலிருந்தும் அவருக்கு விடுதலை அளித்து காத்து அருளியது. எவர் ஒருவர் நற்பணி (சத்கர்மா) செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டு, பிறகு பேராசை, மோகம் போன்ற தீய சக்திகளின் வசப்பட்டு தன் சங்கல்பத்தை மறக்கிறாரோ, அவர் கொடிய நரகத்தில் தண்டனை பெறுவதற்கு தகுதி உடையவராகிறார். ஆனால் பாபவிமோசனி ஏகாதசி விரதம் சகல பாவங்களிலிருந்தும் மனிதர்களுக்கு விடுதலை அளிப்பதுடன், இறுதியில் ஸ்வர்க்கப் பிராப்தியையும் அளிக்கிறது.🍀
-
பாப விமோசனி ஏகாதசி விரதமிருந்து பாபங்களில் இருந்து விடுபட்டு நற்குணம் பெற்று திகழ்வோமாக.
-
|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||
Wednesday, May 9, 2018
தொடர்ந்து நிர்ஜல உபவாசம் அனுஷ்டித்த பெரியவா
தொடர்ந்து நிர்ஜல உபவாசம் அனுஷ்டித்த பெரியவா
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-18-05-2017 தேதியிட்ட குமுதம் பக்தி
.
(சுருக்கமான ஒரு பகுதி)
ஏகாதசி விரதம் இருக்கிற சமயத்துல பால்.மோர் இப்படி உப்புப் போடாத நீர் ஆகாரத்தை ரொம்ப கொஞ்சமா எடுத்துக்கலாம் அப்படிங்கறது விரத விதியிலேயே இருக்கு. அதனால, விரதம் இருக்கிற அன்னிக்கு கொஞ்சமா பால் மட்டும் ஒரே ஒருதரம் எடுத்துப்பார் பரமாசார்யா.
ஒரு சம்யம் அவர் முகாமிட்டிருந்த இடத்துல மின்சாரம் பழுது பார்த்திண்டிருந்தார் மகாராஷ்ட்ரா ஆசாமி ஒருத்தர்
.
அன்னிக்கும் ஏகாதசிதான். கார்த்தால வேலையை ஆரம்பிச்சவர் உச்சிப்பொழுது நெருங்கியும் அப்படி இப்படி நகரவே இல்லை. எல்லாத்தையும் கவனிச்சுண்டு இருந்த பெரியவா, " அந்த ஆசாமி பாவம்.எதுவுமே சாப்டாம வேலை பார்த்துண்டு இருக்கான். சாப்டு வந்து வேலை செய்யச் சொல்லு" அப்படின்னு பக்கத்தில இருந்த சீடன்கிட்டே சொன்னார்.
அதைக் கேட்டுண்டு இருந்த அந்த ஆசாமி, "சுவாமி, இன்னிக்கு ஏகாதசி. நான் பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டேன். அதனால நான் சாப்பிடலையேன்னு நீங்க வருத்தப்படாதீங்க! " அப்படின்னு சொன்னான்.
அதைக் கேட்டாரோ இல்லையோ,உடனே பதறிட்டார் பரமாசார்யா.
"ஒரு சாமான்யன் நிர்ஜலமா உபவாசம் இருக்கான். சன்யாசி நான் பால் குடிச்சுண்டு இருக்கேனே. இது தப்பில்லையோ..!" அப்படின்னு சொல்லிட்டு,
அன்னிலேர்ந்து ஏகாதசி அன்னிக்கு கொஞ்சம் பால்குடிச்சுண்டு இருந்தாரே, அதையும் நிறுத்திட்டு நிர்ஜல உபவாசத்தை அனுஷ்டிக்க ஆரம்பிச்சுட்டார் பெரியவா.
அதுவும் எப்படித் தெரியுமா?
ஏகாதசி அன்னிக்கு நிர்ஜல உபவாசம் .மறுநாள் பாரணை பண்ணணும் இல்லையா? சாஸ்திரப்படி துவாதசி அன்னிக்கு ஸ்ரவண நட்சத்திரம் அமைஞ்சுட்டா அன்னிக்கும் துளி ஜலம் கூடக் குடிக்கக் கூடாது. அதனால அன்னிக்கும் உபவாசத்தைத் தொடர்வார் மகாபெரியவா. மறுநாள் பிரதோஷம். அன்னிக்கு பகல்ல சாப்டக்கூடாது. சாயந்திரம் சிவபூஜை ஆனப்புறம்தான் சாப்டலாம். அதேசம்யம் பிரதோஷம் ஞாயித்துக்கிழமைல அமைஞ்சுட்டா, சூரியன் அஸ்தமிச்சப்புறம் சாப்டக் கூடாது. அதனால அன்னிக்கும் உபவாசம்தான். நாலாவது நாள் மாச சிவராத்ரி. அதனால அன்னிக்கும் உபவாசம்.
ஆக, தொடர்ந்து நாலுநாள் ஒரு சொட்டு ஜலம்கூட அருந்தாம விரதம் அனுஷ்டிப்பார் பரமாசார்யா.
ஒரு சமயம் அவர் இப்படி விரதம் அனுஷ்டிக்கறதைப் பார்த்துட்டு "இத்தனை கடுமையா விரதம் இருக்கேளே பெரியவா? இப்படி உடம்பை வருத்திக்கறது அவஸ்யமா?" அப்படின்னு கேட்டார் சீடர் ஒருத்தர்.
அதற்கு பரமாசார்யா என்ன சொன்னார் தெரியுமா?
"இத்தனை ஆசாரத்தை அனுஷ்டானத்தைக் கடைப்பிடிச்சும் வேளா வேளைக்குப் பசியெடுக்காத நிலை எனக்கு இன்னும் வரலயே" அப்படின்னுதான்.
லோகத்துக்கெல்லாம் படியளக்கற பரமேஸ்வரனே பசி தாங்கமுடியாம அன்னபூரணிகிட்டே பிட்சை எடுத்ததா
புராணம் சொல்றது. ஆனா, பரமாசார்யா, அந்த அன்னபூரணி தானாவே வந்து அன்னமிடறேன்னு சொன்னாக்கூட வேண்டாம்னுட்டு உபவாசம் இருக்கிறதுக்கு ஆசைப்பட்டார்ங்கறச்சே அவரோட பெருமையை என்னன்னு சொல்றது?
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-18-05-2017 தேதியிட்ட குமுதம் பக்தி
.
(சுருக்கமான ஒரு பகுதி)
ஏகாதசி விரதம் இருக்கிற சமயத்துல பால்.மோர் இப்படி உப்புப் போடாத நீர் ஆகாரத்தை ரொம்ப கொஞ்சமா எடுத்துக்கலாம் அப்படிங்கறது விரத விதியிலேயே இருக்கு. அதனால, விரதம் இருக்கிற அன்னிக்கு கொஞ்சமா பால் மட்டும் ஒரே ஒருதரம் எடுத்துப்பார் பரமாசார்யா.
ஒரு சம்யம் அவர் முகாமிட்டிருந்த இடத்துல மின்சாரம் பழுது பார்த்திண்டிருந்தார் மகாராஷ்ட்ரா ஆசாமி ஒருத்தர்
.
அன்னிக்கும் ஏகாதசிதான். கார்த்தால வேலையை ஆரம்பிச்சவர் உச்சிப்பொழுது நெருங்கியும் அப்படி இப்படி நகரவே இல்லை. எல்லாத்தையும் கவனிச்சுண்டு இருந்த பெரியவா, " அந்த ஆசாமி பாவம்.எதுவுமே சாப்டாம வேலை பார்த்துண்டு இருக்கான். சாப்டு வந்து வேலை செய்யச் சொல்லு" அப்படின்னு பக்கத்தில இருந்த சீடன்கிட்டே சொன்னார்.
அதைக் கேட்டுண்டு இருந்த அந்த ஆசாமி, "சுவாமி, இன்னிக்கு ஏகாதசி. நான் பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டேன். அதனால நான் சாப்பிடலையேன்னு நீங்க வருத்தப்படாதீங்க! " அப்படின்னு சொன்னான்.
அதைக் கேட்டாரோ இல்லையோ,உடனே பதறிட்டார் பரமாசார்யா.
"ஒரு சாமான்யன் நிர்ஜலமா உபவாசம் இருக்கான். சன்யாசி நான் பால் குடிச்சுண்டு இருக்கேனே. இது தப்பில்லையோ..!" அப்படின்னு சொல்லிட்டு,
அன்னிலேர்ந்து ஏகாதசி அன்னிக்கு கொஞ்சம் பால்குடிச்சுண்டு இருந்தாரே, அதையும் நிறுத்திட்டு நிர்ஜல உபவாசத்தை அனுஷ்டிக்க ஆரம்பிச்சுட்டார் பெரியவா.
அதுவும் எப்படித் தெரியுமா?
ஏகாதசி அன்னிக்கு நிர்ஜல உபவாசம் .மறுநாள் பாரணை பண்ணணும் இல்லையா? சாஸ்திரப்படி துவாதசி அன்னிக்கு ஸ்ரவண நட்சத்திரம் அமைஞ்சுட்டா அன்னிக்கும் துளி ஜலம் கூடக் குடிக்கக் கூடாது. அதனால அன்னிக்கும் உபவாசத்தைத் தொடர்வார் மகாபெரியவா. மறுநாள் பிரதோஷம். அன்னிக்கு பகல்ல சாப்டக்கூடாது. சாயந்திரம் சிவபூஜை ஆனப்புறம்தான் சாப்டலாம். அதேசம்யம் பிரதோஷம் ஞாயித்துக்கிழமைல அமைஞ்சுட்டா, சூரியன் அஸ்தமிச்சப்புறம் சாப்டக் கூடாது. அதனால அன்னிக்கும் உபவாசம்தான். நாலாவது நாள் மாச சிவராத்ரி. அதனால அன்னிக்கும் உபவாசம்.
ஆக, தொடர்ந்து நாலுநாள் ஒரு சொட்டு ஜலம்கூட அருந்தாம விரதம் அனுஷ்டிப்பார் பரமாசார்யா.
ஒரு சமயம் அவர் இப்படி விரதம் அனுஷ்டிக்கறதைப் பார்த்துட்டு "இத்தனை கடுமையா விரதம் இருக்கேளே பெரியவா? இப்படி உடம்பை வருத்திக்கறது அவஸ்யமா?" அப்படின்னு கேட்டார் சீடர் ஒருத்தர்.
அதற்கு பரமாசார்யா என்ன சொன்னார் தெரியுமா?
"இத்தனை ஆசாரத்தை அனுஷ்டானத்தைக் கடைப்பிடிச்சும் வேளா வேளைக்குப் பசியெடுக்காத நிலை எனக்கு இன்னும் வரலயே" அப்படின்னுதான்.
லோகத்துக்கெல்லாம் படியளக்கற பரமேஸ்வரனே பசி தாங்கமுடியாம அன்னபூரணிகிட்டே பிட்சை எடுத்ததா
புராணம் சொல்றது. ஆனா, பரமாசார்யா, அந்த அன்னபூரணி தானாவே வந்து அன்னமிடறேன்னு சொன்னாக்கூட வேண்டாம்னுட்டு உபவாசம் இருக்கிறதுக்கு ஆசைப்பட்டார்ங்கறச்சே அவரோட பெருமையை என்னன்னு சொல்றது?
Tuesday, May 8, 2018
இறைவனிடம் வேண்டுதல்...
இது வேண்டும், அது வேண்டும் என பகவானிடம் கேட்கும் வழக்கம் இந்து மதத்தில் இல்லை.
வைணவ சம்பிரதாயத்தில் ‘சரணாகதி’ தத்துவம் கடைபிடிக்கப் படுகிறது.
பெருமாளே எனக்கு என்ன வேண்டும் என்று உனக்குத் தெரியாதா?
நீயே அதைச் செய் என்பது அதன் அர்த்தம்.
சைவத்தில் ‘வேண்டத்தக்கது அறிவோ நீ; வேண முழுதும் தருவோ நீ’ என்பது தத்துவம்.
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!
திருவாசகம் ...
இறைவா,
எனக்கு வேண்டியது எது என்று உனக்குதான் தெரியும். அதை நான் விரும்பிக் கேட்டால் அப்படியே தந்துவிடுகிறவன் நீ.
பிரமனும் திருமாலும் உன்னுடைய முழு உருவத்தைக் காண விரும்பினார்கள். ஆனால் நீ அவர்களுக்குக் காட்சி தரவில்லை. எளியவனாகிய என்னை விரும்பி வந்து ஆட்கொண்டாய்.
நான் எதை விரும்பவேண்டும், எதைக் கேட்கவேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, சொல். நான் அதையே உன்னிடம் வேண்டுவேன்.
’ம்ஹூம், அதெல்லாம் சரிப்படாது, நீயாக எதையாவது கேள்’ என்கிறாயா?
நீ இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும்? நான் எதைக் கேட்பேன்? அப்படியே நான் கேட்டாலும், அதுவும் உன்னுடைய விருப்பம்தானே?
தாயின் கையைப் பிடித்தபடி சாலையைக் கடக்கும் குழந்தைக்குக் கொஞ்சமும் கவலை இருக்காது.
காரணம் தாய் பாதுகாப்பாக அழைத்துச் செல்வாள் என்பது குழந்தைக்குத் தெரியும்.
இந்த மனோ பாவம்தான் நமக்கும் இருக்க வேண்டும்.
கைலாயமும் வைகுண்டமும் எவ்வளவு தூரத்தில்?
கைலாயமும் வைகுண்டமும் எவ்வளவு தூரத்தில்?
வைகுண்டம் கூப்பிடும் தூரத்திலும், கைலாயம் கைக்கு எட்டும் தூரத்திலும் உள்ளது
முதலை காலைக் கவ்வ, யானை ‘ஆதிமூலமே’ என்று குரல் கொடுக்க, மகாவிஷ்ணு ஓடி வந்தாரல் லவா? அதனால் மகாவிஷ்ணு கூப்பிடும் தூரத்தில் தானே இருந்தார்!
அதேபோல, எமதர்மன் பாசக்கயிறு வீச, மார்க் கண்டேயன் தன் அருகே இருந்த சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்ளவில்லையா? சிவன் வந்தாரே! அது கைலாயம்தானே!"
வைகுண்டம் கூப்பிடும் தூரத்திலும், கைலாயம் கைக்கு எட்டும் தூரத்திலும் உள்ளது
முதலை காலைக் கவ்வ, யானை ‘ஆதிமூலமே’ என்று குரல் கொடுக்க, மகாவிஷ்ணு ஓடி வந்தாரல் லவா? அதனால் மகாவிஷ்ணு கூப்பிடும் தூரத்தில் தானே இருந்தார்!
அதேபோல, எமதர்மன் பாசக்கயிறு வீச, மார்க் கண்டேயன் தன் அருகே இருந்த சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்ளவில்லையா? சிவன் வந்தாரே! அது கைலாயம்தானே!"
வைகுண்டம் கூப்பிடும் தூரத்திலும், கைலாயம் கைக்கு எட்டும் தூரத்திலும் உள்ளது
முதலை காலைக் கவ்வ, யானை ‘ஆதிமூலமே’ என்று குரல் கொடுக்க, மகாவிஷ்ணு ஓடி வந்தாரல் லவா? அதனால் மகாவிஷ்ணு கூப்பிடும் தூரத்தில் தானே இருந்தார்!
அதேபோல, எமதர்மன் பாசக்கயிறு வீச, மார்க் கண்டேயன் தன் அருகே இருந்த சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்ளவில்லையா? சிவன் வந்தாரே! அது கைலாயம்தானே!"
வைகுண்டம் கூப்பிடும் தூரத்திலும், கைலாயம் கைக்கு எட்டும் தூரத்திலும் உள்ளது
முதலை காலைக் கவ்வ, யானை ‘ஆதிமூலமே’ என்று குரல் கொடுக்க, மகாவிஷ்ணு ஓடி வந்தாரல் லவா? அதனால் மகாவிஷ்ணு கூப்பிடும் தூரத்தில் தானே இருந்தார்!
அதேபோல, எமதர்மன் பாசக்கயிறு வீச, மார்க் கண்டேயன் தன் அருகே இருந்த சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்ளவில்லையா? சிவன் வந்தாரே! அது கைலாயம்தானே!"
Wednesday, May 2, 2018
Tuesday, May 1, 2018
ப்ரஹலாத சரித்திரம்
#என்ன_வரம்_வேண்டும்_ப்ரகலாதா_கேள்
#படிக்கவேண்டிய_உன்னத_சரித்திரம்
ஹிரண்யகசிபு வதம் முடிந்தும், நரசிம்ம பகவானின் உக்கிரம் குறையவில்லை, அவன் செய்த அக்கிரமம் அத்தனை!
ப்ரம்மா பரமசிவர் தேவாதி தேவர் எல்லாம் அவரின் கோபம் எப்படி தணிய வைப்பது என்று யோசிக்க,
ப்ரம்மா, ப்ரஹலாதனை கூப்பிட்டு,
"குழந்தாய் உன் பொருட்டன்றோ பகவான் இந்த அவதாரம் எடுத்திருக்கிறார், நீயே அருகில் சென்று அவரை சமாதானப்படுத்து" என்று சொல்லி அனுப்புகிறார்,
அதி உக்கிரமாக இருக்கும் நரசிம்மரின் அருகில் சென்று ப்ரஹலாதன் சாஷ்டாங்கமாக அவரின் பாதங்களில் சேவிக்க, அந்த பச்சிளம் பாலகனை கண்டு பகவானின் உள்ளம் கருணையால் பெருக, அவனை அன்புடன் அணைத்து சரணமடையும் தமது தாமரை கைகளால் அனுகிரஹித்தார்.
அவன் அவரை துதித்து பலவாறு பாடி முடித்தவுடன்,
மிகவும் அகமகிழ்ந்த பகவான், அவனை பார்த்து,
அசுர சிரேஷ்டனே, உன் பக்தியால் நாம் அகமகிழ்ந்தோம், உனக்கு இஷ்டமான வரங்களை கேள் என்று சொல்லுகிறார்.
ப்ரஹலாதன் சிறுவனே என்றாலும் வரங்களை கேட்பது பக்தி என்ற ப்ரேமைக்கு எதிரானது என்பதை அறிந்திருந்தான்,
வரம் பெற்றுக்கொள்ளச் சொன்ன பகவானைப் பார்த்து அவன் பேசுகிறான்.
பகவானே, நாங்கள் ஏற்கெனவே விஷய சுகங்களில் ஆசை உள்ளவர்கள், அப்படி இருக்க, தாங்களும் வரம் அளிப்பதாக கூறி, என்னுடைய ஆசையை தூண்டிவிடலாமா? இது தர்மமா?
இந்த சம்சார தாபத்தை கண்டு பயந்து தங்களை சரண்டைந்த இந்த பக்தனை சோதிக்கவே இப்படி கேட்டீர்களா? ப்ரபோ தயாமூர்த்தியான தாங்கள் என்னை காமக்குழியில் தள்ள வேண்டாமே!
ப்ரபோ எவன் ஒருவன் தன் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தங்களை ஆராதிக்கிறானோ அவன் பக்தனே அல்ல, ஒரு வியாபாரியே,
ப்ரபோ நான் தங்கள் பக்தன், ஆசையற்றவன், எனக்கு உமது அருளை தவிர வேறு எதுவுமே வேண்டாம். உலகத்தின் அதிபதியாக இருக்கும் நீங்களும் எதுவுமே வேண்டாதவர். ஆக நமக்குள் என்னதான் இருக்கிறது கொடுக்கவோ அல்லது வாங்கவோ? ஆசை மட்டுமே காரணமாகுமல்லவா ப்ரபோ?
வரமளிப்பதில் சிறந்த உலக ரட்ஷகரே, அப்படி வரம் அளிக்க விரும்பினால், ஒரே ஒரு வார்த்தை மட்டுமே யாசிக்கிறேன்,
எனக்குள் எந்த ஆசைகள் தோன்றினாலும், அவை முறையே இந்திரியங்கள் , மனது, பிராணன், சரீரம், புத்தி, தைரியம், வெட்கம், தர்மம், சத்யம், செல்வம், தேஜஸ் , ஞாபக சக்தி, முதலானவைகளை எல்லாம் அழித்து விடுகின்றனவோ, அப்படிப்பட்ட அந்த ஆசைகள் என் எண்ணத்தில் தோன்றாமலே, வேர் விடாமலே இருக்க வரமளியுங்கள்.
எப்பொழுது இந்த ஆசைகள் எல்லாம் எனக்குள் புகுந்துவிடுகிறதோ, அப்பொழுதே நான் பகவத் நாமத்தை அனுசயிக்க தகுதி இல்லாதவனாகிவிடுகீறேன்.
இதே கேட்ட பகவான் , நீ அன்றோ எனக்கு ஏகாந்த பக்தன் என்று சொல்லி அவனுக்கு ஆசிகள் வழங்கி, அவனை குலம் தழைக்க அரசாளச் சொல்லி புறப்படுகிறான்,
எத்தனை உன்னத சரித்திரம் இந்த ப்ரஹலாத சரித்திரம்!!
#படிக்கவேண்டிய_உன்னத_சரித்திரம்
ஹிரண்யகசிபு வதம் முடிந்தும், நரசிம்ம பகவானின் உக்கிரம் குறையவில்லை, அவன் செய்த அக்கிரமம் அத்தனை!
ப்ரம்மா பரமசிவர் தேவாதி தேவர் எல்லாம் அவரின் கோபம் எப்படி தணிய வைப்பது என்று யோசிக்க,
ப்ரம்மா, ப்ரஹலாதனை கூப்பிட்டு,
"குழந்தாய் உன் பொருட்டன்றோ பகவான் இந்த அவதாரம் எடுத்திருக்கிறார், நீயே அருகில் சென்று அவரை சமாதானப்படுத்து" என்று சொல்லி அனுப்புகிறார்,
அதி உக்கிரமாக இருக்கும் நரசிம்மரின் அருகில் சென்று ப்ரஹலாதன் சாஷ்டாங்கமாக அவரின் பாதங்களில் சேவிக்க, அந்த பச்சிளம் பாலகனை கண்டு பகவானின் உள்ளம் கருணையால் பெருக, அவனை அன்புடன் அணைத்து சரணமடையும் தமது தாமரை கைகளால் அனுகிரஹித்தார்.
அவன் அவரை துதித்து பலவாறு பாடி முடித்தவுடன்,
மிகவும் அகமகிழ்ந்த பகவான், அவனை பார்த்து,
அசுர சிரேஷ்டனே, உன் பக்தியால் நாம் அகமகிழ்ந்தோம், உனக்கு இஷ்டமான வரங்களை கேள் என்று சொல்லுகிறார்.
ப்ரஹலாதன் சிறுவனே என்றாலும் வரங்களை கேட்பது பக்தி என்ற ப்ரேமைக்கு எதிரானது என்பதை அறிந்திருந்தான்,
வரம் பெற்றுக்கொள்ளச் சொன்ன பகவானைப் பார்த்து அவன் பேசுகிறான்.
பகவானே, நாங்கள் ஏற்கெனவே விஷய சுகங்களில் ஆசை உள்ளவர்கள், அப்படி இருக்க, தாங்களும் வரம் அளிப்பதாக கூறி, என்னுடைய ஆசையை தூண்டிவிடலாமா? இது தர்மமா?
இந்த சம்சார தாபத்தை கண்டு பயந்து தங்களை சரண்டைந்த இந்த பக்தனை சோதிக்கவே இப்படி கேட்டீர்களா? ப்ரபோ தயாமூர்த்தியான தாங்கள் என்னை காமக்குழியில் தள்ள வேண்டாமே!
ப்ரபோ எவன் ஒருவன் தன் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தங்களை ஆராதிக்கிறானோ அவன் பக்தனே அல்ல, ஒரு வியாபாரியே,
ப்ரபோ நான் தங்கள் பக்தன், ஆசையற்றவன், எனக்கு உமது அருளை தவிர வேறு எதுவுமே வேண்டாம். உலகத்தின் அதிபதியாக இருக்கும் நீங்களும் எதுவுமே வேண்டாதவர். ஆக நமக்குள் என்னதான் இருக்கிறது கொடுக்கவோ அல்லது வாங்கவோ? ஆசை மட்டுமே காரணமாகுமல்லவா ப்ரபோ?
வரமளிப்பதில் சிறந்த உலக ரட்ஷகரே, அப்படி வரம் அளிக்க விரும்பினால், ஒரே ஒரு வார்த்தை மட்டுமே யாசிக்கிறேன்,
எனக்குள் எந்த ஆசைகள் தோன்றினாலும், அவை முறையே இந்திரியங்கள் , மனது, பிராணன், சரீரம், புத்தி, தைரியம், வெட்கம், தர்மம், சத்யம், செல்வம், தேஜஸ் , ஞாபக சக்தி, முதலானவைகளை எல்லாம் அழித்து விடுகின்றனவோ, அப்படிப்பட்ட அந்த ஆசைகள் என் எண்ணத்தில் தோன்றாமலே, வேர் விடாமலே இருக்க வரமளியுங்கள்.
எப்பொழுது இந்த ஆசைகள் எல்லாம் எனக்குள் புகுந்துவிடுகிறதோ, அப்பொழுதே நான் பகவத் நாமத்தை அனுசயிக்க தகுதி இல்லாதவனாகிவிடுகீறேன்.
இதே கேட்ட பகவான் , நீ அன்றோ எனக்கு ஏகாந்த பக்தன் என்று சொல்லி அவனுக்கு ஆசிகள் வழங்கி, அவனை குலம் தழைக்க அரசாளச் சொல்லி புறப்படுகிறான்,
எத்தனை உன்னத சரித்திரம் இந்த ப்ரஹலாத சரித்திரம்!!
பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி
பக்தியுடன் ஸ்ரீ நரசிம்ஹ பெருமாளை துதித்து பூஜை செய்தால் குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி : --
1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:
பொருள் : --
1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே
3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே
4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே
5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
6. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே
7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை.
8. அதனால் நரசிம்மனே! உம்மை சரணடைகிறேன்.
1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:
பொருள் : --
1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே
3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே
4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே
5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
6. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே
7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை.
8. அதனால் நரசிம்மனே! உம்மை சரணடைகிறேன்.
பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன இறைத் திருநாமங்கள்
பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன இறைத் திருநாமங்கள்
யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம்.
அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ' சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.
24 திருநாமங்கள்
ஓம் கேசவாய நமஹ :
ஓம் சங்கர்ஷனாய நமஹ :
ஓம் நாராயணாய. நமஹ :
ஓம் வாசுதேவாய. நமஹ :
ஓம் மாதவாய. நமஹ
ஓம் ப்ரத்யும்னாய. நமஹ :
ஓம் கோவிந்தாய. நமஹ :
ஓம் அனிருத்தாய. நமஹ :
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் புருஷோத்தமாய. நமஹ:
ஓம் மதுசூதனாய. நமஹ :
ஓம் அதோக்ஷஜாய. நமஹ :
ஓம் த்ரிவிக்ரமாய. நமஹ :
ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய. நமஹ :
ஓம் வாமனாய. நமஹ :
ஓம் அச்சுதாய. நமஹ :
ஓம் ஸ்ரீதராய. நமஹ :
ஓம் ஜனார்தனாய நமஹ :
ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ :
ஓம் உபேந்த்ராய. நமஹ :
ஓம் பத்மநாபாய. நமஹ :
ஓம் ஹரயே நமஹ :
ஓம் தாமோதராய. நமஹ :
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ
யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம்.
அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ' சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.
24 திருநாமங்கள்
ஓம் கேசவாய நமஹ :
ஓம் சங்கர்ஷனாய நமஹ :
ஓம் நாராயணாய. நமஹ :
ஓம் வாசுதேவாய. நமஹ :
ஓம் மாதவாய. நமஹ
ஓம் ப்ரத்யும்னாய. நமஹ :
ஓம் கோவிந்தாய. நமஹ :
ஓம் அனிருத்தாய. நமஹ :
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் புருஷோத்தமாய. நமஹ:
ஓம் மதுசூதனாய. நமஹ :
ஓம் அதோக்ஷஜாய. நமஹ :
ஓம் த்ரிவிக்ரமாய. நமஹ :
ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய. நமஹ :
ஓம் வாமனாய. நமஹ :
ஓம் அச்சுதாய. நமஹ :
ஓம் ஸ்ரீதராய. நமஹ :
ஓம் ஜனார்தனாய நமஹ :
ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ :
ஓம் உபேந்த்ராய. நமஹ :
ஓம் பத்மநாபாய. நமஹ :
ஓம் ஹரயே நமஹ :
ஓம் தாமோதராய. நமஹ :
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ
அவதார புருஷன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்
ஒண்ணேகால் லட்சம் கொண்ட கிரந்தத்தில் நமக்காகவே வடிகட்டி, சலித்து, பிரித்து,
#ஸ்ரீபகவத்கீதையையும்,
#ஸ்ரீவிஷ்ணுசகஸ்ர_நாமத்தையும் படித்தாலே போதுமானது எனத் தந்திருக்கிறார் ஸ்ரீவேதவியாசர்.
இந்த இரண்டிலும் எது முக்கியம் என்று கேட்பவர்கள் இருக்கிற உலகம் அல்லவா இது!
பெட்டிக்கடை வைத்திருந்த ஒருவர் மிகமிகச் சோம்பேறி.
அந்தக் கடைக்கு வந்த ஒரு ஆசாமியும் சோம்பேறிதான் கடைக்காரரிடம் ‘ஒரு வாழைப்பழம் வேண்டும்’ என்று கேட்க, உடனே கடைக்காரர், ‘கல்லாவுல காசைப் போட்டுட்டு, பழத்தைப் பிய்ச்சு எடுத்துக்குங்க’ என்றார்.
உடனே பழம் வாங்க வந்தவர், ‘அப்படின்னா, பழத்தை யார் எனக்கு உரிச்சுத் தருவாங்க?’ என்று சோகத்துடன் கேட்டாராம்!
அதேபோல், அத்தனைப் பிரமாண்ட மகாபாரதத்தில், ஸ்ரீபகவத் கீதையையும் பகவானின் சகஸ்ர நாமங்களையும் படித்தாலே போதும் என்றால், அந்த இரண்டில் எது ரொம்ப ரொம்ப முக்கியம் என்று கேட்பது மனித இயல்புதானே?!
சகஸ்ரநாம அத்தியாயங்களைப் படிப்பதே சாலச் சிறந்தது. அதாவது, ஸ்ரீகண்ணனின் திருநாமங்களைத் தெரிந்துகொள்வதே போதுமானது!
‘என்னடா இது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்ததுதான் கீதை. அந்தக் கீதையும், அவனது திருநாமங்களும் உசத்தி என்று சொல்லிவிட்டு, பிறகு…
கீதையைவிட, அதாவது பகவான் அருளியதை விட, அவனது திருநாமங்களைப் படிப்பதே விசேஷம் என்கிறானே?!’ என்று குழப்பமாக இருக்கிறதா?
கீதை பகவான் சொன்னது; அவனது திருநாமங்களைச் சொன்னவர்கள் வேதவியாசரும் பீஷ்மரும்! அப்படி யிருக்க, பகவான் சொன்ன கீதையை விட, ஆச்சார்யர்கள் சொன்ன விஷயங்களா உசத்தி என்கிற உங்களின் சந்தேகம் நியாயமானதுதான்!
ஆனால், இப்படி நான் சொல்லவில்லை.
பிறகு, யார் சொன்னார்கள்?
அந்த ஆண்டவனே சொல்லியிருக்கிறான்.
ஆமாம், பகவான் ஸ்ரீகிருஷ்ணரே இப்படிக் கூறியிருக்கிறார்.
முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆச்சார்யர்கள், அடியவர்கள், பக்தர்கள் எல்லாரும் பகவானின் அடிமைகள். ஆக, பக்தர்கள் என்பவர்கள் ஒரு ஜாதி; இறைவன் வேறொரு ஜாதி.
அதாவது பரமாத்மா! ‘நான் படுகிற கஷ்டத்தைப் பார்த்தாயா?’ என்று பக்தன் ஒருவன் முறையிட்டால், அதனைக் கேட்டு இறைவன் உடனே வருகிறானோ இல்லையோ…
ஆச்சார்யர்கள் என்பவர்கள் ஓடிவருவார்கள்.
ஏனெனில், இறைவனை அடைவதற்கு அவர்கள் படாத கஷ்டமா? அடையாத அவமானமா? ஆக, நம்முடைய வேதனையை அறிந்து உணரக்கூடியவர்கள் ஆச்சார்யர்கள்!
அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருந்தபோது, பகவான் கிருஷ்ணர், ”பீஷ்மர் என்பவர் ஞானசக்தி.
அவர் இறந்துவிட்டால், பின்பு இந்த உலகில் ஞானம் என்பதே ஒருவருக்கும் வாய்க்காது போய்விடும்” என யுதிஷ்டிரர் முதலானவர்களிடம் சொல்லி வருந்தினாராம்.
இத்தனைக்கும் யுத்தத்தின் முதல்நாளே, கீதையைச் சொல்லிவிட்டார் ஸ்ரீகிருஷ்ணர். பத்தாம்நாளில், அம்புப் படுக்கையில் கிடக்கிறார் பீஷ்மர்.
‘நான் சொன்ன கீதையே போதும்
அது உலக மக்களை உய்விக்கும்’ என்று சொல்லிக்கொள்ளவில்லை அந்தப் பரம்பொருள்.
மாறாக, ‘ஸ்ரீகிருஷ்ணராகிய என்னுடைய வாக்கியத்தை விட, பீஷ்மரின் வாக்கியமே ஞானத்தை அளிக்கக் கூடியது’ என்பதைச் சொல்லாமல் சொல்லி விளக்கியுள்ளார் பகவான்.
அதுதான், ஸ்ரீகிருஷ்ணரின் பெருங்கருணை!
இப்போது புரிகிறதா, இறைவனின் திருநாமங்கள் உசத்திதான் என்று!
அடியவர்களைக் கௌரவப்படுத்தி, அன்பும் அரவணைப்பும் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்கிற அவதார புருஷன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.
அவனது திருநாமங்களைச் சொல்லச் சொல்ல… மனசு, தாமரையாய் பூரிக்கும்;
பூரித்து நிறைவுற்றிருக்கிற இதயத்தில்,
ஸ்ரீகண்ணனின் ராஜ்ஜியம் ஆரம்பமாகி விடும்!
#ஸ்ரீபகவத்கீதையையும்,
#ஸ்ரீவிஷ்ணுசகஸ்ர_நாமத்தையும் படித்தாலே போதுமானது எனத் தந்திருக்கிறார் ஸ்ரீவேதவியாசர்.
இந்த இரண்டிலும் எது முக்கியம் என்று கேட்பவர்கள் இருக்கிற உலகம் அல்லவா இது!
பெட்டிக்கடை வைத்திருந்த ஒருவர் மிகமிகச் சோம்பேறி.
அந்தக் கடைக்கு வந்த ஒரு ஆசாமியும் சோம்பேறிதான் கடைக்காரரிடம் ‘ஒரு வாழைப்பழம் வேண்டும்’ என்று கேட்க, உடனே கடைக்காரர், ‘கல்லாவுல காசைப் போட்டுட்டு, பழத்தைப் பிய்ச்சு எடுத்துக்குங்க’ என்றார்.
உடனே பழம் வாங்க வந்தவர், ‘அப்படின்னா, பழத்தை யார் எனக்கு உரிச்சுத் தருவாங்க?’ என்று சோகத்துடன் கேட்டாராம்!
அதேபோல், அத்தனைப் பிரமாண்ட மகாபாரதத்தில், ஸ்ரீபகவத் கீதையையும் பகவானின் சகஸ்ர நாமங்களையும் படித்தாலே போதும் என்றால், அந்த இரண்டில் எது ரொம்ப ரொம்ப முக்கியம் என்று கேட்பது மனித இயல்புதானே?!
சகஸ்ரநாம அத்தியாயங்களைப் படிப்பதே சாலச் சிறந்தது. அதாவது, ஸ்ரீகண்ணனின் திருநாமங்களைத் தெரிந்துகொள்வதே போதுமானது!
‘என்னடா இது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்ததுதான் கீதை. அந்தக் கீதையும், அவனது திருநாமங்களும் உசத்தி என்று சொல்லிவிட்டு, பிறகு…
கீதையைவிட, அதாவது பகவான் அருளியதை விட, அவனது திருநாமங்களைப் படிப்பதே விசேஷம் என்கிறானே?!’ என்று குழப்பமாக இருக்கிறதா?
கீதை பகவான் சொன்னது; அவனது திருநாமங்களைச் சொன்னவர்கள் வேதவியாசரும் பீஷ்மரும்! அப்படி யிருக்க, பகவான் சொன்ன கீதையை விட, ஆச்சார்யர்கள் சொன்ன விஷயங்களா உசத்தி என்கிற உங்களின் சந்தேகம் நியாயமானதுதான்!
ஆனால், இப்படி நான் சொல்லவில்லை.
பிறகு, யார் சொன்னார்கள்?
அந்த ஆண்டவனே சொல்லியிருக்கிறான்.
ஆமாம், பகவான் ஸ்ரீகிருஷ்ணரே இப்படிக் கூறியிருக்கிறார்.
முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆச்சார்யர்கள், அடியவர்கள், பக்தர்கள் எல்லாரும் பகவானின் அடிமைகள். ஆக, பக்தர்கள் என்பவர்கள் ஒரு ஜாதி; இறைவன் வேறொரு ஜாதி.
அதாவது பரமாத்மா! ‘நான் படுகிற கஷ்டத்தைப் பார்த்தாயா?’ என்று பக்தன் ஒருவன் முறையிட்டால், அதனைக் கேட்டு இறைவன் உடனே வருகிறானோ இல்லையோ…
ஆச்சார்யர்கள் என்பவர்கள் ஓடிவருவார்கள்.
ஏனெனில், இறைவனை அடைவதற்கு அவர்கள் படாத கஷ்டமா? அடையாத அவமானமா? ஆக, நம்முடைய வேதனையை அறிந்து உணரக்கூடியவர்கள் ஆச்சார்யர்கள்!
அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருந்தபோது, பகவான் கிருஷ்ணர், ”பீஷ்மர் என்பவர் ஞானசக்தி.
அவர் இறந்துவிட்டால், பின்பு இந்த உலகில் ஞானம் என்பதே ஒருவருக்கும் வாய்க்காது போய்விடும்” என யுதிஷ்டிரர் முதலானவர்களிடம் சொல்லி வருந்தினாராம்.
இத்தனைக்கும் யுத்தத்தின் முதல்நாளே, கீதையைச் சொல்லிவிட்டார் ஸ்ரீகிருஷ்ணர். பத்தாம்நாளில், அம்புப் படுக்கையில் கிடக்கிறார் பீஷ்மர்.
‘நான் சொன்ன கீதையே போதும்
அது உலக மக்களை உய்விக்கும்’ என்று சொல்லிக்கொள்ளவில்லை அந்தப் பரம்பொருள்.
மாறாக, ‘ஸ்ரீகிருஷ்ணராகிய என்னுடைய வாக்கியத்தை விட, பீஷ்மரின் வாக்கியமே ஞானத்தை அளிக்கக் கூடியது’ என்பதைச் சொல்லாமல் சொல்லி விளக்கியுள்ளார் பகவான்.
அதுதான், ஸ்ரீகிருஷ்ணரின் பெருங்கருணை!
இப்போது புரிகிறதா, இறைவனின் திருநாமங்கள் உசத்திதான் என்று!
அடியவர்களைக் கௌரவப்படுத்தி, அன்பும் அரவணைப்பும் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்கிற அவதார புருஷன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.
அவனது திருநாமங்களைச் சொல்லச் சொல்ல… மனசு, தாமரையாய் பூரிக்கும்;
பூரித்து நிறைவுற்றிருக்கிற இதயத்தில்,
ஸ்ரீகண்ணனின் ராஜ்ஜியம் ஆரம்பமாகி விடும்!
Subscribe to:
Posts (Atom)
அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது. இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...
-
Yadirajan vadivalagu paRpamenaththigazh painGgazhalum thanN pallavamE viralum pAvanamAgiya paiNthuvarAdai padhiNtha marunGgazhagum mu...
-
Thiruppavai Pasuram is a popular bhajan addressed to Lord Perumal or Mahavishnu. Written by Saint Andal, also known as Nachiar and Ko...