#என்ன_வரம்_வேண்டும்_ப்ரகலாதா_கேள்
#படிக்கவேண்டிய_உன்னத_சரித்திரம்
ஹிரண்யகசிபு வதம் முடிந்தும், நரசிம்ம பகவானின் உக்கிரம் குறையவில்லை, அவன் செய்த அக்கிரமம் அத்தனை!
ப்ரம்மா பரமசிவர் தேவாதி தேவர் எல்லாம் அவரின் கோபம் எப்படி தணிய வைப்பது என்று யோசிக்க,
ப்ரம்மா, ப்ரஹலாதனை கூப்பிட்டு,
"குழந்தாய் உன் பொருட்டன்றோ பகவான் இந்த அவதாரம் எடுத்திருக்கிறார், நீயே அருகில் சென்று அவரை சமாதானப்படுத்து" என்று சொல்லி அனுப்புகிறார்,
அதி உக்கிரமாக இருக்கும் நரசிம்மரின் அருகில் சென்று ப்ரஹலாதன் சாஷ்டாங்கமாக அவரின் பாதங்களில் சேவிக்க, அந்த பச்சிளம் பாலகனை கண்டு பகவானின் உள்ளம் கருணையால் பெருக, அவனை அன்புடன் அணைத்து சரணமடையும் தமது தாமரை கைகளால் அனுகிரஹித்தார்.
அவன் அவரை துதித்து பலவாறு பாடி முடித்தவுடன்,
மிகவும் அகமகிழ்ந்த பகவான், அவனை பார்த்து,
அசுர சிரேஷ்டனே, உன் பக்தியால் நாம் அகமகிழ்ந்தோம், உனக்கு இஷ்டமான வரங்களை கேள் என்று சொல்லுகிறார்.
ப்ரஹலாதன் சிறுவனே என்றாலும் வரங்களை கேட்பது பக்தி என்ற ப்ரேமைக்கு எதிரானது என்பதை அறிந்திருந்தான்,
வரம் பெற்றுக்கொள்ளச் சொன்ன பகவானைப் பார்த்து அவன் பேசுகிறான்.
பகவானே, நாங்கள் ஏற்கெனவே விஷய சுகங்களில் ஆசை உள்ளவர்கள், அப்படி இருக்க, தாங்களும் வரம் அளிப்பதாக கூறி, என்னுடைய ஆசையை தூண்டிவிடலாமா? இது தர்மமா?
இந்த சம்சார தாபத்தை கண்டு பயந்து தங்களை சரண்டைந்த இந்த பக்தனை சோதிக்கவே இப்படி கேட்டீர்களா? ப்ரபோ தயாமூர்த்தியான தாங்கள் என்னை காமக்குழியில் தள்ள வேண்டாமே!
ப்ரபோ எவன் ஒருவன் தன் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தங்களை ஆராதிக்கிறானோ அவன் பக்தனே அல்ல, ஒரு வியாபாரியே,
ப்ரபோ நான் தங்கள் பக்தன், ஆசையற்றவன், எனக்கு உமது அருளை தவிர வேறு எதுவுமே வேண்டாம். உலகத்தின் அதிபதியாக இருக்கும் நீங்களும் எதுவுமே வேண்டாதவர். ஆக நமக்குள் என்னதான் இருக்கிறது கொடுக்கவோ அல்லது வாங்கவோ? ஆசை மட்டுமே காரணமாகுமல்லவா ப்ரபோ?
வரமளிப்பதில் சிறந்த உலக ரட்ஷகரே, அப்படி வரம் அளிக்க விரும்பினால், ஒரே ஒரு வார்த்தை மட்டுமே யாசிக்கிறேன்,
எனக்குள் எந்த ஆசைகள் தோன்றினாலும், அவை முறையே இந்திரியங்கள் , மனது, பிராணன், சரீரம், புத்தி, தைரியம், வெட்கம், தர்மம், சத்யம், செல்வம், தேஜஸ் , ஞாபக சக்தி, முதலானவைகளை எல்லாம் அழித்து விடுகின்றனவோ, அப்படிப்பட்ட அந்த ஆசைகள் என் எண்ணத்தில் தோன்றாமலே, வேர் விடாமலே இருக்க வரமளியுங்கள்.
எப்பொழுது இந்த ஆசைகள் எல்லாம் எனக்குள் புகுந்துவிடுகிறதோ, அப்பொழுதே நான் பகவத் நாமத்தை அனுசயிக்க தகுதி இல்லாதவனாகிவிடுகீறேன்.
இதே கேட்ட பகவான் , நீ அன்றோ எனக்கு ஏகாந்த பக்தன் என்று சொல்லி அவனுக்கு ஆசிகள் வழங்கி, அவனை குலம் தழைக்க அரசாளச் சொல்லி புறப்படுகிறான்,
எத்தனை உன்னத சரித்திரம் இந்த ப்ரஹலாத சரித்திரம்!!
#படிக்கவேண்டிய_உன்னத_சரித்திரம்
ஹிரண்யகசிபு வதம் முடிந்தும், நரசிம்ம பகவானின் உக்கிரம் குறையவில்லை, அவன் செய்த அக்கிரமம் அத்தனை!
ப்ரம்மா பரமசிவர் தேவாதி தேவர் எல்லாம் அவரின் கோபம் எப்படி தணிய வைப்பது என்று யோசிக்க,
ப்ரம்மா, ப்ரஹலாதனை கூப்பிட்டு,
"குழந்தாய் உன் பொருட்டன்றோ பகவான் இந்த அவதாரம் எடுத்திருக்கிறார், நீயே அருகில் சென்று அவரை சமாதானப்படுத்து" என்று சொல்லி அனுப்புகிறார்,
அதி உக்கிரமாக இருக்கும் நரசிம்மரின் அருகில் சென்று ப்ரஹலாதன் சாஷ்டாங்கமாக அவரின் பாதங்களில் சேவிக்க, அந்த பச்சிளம் பாலகனை கண்டு பகவானின் உள்ளம் கருணையால் பெருக, அவனை அன்புடன் அணைத்து சரணமடையும் தமது தாமரை கைகளால் அனுகிரஹித்தார்.
அவன் அவரை துதித்து பலவாறு பாடி முடித்தவுடன்,
மிகவும் அகமகிழ்ந்த பகவான், அவனை பார்த்து,
அசுர சிரேஷ்டனே, உன் பக்தியால் நாம் அகமகிழ்ந்தோம், உனக்கு இஷ்டமான வரங்களை கேள் என்று சொல்லுகிறார்.
ப்ரஹலாதன் சிறுவனே என்றாலும் வரங்களை கேட்பது பக்தி என்ற ப்ரேமைக்கு எதிரானது என்பதை அறிந்திருந்தான்,
வரம் பெற்றுக்கொள்ளச் சொன்ன பகவானைப் பார்த்து அவன் பேசுகிறான்.
பகவானே, நாங்கள் ஏற்கெனவே விஷய சுகங்களில் ஆசை உள்ளவர்கள், அப்படி இருக்க, தாங்களும் வரம் அளிப்பதாக கூறி, என்னுடைய ஆசையை தூண்டிவிடலாமா? இது தர்மமா?
இந்த சம்சார தாபத்தை கண்டு பயந்து தங்களை சரண்டைந்த இந்த பக்தனை சோதிக்கவே இப்படி கேட்டீர்களா? ப்ரபோ தயாமூர்த்தியான தாங்கள் என்னை காமக்குழியில் தள்ள வேண்டாமே!
ப்ரபோ எவன் ஒருவன் தன் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தங்களை ஆராதிக்கிறானோ அவன் பக்தனே அல்ல, ஒரு வியாபாரியே,
ப்ரபோ நான் தங்கள் பக்தன், ஆசையற்றவன், எனக்கு உமது அருளை தவிர வேறு எதுவுமே வேண்டாம். உலகத்தின் அதிபதியாக இருக்கும் நீங்களும் எதுவுமே வேண்டாதவர். ஆக நமக்குள் என்னதான் இருக்கிறது கொடுக்கவோ அல்லது வாங்கவோ? ஆசை மட்டுமே காரணமாகுமல்லவா ப்ரபோ?
வரமளிப்பதில் சிறந்த உலக ரட்ஷகரே, அப்படி வரம் அளிக்க விரும்பினால், ஒரே ஒரு வார்த்தை மட்டுமே யாசிக்கிறேன்,
எனக்குள் எந்த ஆசைகள் தோன்றினாலும், அவை முறையே இந்திரியங்கள் , மனது, பிராணன், சரீரம், புத்தி, தைரியம், வெட்கம், தர்மம், சத்யம், செல்வம், தேஜஸ் , ஞாபக சக்தி, முதலானவைகளை எல்லாம் அழித்து விடுகின்றனவோ, அப்படிப்பட்ட அந்த ஆசைகள் என் எண்ணத்தில் தோன்றாமலே, வேர் விடாமலே இருக்க வரமளியுங்கள்.
எப்பொழுது இந்த ஆசைகள் எல்லாம் எனக்குள் புகுந்துவிடுகிறதோ, அப்பொழுதே நான் பகவத் நாமத்தை அனுசயிக்க தகுதி இல்லாதவனாகிவிடுகீறேன்.
இதே கேட்ட பகவான் , நீ அன்றோ எனக்கு ஏகாந்த பக்தன் என்று சொல்லி அவனுக்கு ஆசிகள் வழங்கி, அவனை குலம் தழைக்க அரசாளச் சொல்லி புறப்படுகிறான்,
எத்தனை உன்னத சரித்திரம் இந்த ப்ரஹலாத சரித்திரம்!!
No comments:
Post a Comment