இது வேண்டும், அது வேண்டும் என பகவானிடம் கேட்கும் வழக்கம் இந்து மதத்தில் இல்லை.
வைணவ சம்பிரதாயத்தில் ‘சரணாகதி’ தத்துவம் கடைபிடிக்கப் படுகிறது.
பெருமாளே எனக்கு என்ன வேண்டும் என்று உனக்குத் தெரியாதா?
நீயே அதைச் செய் என்பது அதன் அர்த்தம்.
சைவத்தில் ‘வேண்டத்தக்கது அறிவோ நீ; வேண முழுதும் தருவோ நீ’ என்பது தத்துவம்.
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!
திருவாசகம் ...
இறைவா,
எனக்கு வேண்டியது எது என்று உனக்குதான் தெரியும். அதை நான் விரும்பிக் கேட்டால் அப்படியே தந்துவிடுகிறவன் நீ.
பிரமனும் திருமாலும் உன்னுடைய முழு உருவத்தைக் காண விரும்பினார்கள். ஆனால் நீ அவர்களுக்குக் காட்சி தரவில்லை. எளியவனாகிய என்னை விரும்பி வந்து ஆட்கொண்டாய்.
நான் எதை விரும்பவேண்டும், எதைக் கேட்கவேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, சொல். நான் அதையே உன்னிடம் வேண்டுவேன்.
’ம்ஹூம், அதெல்லாம் சரிப்படாது, நீயாக எதையாவது கேள்’ என்கிறாயா?
நீ இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும்? நான் எதைக் கேட்பேன்? அப்படியே நான் கேட்டாலும், அதுவும் உன்னுடைய விருப்பம்தானே?
தாயின் கையைப் பிடித்தபடி சாலையைக் கடக்கும் குழந்தைக்குக் கொஞ்சமும் கவலை இருக்காது.
காரணம் தாய் பாதுகாப்பாக அழைத்துச் செல்வாள் என்பது குழந்தைக்குத் தெரியும்.
இந்த மனோ பாவம்தான் நமக்கும் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment