Wednesday, December 25, 2024

 திருப்பாவை

1. மேன்மை பொருந்திய பாவையால் சொல்லப்பட்டது.

2. பாவைக்காக = நோன்புக்காக சொல்லப்பட்டது.

3. பாவையின் பொருட்டு (தோழியின் பொருட்டு) சொல்லப்பட்டது.

4. பாவையை - பெண்களை அழைத்து சொல்லப்பட்டது.

5. பாவையை அடைய (புருஷ காரார்தம்) சொல்லப்பட்டது

6. பாவை மூலம் (லக்ஷமி மூலம் = நீளாதேவியின் மூலம்) பகவானை அடைய சொல்லப்பட்டது.

7. பாவை = வழி (சரணாகதியைச் சொல்ல ஏற்பட்டது.

8. பாவை = பலத்தை அடைய சொல்லப்பட்டது.

இப்படி பல வகையில் பொருள் கொள்ளலாம்.

திருப்பாவை - அடிவரவில் விசேஷம்:

திருப்பாவையில் உள்ள முப்பது பாசுரங்களுக்கும் அடிவரவு முன்னிட்டு விலக்ஷணமான வேதாந்த விழுப்பொருள் ஒன்று வரைகின்றோம்.

1. மார்கழி வையத்து(ள்) ஓங்கி நிற்கிறது. மார்கசீர்ஷமான ப்ரபத்தி, பூலோகத்தில் சிறந்து விளங்குகிறது.

2. ஆழிமாயனை புள்ளும் கீசு கீசு (க்ருஷ்ண க்ருஷ்ண) என்று அழைக்கின்றது.

3. கீழ்வானம் வெள்ளென்றது. ஆசார்யனை அடைந்தது முதல் மோக்ஷம் அடையும் வரையுள்ள ப்ரபாத காலம் - அறிவுற்றகாலம்.

4. தூமணி (ஜீவன்) நோற்று சுவர்கம் புகும்.

5. கற்றுக் கறவை (ஆசார்யர்) கனைத்தது இளம் கன்றுக்கே. (சிஷ்யர்க்கே).

6. புள்ளின் வாய்க்கீண்டானை, உங்கள் புழைக்கடைத் தோட்டத்து (ஹ்ருதயம்) வாவியுள் காணலாம்.

7. எல்லே (என்ன ஆச்சர்யம்)!

8. நாயகனாய் நின்றவன், அம்பரம் (ஹ்ருதய ஆகாசம்)!

9. உந்து மதகளிற்றன் (யானை போன்றவன்) அவனே குத்து விளக்கு (நிலையான விளக்கு)!

10. முப்பத்து மூவர் அமரர்க்கு முன் செல்ல ஏற்றவன் (எல்லா தேவர்களுக்கும் அரசன்)!

11. (அவனை) அங்கண் மாஞாலத்தரசர் (ஜீவர்கள் தங்களது) மாரிமலை முழைஞ்சில் (ஹ்ருதயத்தில்) அன்று த்யானித்தார்கள்.

12. ஒருத்திமாலே! (நிகரற்ற ஆண்டாளிடத்தில் மோகமடைந்த திருமால்).

13. கூடாரை (பாவங்களை) வெல்லும் சீர் உடையவன் அவன்!

14. கறவைகள் (ஆசார்யர்கள்) பின் சென்று சிற்றஞ்சிறுகாலான (பிரபத்தியைச் செய்து) வங்கக் கடல் கடைந்த மாதவனால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்.tks Nalini gopalan

 ஸ்ரீமத் காஞ்சி மஹாவித்வான் ஜகதாசாரிய ஸிம்மாஸனாதிபதி பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ உ.வே அண்ணங்கராசார்ய ஸ்வாமி ஸாதித்தருளிய


 


*திருப்பாவையும் திவ்யதேசங்களும்*


 


1. மார்கழித்திங்களில் *பரமபத* அநுபவமும்


 


2. வையத்து வாழ்வீர்காளில் *திருப்பாற்கடல்* அநுபவமும்


 


3. ஓங்கி உலகளந்தவில் *திருக்கோவலூர்* அநுபவமும்


 


4. ஆழிமழைக்கண்ணனில் *திருவனந்தபுரத்து* அநுபவமும்


 


5. மாயனை மன்னில் *வடமதுரை* அநுபவமும்


 


6. புள்ளுஞ்சிலம்பினகாணும் *திருவண்வண்டூர்* அநுபவமும்


 


7. கீசுகீசில் *திருவாய்ப்பாடி* அநுபவமும்


 


8. கீழ்வானத்தில் *திருவத்தியூர்* அநுபவமும்


 


9. தூமணிமாடத்தில் *திருக்கடிகை* அநுபவமும்


 


10. நோற்றுச் சுவர்க்கமும் *திருக்காட்கரை* அநுபவமும்


 


11. கற்றுக் கறவையும் *திருமோகூர்* அநுபவமும்


 


12. கனைத்திளங்கன்றும் *சித்ரகூட* அநுபவமும்


 


13. புள்ளிண்வாயும் *திருக்குடந்தை* அநுபவமும்


 


14. உங்கள் புழைக்கடையும் *அழுந்தூர்* அநுபவமும்


 


15. எல்லே இளங்கிளியும் *திருவல்லிக்கேணி* அநுபவமும்


 


16. நாயகனாயும் *திருக்குறுங்குடி* அநுபவமும்


 


17. அம்பரமே தண்ணீரும் *காழிச் சீராமவிண்ணகரமும்* அனுபவமும்


 


18. உந்துமதகளிற்றனும் *திருநறையூர்* அநுபவமும்


 


19. குத்துவிளக்கும் *திருவிடவெந்தை* அநுபவமும்


 


20. முப்பத்து மூவரும் *திருப்பாடாகத்து* அநுபவமும்


 


21. ஏற்ற கலங்களும் *திருக்கண்ணமங்கை திருநாராயணபுர* அநுபவமும்


 


22. அங்கண்மாஞாலமும் *திருமாலிருஞ்சோலை* அநுபவமும்


 


23. மாரிமலைமுழஞ்சும் *திருவரங்கம் பெரிய கோயில்* அநுபவமும்


 


24. அன்று இவ்வுலகமும் *கோவர்தன* அநுபவமும்


 


25. ஒருத்தி மகனும் *திருக்கண்ணபுர* அநுபவமும்


 


26. மாலே மணியும் *ஸ்ரீவில்லிபுத்தூர்* அநுபவமும்


 


27. கூடாரை வெல்லும் *திருவேங்கடப்பதி* அநுபவமும்


 


28. கறவைகளும் *ஸ்ரீ ப்ருந்தாவன* அநுபவமும்


 


29. சிற்றஞ்சிறுகாலையும் *துவராபதி* அநுபவமும்


 


30. வங்கக்கடலும் *ஸ்ரீவில்லிபுத்தூர்* அநுபவமும்


வாழி யதிராஜன்


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 #murugan​ #muruga​ #முருகர்​ #முருகா​ #முருகன்​ #யாமிருக்கபயமேன்​


பதிகம் 1 

சண்முகக் கடவுள் போற்றி

சரவணத் துதித்தாய் போற்றி

கண்மணி முருகா போற்றி

கார்த்திகை பாலா போற்றி

தண்மலர்க் கடப்பமாலை தாங்கிய தோளா போற்றி

விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி போற்றி


பதிகம் 2

முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்

மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்

தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

நம்பியே கைதொழுவேன் நான்.


பதிகம் 3

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்

பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்

கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்

வேலப்பா! செந்தில் வாழ்வே!


பதிகம் 4

அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில்

ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்

'முருகா!' என்று ஓதுவார் முன்.


பதிகம் 5

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த

கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு

தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்

தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.


பதிகம் 6

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்

மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்

வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்

கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.


பதிகம் 7

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி

காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச்

சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.


பதிகம் 8

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா

மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த

பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி

வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.


 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...