Wednesday, December 25, 2024

 #murugan​ #muruga​ #முருகர்​ #முருகா​ #முருகன்​ #யாமிருக்கபயமேன்​


பதிகம் 1 

சண்முகக் கடவுள் போற்றி

சரவணத் துதித்தாய் போற்றி

கண்மணி முருகா போற்றி

கார்த்திகை பாலா போற்றி

தண்மலர்க் கடப்பமாலை தாங்கிய தோளா போற்றி

விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி போற்றி


பதிகம் 2

முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்

மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்

தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

நம்பியே கைதொழுவேன் நான்.


பதிகம் 3

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்

பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்

கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்

வேலப்பா! செந்தில் வாழ்வே!


பதிகம் 4

அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில்

ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்

'முருகா!' என்று ஓதுவார் முன்.


பதிகம் 5

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த

கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு

தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்

தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.


பதிகம் 6

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்

மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்

வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்

கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.


பதிகம் 7

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி

காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச்

சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.


பதிகம் 8

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா

மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த

பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி

வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.


No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...