திருப்பாவை
1. மேன்மை பொருந்திய பாவையால் சொல்லப்பட்டது.
2. பாவைக்காக = நோன்புக்காக சொல்லப்பட்டது.
3. பாவையின் பொருட்டு (தோழியின் பொருட்டு) சொல்லப்பட்டது.
4. பாவையை - பெண்களை அழைத்து சொல்லப்பட்டது.
5. பாவையை அடைய (புருஷ காரார்தம்) சொல்லப்பட்டது
6. பாவை மூலம் (லக்ஷமி மூலம் = நீளாதேவியின் மூலம்) பகவானை அடைய சொல்லப்பட்டது.
7. பாவை = வழி (சரணாகதியைச் சொல்ல ஏற்பட்டது.
8. பாவை = பலத்தை அடைய சொல்லப்பட்டது.
இப்படி பல வகையில் பொருள் கொள்ளலாம்.
திருப்பாவை - அடிவரவில் விசேஷம்:
திருப்பாவையில் உள்ள முப்பது பாசுரங்களுக்கும் அடிவரவு முன்னிட்டு விலக்ஷணமான வேதாந்த விழுப்பொருள் ஒன்று வரைகின்றோம்.
1. மார்கழி வையத்து(ள்) ஓங்கி நிற்கிறது. மார்கசீர்ஷமான ப்ரபத்தி, பூலோகத்தில் சிறந்து விளங்குகிறது.
2. ஆழிமாயனை புள்ளும் கீசு கீசு (க்ருஷ்ண க்ருஷ்ண) என்று அழைக்கின்றது.
3. கீழ்வானம் வெள்ளென்றது. ஆசார்யனை அடைந்தது முதல் மோக்ஷம் அடையும் வரையுள்ள ப்ரபாத காலம் - அறிவுற்றகாலம்.
4. தூமணி (ஜீவன்) நோற்று சுவர்கம் புகும்.
5. கற்றுக் கறவை (ஆசார்யர்) கனைத்தது இளம் கன்றுக்கே. (சிஷ்யர்க்கே).
6. புள்ளின் வாய்க்கீண்டானை, உங்கள் புழைக்கடைத் தோட்டத்து (ஹ்ருதயம்) வாவியுள் காணலாம்.
7. எல்லே (என்ன ஆச்சர்யம்)!
8. நாயகனாய் நின்றவன், அம்பரம் (ஹ்ருதய ஆகாசம்)!
9. உந்து மதகளிற்றன் (யானை போன்றவன்) அவனே குத்து விளக்கு (நிலையான விளக்கு)!
10. முப்பத்து மூவர் அமரர்க்கு முன் செல்ல ஏற்றவன் (எல்லா தேவர்களுக்கும் அரசன்)!
11. (அவனை) அங்கண் மாஞாலத்தரசர் (ஜீவர்கள் தங்களது) மாரிமலை முழைஞ்சில் (ஹ்ருதயத்தில்) அன்று த்யானித்தார்கள்.
12. ஒருத்திமாலே! (நிகரற்ற ஆண்டாளிடத்தில் மோகமடைந்த திருமால்).
13. கூடாரை (பாவங்களை) வெல்லும் சீர் உடையவன் அவன்!
14. கறவைகள் (ஆசார்யர்கள்) பின் சென்று சிற்றஞ்சிறுகாலான (பிரபத்தியைச் செய்து) வங்கக் கடல் கடைந்த மாதவனால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்.tks Nalini gopalan
No comments:
Post a Comment