Friday, December 1, 2023

🌹திருமகளின் பன்னிரு திருநாமங்கள்.....!!!

 🌹திருமகளின் பன்னிரு திருநாமங்கள்.....!!!

1. ஶ்ரீ: - ஶ்ரீரங்கநாச்சியார் - ஶ்ரீரங்கம்

பன்னிரு திருநாமங்களில் முதல்திருநாமம் ஆயிற்று.

 ஜீவர்களுக்கும் பரமனுக்கும் இடையே ஒரு பாலமாக பிராட்டி செய்யும் இவ்வுதவியை விளக்குவதே *ஸ்ரீ:* என்னும் திருநாமம். வடமொழியில் இப்பெயருக்கு ஆறு பொருள்கள் உண்டு.


ஶ்ரீயதே_ - ஜீவர்கள் அனைவராலும் தஞ்சமாக பற்றப்படுகிறாள்.

ச்ரயதே_ - தான் நாராயணனை சரணமாகப் பற்றுகிறாள்.

ச்ருணோதி_ - தன்னை அண்டிய ஜீவர்கள் தங்கள் குறைகளையும் பாபங்களையும் விண்ணப்பிக்கும்போது காது கொடுத்துக் கேட்கிறாள்.

ச்ராவயதி - ஜீவர்களுக்காகப் பரிந்து பேசி அவர்களது வேண்டுகோளை பகவான் காதுகொடுத்துக் கேட்கும்படி செய்கிறாள்.


ச்ருணாதி - பெருமானை அடையத் தடங்கலாக இருக்கும் பக்தர்களின் பாவங்களை தன் அருளால் நீக்குகிறாள்.

ஶ்ரீணாதி - ஜீவர்களைப் பெருமானோடு சேர்த்து வைக்கிறாள்.


2. அம்ருதோத்பவா - ஶ்ரீஅம்ருதவல்லி தாயார் - சோளிங்கர்

இரண்டாவது திருநாமம் ஆன இதற்கு அமுதத்தோடு பாற்கடலில் தோன்றியவள் என்பது பொருள்.


3. கமலா - ஶ்ரீகமலவல்லி தாயார் - உறையூர்.

கமலா என்பதே ஸ்ரீ மகாலட்சுமியின் மூன்றாவது திருநாமம். "க" என்றால் பரம்பொருள்."ம" என்றால் ஜீவன். "லா" என்றால் கொடுத்து வாங்குதல். ஜீவனை பரமாத்மாவுக்கு கொடுத்து பரமனை ஜீவனுக்கு வாங்கிக் கொடுப்பதால் கமலா என்று அவளுக்கு திருநாமம்.


 4. சந்த்ரசோபனா ஶ்ரீபரிமளரங்க நாயகி தாயார் - திருஇந்தளூர்

"சந்த்ரஷோபனா" என்பது ஸ்ரீமகாலட்சுமியின் நான்காவது திருநாமம் "நிலவை மிஞ்சும் குளிர்ந்த ஒளியும், பேரெழில் கொஞ்சும் இன்முகமும் கொண்டவள்' அல்லது 'நிலவுக்கே ஒளி ஊட்டுபவள்" என்பது இதன் பொருள்.


5. விஷ்ணுபத்னீ - ஶ்ரீவஞ்சுளவல்லி தாயார் - திருநறையூர்

ஸ்ரீ மகாலட்சுமி ஐந்தாவது திருநாமம் 'விஷ்ணு பத்னீ 'என்பது. அதாவது "எங்கும் நிறைந்த இறைவனது அறத்திற்கு உறுதுணையானவள்" என்பது இதன் பொருள்.


6. வைஷ்ணவீ - ஶ்ரீயதுகிரிநாச்சியார் - மேல்கோட்டை

ஸ்ரீ மகாலட்சுமியின் ஆறாவது திருநாமம் "வைஷ்ணவி ",அதாவது விஷ்ணுவை பின்தொடர்பவள் என்பது பொருள்.


7. வரரோஹா - ஶ்ரீவரமங்கை தாயார் - வானமாமலை

பிராட்டியின் ஏழாவது திருநாமம் "வராரோஹா". இதற்கு "உயர்ந்த இடத்தில் ஏறி அமர்ந்து அருள்பவள், என்று பொருள். பாற்கடலை கடைந்தபோது பெருமாளின் திருமார்பில் ஏறி அமர்ந்தாள் பிராட்டி!. 


8. ஹரிவல்லபா - ஶ்ரீஆண்டாள் - ஶ்ரீவில்லிபுத்தூர்

பெருமானின் பேரன்புக்கு இலக்கானவள். 


9. சார்ங்கிணீ - ஶ்ரீகோமளவல்லி தாயார் - திருக்குடந்தை

ஸ்ரீமகாலஷ்மி ஒன்பதாவது திருநாமம்"ஸார்ங்கிணீ" அதாவது, வில் வீரனின் வீர பத்னி. 


10. தேவதேவிகா - ஸ்ரீ பெருந்தேவி தாயார் - காஞ்சிபுரம்

தேவனான ஸ்ரீராமனின் பெருந்தேவியான சீதை.


11. மஹாலக்ஷ்மி - ஸ்ரீ பத்மாவதி - திருப்பதி

எல்லா நன்மைகளையும் கடாக்ஷிப்பவள்.


12. லோகஸுந்தரீ - ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார் - திருநாகை

உயர் பண்புகள் எனும் தன் அழகால் பெருமானுக்கு பெருமை சேர்த்து உலகினரை உய்விப்பவள்🌹🙏🙏🙏🌹

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...