Tuesday, November 21, 2023

நான்கு_செயல்களை மனிதன் தினமும் தவறாமல் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்

 #நான்கு_செயல்களை மனிதன் தினமும் தவறாமல் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.


• 1. துயிலெழும்போது ஹரி ஹரி என்று எழுந்திருக்கவேண்டும் ('உத்திஷ்ட சிந்தய ஹரிம்').


• 2. குளிக்கும்போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும் ('வ்ரஜன் சிந்தய கேசவம்').


• 3. உண்ணும்போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ண வேண்டும் ('புஞ்சன் சிந்தய கோவிந்தம்'). 


• 4. தூங்க போகும் முன் மாதவனை நினைக்க வேண்டும் ('ஸ்வபன் சிந்தய மாதவம்') . 


இந்த நான்கு செயல்களையும் செய்வதால் எவருக்கும் எந்தவிதமான கஷ்டமோ நஷ்டமோ கிடையாது. மாறாக அமைதியான வாழ்க்கை நிச்சயமாக கிட்டும். 


இந்த நான்கு செயல்களையும் மக்கள் முந்தைய காலத்தில் தவறாமல் செய்து வந்தனர் என்பதை விளக்குமாப்போல ஆண்டாள் நாச்சியார் கோதையின் கீதை (திருப்பாவை பாசுரங்கள்) திகழ்கிறது.


1. துயில் எழும்போது ஹரி ஹரி என்பது புள்ளும் சிலம்பின்காண் என்கிற பாசுரத்தில் உள்ளத்துக்கொண்டு ''முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ'' (பாசுரம் - 6) என்கிறார்.


2. பெண்கள் எல்லாம் வந்து நாட்காலே நீராடி வந்து விட்டார்கள். தற்சமயம் தயிர் கடைந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கேசவனைப் பாடுதல் உன்காதில் விழவில்லையா?

"கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?" (பாசுரம் - 7).


3. பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார கூடியிருந்து உண்பவர்கள் கூடாரை வெல்பவராகிய கோவிந்தனைப் பாடுகிறார்கள் (பாசுரம் - 27).


4. நன்கு தூங்க வேண்டுமானால் மாதவன் பெயரைச் சொல்லி இருப்பாள் போல் இருக்கிறது இந்தப் பெண். ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ, மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ (பாசுரம் - 9).


 மனிதன் தினசரி தவறாமல் செய்ய வேண்டிய செயல்களை, கோதை நாச்சியார் தனது திருப்பாவை பாசுரங்களில், மேற்கண்டவாறு

சுட்டிக் காட்டியுள்ளதை வைணவப் பெரியோர்கள் நமக்கு உணர்த்துகின்றனர்.


இவ்வாறு 'ஸ்ரீமத் பகவத் கீதை' சாஸ்திரத்திற்கு இணையான பெருமை இந்த பகவதி கீதைக்கும் உண்டென்பதை இக்கட்டுரைத் தொடரின் இறுதியில் நாம் உணரலாம்.


பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ் ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு என்று வேதப்பிரான் பட்டர் ஸ்வாமிகள் என்னும் வைணவ ஆச்சார்யர் அருளுகிறார். 


எவரையேனும் எதற்கும் ப்ரயோஜனம் இல்லாதவர்கள் என்று கருதினால் அவர்களை 'பூமிக்கு பாரம்' என்று திட்டுவார்கள். ஆனால் உண்மையில் பூமிக்கு பாரம் ஆனவர்கள் யார் என்பதை குறிப்பிடும் போது கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரே ஆவார். 


கோதை ஆண்டாள் நாச்சியார் பாடிக்கொடுத்த திருப்பாவை ஐந்தும் ஐந்தும் (5x5+5=30) அதாவது 30 பாடல்களையும் அறியாத மானிடர்களைத்தான் 'பூமிக்கு பாரம்' என்று கணக்கிட்டுள்ளார். 


நாம் எவரும் பூமிக்கு பாரமாக இருக்க விரும்ப மாட்டோம். ஆகவே கோதையின் கீதையை பின்பற்றிச் செல்லுவோம்....


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் !

Wednesday, November 8, 2023

ஸ்ரீ ராமரின் 68 தலைமுறை முன்னோர்களை தெரிந்து கொள்வோம் !!! 1. பிரம்மாவின் மகன் -மரீசீ 2. மரீசீயின் மகன்- கஷ்யபர் 3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான் 4. விவஸ்வானின் மகன்- மனு 5. மனுவின் மகன் -இஷ்வாகு 6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி 7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா 8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா 9. அணரன்யாவின் மகன் -ப்ருது 10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா 11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா 12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1 13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட் 14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா 15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா 16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா 17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத் 18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா 19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப் 20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா 21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா 22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத் 23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2 24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா 25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா 26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா 27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு 28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத் 29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2 30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா 31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2 32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான் 33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா 34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா 35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு 36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன் 37. ஹரிசந்திரனின் மகன் ரோஹிதாஷ்வா 38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித் 39. ஹரித்தின் மகன் -சன்சு 40. சன்சுவின் மகன் -விஜய் 41. விஜயின் மகன் -ருருக் 42. ருருக்கின் மகன் -வ்ருகா 43. வ்ருகாவின் மகன் -பாஹு 44. பாஹுவின் மகன்- சாஹாரா 45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன் 46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன் 47. அன்ஷுமனின் மகன் -திலீபன் 48. திலீபனின் மகன்- பகீரதன் 49. பகீரதனின் மகன் -ஷ்ருத் 50. ஷ்ருத்தின் மகன் -நபக் 51. நபக்கின் மகன்- அம்பரீஷ் 52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப் 53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு 54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா 55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா 56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ் 57. ஸூதஸின் மகன் -மித்ரஷா 58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2 59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3 60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா 61. நிக்னாவின் மகன்- ரகு 62. ரகுவின் மகன் -துலிது 63. துலிதுவின் மகன் - கட்வாங் திலீபன் 64. கட்வாங் திலீபனின் மகன் - ரகு2 65. ரகுவின் மகன் - அஜன் 66. அஜனின் மகன் - தசரதன் 67. தசரதனின் மகன் 68. ஸ்ரீ ரகு ராமன் இப்படி 68 பரம்பரை கொண்டது ஸ்ரீ ராமரின் தலைமுறை ஸ்ரீ ராமரின் குல வம்சத்தை பற்றி அறிவதே பெரும் புண்ணியம்!!! ஜெய் ஸ்ரீ ராம்.🚩👣🐚


 

Depiction of 2x7 = 14 Worlds as per Sri Vishnu PuraNam. ஸ் விஷ்ணு புராணத்தில் சொன்னபடி ஈரேழு பதினாலு லோகங்கள்....

 


Tuesday, November 7, 2023

 *குலதெய்வங்கள் என்றால் என்ன?*

*விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது?*

*அவர்களின் பெருமை என்ன?*

*அனைவரும் தெரிந்து கொள்வோம்.!*


_*நமது குலதெய்வம் :-*_


குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். 

குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.


குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். 

சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.


குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். 


அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.


குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது? 

நம் முன்னோர்கள்… அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.


இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை… இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.


இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்… இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று… அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!…


_*விஞ்ஞான முறையில் யோசித்தால்…*_


ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே… ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். 

இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.


தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. 

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்… இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்… பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.


ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. 

பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. 

அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது…


வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், தாத்தா, மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து… இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு… தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.


இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்.


பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர். பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

என விஞ்ஞானிகள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.!


பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். 

பிறந்த வீட்டில் ஒரு குல தெய்வம். புகுந்த வீட்டில் ஒரு குல தெய்வம்.


திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.


பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.


இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.


ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.


குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.


எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி 

(குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.

அவரவர் வசதிக்கேற்ப குலதெய்வத்தின் போட்டோவை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.!


அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். ஒவ்வொருவரின் கண் கண்ட முதல் குலதெய்வம் பெற்ற தாயும், தந்தையும் தான்.


“தாயிற் சிறந்த கோவிலுமில்லை. 

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.”


அனுதினமும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்வோம் வாழ்வில் முன்னேற்ற அடைவோம்.!

எனவே, நம் முதல் குலதெய்வமான பெற்றோர்களை போற்றுங்கள்…


_*நமது முன்னோர்கள் உருவாக்கித் தந்த மிகவும் புனிதமான குலதெய்வத்தின் சிறப்புகளை...*_

_*வருகின்ற இளைய தலைமுறைக்கும் முக்கியமாக நம் குழந்தைகளுக்கும் எடுத்து சொல்லுங்கள்....


ஓம் தீர்க்க நேத்ராய வித்மஹே கேள ஹஸ்தாய தீமஹி தந்நோ வீரா ப்ரசோதயாத்


*

Monday, November 6, 2023

 திருமணத்தடை மட்டுமின்றி, புத்திசாலியான குழந்தைகள் பிறக்கவும், கணவன் மனைவி ஒற்றுமைக்கும் ஆண்டாள் அருளிய வாரணமாயிரத்தை பாடுங்கள்.


மார்கழியில் இதைத் துவங்குவது மிகவும் விசேஷம்.ஆண்டாள் நாச்சியார் தனது திருப்பாவை பாடல்களிலும் சரி, நாச்சியார் திருமொழி பதிகங்களிலும் சரி பெருமாளை அடைவதற்கு வழி சொல்கிறார். இவ்விரு நூல்களில் உள்ள பாசுரங்களையும் திருமணமாகாதவர்கள் தொடர்ந்து படித்து வந்தால் விரைவில் திருமணப் பேறு வாய்க்கும்.


அதிலும் குறிப்பாக,


"வாரண மாயிரம் சூழவ லம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்"


என தொடங்கும் கோதை ஆண்டாள் நாச்சியார் அருளிய நாச்சியார் திருமொழி பதிகத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை தினமும் மனம் மகிழ பாடி, ஶ்ரீ ஆண்டாளை வரும் மார்கழி மாதத்தில் தினமும் அவர் ஜாதகம் எழுதி பூஜை அறையில் வைத்து மலர் தூவி பூஜித்து , பிரார்த்தனை செய்ய, திருமண பாக்கியம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.

Wednesday, November 1, 2023

Mahalakshmi Sthuti

 தினமும் பூஜை அறையில் மனமுருகி 11 முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.

(பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது)

மகாலட்சுமி_ஸ்துதி

1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:

நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:

நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:


10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:

க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:

விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:

நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:

நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:

நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை

ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:

நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம

Andal Adi Pooram Song



 

Kalyanam Song



 

Varalakshmi Song



 

Thirupugazh Song

 


 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...