திருமணத்தடை மட்டுமின்றி, புத்திசாலியான குழந்தைகள் பிறக்கவும், கணவன் மனைவி ஒற்றுமைக்கும் ஆண்டாள் அருளிய வாரணமாயிரத்தை பாடுங்கள்.
மார்கழியில் இதைத் துவங்குவது மிகவும் விசேஷம்.ஆண்டாள் நாச்சியார் தனது திருப்பாவை பாடல்களிலும் சரி, நாச்சியார் திருமொழி பதிகங்களிலும் சரி பெருமாளை அடைவதற்கு வழி சொல்கிறார். இவ்விரு நூல்களில் உள்ள பாசுரங்களையும் திருமணமாகாதவர்கள் தொடர்ந்து படித்து வந்தால் விரைவில் திருமணப் பேறு வாய்க்கும்.
அதிலும் குறிப்பாக,
"வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்"
என தொடங்கும் கோதை ஆண்டாள் நாச்சியார் அருளிய நாச்சியார் திருமொழி பதிகத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை தினமும் மனம் மகிழ பாடி, ஶ்ரீ ஆண்டாளை வரும் மார்கழி மாதத்தில் தினமும் அவர் ஜாதகம் எழுதி பூஜை அறையில் வைத்து மலர் தூவி பூஜித்து , பிரார்த்தனை செய்ய, திருமண பாக்கியம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment