Sunday, October 29, 2023

 1♥. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!

அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..


2♥. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!

அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....


3.♥தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!

அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..!


4.♥தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!

ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?


5♥.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!

அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!


6.♥ தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!

அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு பாடமாக எண்ணி பயன் அடைந்து கொள்ளுங்கள்..


7♥ தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக் கூடியவர்...


8♥ மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...


9♥ முகம் தெரியாத யாருக்கோ மரியாதை செய்கிறோம்.உன்னை கொஞ்சி வளர்த்த தந்தைக்கு முன்பு மரியாதை செய்......


10♥ அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்.

தாய் தன் பிள்ளை பத்திரமாக இருக்கணும்னு மார்பில் அனைத்துக் கொள்வாள்.

ஆனால் தந்தைதான் பார்க்காத உலகத்தையும் என் பிள்ளை பார்க்க வேண்டும் என்று தன் தோழின் மேல் தூக்கி நான் பார்க்காத உலகத்தை நீ பார் என்பவனே தந்தை.


♥அவர் உன்னுடைய அருகில்

இருக்கும்போது பயன் படுத்துக் கொள்.

தந்தையை போல் உண்மையான நண்பன் இந்த உலகத்தில் யாரும் இல்லை.......

ஆதிசங்கரர் முதன் முதலில் பிக்ஷை எடுத்த வீடு.. கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி பொழிந்த வீடு

 


Wednesday, October 25, 2023

வீட்டின் வாசலில் கோலமில்லை! வாசல் தெளிக்கவில்லை! விளக்கு எரியவில்லை! பூஜை விளக்கில் ஒரு பூ கூட இல்லை! வீட்டு முற்றத்தில் துளசி இல்லை! ஆனால் மங்களத்தை மட்டும் எதிர்பார்க்கின்றனர்...!


வாசல் தெளித்து கோலமிடுவது மிக முக்கியமானது! ஒரு வீட்டுற்கு வரும் மருமகள் பற்றி அறிந்து கொள்ள அவள் கோலமிடுவதை ஒரு குறிப்பாக கொண்டனர் பெரியோர்கள்..அவள் வீட்டின் முகப்பில் இடும் கோலம் அந்த வம்சத்தின் வளர்வை குறிக்க வல்லது..


திங்களும் வியாழனும் அவள் விளக்கை துலக்கத்துலக்க அந்த வம்சமே துலங்கும் என்பது பெரியோர் வாக்கு! 


காலையில் பூஜை அறையில் சுடர்விடும் தீபமும் கமழும் வாசனாதி தூபமும் ஒரு நாளை அற்புதமாக்கிவிடும்! தலைவன் அந்த பூஜை மேடையில் நெற்றிக்கு இடும் திலகம் அவனது வெற்றித்திலகமாக கட்டாயம் மாறும்..!


ஒரு சுமங்கலி வாசல் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி புஷ்பம் சாற்றி செய்யும் இல்ல வழிபாடு ஆயிரம் ஆலய வழிபாடுகளுக்கு சமானமானது என்பது என் கருத்து...வீட்டில் தெய்வத்திற்கு இடம் தந்த முன்னோர் கலாச்சாரம் எங்கே?!


வீட்டின் hall பகுதியில் பூஜை மேடை அமைப்பது எங்கள் ஊர் வழக்கம்.. இன்றோ ஒரு சுற்றுப்பெட்டிக்குள் விளக்கை அடைத்து வைக்கிறோம்... எங்கே நம் பூர்வ வழிபாட்டு முறைகள்..?!


வாசலில் கோலம் போட்டால் லட்சுமி கடாட்சம். பிள்ளை நெற்றியில் பக்தியின் சாயலில் நின்ற திருநீறு அவனை அபாயத்திலிருந்து ரட்சித்துவிடும்! 


நிற்க


நீங்கள் பணமே கொடுத்தாலும் நல்ல திருநீறும், நல்ல குங்குமமும், நல்ல சந்தனமும் கிடைப்பதில்லை.., 


பஸ்மஸ்னாநம் பவித்ரம்" என விபூதி இடுவது புனிதம் என்றனர்


குங்குமம் மங்களத்தின் அடையளம்..,


வைராக்யேன சந்தன" என சந்தனம் இடுவது வைராக்கியம் தர வல்லது என முன்னோர் சொல்லி உள்ளனர்...


இவற்றின் பயன்களை அறியாமல் நாம் இருத்தலாகாது...

Thursday, October 19, 2023


 

 ரங்கனுக்கு திருவடி அழகு


வரதனுக்கு கடுக்கன் அழகு


திருவேங்டவனுக்கு சொருபம் அழகு


திருநாரயணனுக்கு வைர முடி அழகு


விட்டலுக்கு திரு சூரணம் அழகு


ஆரா அமுதனுக்கு அழகோ அழகு


ஒப்பிலா அப்பனுக்கு அபயம் அழகு


பார்த்த சாரதிக்கு திருமுகம் அழகு


ஜகந்நாதனுக்கு உருண்டை கண்கள் அழகு


குருவாயூரப்பனுக்கு கௌபீனம் அழகு


உடுப்பி நவநீதனுக்கு மத்து அழகு


ரெங்கமன்னாருக்கு ஆண்டாள் அழகு 


ஆமருவியப்பனுக்கு‌ கருணை அழகு


ராஜகோபாலனுக்கு எத்தனை அழகு


அப்பப்பா சொல்ல இயலா அழகு


நாமமே பலம் நாமமே சாதனம்


 பாண்டுரங்க ஹரி

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...