Sunday, October 29, 2023

 1♥. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!

அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..


2♥. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!

அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....


3.♥தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!

அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..!


4.♥தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!

ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?


5♥.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!

அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!


6.♥ தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!

அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு பாடமாக எண்ணி பயன் அடைந்து கொள்ளுங்கள்..


7♥ தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக் கூடியவர்...


8♥ மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...


9♥ முகம் தெரியாத யாருக்கோ மரியாதை செய்கிறோம்.உன்னை கொஞ்சி வளர்த்த தந்தைக்கு முன்பு மரியாதை செய்......


10♥ அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்.

தாய் தன் பிள்ளை பத்திரமாக இருக்கணும்னு மார்பில் அனைத்துக் கொள்வாள்.

ஆனால் தந்தைதான் பார்க்காத உலகத்தையும் என் பிள்ளை பார்க்க வேண்டும் என்று தன் தோழின் மேல் தூக்கி நான் பார்க்காத உலகத்தை நீ பார் என்பவனே தந்தை.


♥அவர் உன்னுடைய அருகில்

இருக்கும்போது பயன் படுத்துக் கொள்.

தந்தையை போல் உண்மையான நண்பன் இந்த உலகத்தில் யாரும் இல்லை.......

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...