வீட்டில் விளக்கேற்றுவதில் உள்ள, விஷேசங்கள் என்னென்ன?
பூஜையறையில் உள்ள தீப விளக்கு என்பது மகாலட்சுமியின் அம்சம்.
எந்த ஒரு வீட்டிலும் , பூஜையறை தீப விளக்கு அணையாமல் பிரகாசித்துக் கொண்டே இருப்பது சிறப்பு.
முடியாவிட்டால் ,பூஜையறையில் சிறிய ஜீரோ வாட்ஸ் பல்பாவது எரிந்து கொண்டிருக்க வேண்டும்.
விளக்கு இருளை போக்கி ஒளியை தரும்.
அதிகாலை விடியலான பிரம்ம முகூர்த்தத்திலும், அந்திசாயும் மாலை நேரமான கோதூளி லக்கனத்திலும் , வீட்டில் விளக்கு ஏற்றி கடவுளை வழிபட வேண்டும்.
( கோதூளி லக்னம் என்பது மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடுகள் வீடு திரும்பும் காலம். (5 .45 to 6. 15)
பசுக்கள் காமதேனுவின் அம்சம் .காமதேனு 16 வகை செல்வங்களுக்கும் அதிபதி. பசுவின் வாலில் முப்பது முக்கோடி தேவர்களும் இருப்பதாக ஐதீகம்.)
மிகப்பெரிய ஒளியான சூரியன் மறையும் காலகட்டங்களிலும் ,சூரியன் உதயமாவதற்கு முன்னால் உள்ள நேரத்திலும், வீட்டில் கண்டிப்பாக இருளை நீக்குவதற்காக தீபமேற்றி ஆகவேண்டும்.
வெளிச்சமும் லட்சுமியே.
பெண்கள், லட்சுமி தேவியின் அம்சம் என்பதால், திருமணமான பெண்கள் காலை, மாலை இரு வேளையிலும் குளித்துவிட்டு, வீட்டில் விளக்கேற்றி வர, லட்சுமி கடாட்சம் வீட்டில் நீங்காது தங்கும்.
பூப்பெய்திய பெண்கள் விளக்கு ஏற்றி வர ,நல்ல கணவர் அமைவார்.
பிரம்ம முகூர்த்தத்தில் விழித்தெழிந்து, குளித்து , உங்கள் குல தெய்வத்தையும், உங்களுடைய இஷ்ட தெய்வம், லட்சுமி தேவியையும் பூஜித்து வர ,வீட்டில் உள்ள பீடைகள் நீங்கும்.
மாதங்களில் நான் மார்கழி என கண்ணனே கூறியிருப்பதால், கண்ணனின் மனைவியான லட்சுமி தேவியையும் ,பெருமாளையும் விளக்கேற்றி வழிபட்டு வர விக்னங்கள் அனைத்தும் நீங்கும்.
No comments:
Post a Comment