Monday, April 24, 2023

 









 


 


 


 


பிரச்சனைக்கு தீர்வு தரும் குலதெய்வ பரிகாரம்

 குடும்ப கஷ்டத்திற்கு தீர்வு தர குல தெய்வமே நேரில் இறங்கி, நம்முடன் துணைக்கு வர குலதெய்வத்தை நினைத்து இந்த ஒரு வரியை எழுதினால் போதும்.


சில சமயம் திக்கு தெரியாமல் எக்கச்சக்கமான பிரச்சனையில் சிக்கித் தவிப்போம். எந்தப் பிரச்சனைக்கு எந்த முடிவு எடுப்பது என்று தெரியாமல் மனதில் ஒரே குழப்பமாக இருக்கும். திக்கு தெரியாதவர்களுக்கு தெய்வம் தானே துணையாக இருக்க முடியும். அதிலும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக்கூடிய குலதெய்வத்தை மனதில் நினைத்து இந்த ஒரு வரியை எழுதினால் போதும். பிரச்சனைகளுக்கும், குழப்பத்திற்கும் ஒரு தீர்வு தர அந்த குலதெய்வம் உங்களுடன் துணையாக வந்து நிற்கும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒரு வரி மந்திரத்திரம் என்ன, ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை பார்க்கலாம்.


பிரச்சனைக்கு தீர்வு தரும் 

குலதெய்வ பரிகாரம்:


பிரச்சனையில் சிக்கி தவிக்கும் போது கண்ணை மூடிக்கொண்டு இந்த பரிகாரத்தை யோசிக்காமல் செய்து விடுங்கள். கண் முன்னே குலதெய்வம் மனித ரூபத்தில் வந்து நிற்கும். முதலில் பூஜை அறை, வீடு எல்லாவற்றையும் சுத்தம் செய்து விடுங்கள். குலதெய்வத்தின் திருவுருவப்படத்திற்கு முன்பு மண் அகலில் விளக்கு ஒன்று ஏற்றி வைத்து விடுங்கள். வாசனை நிறைந்த சாம்பிராணி தூபம் போட்டுக் கொள்ளுங்கள். புதியதாக நோட்டுப் புத்தகத்தை வாங்கிக் கொள்ளுங்கள். வரி உள்ள நோட் புக், வரி இல்லாத நோட்டு அது உங்களுடைய விருப்பம். நீல நிற பேனாவில் உங்களுடைய குல தெய்வத்தின் பெயரை அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுத வேண்டும். எத்தனை முறை எழுதுவீங்களோ அது உங்களுடைய விருப்பம்.


உதாரணத்திற்கு மாரியம்மன் உங்கள் குலதெய்வமாக இருந்தால் ‘ஓம் மாரியம்மன் துணை’ என்று எழுத வேண்டும். முனீஸ்வரர் என்றால் ‘ஓம் முனிஸ்வரரே துணை’ என்று எழுத வேண்டும். இப்படி அந்த நோட்டுப் புத்தகத்தில் தினமும் உங்க குலதெய்வத்தின் பெயரை எழுதி, அவரே துணை என்று கூப்பிட பிரச்சனைகளுக்கு தீர்வு தர, குழப்பங்களுக்கு விடிவு காலம் பிறக்க அந்த குலதெய்வம் ஒரு வழியை காட்டிக் கொடுக்கும்.


தினமும் காலையில் நேரமில்லை என்றால், மாலை நேரத்தில் எழுதுங்கள். மாலையில் நேரமில்லை என்றால் காலையில் எழுதுங்கள். குறைந்தது 11 முறை எழுதினாலும் தவறு கிடையாது. அந்த நோட்டுப் புத்தகம் முழுக்க, தினமும் குலதெய்வத்தை துணைக்கு அழைத்து இந்த ஒரு வரியை எழுதி விடுங்கள். குலதெய்வ கோவிலுக்கு எப்போது நீங்க போறீங்களோ, அப்போது அந்த நோட்டு புத்தகத்தை கொண்டு போய் குலதெய்வத்தின் கோவிலில் வைத்து விட்டு வர வேண்டும் அவ்வளவு தான்.


தீராத பிரச்சனைக்கும் தீர்வு தர இந்த பரிகாரத்தை செய்யலாம். குடும்பம் எந்த குழப்பத்திலும் சிக்கிக் கொள்ளக்கூடாது. குடும்பம் நிறைவான சந்தோஷத்தில் இருக்க வேண்டும். துணையாக குலதெய்வத்தை அழைத்து வீட்டில் அமர வைக்க வேண்டும் என்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம். குடும்பம் சுபிட்சம் பெறும். குடும்பத்திற்கு எதிர்பாராத ஆபத்துக்களை வரவிடாமல் அந்த குலதெய்வம் தடுக்கும்.


குலதெய்வத்தின் நாமத்தை எழுதுவதில் எவ்வளவு அற்புதம் சக்தி உள்ளது என்பதை பரிகாரத்தை செய்பவர்கள் மட்டும் தான் உணர முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன எளிமையான பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் நற்பவி.





 

வீட்டில் விளக்கேற்றுவதில் உள்ள, விஷேசங்கள் என்னென்ன?


 பூஜையறையில் உள்ள தீப விளக்கு என்பது மகாலட்சுமியின் அம்சம்.


 எந்த ஒரு வீட்டிலும் , பூஜையறை தீப விளக்கு அணையாமல் பிரகாசித்துக் கொண்டே இருப்பது சிறப்பு.


 முடியாவிட்டால் ,பூஜையறையில் சிறிய ஜீரோ வாட்ஸ் பல்பாவது எரிந்து கொண்டிருக்க வேண்டும்.


 விளக்கு இருளை போக்கி ஒளியை தரும்.


 அதிகாலை விடியலான பிரம்ம முகூர்த்தத்திலும், அந்திசாயும் மாலை நேரமான கோதூளி லக்கனத்திலும் , வீட்டில் விளக்கு ஏற்றி கடவுளை வழிபட வேண்டும்.


( கோதூளி லக்னம் என்பது மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடுகள் வீடு திரும்பும் காலம். (5 .45 to 6. 15)


 பசுக்கள் காமதேனுவின் அம்சம் .காமதேனு 16 வகை செல்வங்களுக்கும் அதிபதி. பசுவின் வாலில் முப்பது முக்கோடி தேவர்களும் இருப்பதாக ஐதீகம்.)


 மிகப்பெரிய ஒளியான சூரியன் மறையும் காலகட்டங்களிலும் ,சூரியன் உதயமாவதற்கு முன்னால் உள்ள நேரத்திலும், வீட்டில் கண்டிப்பாக இருளை நீக்குவதற்காக தீபமேற்றி ஆகவேண்டும்.


வெளிச்சமும் லட்சுமியே.


 பெண்கள், லட்சுமி தேவியின் அம்சம் என்பதால், திருமணமான பெண்கள் காலை, மாலை இரு வேளையிலும் குளித்துவிட்டு, வீட்டில் விளக்கேற்றி வர, லட்சுமி கடாட்சம் வீட்டில் நீங்காது தங்கும்.


 பூப்பெய்திய பெண்கள் விளக்கு ஏற்றி வர ,நல்ல கணவர் அமைவார்.


 பிரம்ம முகூர்த்தத்தில் விழித்தெழிந்து, குளித்து , உங்கள் குல தெய்வத்தையும், உங்களுடைய இஷ்ட தெய்வம், லட்சுமி தேவியையும் பூஜித்து வர ,வீட்டில் உள்ள பீடைகள் நீங்கும்.


 மாதங்களில் நான் மார்கழி என கண்ணனே கூறியிருப்பதால், கண்ணனின் மனைவியான லட்சுமி தேவியையும் ,பெருமாளையும் விளக்கேற்றி வழிபட்டு வர விக்னங்கள் அனைத்தும் நீங்கும்.

 1.நின்றால் வேங்டம் 


ஒரு நொடி பொழுதேனும் திருமலையில் நின்று விடு


2.கிடந்தால் ரெங்கமாம் 


அரங்கநாதனை ஒரு நொடியேனும் கிடந்து வலம் வந்து விடு


3.அமர்ந்தால் கச்சியாம் 


கச்சி மாநகரில் ஒரு நொடியேனும் அமர்ந்து இருந்து வரதனை அனுபவி


4.விழுந்தால் கோட்டையாம் 


மேல் கோட்டை நாராயணை ஒரு நொடியேனும் விழுந்து நமஸ்கரி


5.தொழுதால் அமுதமாம் 


குடந்தை சாரங்கபாணியை ஒரு நொடி பொழுதேனும் வணங்கி விடு


6.அழுதால் கடிகையாம் 


திருகடிகை அக்கார கனியை நினைந்து ஆனந்த கண்ணீரில் நனை ஒரு நொடியேனும்


7.நினைந்தால் பூரியாம்


பூரி ஜெகன் நாதனை ஒரு நொடியேனும் நினைந்து விடு


8.நடந்தால் துவாரையாம்


துவாரக புரியில் ஒரு நொடியேனும் நடந்து செல்


9.இருந்தால் குருவாயூராம்

 

குருவாயூரில் ஒரு நொடியேனும் தங்கி விடு


10.இறந்தால் பத்ம நாபமாம்


இறந்து விட்டால்‌ அனந்த புரத்தில் இறந்து விடு


11.அலைந்தால் உடுப்பி யாம்

பேய்போல் அலைந்தாலும் உடுப்பியில் அலை


12.சேர்ந்தால் பாண்டு ரங்க மாம் 


சேர்ந்தால் பாண்டு ரங்கன் திருவடியை சேர்ந்து விடு மனமே


நாமமே பலம் நாமமே சாதனம்


ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி



 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...