Friday, March 11, 2022

 பிள்ளையார் சுழி போட்டு செயல்

எதையும் தொடங்கு!
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
பிள்ளையார் சுழி போட்டு செயல்
எதையும் தொடங்கு!

அழியாத பெருஞ்செல்வம் அவனே!
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே!
பிள்ளையார் சுழி போட்டு செயல்
எதையும் தொடங்கு!

வழியின்றி வேலனவன்
திகைத்தான்!
குற வள்ளியவள் கைபிடிக்கத்
துடித்தான்!
மறந்துவிட்ட அண்ணனையே
நினைத்தான்!
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்!
பிள்ளையார்சுழி போட்டு செயல்
எதையும் தொடங்கு!

கேட்டதெல்லாம் கொடுக்க
வரும் பிள்ளை!
அவன் கீர்த்தி சொல்ல
வார்த்தைகளே இல்லை!
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்!
பிள்ளையார் சுழி போட்டு செயல்
எதையும் தொடங்கு!

தும்பிக்கை நம்பிக்கை
கொடுக்கும்!
வரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும்!
அஞ்சேலென்றொரு பாதம்
எடுக்கும்!
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்!
பிள்ளையார் சுழி போட்டு செயல்
எதையும் தொடங்கு!

விநாயகா போற்றி போற்றி
🙏🙏🙏🌹🌹🌹🌷🌷🌷💢💢💢

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...