Saturday, March 19, 2022

Sri Devi Nama Sthothram


Sri Devi Nama Sthothram


யா தேவி சர்வ பூதேஷூ
புத்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ
சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ
திருஷ்ணா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ
சாந்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ
ஸ்ரத்தா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ
லக்ஷ்மீ ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ
ஸ்ம்ருதி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ
தயா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ
மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நமஹ

Kantha Malar methuraiyum




Seetha kalyana vaibogamey


 



Seerarum Chithiraiyil



 

Sambu Sankaranumagi




 

Adidankarar Amarntha






Kavalai theera vazha vendum

 



Friday, March 11, 2022

ராமர் ஸ்லோகம்

 இதுவரை நீங்கள் படித்திராத தமிழ் ராமாயண ஸ்லோகம்


"ஆண்டவன் திருவடி" என்ற இணைய தள முகவரியில் படித்ததை நகல் எடுத்து பகிர்ந்துள்ளேன்.


ராமர் ஸ்லோகம்


ராம நாம சுர வந்தித ராம்
ரவிகுல ஜனநிதி தந்தவராம்
சாகேதஸ்தலம் வந்தவராம்
தசரத கோசலை தந்தவராம்
விஸ்வாமித்ரர் பின் சென்றவராம்
மேவு தாடகையைககொன்றவராம்
அகலிகை சாபம் முடித்தவராம்
அரியதோர் பாணம் ஒடித்தவராம்
பாவை சீதை மணம் கொண்டவராம்
பரசுராமன் வலி கொண்டவராம்
தாய் மொழிப்படி வனம் போந்தவராம்
சாரும் குகன்பால் அன்பு மீந்தவராம்
பரதற்கு பாதுகம் ஈந்தவராம்
பரவு தண்டகவனம் போந்தவராம்
முனிவர்களுக்கு அபயம் அளித்தவராம்
முனிவர் புகழக்கண்டு களித்தவராம்
சூர்பனகைக்கு மையல் கொடுத்தவராம்
தோன்றும் கரன் படையைக்கெடுத்தவராம்
மாயமானின் பின்னே ஓடினராம்
வைதேகியைப் பிரிந்து தேடினாராம்
சபரிக்குத் தன்பதம் தந்தவராம்
சாரும் அனுமனை உகந்தவராம்
சூரனாம் வாலியை வாட்டினராம்
சுக்ரீவனை முடி சூட்டினராம்
அனுமனை சீதைபால் விடுத்தனராம்
அடையாளமும் கையில் கொடுத்தனராம்
தேவி சூடாமணி பெற்றவராம்
தென் சமுத்திரக் கரை உற்றவராம்
சரணம் விபீஷணர்க்கு ஈந்தவராம்
சமுத்திரம் அணைகட்டி போந்தவராம்
இராவணாதியரைக் கொன்றவராம்
ராட்சசர் முதலற வென்றவராம்
அன்னையை சிறை நீக்கினராம்
அவர் பெருமையை வெளியாக்கினராம்
வீடணனுக்கு முடி புனைந்தவராம்
மேவும் அயோத்தி செல்ல நினைந்தவராம்
புஷ்பக மீதில் போனவராம்
புண்ய முனிவர் விருந்தானவராம்
சேதுவில் பூஜை செய்தவராம்
சேர அரக்கர் பழி கொய்தவராம்
அனுமனை பரதன்பால் விடுத்தனராம்
அவன் உயிர் அழியாமல் தடுத்தவராம்
தமர் அயோத்திலன் மீண்டவராம்
கைகேயி மலர்ப்பதம் பூண்டவராம்
மகிழ்ச்சி எவரும் பெறக்கொண்டவராம்
மகுடாபிஷேகம் கொண்டவராம்
குவலய ரக்ஷணை புரிந்தவராம்
கோதண்ட ரக்ஷா குருவரராம் .

ரோக நிவாரண ஸ்லோகம்

 ரோக நிவாரண ஸ்லோகம்


தந்வந்தரி பகவான் ஸ்ரீ விஷ்ணூவின் அம்சம். பகவானுக்கும், தேவர்களுக்கும் நமக்கும் வைத்தியர். ஆயுர் வேத சிருஷ்டி கர்த்தா நமக்கும் நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க வல்லவர். அவரை தியானித்தால் சகல வியாதிகளும் நீங்கும்.

ௐ நமோ பகவதே தந்வந்தரயே
அம்ருதகலஶஹஸ்தாய,
ஸர்வாமயவிநாஶநாய,
த்ரைலோக்யநாதாய
ஶ்ரீமஹாவிஷ்ணவே நம: ॥

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய
ஸர்வாமயவிநாஷநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம:

அச்யுதானந்த கோவிந்த
நாமோச்சாரண பேஷஜாத்
நச்யந்தி ஸகல ரோக:
ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்

அச்யுதானந்த கோவிந்த
விஷ்ணோ நாராயணாம்ருத
ரோகன்மே நாசயாசேஷேன
ஆசு-தன்வன்தரே ஹரே

அச்யுதானந்த கோவிந்த
விஷ்ணோ தன்வன்தரே ஹரே
வாஸுதேவாகிலானஸ்ய
ரோகான் நாசாய நாசாய

ஸோமநாதம் வைத்யநாதம்
தன்வன்தரிமதாச்வினௌ
ஏதான் ஸம்ஸ்மரத: ப்ராத:
வியாதி: ஸ்பர்ச ந வித்யதே

வாலாம்பிகேஶ வைத்யேஶ
பவரோகஹரேதி ச ।
ஜபேந்நாமத்ரயம் நித்யம்
மஹாரோகநிவாரணம் ॥

அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே
த்வமிதமுத்தாபித பத்மயோனிஹி
அனந்த பூமா மம ரோக ராஷிம்
நிருந்தி வாதாலய வாச விஷ்ணோ

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமோஹு
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே

ஆர்தா: விஷண்ணா: ஶிதிலாஶ்ச பீதா:
கோரேஷு ச வ்யாதிஷு வர்தமானா: |
ஸம்கீர்த்ய னாராயணஶப்தமாத்ரம்
விமுக்தது:கா: ஸுகினோ பவம்தி ||

ரோகானசேஷா- னபஹம்ஸி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலானபீஷ்டான் |
த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம்
த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி ||

இந்த ஸ்லோகத்தைப் படிப்பதால் எல்லா நோய்களும், மனக்கவலையும் நீங்கும்:

தருணாம்புதஸுந்தரஸ்ததா த்வம்
நநு தந்வந்தரிருத்திதோ(அ)ம்புராஶே: |
அம்ருதம் கலஶே வஹந் கராப்யா-
மகிலார்திம் ஹர மாருதாலயேஶ ||

நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:

அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய

ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;
ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.

இந்த ஸ்லோகத்தை தினமும் ஜெபித்துவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.

ஓம் நமோ நாராயணா

 பிள்ளையார் சுழி போட்டு செயல்

எதையும் தொடங்கு!
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
பிள்ளையார் சுழி போட்டு செயல்
எதையும் தொடங்கு!

அழியாத பெருஞ்செல்வம் அவனே!
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே!
பிள்ளையார் சுழி போட்டு செயல்
எதையும் தொடங்கு!

வழியின்றி வேலனவன்
திகைத்தான்!
குற வள்ளியவள் கைபிடிக்கத்
துடித்தான்!
மறந்துவிட்ட அண்ணனையே
நினைத்தான்!
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்!
பிள்ளையார்சுழி போட்டு செயல்
எதையும் தொடங்கு!

கேட்டதெல்லாம் கொடுக்க
வரும் பிள்ளை!
அவன் கீர்த்தி சொல்ல
வார்த்தைகளே இல்லை!
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்!
பிள்ளையார் சுழி போட்டு செயல்
எதையும் தொடங்கு!

தும்பிக்கை நம்பிக்கை
கொடுக்கும்!
வரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும்!
அஞ்சேலென்றொரு பாதம்
எடுக்கும்!
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்!
பிள்ளையார் சுழி போட்டு செயல்
எதையும் தொடங்கு!

விநாயகா போற்றி போற்றி
🙏🙏🙏🌹🌹🌹🌷🌷🌷💢💢💢

 



கந்த சஷ்டி கவசத்தின் முழு பலனை அனுபவிக்க தவறாமல் செய்ய வேண்டிய விஷயம்:

கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் பொழுது எவ்வித துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம், இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் முன்னர் சொல்ல வேண்டிய மந்திரம் உண்டு. அம்மந்திரத்தை ஜெபித்து பின் கந்த சஷ்டி கவசம் வாசிப்பது முறையான பலன்களைக் கொடுக்கும். அது என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் .

கந்த சஷ்டி கவசம் தீமைகளில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றும் கவசம் ஆகும். கந்த சஷ்டி கவசத்தை அடிக்கடி உச்சரிப்பவர்களுக்கு அந்த முருகனே நேரில் வந்து அவதாரம் புரிந்து காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. அத்தகைய சக்தி வாய்ந்த கந்த சஷ்டி கவசத்தை படிப்பதன் வாயிலாக கிடைக்க வேண்டிய பலன்களை முறையாக அனுபவிக்க வேண்டும்.

முருக கவச பாடல்:

ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்துநீ றணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்!! மேற்கண்ட இந்த மந்திரத்தில் இருக்கும் பொருளானது 36 முறை கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும் என்பது அல்ல! இதனை தவறாக புரிந்து கொண்டவர்கள் 36 முறை கந்த சஷ்டி கவசம் படிப்பதால் கிடைக்கும் பலன்களை கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் சண்முக கவசத்தில் ஆறு அட்சரங்கள் உண்டு. அச்சரம் என்றால் எழுத்து என்கிற பொருள் உண்டு.

‘ஓம் சரவணபவ’ என்கிற இந்த ஆறு அட்சரங்களை உச்சரிப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானவை.

:இது போல 36 உரு கொண்ட அட்சரங்கள் பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ளன. உங்களை சுற்றி இருக்கும் எதிரிகள் தொல்லைகளிலிருந்தும், தீராத நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை தரும் ஆற்றல் இந்த மந்திரத்திற்கு உண்டு. முருகன் போர் புரிந்த திருப்போரூர் ஸ்தலத்திலும், மதுராந்தகம் அருகாமையில் அமைந்துள்ள பெரும்பேர் கண்டிகை என்கிற ஊரில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானுடைய கோவிலிலும் 36 அக்ஷரங்கள் கொண்ட மந்திர சக்தி வாய்ந்த யந்திரம் உள்ளது.

இந்த எந்திரத்திற்கு அபிஷேகம் செய்வதன் மூலம் தீரா பிணிகளும், கஷ்டங்களும் அகலும் என்பது நம்பிக்கை.

கிரக தோஷம் நீங்கவும், ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சொல்ல வேண்டிய இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு பின்னர், சஷ்டி கவசத்தை வாசிக்கும் பொழுது அதனுடைய முழு பலனும் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். 36 தடவை கந்த சஷ்டி கவசத்தை உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை!

இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு கந்த சஷ்டி கவசம் பாடினால் பெறற்கரிய பேறு கிட்டும். ஒரு வீட்டில் காலை, மாலை இரு வேளையும் கந்த சஷ்டி கவசத்தை படிப்பதும் அல்லது அதனை ஒலியாக கேட்பதும் அந்த வீட்டில் நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணும். எந்த அளவிற்கு அதிகமாக கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்து வருகிறீர்களோ! அந்த அளவிற்கு உங்களுக்கு பலன்களும் உண்டு.

முருகனுக்கு உகந்த திதியாக இருப்பது சஷ்டி ஆகும். சஷ்டி திதி அன்று இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்கள் வேண்டிய வரங்களைப் பெறுவதாக சாஸ்திரங்கள் எடுத்துரைக்கிறது. நீங்கள் நினைத்தது நடக்க, வேண்டியது பலிக்கவும் மேற்கூறிய இம்மந்திரத்தை உச்சரித்து விட்டு தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்து வாருங்கள், நல்லதே நடக்கும்.

ஓம் சரவண பவ
முருகா சரணம்

 வைணவத்தின் முழுமுதல் கடவுளான ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும்.


வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன்.

ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும். திருமண்ணை ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கிறார்கள்.

ஸ்ரீசூர்ணம் மகாலட்சுமியின் அடையாளமாகும்.

இந்தப் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப் படுகிறது.

எப்படி உவர் மண் நம் ஆடையினைத் தூய்மைப் படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தையும் தூய்மையாக்குகிறது.

வைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள்.

என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும்.

எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும். 9.3.22.

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...