Sunday, September 20, 2020

ஆண்டவன்மேல்நம்பிக்கைஇழக்காதீர்!

 ஆண்டவன்மேல்நம்பிக்கைஇழக்காதீர்!

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
🥺 "ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்.

இதோ அதற்கு ஓர் உதாரணம்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~
🌻 அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான்.

🌻 ஒவ்வொரு அமைச்சருக்கும் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.

🤨 மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.

😳 ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்.

🥷 செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருந்தார்கள்.

🙄 இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா? அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா? என்பதை அறிய வேண்டும்'' என்று நினைத்தான் மன்னன்.

🤔 அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான். இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.

🧑‍🌾 மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன்.

🏞️ உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.

🍑 உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.

🍍 நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம்.

🍱 அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும். இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.

🍠 மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு.

🏯 மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள். அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.

🥔 முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார்.

💚 நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.

🌽 சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

🌰 இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார்.

🧐 சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள்.

🍈 மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

🍁 மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை.

🧐 பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள்? என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும், சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார்.

😵 ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார். மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான்.

⛩️ அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான். இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள். சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும்.

🛑 அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.

🍁🍂 மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் 🧟 மாண்டுவிட்டார்.

🙍‍♂️ இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார்.

🥴 ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

😎 முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.

🎁 மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.

🌷 இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை நச்சென்று விளக்குகிறது மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.

அதன் உட்பொருள் இதுதான்.

🐄 ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன.

💖 தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

🏹 அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்

🧐 நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை.

🙄 நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான்.

🌺 ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.

🍊/🍁நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே கண்காணிப்பதில்லை..

😎/🥴ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

🥺 "ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்.

🍁 அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.

🧟 விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும். அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.

🕉️ இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
🌷ௐ நமோ நாராயணாய🌷

Sunday, September 13, 2020

EXCELLENT INFO ABOUT *KRISHNA IN BRIEF*

 EXCELLENT INFO ABOUT *KRISHNA IN BRIEF*


1) Krishna was born *5,252 years ago* as on 11/08/2020.
2) Date of *Birth* : *18 th July,3,228 B.C*
3) Month : *Shravan*
4) Day : *Ashtami*
5) Nakshatra : *Rohini*
6) Day : *Wednesday*
7) Time : *00:00 A.M.*
8) Shri Krishna *lived 125 years, 08 months & 07 days.*
9) Date of *Death* : *18th February 3102.*
10) When Krishna was *89 years old* ; the mega war *(Kurukshetra)* war took place.
11) He died *36 years after the Kurukshetra* war.
12) Kurukshetra War was *started on Mrigashira Shukla Ekadashi,BCE 3,139. i.e "8th December 3139" and ended on "25th December, 3,139".*
12) There was a *Solar eclipse between "3p.m to 5p.m on 21st December, 3,139" ; cause of Jayadrath's death.*
13) Bhishma died on *2nd February,( First Ekadasi of the Uttarayana), in 3,138 B.C.*
14) Krishna is worshipped as:👇
(a)Krishna *Kanhaiyya* : *Mathura*
(b) *Jagannath*:- In *Odisha*
(c) *Vithoba*:- In *Maharashtra*
(d) *Srinath*: In *Rajasthan*
(e) *Dwarakadheesh*: In *Gujarat*
(f) *Ranchhod*: In *Gujaarat*
(g) *Krishna* : *Udipi, Karnataka*
15) *Bilological Father*: *Vasudeva*
16) *Biological Mother*: *Devaki*
17) *Adopted Father*:- *Nanda*
18) *Adopted Mother*: *Yashoda*
19 *Elder Brother*: *Balaram*
20) *Sister*: *Subhadra*
21) *Birth Place*: *Mathura*
22) *Wives*: *Rukmini, Satyabhama, Jambavati, Kalindi, Mitravinda, Nagnajiti, Bhadra, Lakshmana*
23) Krishna is reported to have *Killed only 4 people* in his life time.
(i) *Chanoora* ; the Wrestler
(ii) *Kamsa* ; his maternal uncle
(iii) & (iv) *Shishupaala and Dantavakra* ; his cousins.
24) Life was not fair to him at all. His *mother* was from *Ugra clan*, and *Father* from *Yadava clan,* inter-racial marriage.
25) He was *born dark skinned.* He was not named at all throughout his life. The whole village of Gokul started calling him the black one ; *Kanha*. He was ridiculed and teased for being black, short and adopted too. His childhood was wrought with life threatening situations.
26) *'Drought' and "threat of wild wolves" made them shift from 'Gokul' to 'Vrindavan' at the age 9.*
27) He stayed in Vrindavan *till 14~16 years*. He killed his own uncle at the age of 14~16 years at Mathura.He then released his biological mother and father.
28) He *never returned to Vrindavan ever again.*
29) He had to *migrate to Dwaraka from Mathura due to threat of a Sindhu King ; Kala Yaavana.*
30) He *defeated 'Jarasandha' with the help of 'Vainatheya' Tribes on Gomantaka hill (now Goa).*
31) He *rebuilt Dwaraka*.
32) He then *left to Sandipani's Ashram in Ujjain* to start his schooling at age 16~18.
33) He had to *fight the pirates from Afrika and rescue his teachers son ; Punardatta*; who *was kidnapped near Prabhasa* ; a sea port in Gujarat.
34) After his education, he came to know about his cousins fate of Vanvas. He came to their rescue in ''Wax house'' and later his cousins got married to *Draupadi.* His role was immense in this saga.
35) Then, he helped his cousins to *establish Indraprastha and their Kingdom.*
36)He *saved Draupadi from embarrassment.*
37) He *stood by his cousins during their exile.*
38) He stood by them and *made them win the Kurushetra war.*
39) He *saw his cherished city, Dwaraka washed away.*
40) He was *killed by a hunter (Jara by name)* in nearby forest.
41) He never did any miracles. His life was not a successful one. There was not a single moment when he was at peace throughout his life. At every turn, he had challenges and even more bigger challenges.
42) He *faced everything and everyone with a sense of responsibility and yet remained unattached.*
43) He is the *only person, who knew the past and probably future ; yet he lived at that present moment always.*
44) He and his life is truly *an example for every human being.*

*Hare Krishna* 🙏🙏🙏

சர்வமும் ஸ்ரீ கிருஷ்ணார்பனம்.

சர்வமும் ஸ்ரீ கிருஷ்ணார்பனம்.


பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரௌபதி க்கு கண்ணனின் மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்ச உலகில் வேறு ஆளில்லை என்று கர்வம் இருந்தது.

இதை கண்ணுற்ற பார்த்தனின் சாரதியான பார்த்தசாரதி பாஞ்சலியின் இந்த கர்வத்தை அகற்ற எண்ணினார் பகவான் கண்ணன்.

ஒருநாள் காட்டில் இருந்த திரௌபதியை காண வேண்டி வந்தார். கண்ணனை கண்ட திரௌபதைக்கு மிக்க மகிழ்ச்சி. அவள் கண்ணனிடம் "அண்ணா, நீங்கள் துவாரகை யில் இருந்து எப்படி வந்தீர்கள்? தேர் குதிரை பல்லக்கு என எதையும் இக்காட்டில் காணவி ல்லையே?" என்றாள்.

"தங்கையே ஏனோ மனம் உன்னைப் பார்க்கும் ஆவலால் உந்தித் தள்ளியது. அதனால் நடந் தே உன்னை காண இங்கே வந்து விட்டேன்.."
என்றார்.

அதைக்கேட்டு திரௌபதையின் கண்களில் கண்ணீர் அரும்பியது. "அண்ணா, என்னை காண உங்கள் பொற்பாதம் நோக நடந்தே வந்தீர்களா? அவை எந்தளவுக்கு வலிக்கும்.. சரி சரி, நான் வெந்நீர் போட்டுத் தருகிறேன். நீராடுங்கள் தங்களின் உடல் களைப்பு நீங்கும் நடந்த கால்களுக்கும் இதமாக இருக்கும்" என்றாள்.

கண்ணனும் சிரித்து கொண்டே தலையாட்டி னார். திரௌபதையின் வேண்டுதலை ஏற்று பீமன் தன் பலத்தையெல்லாம் காட்டி ஒரு பெரிய கொப்பறையை வெந்நீர் போட தூக்கி வந்தான். வந்தவன் அருகே ஓடிய ஆற்றில் கொப்பறையை ஒரே அழுத்தாக அழுத்தி தண்ணீர் எடுத்தான்.

மூன்று பெரிய பாறைகளை உருட்டி வந்தான அதையே அடுப்பாக்கி கொப்பறையை தூக்கி வைத்தான். ஒரு காய்ந்து போன மரத்தையே ஒடித்து வந்து தீப்பற்ற வைத்தான். ஜூவாலை விட்டு தீ எரிந்தது. ஆனாலும் மதியமாகியும் கொப்பறை தண்ணீர் துளிகூட சுடவில்லை.

கண்ணன் தங்கையிடம், "தங்கையே மதியம் ஆகிறது வயிறும் ஆகாரம் கேட்கிறது. அடியே ன் தீர்த்தமாட வெந்நீர் என்னாச்சு?" என கேட்க

திரௌபதி கண்கலங்கியவாறே, "அண்ணா, என்ன சோதனையோ தெரியவில்லை. ஏனோ கொப்பறையின் நீர் துளிக்கூட கொதிக்கவில் லை.. மாறாக ரொம்பவும் குளிர்ந்திருக்கிறது" என்றாள்.

கண்ணன் பாஞ்சாலியின் பக்கத்தில் இருந்த பீமனிடம் "பீமா, அந்த கொப்பரை தண்ணீரை கீழே கொட்டு" என்றார்

பீமனும் கண்ணன் ஆணைப்படி நீர் நிறைந்த கொப்பறையை கீழே கவிழ்க்க, கொப்பறையி ன் உள்ளிருந்து குட்டி தவளை தாவி ஓடியது.

கண்ணன் பாஞ்சாலியிடம் "தாயே ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்தும் அந்த நீர் குளிர்ச்சி யாக இருக்க காரணம் இதுதான் அந்ததவளை சுடுநீரில் சிக்கி மாண்டு விடாமல் இருக்க என்னை பிரார்த்தித்துகொண்டே இருந்தது.
பிரார்த்தனையை ஏற்று அதைக் காப்பாற்றவே கொப்பறை நீரை குளிர்ச்சியாக இருக்க செய் தேன். இப்போது புரிகிறதா ஏன் கொப்பறை நீர் கொதிக்கவில்லை என..."

"ஒரு குட்டி தவளையின் சரணாகதி பிரார்த்த னை கூட எனக்கு எவ்வளவு பெரியதென்று பார்த்தாயா?.." என்றார்.

திரௌபதிக்கு நெஞ்சில் சுரீரென உரைத்தது. ஆஹா, கண்ணனிடம் நான் கொண்ட என் பக்தியே உயர்ந்ததென நினைத்தேனே,
இப்போது இந்த தவளையின் பக்தி அல்லவா உயர்ந்ததாக காண்பித்து விட்டான்.

ஒரு தவளை கண்ணன் மீது கொண்ட பக்தியி ன் காரணமாக கொழுந்து விட்டு எரிந்த தீயிலி ருந்து உயிர் பிழைத்து ஓடுகிறது, அதன் பக்தி யை மிஞ்சி என் பக்தி எப்படி உயர்ந்ததாக முடியும் என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்.

பகவான் ஒருவரின் உள்ளத்தின் பக்தியை தான் பார்க்கிறானே தவிர அவன் அணியும் பஞ்சகச்சத்தையோ துவாதச புண்டரத்தையோ அத்யாபக கோஷ்டியில் மற்றவர்களை விட சப்தமாக சேவிப்பதையோ இல்லத்தில் மூன்று மணி நேரம் திருவாராதனம் செய்வதையோ அவன் படைக்கும் பட்டு பீதாம்பரத்தையோ அக்கார அடிசலையோ ஜீரான்னத்தையோ அவன் நமக்கு எவ்வளவு அழகாக அலங்கார ங்கள் திருமஞ்சனம் கண்டருள செய்வித்தான் என எதையும் பார்ப்பதில்லை அந்த நேரங்களி ல் அவன் உள்ளத்தில் தன் மீது பக்தி எவ்வாறு உள்ளது என்பதை மட்டுமே தான் பார்ப்பார்.

அதே நேரம் நான் பகவானுக்கு அதை செய்தே ன் நான் மட்டும் இல்லையென்றால் என்ற கர்வமும் கூடாது. பக்திக்கு துளி கூட கர்வமும் கூடாது என்பது புரிகிறதல்லவா.

யாருடைய பக்தியையும் ஆடைகளை பார்த் தோ உருவத்தை பார்த்தோ ஊர்த்தவ புண்டர ங்களைப் பார்த்தோ வேதங்களை சேவிக்கும் சப்தத்தை வைத்தோ சமர்ப்பிக்கும் உடைகளை பட்சணங்களை உணவுகளை பார்த்தோ எடை போடுவதில்லை அவன் பார்ப்பது உள்ளத்தில் அவன் மீது நமக்கு உள்ள பக்தியை மட்டுமே.

பக்தியில் ஆராதனையில் நீங்கள் செய்வது தான் உயர்ந்தது மற்றவர்கள் செய்வது தாழ்ந்தது என எண்ணாதீர்கள்.

ஆண்டாள் சொன்னது போல் பகவானை வாயினால் பாடி அவனை நம் மனத்தினால் எப்போதும் சிந்தித்தால் தவளைக்கருள் செய்தது போல் நம்மையும் நம் துன்பங்கள் அனைத்திலிருந்தும் காப்பதோடு மட்டுமல்லா மல் அவன் பாதங்களையே நாமும் சரணடை யும் படி செய்துவிடுவான்.

பக்தியில் நாம் ஒருவருக்கொருவர் பாரபட்சம் குறைகள் காணாமல் காட்டாமல் அனைவரை யும் ஒன்றாக பாவிப்போம், பணிவோம்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பனம்.
ஸ்ரீ கிருஷ்ணா நின் திருவடிகள் சரணம்...

Friday, September 4, 2020

💖படியளக்கும் பெருமாள்.

 💖படியளக்கும் பெருமாள்.


#ஸ்ரீரங்கம்.
தமிழில் திருவரங்கம்.
தென்னரங்கம் இவர் அந்தரங்கம்.

பல விசேஷமான வைபவங்களை கொண்டவர்.வருடம் 365 நாளும் திருவிழா காணும் பெருமாள் அநேகமாக இவராகத்தான் இருப்பார்.

இவர் மீது கொண்ட பக்தியாலும், பிரம பாசத்தாலும் பலரும் பல விதங்களில் பல வழிகளில் இவரை ராஜா போலவே பாவித்து பணிவிடை செய்து வருகின்றனர். இவருக்கான #தளிகை அதாவது சமையல் முறை அலாதியானது.
இவருக்கு ஹம்சை செய்யும் பிரசாதங்கள், பலகார பட்சணங்களை தயாரிக்கும் முறைகளும் வெகு பிரசித்தமானது.

பாத்திரங்களும் ஒரு முறை மாத்திரமே பயன்படுத்துவர், மண் பாண்டங்களே பிரதானம்.அவ்வளவு ஏன் ஊறுகாய் கூட அன்றே தயாரிக்க படும்.

இவருக்கு அமுது ஹம்சை பண்ணப்படும் பட்டியல் நீண்டது, கண் படும் என்பதால் இங்கு விரிவடைய எழுதிடவில்லை. ஆனால் தளிகை தயாரிப்பு முறைகளை அன்றே கல்வெட்டுகளில் செதுக்கி வைத்து சென்றுள்ளனர். இஃது பலருக்கும் தெரியாது.

விடாய் பருப்பு, எரி துரும்பு இவைகள் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம், உங்களால் இது என்ன என்று ஊகிக்க முடிகிறதா.????

விடாய் பருப்பு என்றால் மொச்சைக்காய், எரி துரும்பு என்றால் விறகு .... இவையெல்லாம் கல்வெட்டுகளில் உள்ள வார்த்தைகள்.

வெள்ளிக்கிழமைகளில் மத்திய வேளையில் தளிகை ஹம்சைக்கு மொச்சை அவசியம், ஆனால் அன்று துவாதசி என்றால் கிடையாது. திருவோணம் நட்சத்திரமானால் கட்டாயம் மிளகு சேர்க்க வேண்டும். இப்படி ஏகப்பட்டது அதில் சொல்லப்பட்டுள்ளது.
துவாதசி பரணை என்றால் 21 காய்கறிகள்.இஃது மத்திய வேளையில் மாத்திரமே.

மற்றைய நாட்களில் வேறு முறை.
ஸ்ரீ ரங்கத்தில் மாத்திரம் செடி ஐந்து, கொடி ஐந்து,காய் ஐந்து,கனி ஐந்து தாவர பச்சீயம் (கீரை வகைகள்) ஐந்து என வகைப்படுத்தி தளிகை ஹம்சை நடக்கிறது.

சில தளிகைகளுக்கு மா கல் பாத்திரம் பயன்படுத்துவர்.

ஆச்சரியமாக இருக்கிறதா?????
இதற்கே அசந்தால் எப்படி, காலை மற்றும் இரவு நேர தளிகை வேறுவகை. இரவில் வெகு நிச்சயமாக தயிர், பச்சீயம், ஊறுகாய் வெண்ணெய் கிடையாது. அதுபோலவே காலை வேளையில் தானிய வகைகள் கிடையாது.

இதில் கவனிக்க தக்க அம்சம் ஒன்று உண்டு. தக்காளி, கேரட், பீன்ஸ்,சோயா, முள்ளங்கி, முட்டைகோஸ், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவை இதில் கிடையாது.கிழங்குகளில் மஞ்சளை தவிர்த்து மற்ற உருளை, சேனை, கருணை கூட கிடையாது. இன்றளவும் இப்படி தான்.

செடி ஐந்து காய்கள் சமைக்கும் சமயத்தில் கொடி ஐந்தில் உள்ள காய்கள் பயன்படுத்திடமாட்டா.

உதாரணமாக செடி ஐந்து காய்களில் வெண்டை, சுண்டை, கத்தரி யோடு கொடி ஐந்து காய்களான அவரை மொச்சை கோவை எதுவும் இடம் பெறாது.

மலைப்பாக இருக்கிறதல்லவா..... எப்பேர்ப்பட்ட வாழ்வியல் நெறியை கடைப்பிடித்து வந்துள்ளனர் அவர்கள்.இதற்கு நா ருசி காரணம் அல்ல. நாராயணன் நாமத்தின் பால் உள்ள #ருசி.

நாராயணனே நமக்கே பறை தருவான் என்கிறது கோதை சொன்ன வார்த்தை.இங்கு #பறை என்பது மேளம் அல்ல அளவை முறை. இன்றளவும் ஸ்ரீ ரங்கத்தில் நம்பெருமாள் நெல் அளவையை நேரில் வந்து பார்த்து செல்கிறார்.
பிரமோத்சவ காலங்களில் பத்து நாள் உத்சவத்தில் திருக்கொட்டாரம் வந்து நெல் அளவையை பார்வையிடுகிறார்.

இஃது உணவு பிரதானம் என்று காட்ட அல்ல, உன்னதமானவற்றையே உட்கொள்ள செய்ய வேண்டும் என்று பார்த்து பார்த்து நம்மை ஒரு தாயை போல பார்த்து கொள்கிறார்.
அவரை நாம் எப்படி கொண்டாட வேண்டும்.

ஸ்ரீ ராமாநுஜர் இதனை காட்டிக்கொடுக்கிறார். எப்படி??? அரங்கன் இரவு வேளையில் சுக்கு திப்பிலி மிளகு தட்டி போட்டு பால் ஹம்ஸை நடக்கிறது.இதற்கு உண்டான பால் சுவையாக தித்திப்புடன் இருக்க வேண்டும் என எண்ணுகிறார். இளம் கரும்புகளை மாடுகளுக்கு உட்கொள்ள கொடுத்து அதன் மடியில் கறக்கும் பால் இனிப்பான விதத்தில் இருக்கும் என்று அவ்விதம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கு பெயர் என்ன????

ஸ்ரீ ரங்கம் முழுவதுமே இப்படி பார்த்து பார்த்து கட்டமைத்து உள்ளனர். ஏதோ உட்கொள்ளும் விஷயம் மாத்திரம் அல்ல....

ஸ்ரீ ரங்கத்தின் மதில் சுவற்றில் ஏகப்பட்ட பொந்துகள் இருக்கும். இவை ஏதோ நீர் வரும் வழி என்றோ அல்லது பராமரிப்பு செய்ய உள்ள வழியோ இல்லை. பிறகு அஃது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒன்று என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஆம் அவைகளை குறிப்பிட்ட வடிவில், அகலத்தில் குறிப்பிட்ட இடைவெளிகளில் செம்பூரான் கற்களைக் கொண்டு உள்ளே கடுக்காய் சித்திரத்தை அம்மான் பச்சரிசி இவைகளை கொண்ட கலவைகளை பூசி உண்டாகியுள்ளனர் எதற்கு புறாக்கள் தங்க, அதுவும் #மரகதப்புறாக்கள். இந்த வகை புறாக்கள் தான் இன்று நம் தமிழகத்தின் மாநில பறவை❤️.

சரி இதற்கு இத்தனை முனைப்பு. இந்த புறாக்கள் அவ்வளவு சுலபமாக தன் இருப்பிடத்தை தேர்ந்தெடுக்காது. பல்வேறு விஷயங்கள் பரிசீலித்து பார்க்கும் அது. இஃது தன் கூட்டில் எச்சமிடாது. எதற்காக இந்த பறவை???
இது மழைக்கு மூன்று நாழிகை முன்பாக அகவையிடும், (கத்தும்) அந்திசந்தி வேளையில் கத்தாது, மண் கறையான், சிலந்தி பாம்பு இவற்றை அண்ட விடாது. அதுபோலவே தேள் பூரான் குளவி இவற்றை விரட்டி விடும். மற்ற எச்சம் இடும் பறவையினங்களை கிட்ட சேர்க்காது.

ஒரு வேளை பறவை எச்சத்தில் விதைகள் இருந்து கல் இடுக்குகளில் விழுந்து முளைத்தால் கட்டிடத்திற்கு பாதிப்பு என்பதால் இந்த ஏற்பாடு.

இப்போது சொல்லுங்கள் இஃது வெறும் பக்தி மாத்திரமா??????

உயர்ந்த உயிரியல் தத்துவமல்லவா, எப்பேர்ப்பட்ட அவதானிப்பு இருந்திருந்தால் இது சாத்தியப்படும்.

இதை தானே இன்று #பல்லுயிரியம் என்று உலகம் கொண்டாடுகிறது. அதனை அன்றே சாதித்த நம்மவர்களை நாம் என்னவென்று சொல்வது.அவர்களை நாம் எப்படி எல்லாம் கொண்டாட வேண்டும் என்பதனை நீங்களே சொல்லுங்கள்.

ஸ்ரீராமானுஜர்

 ஸ்ரீராமானுஜர்


திருப்பதியின் அடிவாரத்தில், சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு, தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராமானுஜர்.

அப்போது ‘மோரு… மோரு…’ என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது.

தலையில் மோர்ப்பானை சுமந்து, இடையர் குலப் பெண்மணி ஒருத்தி தெருவில் நடந்து சென்றுஉ கொண்டிருந்தாள்.

சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

ஆனால், குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில் மோர்க்காரியைக் கூப்பிட்டால், பாடத்தின் மேல் கவனம் இல்லாதது போல் ஆகிவிடும் என்பதால், மோர்
ஆசையைத் துறந்து, பாடத்தில் கருத்தாக இருந்தார்கள்.

ஆனாலும், அன்றைக்கு மோர் குடித்தே ஆக வேண்டும்
என்பது எழுதப்பட்டிருந்த ஒன்று போலும்.

இவர்கள் அனைவரும் கூட்டமாக அமர்ந்து ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதாக நினைத்த மோர்க்காரப் பெண்மணி, இந்த இடத்தில் பானையை இறக்கி வைத்தால் நல்ல வியாபாரம் ஆகிவிடும் என்று தீர்மானித்து, இவர்கள் பக்கம் நடந்து வந்தாள்.

ஐயா… சாமீ… நல்ல மோரு. ஆளுக்கு ஒரு குவளை குடிச்சீங்கன்னா, தெம்பா இருக்கும். உஷ்ணம் ஓடியே போயிடும் என்று சொன்னபடி, மோர் பானையைக் கீழே இறக்கி வைத்தாள்.

ஏற்கெனவே பசியிலும் அசதியிலும் இருந்த சீடர்களுக்கு, மோர் பானையைப் பார்த்ததும் வயிறு கபகபவென்று இருந்தது. ஆளாளுக்கு, எனக்கு… எனக்கு என்று கேட்டு வாங்கிக் குடித்தனர். அவர்களில் ஒரு சில சீடர்கள் இன்னொரு குவளையும் வாங்கிச் சாப்பிட்டனர்.

மோரின் தரம் அப்படி. எல்லோருக்கும் மோர் கொடுத்து
முடித்ததும், பானையின் உள்ளே சற்று எட்டிப் பார்த்தாள் பெண்மணி. கிட்டத்தட்ட பானை காலியாக இருந்தது.
நிறைந்த மனத்துடன் சீடர்களையும் ராமானுஜரையும் பார்த்தாள்.

அப்போது அவள் மனத்தில் திடீரென ஓர் ஏக்கம் வந்தது.
அதாவது, தானும் இவர்களைப் போல் பக்தித் திறனில் தேர்ந்து விளங்க வேண்டும் என்று ஆசை கொண்டாள்.

திடீரென்று அப்படி ஒரு பக்தி எழுந்தது ஏன்? மகான்களின்
பார்வை விசேஷம் அப்படிப்பட்டது.

அதனால், பக்தியின் பிடியில் திடீரென அகப்பட்டுக் கொண்ட காரணத்தால், மோருக்கான காசை கேட்டுப்பெற வேண்டும் என்பதையும் மறந்து நின்றாள்.

அப்போது அந்தப் பெண்மணியைப் பார்த்து, “அம்மா… நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன?” என்று
கேட்டார் ராமானுஜர்.

மோர் நன்றாக வியாபாரம் ஆகும். காசு கிடைக்கும் என்ற ஆசையில்தான் இங்கே வந்தாள்.

ஆனால், இப்போது இவளது மனநிலையே வேறாக இருக்கிறது.

ராமானுஜரை மரியாதையுடன் பார்த்தாள்.

பிறகு, வேணாம் சாமீ. மோருக்குக் காசெல்லாம் வேணாம்…
அதை வெச்சிட்டு நான் என்ன பண்ணப் போறேன்?! என்று இழுத்தாள்.

அப்படீன்னா காசுக்குப் பதிலா ஏதாவது பொருள் வேணுமா?
என்று கேட்டார் சீடர் ஒருவர்.

ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண், “எனக்குக் காசும் வேணாம்… பொருளும் வேணாம் சாமீ. பெருமாள் இருக்கக்கூடிய பரமபதத்தை அடையணும்; மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க. சந்தோஷமா போயிடுவேன்” என்றாள்.

ராமானுஜர் ஆச்சரியத்துடன் பார்த்தார்.

ஆசார நியமங்களோ, சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள், ‘மோக்ஷம் வேண்டும்’ என்கிற ஆசை தோன்றியது விந்தைதானே! தவிர, இப்படி ஒரு கோரிக்கையை அவள் வைப்பாள் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை.

ஒரு சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, “கவலைப்படாதம்மா… உன்னோட நல்ல குணத்துக்கு நிச்சயம் மோட்சம்தான்
கிடைக்கும். சந்தோஷமா போயிட்டு வா” என்றார் அவர்.

ஆனால், அந்தப் பெண்மணி விடவில்லை. “ஒங்க வாக்கு அப்படியே பலிக்கட்டும் சாமீ. ஆனா, அந்த மோட்சம் எனக்குக் கிடைக்கறதுக்கு ஒரு வழியைக் காட்டுங்க. நான் போய்ச் சேர்றேன்” என்றாள். ராமானுஜர் சிரித்தார்.

“அம்மா… நீ நினைப்பதுபோல் மோட்சத்துக்கு ஒரு வழியைக் காட்டுவதோ, மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ, எனக்கோ இங்கு கூடி இருக்கின்ற சிஷ்யர்களுக்கோ இல்லை.

மேலே திருமலையில் இருக்கின்றானே ஒருவன்… ஏழுமலைக்குச் சொந்தக்காரன்… அவன்கிட்டப் போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவனுக்குத் தான் உண்டு” என்றார்.

இதற்குப் பிறகும் அந்த மோர்க்காரப் பெண்மணி நகர்கிற
வழியாக இல்லை.

“சாமீ… மேலே இருக்கிற ஏழுமலையான் கிட்ட போய் எத்தனையோ தடவை ‘மோட்சம் வேணும் மோட்சம் வேணும்’னு கேட்டுப் பாத்துட்டேன். ஆனா, அங்கே இருக்கிற பெருமாள் வாயைத் தொறந்து பேசக்கூட மாட்டேங்கிறாரே…” என்றாள் பொருமலாக.

“அப்படி இல்லேம்மா… அவருக்கு எத்தனை வேலை இருக்கோ… அதை ஒரு குறையா சொல்லிட்டு இருக்காதே. உன் மனசுல
படறதை – நீ கேக்கணும்னு நினைக்கறதை அவர்கிட்ட கேட்டுக்கிட்டே இரு. என்னிக்கானும் ஒருநாள் நிச்சயம் செவி சாய்ப்பார்” என்றார் ராமானுஜர்.

“இல்லீங்க சாமீ. ஒங்களைத்தான் நம்புறேன். ஒங்களைப் பாத்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு” என்றாள், குரலில் உற்சாகத்துடன்.

இவள் ஏதோ ஒரு தீர்மானத்துடன்தான் இருக்கிறாள் போலிருக்கிறதே’ என்று யோசித்தார் ராமானுஜர்.

மீண்டும் அந்தப் பெண்மணியே, விநயமாகப் பேசினாள்.

“சாமீ… எனக்கு மோட்சம் தரச் சொல்லி பெருமாள்கிட்ட சிபாரிசு செஞ்சு நீங்கதான் ஒரு ஓலை எழுதித் தரணும். ஒங்களை மாதிரி பெரியவங்க ஓலை கொடுத்தா, இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு பெருமாள் எனக்குப் பதில் சொல்லுவாருன்னு தோணுது” என்றாள் தெளிவாக.

இதற்கு மேலும் மறுக்க இயலாது என்று உணர்ந்த ராமானுஜர், சிஷ்யனிடம் ஓர் ஓலை நறுக்கும், எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார்.

அதைக் கேட்டதும், சீடர்களுக்கு வியப்பு தாங்க முடியவில்லை. என்றாலும், அவர் கேட்டதை எடுத்துக் கொண்டு வந்து தந்தனர்.

நிஜமாகவே திருமலை பெருமாளுக்கு சிபாரிசு செய்து, குருநாதர் ஓலை எழுதப் போகிறாரா… இல்லை அந்தப் பெண்மணியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஏதேனும் செய்கிறாரா?’ என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாகி, ராமானுஜரைச் சுற்றி அமர்ந்து, கவனிக்கலானார்கள்.

மேலே அண்ணாந்து திருமலையைப் பார்த்து இருகரம் கூப்பிவிட்டு, ஓலை நறுக்கில் பெறுநர் முகவரியை எழுதும் இடத்தில் ‘ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், திருமலை’ என்று குறிப்பிட்டுவிட்டு, பெண்மணியின் கோரிக்கையை எழுதத் தொடங்கினார் ராமானுஜர். எழுதி முடித்த பின் ஓலையின் கீழே தன் கையெழுத்தையும் போட்டார். பின்னே… ஒரு கடிதம் என்றால்,
அது எங்கிருந்து வருகிறது என்பதும் முக்கியம் ஆயிற்றே!

அதை வைத்துதானே சிபாரிசு மதிப்பிடப்படும்?! அதை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார்.

அப்போது ஓலை நறுக்கில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை சீடர்களும் படித்துப் பார்த்தனர்.

‘மோர்க்காரிக்கு மோட்சம் கிடைக்க அனுக்ரகம் செய்’ என்பதாக சிபாரிசு செய்து எழுதப்பட்டிருந்தது.

ஓலையை வாங்கிய அடுத்த விநாடி அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலையை நோக்கிப் புறப்பட்டாள்.

மலை ஏறி, பெருமாள் சன்னிதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் கொடுத்தாள்.

மோர்க்காரப் பெண்மணியை மேலும் கீழும் பார்த்து, இது என்ன ஓலை? என்று குழப்பத்துடன் கேட்டனர் அர்ச்சகர்கள்.

அவர்களிடம் முழு விவரத்தையும் சொன்னாள் அவள்.

ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலை என்று அறிந்ததும், மறுப்பு ஏதும் சொல்லாமல் அதைக்கொண்டு போய் பெருமாளின்
முன்னால் நீட்டினர்.

எப்பேர்ப்பட்ட ஆச்சார்யர், ராமானுஜர் ! அவருக்கு உண்டான முக்கியத்துவத்தை பெருமாள் கொடுக்காமலா இருப்பார்?!

தம் வலக் கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டார் பெருமாள். விஷயம் அறிந்தார். பிறகு, உனக்கு மோட்சம் தந்தேன் என்று மோர்க்காரியைப் பார்த்துப் பெருமாள் திருவாய்
மலர்ந்தார்.

அடுத்த கணம் வானில் இருந்து பிரகாசமாக ஒரு புஷ்பக விமானம் வந்தது. அதில் இருந்து விஷ்ணு தூதர்கள் இறங்கினர். மோர்க்காரியைத் தங்களுடன் ஏற்றிக் கொண்டு வைகுந்தம் புறப்பட்டனர்.

ராமானுஜர் ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்தால், பெருமாளிடம் எப்பேர்ப்பட்ட கவனிப்பு, பார்த்தீர்களா?

உடையவர், உடையவர் என்று கொண்டாடுவதன் சூட்சுமத்தை உணர்த்துகிற சம்பவமல்லவா இது!

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும்


"ரொம்ப நல்ல காரியம் பண்ணினே! க்ஷேமமா இருப்பே!"

 *"ரொம்ப நல்ல காரியம் பண்ணினே! க்ஷேமமா இருப்பே!"ன்னு கையைத் தூக்கி, ஆசீர்வாதம் பண்ணினார் மகாபெரியவா*.


பிடில் சுந்தர சாஸ்திரிகள்ங்கிற பெரியவர் ஒருத்தர், ஆதிசங்கரரோட ஜயந்தியை ரொம்ப வருஷமா நடத்திண்டு வந்தார். மகாபெரியவா என்னைக் கூப்பிட்டு, ‘அவருக்கு ரொம்ப வயசாயிடுத்து. பாவம்… சிரமப்படறார். இனிமே நீ ஏத்துண்டு நடத்து’ன்னார்.

பெரியவா சொன்னபடி, கலவை கிராமத்துல சுமார் ஐம்பது வருஷமா, விடாம நடத்திண்டுவரேன். மகாபெரியவாளும் அந்த விழாவுல நிறைய முறை கலந்துண்டிருக்கா..!"

சிலிர்ப்புடன் விவரித்த பட்டு சாஸ்திரிகள், எந்த முன் அனுபவமும் இல்லாமல்,பெரியவாளின் அனுக்கிரகத்தால் மட்டுமே சமாளித்து, நல்ல பேரெடுத்த சம்பவம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டார்.

சுமார் 40, 45 வருஷங்கள் இருக்கும். பாதயாத்திரை கிளம்பின மகாபெரியவா, சோளிங்கபுரத்துல வந்து தங்கினா. அது, மிகப்பெரிய நரசிம்ம க்ஷேத்திரம். அங்கே ஆஞ்சநேயர் ஆலயமும் உண்டு. ரொம்ப விசேஷமான தலம் அது.

மகாபெரியவா அங்கு முகாமிட்டிருக்கிறதைத் தெரிஞ்சுண்ட முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன், அவர் மனைவி ஜானகி, ஆந்திர தேசத்தோட ஐ.ஜி. ராமநாதன் எல்லோரும் அங்கே வந்திருந்தா. வாலாஜாபேட்டை லேருந்து கோட்டாசெட்டி, டாக்டர் வேணுகோபால்னு எல்லாரும் மகாபெரியவாளைத் தரிசிக்க வந்துட்டா.

ஸ்ரீகண்டன்னு ஒருத்தர், மடத்தைச் சேர்ந்தவர்தான். அவர்தான் மகாபெரியவாளுக்கு பிக்ஷை பண்ணிப் போடுவது வழக்கம். அவர், பெரியவாளுக்கு மட்டும்தான் பிக்ஷை பண்ணுவார்; அது மட்டும்தான் அவரோட வேலை.

ஆனா, அன்னிக்கி மகாபெரியவாளுக்கு என்ன தோணித்தோ தெரியலை… என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். "என்னைப் பார்க்கணும்கிறதுக்காகச் சிரமப்பட்டு எல்லாரும் இந்த ஊருக்கு வந்திருக்கா. அவாளைப் பசியும் பட்டினியுமா இருக்கவிடலாமா? தப்பில்லையோ! நீ என்ன பண்றே, அவாளுக்கெல்லாம் உன்னால முடிஞ்சதை சமைச்சுப் போட்டுடு"ன்னார்.

அதைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுது. ஒரு நிமிஷம், அப்படியே பேச்சுமூச்சு இல்லாம நின்னுட்டேன். பின்னே… எனக்கு சமைக்கவே தெரியாது. ‘எனக்கு என்ன சமைக்கத் தெரியும்னு, மகாபெரியவா என்னைப் போய் சமைச்சுப்போடச் சொல்றார்?’னு தவிச்சுப்போயிட்டேன். ஆனா, அவர்கிட்டே போய், ‘எனக்குச் சமையல் தெரியாது வேற யார் கிட்டேயாவது சொல்லுங்கோ’னு சொல்லமுடியுமா, என்ன? பத்து வயசுலேருந்து பெரியவாளைப் பார்த்துண்டிருக்கேன். யாரையும் எந்தச் சங்கடத்துலயும் மாட்டிவிடமாட்டார்னு தெரியும். அதனால அவரே இந்தக் காரியத்துக்கும் ஒத்தாசையா, பக்கபலமா இருப்பார்னு முழுசா நம்பினேன்.

சத்திரத்து மேனேஜர்கிட்டே போய், பாத்திரங்களைக் கேட்டு வாங்கிண்டு வந்தேன். அங்கே… பக்கத்துலயே இருந்த பெட்டிக் கடைல ஒரு தேங்காயும், கொஞ்சம் வெஞ்சனமும் வாங்கிண்டேன்.

அது ஒரு மலையடிவாரம். அந்த இடத்துல, அம்மிக்கல்லுக்கு எங்கே போறது? கொஞ்சம் நீட்டமா இருந்த கல்லு மேல பருப்பு, தேங்காய், மிளகாய்னு எல்லாத்தையும் சேர்த்து வெச்சு அரைச்சுத் துவையல் பண்ணினேன்.

அங்கங்கே கிடந்த கல்லைப் பொறுக்கிண்டு வந்து, அடுப்பு தயார் பண்ணிண்டேன். காஞ்ச குச்சிகளையெல்லாம் பொறுக்கி எடுத்துண்டு வந்து, அடுப்பை மூட்டி சாதம், ரசம் செஞ்சு இறக்கினேன். யாரோ அரிசி கொடுத்திருந்தா. அந்த அரிசியைக் காமிச்சு, ‘இதப் பார்… ராஜா மாதிரி இருக்கு அரிசி!’ன்னு எடுத்துக்கச் சொன்னார் பெரியவா.

ஒரு மலையின் மேல நரசிம்மர்; இன்னொரு சின்ன மலையின் மேல ஆஞ்சநேயர். ரெண்டு மலையிலேயும் ஏறி, தரிசனம் பண்ணினோம். பெரியவாளும் மலைகள் மீது ஏறி வந்து, ஸ்வாமி தரிசனம் பண்ணினார்.

கீழே இறங்கறதுக்கு மத்தியானம் ஆயிடுத்து. அவாளுக்கெல்லாம் நல்ல பசி. எல்லாரையும் உக்கார வெச்சு, சாப்பாடு பரிமாற ஏற்பாடு பண்ணினேன். வந்திருக்கிறவா எல்லாரும் பெரிய மனுஷா. தேசத்துல முக்கியப் பதவிகள்ல இருக்கறவா. இதுவரை, சமைக்கவே சமைக்காதவன் நான். என்னோட சமையல் அவாளுக்குப் பிடிக்குமோ, இல்லையோ?! பயத்தோடயே பரிமாறினேன். ஆனா, வந்தவா எல்லாரும் திருப்தியா சாப்பிட்டா. எனக்குப் பரம நிம்மதி.

‘வைதீக, சம்பிரதாய சாஸ்திரங்கள் மட்டும்தான் எனக்குத் தெரியும். சமைக்கத் தெரியாது’ன்னு பெரியவாகிட்ட சொல்லி, கையக் கட்டிண்டு சும்மா இருந்துடலை நான். ‘இது மகாபெரியவா உத்தரவு; நமக்கு ஒண்ணும் தெரியாட்டாலும் அவர் பாத்துப்பார்’னு அசைக்க முடியாத தைரியம் உள்ளுக்குள்ளே இருந்துது. அவருடைய அனுக்கிரகம்தான், என்னைக் காப்பாத்தித்து!

சமையல் நன்னா இருந்துதுன்னும், வயிறு நிறைய, ருசிச்சுச் சாப்பிட்டதாவும் எல்லாரும் சொன்னா. உத்தரவு வாங்கிக்கறதுக்காகப் போனப்ப, பெரியவாகிட்டயும் என்னைப் பத்தி சிலாகிச்சு ஏதோ சொன்னாப்போல இருக்கு. வந்தவா எல்லாரும் போனப்புறம், பெரியவா என்னைக் கூப்பிட்டா. உள்ளூர பயமா இருந்தாலும், பெரியவா எதிர்ல போய் நின்னேன்.

"ரொம்ப நல்ல காரியம் பண்ணினே! க்ஷேமமா இருப்பே!"ன்னு கையைத் தூக்கி, ஆசீர்வாதம் பண்ணினார் மகாபெரியவா. "அது போதும் எனக்கு! அவரோட ஆசீர்வாதம் போதும், மனசு நிறையறதுக்கு! அதைவிட வேறென்ன வேணும்?!" – நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் பட்டு சாஸ்திரிகள்.

ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர.

நாராயண நாராயண ... !!!

நாராயண நாராயண ... !!!

உள்ளதற்கெல்லாம் உறைவிடமாகியவர். 'நர:' என்றால் ஆன்மா. அதனிலிருந்து உண்டானவையெல்லாம் 'நாரா:' எனப்படும். அவைகட்கு 'அயனம்', அதாவது இருப்பிடம். அவைகளில் எல்லாவற்றிலும் உள்ளிலும் வெளியும் நிறைந்திருப்பவர் ஆதலால் 'நாராயணன்'.
இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால்,ஆன்மாவிலிருந்து வெளி, வெளியிலிருந்து காற்று, காற்றிலிருந்து தீ, தீயிலிருந்து நீர், நீரிலிருந்து நிலம் -- இதுதான் படைப்பு வரிசை.இப்படி விளக்கம் பெற்று வெளியானதே இவ்வுலகம்.இது ஆன்மா எனப் பொருள்படும் 'நர'னிலிருந்து உண்டானதால் 'நாரம்'.நாரத்தை இருப்பிடமாகக் கொண்டவர் 'நாரயணன்'.

வெளி முதலிய ஐந்து பெரும்பூதங்களும் ஒன்றோடொன்று நன்கு கலந்து வெளித் தோற்றம் பெறுமுன்னர், தனித்தனியாக இருந்தன.அவைகளுக்கு 'காரணோதகம்' அல்லது 'அப்பு' என்று பெயர். அம்மூல தத்துவங்களில் உட்புகுந்து அவற்றைத் தன்னிடமாகக் கொண்டு படைப்பைத் தொடங்கியவர் 'நாராயணன்'
வடமொழி இலக்கணத்தில் 'தத்புருஷ-ஸமாஸம்' (வேற்றுமைப்புணர்ச்சி), 'பஹுவ்ரீஹி ஸமாஸம்' (அன்மொழித்தொகை) என்று இருவித சொற்புணர்ச்சிகள் உண்டு. 'நாராயண' என்ற சொல், 'நர' , 'அயன' ஆகிய இரண்டு சொற்களைக் கொண்டு சேர்க்கும்போது, இரண்டுவிதமாகவும் சேரும்.

நாராணாம் அயனம் அதாவது, நாரங்களுக்கு அயனம், என்பது முதல் வகை.

நாரா: அயனம் யஸ்ய ஸ:, அதாவது 'நாரங்களை அயனமாக (நுழையப்படும் பொருளாக) உடையவர்' என்பது இரண்டாவது வகை.

உயிருள்ளவை, உயிரில்லாதவை இரண்டும் இல்லாத இடத்திலும் அவன் உளன் --இது முதல் வகைப் புணர்ச்சியினால் ஏற்படும் பொருள். இதை 'புறப்பரவல்' ('பஹிர்-வ்யாப்தி) என்று வேதாந்தத்தில் கூறுவர்.

உயிருள்ளவையோ, உயிரில்லாதவையோ, உள்ள இடத்தில் தான் இல்லை என எண்ணவொண்ணாதபடி அவன் கலந்து நிற்கிறான் -- இது இரண்டாவது வகைப் புணர்ச்சியினால் ஏற்படும் பொருள். இதை 'உள்ளுறைதல்' ('அந்தர்-வ்யாப்தி) என்று வேதாந்தத்தில் கூறுவர்.

Wednesday, September 2, 2020

ஹரி ஓம் நமசிவாய! ஹரி நாராயணா !

 🤘🐚ஹரி ஓம் நமசிவாய🔱🤘

🌿ஹரி நாராயணா 🌻🌹🐍🐚
கபடம்!

கண்ணன் ருக்மிணியின் மாளிகையில் சயனித்திருந்தான். ஒன்றுமே தெரியாதவர் போல் உறங்குவதைப் பார்! இவர் அறிதுயில் கொள்கிறார் என்பது எனக்கு தெரியாதா என்ன! அப்படியானால் என்ன! உறங்குவது போல் பாசாங்கு செய்வான். ஆனால், இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் எல்லாமே அவனுக்கு தெரியும். எல்லாம் அறிந்தபடியே துயில் கொள்வது தான் அறிதுயில்,...இப்படி எண்ண அலைகளில் மிதந்து கொண்டிருந்தாள் ருக்மிணி. அப்@பாது, அங்கே நாரதர் வந்தார். கண்ணா! ஞாபகமில்லையா! இன்று ருக்மிணியை மணந்தநாள் என்பதற்காக இங்கே வந்து விட்டாய். இன்றுதானே பாமாவுக்கும் பிறந்தநாள்! அங்கேயும் போகாவிட்டால், எரிமலை வெடித்து விடுமே! என்ன செய்யப் போகிறாய்? அங்கும் தான் போவேன்... அதெப்படி முடியும்! நீ இங்கிருந்து காலை வெளியே வைத்தாலே அவள் கண்களில் அனல் பறக்குமே! கண்ணன் இதற்கு பதில் சொல்லவில்லை, சிரித்தான்.

நாரதர் கலகமூட்ட பாமா வீட்டுக்கு கிளம்பி விட்டார். அங்கே போனால், கண்ணனின் திருவடிகளை ரசித்தபடியே, அவன் அறிதுயில் கொள்வதை பாமா ரசித்துக் கொண்டிருந்தாள். அடடா...இந்தக் கபடன் இங்கே எப்போது வந்தான்! கண்ணிமைக்கும் நேரத்தில் நான் இங்கே வந்து விட்டேன், இவன் அதற்கும் முன்னதாக இங்கே...நாரதருக்கு தலை குடைந்தது. பாமா எழுந்து நாரதரை வரவேற்றாள். அமருங்கள்! பருக பாயாசம் கொண்டு வருகிறேன், இன்று என் பிறந்தநாள்... அறிவேன் தாயே...சரி...உன் கணவர் எப்போது இங்கே வந்தார்! என்ன நாரதரே! இவரை எங்கோ பார்த்த மாதிரியல்லவா பேசுகிறீர்கள்! நேற்றையில் இருந்தே இவர் இங்கு தான் இருக்கிறார்! இல்லையே! இவரை சற்று முன் ருக்மிணி இல்லத்தில் பார்த்தேனே.. நாரதர் லேசாக அவள் காதில் போட்டார். பொறுமையின் சின்னம் பூமாதேவி. அந்த பூமாதேவி தான் சத்யபாமாவாக பூமிக்கு வந்திருக்கிறாள். அந்த பொறுமைசாலிக்கே கண் சற்று சிவந்து விட்டது.

நாரதரே! வேண்டாம்...என் பிறந்தநாளும் அதுவுமாக கலகம் வேண்டாம் என நினைக்கிறேன்! இந்த அரி இங்கு தான் துயில் கொண்டிருக்கிறார்,. அறிதுயில்...அரிதுயில்... இந்த வார்த்தை ஜாலத்தை அந்த குழப்பமான நேரத்திலும் ரசித்தார் நாரதர். அரி (ஹரி) என்னும் கிருஷ்ணன் துயில் கொண்டிருக்கிறான்...எல்லாம் அறிந்தபடி அறிதுயில் கொண்டிருக்கிறான்...! கலகம் செய்பவனிடமே கலகமா...! நாரதர் கண்ணன் அருகே சென்றார். நாராயணா... நாராயணா... என்றார். கண்ணன் கண் விழித்தான். மகாவிஷ்ணுவே! இதென்ன கபடம்...அங்கும் இருக்கிறீர்! இங்கும் இருக்கிறீர்!...என்றவரை இடைமறித்த கண்ணன், இந்த ஊரெல்லாம் போய் பாரும். என்னை அழைத்த எல்லா கோபியர் வீட்டிலும் கூடத்தான் இருக்கிறேன்...என் பக்தர்கள் வீட்டில் எல்லாம் கூட இருக்கிறேன்...எங்கும் இருப்பவன் தானே நான்...அதை விடும்... உம் மனதில் கூட நான் தான் இருக்கிறேன்! அதனால்தான் நாராயண நாமத்தை விடாமல் சொல்லும் பாக்கியம் உமக்கு கிடைத்திருக்கிறது! நாரதர் கண்ணனிடம் விடைபெற்று வெளியே கிளம்பினார். எல்லா கோபியர் வீட்டிலும் கண்ணன் இருந்தான். கண்ணா! உலகத்தார் கபடு செய்தால், அது மற்றவர்களைப் பாதிக்கிறது. உன் கபடம் எல்லாரையும் ரசிக்க வைக்கிறதே! அது எப்படி! புரியாத இந்தக்கேள்விக்கு விடை தெரியாத அந்த திரிலோக சஞ்சாரி நாராயண என உச்சரித்தபடியே வானில் நடந்தார்.
🤘சர்வம் விஷ்ணு மயம் 🌹🌻🌸🐍🐚
🤘🐚ஹரி ஓம் நமசிவாய🔱🤘

*பதினாறு (16) வார்த்தைகளில் ராமாயணம்*..!

 *பதினாறு (16) வார்த்தைகளில் ராமாயணம்*..!


*பிறந்தார், வளர்ந்தார், கற்றார், பெற்றார்,*
*மணந்தார், சிறந்தார், துறந்தார், நெகிழ்ந்தார்*,
*இழந்தார், அலைந்தார், அழித்தார்,செழித்தார்*,
*துறந்தார், துவண்டார், ஆண்டார், மீண்டார்*

விளக்கம்

1*பிறந்தார்*:
ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

2.*வளர்ந்தார்*:
தசரதர், கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது

3.*கற்றார்*:
வஷிஷ்டரிடம் சகல வேதங்கள், ஞானங்கள், கலைகள் முறைகள் யாவும் கற்றது.

4.*பெற்றார்*:
வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு, விஸ்வாமித்ரர் யாகம் காத்து, விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

5.*மணந்தார்*:
ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.

6.*சிறந்தார்*:
அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும், தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.

7.*துறந்தார்*:
கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.

8. *நெகிழ்ந்தார்*:
• அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
• குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
• பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
• பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும், தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும், தன்னலமற்ற குணத்தையும், தியாகத்தையும், விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
• அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
• சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
• விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
• எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.

9.*இழந்தார்*:
மாய மானின் பின் சென்று, அன்னை சீதையை தொலைத்தது.

10.*அலைந்தார்*
அன்னை சீதையை தேடி அலைந்தது.

11.*அழித்தார்*
இலங்கையை அழித்தது.

12.*செழித்தார்*
சீதையை மீண்டும் பெற்று, அகமும் முகமும் செழித்தது. ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று,செல்வச் செழிப்பான வாழ்க்கைக்குத் திரும்பியது.

13.*துறந்தார்*
அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில், மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக, அன்னை சீதையைத் துறந்தது.

14.*துவண்டார்*
அன்னை சீதையை பிரிய நேர்ந்தது, ஶ்ரீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.

15.*ஆண்டார்*
என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவறச் செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.

16. *மீண்டார்*
பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது.

ஸ்ரீ ராமஜயம்.சீதா லக்ஷ்மண பரத சத்ருக்னா ஹனுமத் சமேதா ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சரணம் ஜெய்_ஸ்ரீராம்..!

ஆண்டாளுக்கு ஏன் 'கோதை' என்ற பெயர் உண்டானது?....

ஆண்டாளுக்கு ஏன் 'கோதை' என்ற பெயர் உண்டானது?....


கோதை என்றால் தமிழில் பூ மாலை என்று பொருள். இறைவனுக்குப் பூமாலைகளைச் சுமந்து சுமந்து பழகிய பெரியாழ்வாரின் திருக்கரங்களிலே, அவர் கண்டெடுத்த பெண் குழந்தையும் ஒரு பூமாலை போலவே தோன்றினாளாம். அதனால் கோதை என்று பெயர் சூட்டியதாகச் சொல்வார்கள். கோதா என்ற வடமொழிப் பெயருக்குப் பலவிதமான விளக்கங்கள் உள்ளன. தா என்றால் தருபவள். கோ என்றால் நல்வார்த்தை என்று பொருள். நல்வார்த்தைகளை உடைய பாசுரங்களை வழங்கியபடியால் கோதா. கோ என்ற சொல்லுக்கு ஞானம் என்ற பொருளும் இருப்பதால், தனது பாசுரங்களாலே உயர்ந்த ஞானத்தை நமக்கு அருள்வதால் கோதா என்றும் சொல்லலாம்.

கோ என்றால் மங்களம் என்றும் பொருளுண்டு. எனவே மங்களங்களை அருள்பவள் கோதா.ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்து அதற்கும் மங்களம் தந்தாள். 
அரங்கன் தென்திசை நோக்கிப் பள்ளி கொள்வது இலங்கையிலுள்ள விபீஷணனுக்கு அருள்புரிவதற்காக மட்டுமில்லை, ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரும் அதே தென்திசையில் இருப்பதால், அந்தத் தென்திசைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூரை நோக்கி அரங்கன் சயனித்திருப்பதாக oru ஸ்லோகத்தில் தேசிகன் தெரிவிக்கிறார். இவ்வாறு தென்திசை, செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரம், ஆடி மாதம் என அனைத்துக்கும் மங்களத்தை அருளியபடியால் அவள் கோதா. கோ என்றால் பூமி. தா என்று பிளந்தவள். பூமியைப் பிளந்து கொண்டு தோன்றியபடியால் கோதா என்றும் சொல்வதுண்டு.

“வேயர்புகழ் வில்லிபுத்தூர் ஆடிப் பூரம்
மேன்மேலும் மிக விளங்க விட்டுசித்தன்
தூய திருமகளாய் வந்து அரங்கனாற்குத்
துழாய்மாலை முடிசூடிக் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டு ஆறைந்தும்
நீயுரைத்த தையொரு திங்கள் பாமாலை
ஆயபுகழ் நூறுடன் நாற்பத்து மூன்றும்
அன்புடனே அடியேனுக்கு அருள்செய் நீயே!”

என்று தேசிகன் பாடியபடி, பெரியாழ்வாரின் திருமகளாய் அவதரித்த ஆண்டாள், அரங்கனையே மணந்து கொண்டபடியால், பெரியாழ்வாருக்கு அரங்கனின் மாமனார் என்னும் ஸ்தானம் கிட்டியது. இப்படிப் பெரியாழ்வாரின் பெருமையை
உலகுக்கு உணர்த்துதல் ஆண்டாளின் அவதார நோக்கமாகும்.

ஸ்ரீ வில்லி புத்தூர் கோவில் வரலாறு

 ஸ்ரீ வில்லி புத்தூர் கோவில் வரலாறு மூலஸ்தானத்தில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் வட விருசத்தினடியில் அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி அடிவருட சயனக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் கதை வேலையாய்ச் செய்து வர்ணம் தீட்டப்பட்ட கருடன், சேனை முதலியார், சூரியன், தும்பருநாரதர், சனத்குமாரர், வில், கதை, சக்கரம், சங்கு, பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து உண்டான தாமரையில் அமர்ந்த பிரம்மா, வாள் சனகர், கந்தர்வர்கள், சந்திரன், மதுகைடபர், பிருகு, மார்க்கண்டடேயர் உருவங்கள் இருக்கின்றன. விமானத்தைச் சுற்றி வர விமானத்திலே ஒரு சிறுவிட்ட வாசல் பிரகாரமும் இருக்கிறது. இதில் திருமுடியையும் திருவடிகளையும் சேவிக்க சிறிய திட்டி வாசல்கள் உள்ளன. இவை மார்கழித் திருநாள் ஆரம்பத்திற்கு முதல்நாள் பிரியாவிடையன்று யாவரும் வழிபடதிறந்து வைக்கப்படுகின்றன. 


திருத்தேர் : இக்கோயில் தேரில் மிகச் சிறத்த தொழில் நுட்பத்துடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சாலி வாகன சகாப்தம் கொல்லம் 1025 வருஷம் சௌமிய வருடம் ஆவணி 13 குருவாரம் என்று எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து இதன் பழமை நம்மை வியக்க வைக்கிறது.
திருப்பதியில் புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாள் மாலையை திருப்பதி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகின்றது.
இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வரும். மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத் தான் கள்ளழகர் அணிவிக்கிறார்.

ஆண்டாள் அவதார தலம்: ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த நாச்சியார் என்ற சிறப்பு பெயர் இத்திருத்தலத்தில் தான் கிடைக்கப்பெற்றது. சக்கரத்தாழ்வார் சந்நதி மிகப்புராதனமானது பஞ்சலோகத்தால் ஆன விக்ரகமே விக்ரகமாக விளங்குகிறது. வேறு எங்கும் இப்படி இல்லை.

திருஷ்டிக்காக பாடிய பாடல் : ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வார் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு பெற்றார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி, இப்பரிசை கிடைக்கச் செய்தார். இந்தக் காட்சியை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசித்தனர். மக்களின் கண் பெருமாள் மீது பட்டு அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என பெரியாழ்வார் அஞ்சினார். பக்தியின் உயர்நிலை இது. எனவே, அவர் பல்லாண்டு வாழ வேண்டும் எனக் கருதி,"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுபலகோடி நூறாயிரம்,மல்லாண்ட திண்தோள் மணிவண்ணாஉன் சேவடி செவ்வி திருக்காப்பு' என்று துவங்கி "திருப்பல்லாண்டு' பாடினார். இந்த உயர்ந்த பக்தியை மெச்சிய பெருமாள், "நீரே பக்தியில் பெரியவர்' என வாழ்த்தினார். அதுவரையில் "விட்டுசித்தன்' (விஷ்ணு சித்தர்)என்று அழைக்கப்பட்ட இவர், "பெரியாழ்வார்' என்னும் திருநாமம் பெற்றார். இந்தப் பல்லாண்டுப் பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் தினமும் பாடப்படுகிறது.

திருப்பாவை விமானம் :மார்கழி நோன்பிருந்த ஆண்டாள், திருப்பாவை எனும் பிரபந்தம் பாடினாள். 30 பாசுரங்கள் உடையது இது. கண்ணனை தரிசிக்க தோழியர்களை எழுப்புவது போன்ற பொருளில் இப்பாசுரம் பாடப்பட்டிருக்கும். தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில், ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன. இதற்கு, "திருப்பாவை விமானம்' என்றே பெயர். ஆண்டாளை தரிசிப்பவர்கள் இந்த விமானத்தை அவசியம் தரிசிக்க வேண்டும்.
மாதவிப்பந்தல்:ஆண்டாள் சன்னதிக்கு முன்புறத்தில் மாதவிப்பந்தல் உள்ளது. ஆண்டாள், இந்த பந்தலுக்கு கீழ்தான் வளர்ந்தாள். இந்தப்பந்தல் மரங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள், தன்னை கோபிகையாக பாவித்து, கண்ணனை வேண்டி பாடிய சிற்பங்கள் இந்த பந்தலுக்கு அருகிலுள்ள விதான சுவரில் உள்ளது. இதேபோல திருப்பாவை காட்சிகளை ஆண்டாள் கோயில் முன்மண்டபத்தில் ஓவியங்களாகவும் காணலாம்.
ஆண்டாள் மடியில் ரங்கநாதர்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ஆண்டாளின் மடியில் சயனித்திருப்பார். அதுபோல, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் ஆடித்திருவிழாவின் 7ம் நாளில் ரங்கமன்னார் சுவாமி, ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் அருளுவதைக் காணலாம். இவ்வூர் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. தம்பதியரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடியது.

ஆண்டாளின் தாத்தா,பாட்டி:முகுந்த பட்டர், பத்மவல்லி என்ற பெருமாள் பக்தர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் இறைவனான வடபத்ரசாயிடம் பக்தி கொண்டவர்களாக இருந்தனர். கோயில் வேலை செய்து வந்த அவர்களுக்கு கருடாழ்வாரின் அம்சமாக, ஐந்தாவதாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது. இவருக்கு, "விஷ்ணு சித்தர்' என்று பெயரிட்டு வளர்த்தனர். இவரும் பெருமாள் தீராத பக்தி கொண்டிருந்தார். அவரது பக்தியில் மகிழ்ந்த லட்சுமி தாயார், இவருக்கு வளர்ப்பு மகளாக ஆண்டாள் என்ற பெயரில் அவதரித்தாள். அவ்வகையில் முகுந்தபட்டர், பத்மவல்லி இருவரும் ஆண்டாளின் தாத்தா, பாட்டியாகின்றனர்.

திரட்டுப்பால் நைவேத்யம்:ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில், மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவழியினரான வேதபிரான்பட்டர் வீட்டிற்கு செல்வாள். அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். இதனை, "பச்சைப்பரத்தல்' என்பர். கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்யத்தை ஆண்டாளுக்கு படைக்கின்றனர். திருமணம் முடிக்கும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக்கும் இவ்வாறு கொடுத்தனர் அக்கால மக்கள். அதன் நினைவாக இன்றும் இவ்வழக்கம் தொடர்கிறது.
பால்மாங்காயை பார்த்திருக்கிறீர்களா?:வைகாசி பவுர்ணமியின்போது, ஆண்டாளுக்கு தயிர் சாதம், "பால்மாங்காய்' நைவேத்யம் செய்கின்றனர். சுண்ட காய்ச்சிய பாலில் நறுக்கிய மாங்காய் துண்டுகள், மிளகு, சீரகம், சீனி ஆகியவை சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. வைகாசி கோடைமாதமாக இருப்பதால் பெரியாழ்வார் தலைமுறையைச் சேர்ந்த குடும்பத்தினர் (ஆண்டாளின் வீட்டார்) இதனை படைக்கின்றனர். இந்நேரத்தில் ஆண்டாள் வெண்ணிற உடை, சந்தனம், மல்லிகை மலர் சூடி காட்சி தருவாள்.

108 கம்பளி: கார்த்திகை மாதத்தில் வரும் கவுசிக ஏகாதசியன்று ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகியோர் வடபத்ரசாயி சன்னதியில் உள்ள கோபாலவிலாசத்திற்கு எழுந்தருள்கின்றனர். அப்போது இம்மூவருக்கும் 108 கம்பளிகள் போர்த்துகின்றனர். குளிர்காலம் என்பதால் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.

பாவை நோன்பு: பெண்கள், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவள் ஆண்டாள். பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே தன் கணவனாக அடைய விரும்பியவள். அவள் கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தாள். அவளுக்கு அருள் செய்த சுவாமி, பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆகவே, பெண்கள் பாவை நோன்பு இருந்தால் விரும்பிய கணவன் கிடைப்பர் என்பது நம்பிக்கை.

கன்னிகாதானம்: பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கும்போது, பெரியாழ்வார் தன் இருப்பிடத்திற்கு செல்கிறார். அவருடன் பெரியாழ்வாரின் வம்சாவழியினர் சேர்ந்து கொண்டு 2 கலசத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு ரங்கமன்னாருக்கு பூரணகும்ப மரியாதை கொடுத்து, தங்கள் பெண்ணை மனப்பூர்வமாக கொடுப்பதாக சொல்லி, கன்னிகாதானம் செய்து கொடுக்கின்றனர். பின் ரெங்கமன்னார், ஆண்டாளுக்கு மாலையிட்டு தன் மனைவியாக்கிக்கொள்கிறார்.
திருமாளிகை:ஆண்டாள், சிறுமியாக இருந்தபோது வளர்ந்த திருமாளிகையே தற்போது ஆண்டாள் கோயிலாக இருக்கிறது. இதனை ஆண்டாளுக்கு, பெரியாழ்வார் சீர் கொடுத்தாராம். எனவே, இக்கோயிலை "நாச்சியார் திருமாளிகை' என்று சொல்கிறார்கள்.

முத்துப்பந்தல்: ஆண்டாள் சன்னதியில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபம், "முத்துப்பந்தல்' எனப்படுகிறது. இதில் வாழைமரம், மாவிலை மற்றும் பூச்செண்டும் இருக்கிறது. மேலே திருமாலின் பாதம் இருக்கிறது.

பால்கோவா சிறப்பு ஏன்?:ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றாலே பால்கோவாதான் நினைவிற்கு வரும். பசுமாடுகள் நிறைந்திருக்கும் பகுதி என்பதால் இங்கு அதிகளவில் பால்கோவா போன்ற பால்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.திருப்பாவை யில், "குடம் வைக்கவைக்க பால் நிறையும் அளவிற்கு கறவைகள் (பசுக்கள்) அதிகமாக வாழும் பகுதி' என்று பொருள்படும்படியாக ஆண்டாள் பாடியிருக்கிறாள். அவள் இத்தலத்தை கோகுலமாகவே எண்ணி வாழ்ந்ததால் பெருமாள், இப்பகுதியை பசுக்கள் நிறைந்த பகுதியாக மாற்றி அருளினார். இன்றும் இங்கு பசுக்கள் சுரக்கும் பாலிற்கு தனி சுவை இருக்கிறது. பால்கோவாவும் புகழ் பெற்று விட்டது.

ஏலே' ஆண்டாளு!: திருநெல்வேலி மாவட்டத்தில் செல்லமாகவும், கோபமாகவும் பயன்படுத்தப்படும் வார்த்தை "ஏலே'. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு காலத்தில் திருநெல்வேலியை சார்ந்தே இருந்தது. இதன் காரணமாக "ஏலே' என்ற வார்த்தை இங்கும் பயன்படுத்தப்பட்டது. ஆண்டாள் காலத்தில் இந்த வார்த்தை "எல்லே' என்று இருந்ததாம். திருப்பாவையில் "எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?' என தோழியைப் பார்த்து கேட்கிறாள் ஆண்டாள். "எல்லே' என்ற செய்யுள் வார்த்தையே திரிந்து "ஏலே' என்று ஆனதாகச் சொல்வர். குழந்தைகள் ஆணாயினும், பெண்ணாயினும் "ஏலே' என செல்லமாக அழைப்பர். பெரியவர்களிடையே சண்டை வந்து விட்டால், வயது வித்தியாசம் பாராமல் கோபத்தில், "ஏலே! உன்னை கவனிச்சுகிறேமுலே' என்று சொல்வது நெல்லை மக்களின் வழக்கம்.

தட்டொளி: ஆண்டாள் சன்னதிக்கு நேர் எதிரே வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி ஒன்று உள்ளது. கண்ணாடியை அக்காலத்தில் "தட்டொளி' என்று சொல்லியுள்ளனர். இதில் தான் ஆண்டாள் தன் முகத்தை பார்த்துக்கொண்டாளாம். தற்போது பளபளப்பு குறைந்துள்ள இந்த கண்ணாடியைத் தான், ஆண்டாள் திருப்பாவையில், "உக்கமும் (விசிறி) தட்டொளியும்' என்று குறிப்பிட்டிருக்கிறாள்.

ஓம் வடிவ அம்சம் : ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியாழ்வார் சன்னதிகள் ஓம் எனும் பிரணவ மந்திர அடிப்படையில் அமைந்துள்ளது. இதில் ரெங்கமன்னார் "அ'காரமாகவும், ஆண்டாள் "ம'காரமாகவும், கருடாழ்வார் "உ'காரமாகவும் அமைந்து "ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் பொருளாக திகழ்கின்றனர்.

பேண்ட்,சர்ட் அணிந்த பெருமாள்: திருமணத்தில், மாப்பிள்ளை அழைப்பின்போது பேண்ட், சட்டை அணிந்து வருவர். இது இன்று, நேற்று நடக்கும் வழக்கமல்ல. பெருமாள், ஆண்டாளை திருமணம் செய்தபோதே, பேண்ட், சட்டை அணிந்து சென்றார். இதன் அடிப்படையில் இங்குள்ள உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தே காட்சி தருகிறார். ஏகாதசி, அமாவாசை, தமிழ்வருடப்பிறப்பு ஆகிய விழாக்காலங்களில் இவர் வெள்ளை வேஷ்டி அணிந்திருப்பார்.

பெருமாள் அருகில் கருடாழ்வார்:பொதுவாக பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து தந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு அருகில் இருக்கிறார். ஆண்டாள் திருமணத்தின்போது, கருடாழ்வார் சுவாமியை ஸ்ரீரங்கத்திலிருந்து அழைத்து வந்தார். இதனாலும், மாப்பிள்ளை தோழனாகவும், எப்போதும் பெருமாள், தாயாரை வணங்க விருப்பப்பட்டதாலும் அருகில் இருப்பதாகவும், அவருக்கு மரியாதை செய்யும்விதமாக இவ்வாறு நிற்பதாகவும் சொல்வர்.
மனைவியின் விருப்பத்தை நிறை வேற்றிய பெருமாள்: கணவன், எப்பேர்ப்பட்ட உயரிய பொறுப்பில் இருந்தாலும் மனைவி விரும்பியதை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும். இதற்கு உதாரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பெருமாள் திகழ்கிறார்.தன் தந்தை பெரியாழ்வார் மூலமாக கண்ணனின் லீலைகளைப் பற்றி அறிந்து கொண்ட ஆண்டாள், கண்ணன் மீது தீராத அன்பு கொண்டாள். ஸ்ரீவில்லிப்புத்தூரை கோகுலமாகவும், தன்னை கோபிகைப் பெண்ணாகவும் பாவித்து பெருமாளை வேண்டி பாசுரங்கள் பாடினாள். பெருமாளும் அவளைதிருமணம் செய்து கொண்டார்.ஆனாலும், ஆண்டாள் விரும்பியது கண்ணனைத்தானே! எனவே, மனைவி ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இத்தலத்தில் பெருமாள், ஆண்டாளுக்கு கிருஷ்ணராக அருள்புரிந்தாராம். எனவே, இங்குள்ள ரெங்கமன்னார் கிருஷ்ணராகவும், ஆண்டாள் ருக்குமணியாகவும், கருடாழ்வார் சத்தியபாமாவுமாகவும் அருளுவதாக ஐதீகம்.

கீர்த்தி தரும் ஆண்டாள்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். பொதுவாக கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் கீர்த்தி உண்டாகும் என்பர். எனவே, இவளிடம் வேண்டிக்கொள்பவை அனைத்தும் நடக்கும் என்பர்.

வளையல், மஞ்சள்கயிறு பிரசாதம் :திருமணமாகாத பெண்கள் இங்கு கண்ணாடி கிணறை சுற்றி வந்து வேண்டிக்கொள்கிறார்கள். துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி வணங்கி, பின் அதனை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு, அருகிலிருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வந்து கிணற்றினுள்ளே பார்த்துவிட்டு பின் மீண்டும் ஆண்டாளிடம் வந்து வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுபவர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.

முப்புரி ஊட்டிய தலம்:ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாய் (சுயம்பு) ஆகிய மூன்று பேர் அவதரித்த பெருமையுடையது. எனவே, இத்தலத்தை "முப்புரிஊட்டியதலம்' என்கின்றனர். திவ்யதேசங்களில் புனிதமான தலமாகவும் கருதப்படுகிறது.

லட்சுமி ஹயக்ரீவர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முதல் பிரகாரத்தில் லட்சுமி ஹயக்ரீவர், ஓவிய வடிவில் அருள்பாலிக்கிறார். கல்வியில் சிறந்து திகழ இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

தமிழக அரசு சின்னம்:ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங்கோயிலுடையான் சன்னதி ராஜகோபுரத்தை கட்டியவர் பெரியாழ்வார். 11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. பெரியாழ்வார் காலத்தில் ஒரு ரூபாய்க்கு 196 காசுகள் மதிப்பிருந்ததாம். இதன் அடிப்படையில் அவர், இந்த உயரத்தில் கோபுரம் கட்டியதாக சொல்கிறார்கள். இக்கோபுரத்தை பற்றி கம்பர், ""திருக்கோபுரத்துக் கிணையம்பொன் மேருச்சிகரம்'' என மேருமலை சிகரத்திற்கு ஒப்பாக குறிப்பிட்டு பாடியுள்ளார். பொதுவாக கோயில் கோபுரங்களில் சுவாமிகளின் திருவுருவ சிற்பங்கள் இருக்கும். ஆனால், என்ன காரணத்தாலோ பெரியாழ்வார் இக்கோபுரத்தை கட்டியபோது சிற்பங்கள் எதுவும் அமைக்கவில்லை. சிலைகள் இல்லாமல், தமிழர்களின் கட்டடக்கலையை எடுத்துக்காட்டும் விதமாக இருந்ததும், இக்கோபுரம் தமிழக அரசின் சின்னமாக இடம்பிடிக்க ஒரு காரணமாக அமைந்தது.

ஆண்டாள் பாடிய பாசுரங்கள்:ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை இயற்றினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் உடையது.

ஆண்டாளின் பிறபெயர்கள்:ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதற்கு பூமாலை என்று பொருள். இவளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு என பல பெயர்கள் உண்டு.

வெள்ளிக்குறடு:ஆண்டாள் சன்னதி அர்த்தமண்டபத்தில் வெள்ளிக்குறடு எனும் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை 6 மணிக்கு ஆண்டாள், ரெங்கமண்ணாருடன் ஊஞ்சலில் எழுந்தருள்கிறாள். இந்நேரத்தில் ஆண்டாளை தரிசனம் செய்தால், திருமண பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

வட்ட வாலுடன் ஆஞ்சநேயர்:ஆஞ்சநேயர், தனது வாலை தலைக்கு மேல் வைத்தபடிதான் காட்சி தருவார். இக்கோயிலில் தட்டொளிக்கு அருகிலுள்ள ஒரு தூணில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கியபடி, வாலை தன்னை வட்டமாக சுற்றி வைத்தவாறு வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். சிற்பக்கலைக்கு சான்றாக உள்ள சிற்பம் இது.

பெருமாள் பெயர் சூட்டிய பெரியாழ்வார்:பகவானை ஒரே சமயத்தில் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்ததால், பெரியாழ்வார் மனதில் ஓர் அச்சம் தோன்றியது. எங்கே பெருமாளுக்கு திருஷ்டி பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் "பல்லாண்டு பல்லாண்டு' எனத்துவங்கும், "திருப்பல்லாண்டு' பாடினார். அவரது பக்தியை மெச்சிய பெருமாள், அனைவரிலும் உயர்ந்தவர் என்ற பொருளில் "பெரியாழ்வார்' என்று பெயர் சூட்டினார்.

108 திவ்யதேச சுவாமிகள்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். இதனை நினைவுறுத்தும் விதமாக, ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உட்பட அனைத்து பெருமாள்களையும் தரிசிக்கலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமை:அனைத்து பெருமாள் கோயிலிலும் அதிகாலையில் நடை திறப்பின்போது, திருப்பல்லாண்டும், திருப்பாவையும் பாடப்படுகிறது. இவ்விரண்டு பிரபந்தங்களையும் பாடிய தந்தை, மகள் இருவரும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். லட்சுமி தாயாரே ஆண்டாளாகவும், கருடாழ்வாரின் அம்சமான பெரியாழ்வார் அவதரித்ததும் இத்தலத்தில்தான். அதுமட்டுமின்றி இவ்விருவருமே ஆழ்வார்களில் ஒருவராக இடம்பிடித்தவர்கள். இவ்வூரை, "கோதை பிறந்த ஊர்', "கோவிந்தன் வாழும் ஊர்' என்றும் சிறப்பித்து சொல்வர். பங்குனி உத்திரத்தில் திருமணம்:ஆண்டாளை, ரெங்கமன்னாருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காக அவளை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துச் சென்றார் பெரியாழ்வார். அவர்கள் காவிரிக்கரையை அடைந்ததும், தன் கணவன் இருக்குமிடத்தில் பல்லக்கில் செல்வது அவருக்கு மரியாதை தருவதாக இருக்காது என எண்ணினாள் ஆண்டாள். எனவே, தன்னை ஆட்கொள்ளும்படி ரெங்கமன்னாரிடம் வேண்டினாள். ரெங்கமன்னாரும் அவளை தன்னுடன் வரவழைத்துக் கொண்டார். இதனிடையே, தன் மகளைக்காண பல்லக்கிற்குள் பார்த்தார் பெரியாழ்வார். ஆனால் ஆண்டாள் அங்கில்லாததைக் கண்டு திகைப்படைந்தார். தன் மகளை ரெங்கமன்னார், அழைத்துக் கொண்டதை எண்ணிய அவர், தன் ஊரில் வைத்து ஆண்டாளை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். ரெங்கமன்னாரும் ஒப்புக்கொண்டார். அதன்படி பங்குனி உத்திரத்தன்று ஆண்டாளை, ரெங்கமன்னார் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதன் அடிப்படையில் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும், தேர்த்திருவிழாவும் நடக்கிறது.
மகள் மீது பாசம் கொண்ட தந்தை:பெரியாழ்வார், தான் வளர்த்த நந்தவனத்தில் குழந்தையாக கிடைத்த ஆண்டாள் மீது அதிக பாசம் கொண்டு வளர்த்தார். ஒரு தந்தை தன் மகள் மீது எவ்வாறு பாசம் கொண்டிருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார் பெரியாழ்வார். ஆண்டாளை அவர் ரெங்கமன்னாருக்கு திருமணம் செய்து கொடுக்க சென்றபோது, ஆண்டாள் சுவாமியுடன் சேர்ந்துவிட்டாள். அப்போது தன் மகளைக் காணாத அவர் ஆற்றாமை மிகுதியால், ""ஒருமகள் தன்னையுடையேன் உலகம்நிறைந்த புகழால் திருமகள் போலவளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டுபோனான்'' என்று பாடினார்.தனது இல்லத்தில் மகாராணியாக வாழ்ந்தவள், தற்போது பெருமாளை மணம் முடிக்கின்றாளே! அவள் இங்கே இருந்தது போல சிறப்புடன் அங்கே வாழ்வாளா! என்று தந்தையின் மன பதைபதைப்புடன் இப்பாடலை பாடினார். ஆண்கள், இப்பாடலை பாடினால் தங்களது குழந்தைகள் மீது பாசம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
பக்தர் பார்த்தபின்பே தரிசனம்:ஆண்டாள் கோயிலில் நடை திறக்கும் அர்ச்சகர்கள் முதலில், ஆண்டாளை பார்ப்பதில்லை. கதவை திறந்ததும் ஆண்டாளுக்கு வலப்புறத்தில் இருக்கும் கண்ணாடியை பார்க்கின்றனர். ஆண்டாள் முதலில் இந்த கண்ணாடியை பார்த்துக்கொள்வதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அர்ச்சகர்கள் இவ்வாறு செய்கின்றனர். பின்பு ஆண்டாளுக்கு தீபம் ஏற்றப்படுகிறது. பக்தர்கள் பார்ப்பதற்காக திரை விலக்கப்பட்ட பிறகே, அர்ச்சகர்களும் ஆண்டாளை பார்க்கின்றனர். ஆண்டாளுக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.முன்பு, ஆண்டாள் சன்னதி நடைதிறக்கும் போது ஒரு பசு கொண்டு வரப்படும். மகாலட்சுமி வாசம் செய்யும் பசுவின் பின்புறத்தில் ஆண்டாள் முதலில் விழிப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டது. தற்போது இவ்வழக்கம் நடைமுறையில் இல்லை.

3 வாசலுடன் பெருமாள்:இத்தலத்திலுள்ள வடபத்ரசாயி பெருமாளை தரிசனம் செய்ய பிரதான வாசல்கள் தவிர மேலும் இரண்டு வாசல்கள் இருக்கிறது. சுவாமியின் திருமுகம், திருப்பாதம் தரிசிக்க கருவறையில் இரண்டு பகுதிகளில் இரண்டு வாசல்கள் உள்ளது. ஆனால், சுவாமியை பிரதான வாசலில் இருந்தே முழுமையாக தரிசிக்கலாம் என்பதால், இவ்வாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை.

பிறந்த வீட்டிற்கு செல்லும் ஆண்டாள்:ஆண்டாள் நளவருடம், ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரத்தன்று மகாலட்சுமியின் அம்சத்துடன் நந்தவனத்தில் அவதரித்தாள். இவள் பிறந்த ஆடி பூரத்தன்று தனியே நந்தவனத்திற்கு எழுந்தருள்கிறாள். அப்போது அவள் பாடிய திருப்பாவை, நாச்சியார்திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படுகிறது. கணவன் வீட்டில் எவ்வளவு மகிழ்ச்சி கிடைத்தாலும், பிறந்த வீட்டிற்கு செல்லும்பெண் கூடுதலான மகிழ்ச்சியுடன் இருப்பாள். அதேபோல, ஆண்டாள் பிறந்தவீட்டிற்கு செல்லும் நாளில் அவளை வழிபட அனைத்து நியாயமான பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பர்.
திருப்பதி, மதுரைக்கு ஆண்டாள் மாலை செல்வது ஏன்?:ஸ்ரீரங்கத்தில் அருளும் ரெங்கநாதரை மணம் முடித்துக்கொண்ட ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி வெங்கடாஜலபதி, மதுரை கள்ளழகர் சுவாமிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான காரணம் இதுதான்.ஆண்டாள், கண்ணனை கணவனாக அடைய இவ்விரு பெருமாள்களிடமும் வேண்டிக்கொண்டாளாம். எனவே, அதற்கு நன்றி செய்யும்விதமாக உற்சவ ஆண்டாள் அணிந்த மாலை சித்ராபவுர்ணமியின்போது, கள்ளழகருக்கும், புரட்டாசி 5ம் திருநாளன்று திருப்பதிக்கும் செல்கிறது. அவள் கொடுத்தனுப்பும் மாலையுடன் ஆண்டாள் பட்டுப்புடவை, கிளியும் கொண்டு செல்லப்படுகிறது.

பூமியைக் காட்டிய அம்பாள்:ஆண்டாள் இடது கையில் கல்காரபுஷ்பம், கிளியும், வலக்கையை தொங்கவிட்டு பூமியைக்காட்டியபடி இருக்கிறாள். இதனை, ஆண்டாள் தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள் செய்வதை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கோலம் என்கிறார்கள்.

ஆண்டாளுக்கு கிளி ஏன்?:கிளி சொன்னதைச் சொல்லும் தன்மையுடையது. ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம். ஆகவே, ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும்விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள். வியாசரின் மகனாகிய, சுகப்பிரம்மரிஷியே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வதுண்டு.

கிளி செய்யும் முறை:இத்தலத்தில் ஆண்டாள் கையில் வைப்பதற்காக தினமும் இலைகளால் கிளி செய்யப்படுகிறது. மாலையில் சாயரட்சை பூஜையின்போது இந்த கிளி ஆண்டாளுக்கு வைக்கப்படுகிறது. ஆண்டாள் மறுநாள் காலை வரையில் கையில் கிளியுடன் இருக்கிறாள். பின், இந்த கிளி பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனை மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சினை அலகு, இலையை இறகு, காக்காப்பொன் கண்ணாகவும் வைத்து, வாழை நாரில் இணைத்து செய்யப்படுகிறது.

மாலையில் சேர்க்கப்படும் பூக்கள்:ஆண்டாளக்கு சாத்தப்படும் மாலையில் செவ்வந்தி (மஞ்சள்), விருட்சி (இட்லிப்பூ என்றும் சொல்வர்) (சிவப்பு), சம்மங்கி (வெள்ளை), மருள் (பச்சை), கதிர்பச்சைப்பூ (பச்சை) ஆகிய மலர்களும், துளசியும் பிரதானமாக சேர்க்கப்பட்டு மாலை செய்யப்படுகிறது. இப்பூக்கள் அனைத்தும் பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்திலேயே வளர்க்கப்படுகிறது. திருவிழாக்காலங்களில் ஸ்ரீரங்கத்தில் இருந்து மலர்மாலை கொடுத்தனுப்புகின்றனர்.

கள்ளழகருக்கு அனுப்பும் புடவை நிறம் எடுப்பது எப்படி?: மதுரையில் சித்திராபவுர்ணமியின் போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் கொடுத்தனுப்பும் பட்டுப்புடவையை கள்ளழகர் அணிந்து கொண்டு ஆற்றில் இறங்குகிறார். கள்ளழகர் உடுத்தும் பட்டுப்புடவையின் நிறத்தை வைத்து, அந்த ஆண்டில் நாட்டின் நிலை எப்படியிருக்கும் என்று கணிப்பதுண்டு. இந்த ஆடை, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு சாத்தப்படுவதற்காக புடவைகள் வைக்கப்பட்டிருக்கும் பரிவட்ட அறையில் இருந்து, பணியாளரால் எடுக்கப்படுகிறது. புடவை எடுப்பவர் நிறத்தையும் பார்ப்பதில்லை. கள்ளழகரின் விருப்பத்தால், ஏதேனும் ஒரு நிறத்தில் புடவை வரும் என்கின்றனர்.

ராஜாங்க கோலம்:ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். இவர் காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம்.

கருடாழ்வாரின் மூன்று பதவி:கருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமானார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன், சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார்.

புத்திசாலியான பெண் குழந்தை பிறக்க வேண்டுமா: ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பெரியாழ்வார், லட்சுமி நாராயணரை தன் குலதெய்வமாக வழிபட்டார். இவர் வழிபட்ட நாராயணர், ஆண்டாள் கோயில் முதல் பிரகாரத்தில் வடக்கு நோக்கியிருக்கிறார். தன் இடது மடியில் லட்சுமியை அமர வைத்தபடி இருக்கும் இவர், சுதை சிற்பமாக இருக்கிறார். எனவே, இவருக்கு அபிஷேகம் கிடையாது. பல வர்ணங்களுடன் இருப்பதால் இவரை, "வர்ணகலாபேரர்' என அழைக்கின்றனர். இவரது சன்னதி, மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான அம்சம். இவரிடம் வேண்டிக்கொண்டால் ஆண்டாள் போலவே பக்தியும் அறிவார்ந்த திறனும் கொண்ட பெண் குழந்தைகள் பிறக்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. லட்சுமிநாராயணர் உற்சவர், ஆண்டாள் கோயில் கருவறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார். இவரை சாதாரண நாட்களில் தரிசிக்க முடியாது.

ஸ்ரீவில்லிபுத்தூர்- பெயர் விளக்கம்:ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்திற்குரிய விளக்கத்தைக் கேளுங்கள்.ஸ்ரீ என்றால் லட்சுமி. இவளே ஆண்டாளாக அவதாரம் எடுத்தாள். வில்லி என்பது இவ்வூரை ஆண்ட மன்னன் பெயர். பாம்பு புற்று நிறைந்திருந்த பகுதியாக இருந்தது என்பதால் "புத்தூர்' என்றும் பெயர் வந்தது. பிற்காலத்தில், இவற்றை மொத்தமாகத் தொகுத்து "ஸ்ரீவில்லிபுத்தூர்' என பெயர் பெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம் ( பொருளுடன் )

 ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி - கோடிப் பிறவிகளில் செய்த பாவம் தீரும் ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம் ( பொருளுடன் )

1) வசுதேவ ஸூதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம் தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் //
பொருள் : --வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

2) அதஸீ புஷ்ப ஸங்காசம், ஹாரநூபுர சோபிதம் ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் //

பொருள் : --

காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன்; மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன்; ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள் அணிகள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

3) குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம் விலஸத் குண்டல தரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் //

பொருள் : --

சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

4) மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்ப்புஜம் பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் //

பொருள் : --

மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவன்; அழகான புன்னகை கொண்டவன்; நான்கு கைகள் உடையவன்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

5) உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீமூத ஸந்நிபம் யாதவானாம் சிரோ ரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் //

பொருள் : --

மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

6) ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம் அவாப்த துளசீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் //

பொருள் : --

ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன்; பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன்; துளசியின் பரிமளத்தை உடையவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

7) கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம் ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் //

பொருள் : --

கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பு அடையாளத்தை மார்பில் கொண்டவன்; ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடமானவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

8) ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வநமாலா விராஜிதம் சங்க சக்ரதரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் //

பொருள் : --

ஸ்ரீவத்ஸம் எனும் மறுவை அடையாளமாகக் கொண்டவன்; அகன்ற மார்பை உடையவன்; வனமாலை சூடியிருப்பவன்; சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.

நினைத்துப் பார்க்க முடியாத நல்ல பலன்களை எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்‘ என்பதை இதன் கடைசி ஸ்லோகமான பலஸ்ருதி சொல்கிறது.

க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம் ப்ராதருத்தாய ய படேத் கோடி ஜந்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி //

பொருள் : --

எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நீங்கும்

அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்!

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...