Wednesday, September 2, 2020

*பதினாறு (16) வார்த்தைகளில் ராமாயணம்*..!

 *பதினாறு (16) வார்த்தைகளில் ராமாயணம்*..!


*பிறந்தார், வளர்ந்தார், கற்றார், பெற்றார்,*
*மணந்தார், சிறந்தார், துறந்தார், நெகிழ்ந்தார்*,
*இழந்தார், அலைந்தார், அழித்தார்,செழித்தார்*,
*துறந்தார், துவண்டார், ஆண்டார், மீண்டார்*

விளக்கம்

1*பிறந்தார்*:
ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

2.*வளர்ந்தார்*:
தசரதர், கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது

3.*கற்றார்*:
வஷிஷ்டரிடம் சகல வேதங்கள், ஞானங்கள், கலைகள் முறைகள் யாவும் கற்றது.

4.*பெற்றார்*:
வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு, விஸ்வாமித்ரர் யாகம் காத்து, விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

5.*மணந்தார்*:
ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.

6.*சிறந்தார்*:
அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும், தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.

7.*துறந்தார்*:
கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.

8. *நெகிழ்ந்தார்*:
• அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
• குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
• பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
• பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும், தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும், தன்னலமற்ற குணத்தையும், தியாகத்தையும், விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
• அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
• சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
• விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
• எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.

9.*இழந்தார்*:
மாய மானின் பின் சென்று, அன்னை சீதையை தொலைத்தது.

10.*அலைந்தார்*
அன்னை சீதையை தேடி அலைந்தது.

11.*அழித்தார்*
இலங்கையை அழித்தது.

12.*செழித்தார்*
சீதையை மீண்டும் பெற்று, அகமும் முகமும் செழித்தது. ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று,செல்வச் செழிப்பான வாழ்க்கைக்குத் திரும்பியது.

13.*துறந்தார்*
அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில், மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக, அன்னை சீதையைத் துறந்தது.

14.*துவண்டார்*
அன்னை சீதையை பிரிய நேர்ந்தது, ஶ்ரீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.

15.*ஆண்டார்*
என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவறச் செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.

16. *மீண்டார்*
பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது.

ஸ்ரீ ராமஜயம்.சீதா லக்ஷ்மண பரத சத்ருக்னா ஹனுமத் சமேதா ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சரணம் ஜெய்_ஸ்ரீராம்..!

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...