இதம் கிடைக்குமா? இன்ப நிலை கிடைக்குமா?
எதிராசன் இணையடியில் சுகம் கிடைக்குமா?எனக்கு−
எதிராசன் இணையடியில் சுகம் கிடைக்குமா? (இதம்)
மலை போல துன்பங்கள் எனை வந்து வாட்டும் போது−
"கலங்காதே” என்றுந்தன் குரல் கேட்குமா?−நீ
“கலங்காதே” என்றுந்தன் குரல் கேட்குமா? (இதம்)
மதத்தாலே பல நூறு பிழைகள் நான் செய்திடினும்−என்னை
இதத்தாலே பணி கொள்ள நீ வருவாயா?
குன்றாத வினையேனை, குணமொழிந்த தமியேனை−
நன்றாக நீ வந்து ஆட்கொள்வாயா?−நான்
நன்றாக நீ வந்து ஆட்கொள்வாயா? (இதம்)
இத்தனை நாள் உனை பிரிந்தேன் எந்தன் இருவினையால்!−
இனி நீ இட்ட வழக்காக எனை ஆக்குவேன்;
பல் நோவும் எனை வந்து தினம் தினமே
நலக்கும் போது−
வல்வினையேனை விடுவிக்க நீ வருவாயா? (இதம்)
No comments:
Post a Comment