Sunday, June 7, 2020

இதம் கிடைக்குமா? இன்ப நிலை கிடைக்குமா?


(விழி கிடைக்குமா, அபயக்கரம் கிடைக்குமா? மெட்டு)

இதம் கிடைக்குமா? இன்ப நிலை கிடைக்குமா?
எதிராசன் இணையடியில் சுகம் கிடைக்குமா?எனக்கு−
எதிராசன் இணையடியில் சுகம் கிடைக்குமா? (இதம்)

மலை போல துன்பங்கள் எனை வந்து வாட்டும் போது−
"கலங்காதே” என்றுந்தன் குரல் கேட்குமா?−நீ
“கலங்காதே” என்றுந்தன் குரல் கேட்குமா? (இதம்)

மதத்தாலே பல நூறு பிழைகள் நான் செய்திடினும்−என்னை
இதத்தாலே பணி கொள்ள நீ வருவாயா?

குன்றாத வினையேனை, குணமொழிந்த தமியேனை−
நன்றாக நீ வந்து ஆட்கொள்வாயா?−நான்
நன்றாக நீ வந்து ஆட்கொள்வாயா? (இதம்)

இத்தனை நாள் உனை பிரிந்தேன் எந்தன் இருவினையால்!−
இனி நீ இட்ட வழக்காக எனை ஆக்குவேன்;

பல் நோவும் எனை வந்து தினம் தினமே
நலக்கும் போது−
வல்வினையேனை விடுவிக்க நீ வருவாயா? (இதம்)

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...