Sunday, June 7, 2020

ராம” நாமம்

“ராம” என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும்

நாமத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளோம்-நாமம் “சொல்லல், கேட்டல், நினைத்தல்” மூன்றும் ஒன்றே.

கலியுகத்திற்கு உகந்தது நாம தர்மமே.

கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.

பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு.

பகவான் நாமங்களுக்குள் வேறுபாடு இல்லை, பகவானும் பகவான் நாமமும் ஒன்றே. 

நாமத்தை ஆஸ்ரயிப்பவன் வீணாகமாட்டான்.

நாமம், பாதை “மீறிவர்க்கும்-தவறிவர்க்கும்” மருந்து, சரியான பாதையில் செல்பவருக்கு விருந்து.

நாமம், “பாதை மீறிவர்க்கும் தவறிவர்க்கும்” வழி காட்டும்

எல்லா நாமமும் பரபிரும்மத்தின் நாமமே, நாமம் சரியான நேரத்தில் ஞானத்தை அளித்துவிடும்.

பகவானின் மிக சமீபத்தில் இருப்பது நாமம்.

நாமத்துடன் எழுவீர், பணியின் “தொடக்க-இடை-இறுதியில்” நாமத்துடன் இணைவீர்.

நாமத்துக்கு விலக்கு இல்லை.

நாம் ஆராதனை செய்யும் பகவான் நாமம், நம்மை ஆதரிக்கும்

நாம நிதி பெருக, நம் நிதியும் பெருகும்.

நாமம் தாய்-தந்தை போன்றது.

நாமம் தாய் குலத்தையும் தந்தை குலத்தையும் கரை சேர்க்கும்.

பவரோக அருமருந்து நாமம்.

சாஸ்திரங்களின் முடிவு நாமம்.

நான்கு லஷம் கோடி ஜன்மாக்கள் எடுத்து வேத-அத்யானம், யோகம், யாகம், தீர்த்தாடனம், பூஜை, ஸ்வதர்ம அனுஷ்டானம் என செய்து இருந்தால்தான் வாயில் ஒரு “ராம” நாமம் வரு்ம்.

நாம தர்மம் பயத்தை போக்கி மோஷத்தை தரும்.

காமதேனு, சிந்தாமணி, கல்பக விருட்சம் எதையும் கொடுக்கும், ஆனால் நாம-தர்மம், நல்லதையே தரும்.

நாமம் சொன்னால் பகவானே வந்துவிடுவார்

சொல்பவரின், “ஜாதி, மதம், தரம், இடம், காலம்”, பேதமற்றது நாமம்.

நாமமே சரணாகதி, உலகுக்கு ஜீவன் வரும்போதும் போகும்போதும், நாமம் சொல்லலாம்.

நாமத்தால், புத்தி, மனம், தெளிவு பெற்று திருப்தி அடையும்.

நாமத்தால் தீர்க்க முடியாத பாவங்கள் இல்லை.

நாமத்தை எந்த அசுத்தமும் தீட்டும் பாதிக்காது.

நாமம் துன்பத்தை விலக்கும், நல்லதை தரும், அமைதி பிரேமை வளர்க்கும்

நாமத்தை, எண்ணுவதை விட, எண்ணுவது சிறப்பு.

நாமத்தால் அடைய நாமமே சாதனம்.

நாமம்,நிந்திப்பவனையும்-நாத்திககனையும் காப்பாற்றும்.

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...