Sunday, May 3, 2020

எட்டெழுத்தில் உறைபவன்

எட்டெழுத்தில் உறைபவன்

பக்தியில்லார்க்கு எட்டாதவன்

அன்பில்லாரிடம் ஓட்டாதவன்

அடியார்களை விட்டு அகலாதவன்

தூயவன் துயர் துடைப்பவன்

ஆயன் அளவில்லா இன்பம் தருபவன்

நம்மையெல்லாம் காக்க வைகுண்டத்தை விட்டு வந்த மாதவன்

அவனை துதிப்போம்

அவனடியார்களை மதிப்போம்

அல்லல் போக்கும் அவன் திருநாமங்களை சொல்லால் சுவைத்து பாடுவோம்

நில்லாது ஓடும் மனதை நிலை பெற செய்திடுவான்

நிர்மலமான பக்தியுடன் நித்தம் நித்தம் பாடுவோம் அவன் புகழை....

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...