Sunday, May 3, 2020

Yadirajan vadivalagu

Yadirajan vadivalagu

paRpamenaththigazh painGgazhalum thanN pallavamE viralum

pAvanamAgiya paiNthuvarAdai padhiNtha marunGgazhagum

muppuriNUlodu munkaiyilENthiya mukkOl thannazhagum

munnavar thaNthidu mozhigaL NiRaiNthidu muRuval NilAvazhagum

kaRpagamEvizhi karunNaipozhiNthidu kamalakkanNnNazhagum

kAri chuthankazhal chUdiya mudiyum ganaNaRchigai mudiyum

eppozhuthum ethirAchan vadivazhagu en idhayaththuLathAl

illai enakkethir illai enakkethir illai enakkethirE



பற்பமெனத்திகழ் பைங்கழலும் தண் பல்லவமே விரலும்

பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்

முப்புரிநூலொடு முன்கையிலேந்திய முக்கோல் தன்னழகும்

முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்

கற்பகமேவிழி கருணைபொழிந்திடு கமலக்கண்ணழகும்

காரி சுதன்கழல் சூடிய முடியும் கனநற்சிகை முடியும்

எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்

இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே

ஸ்ரீ கிருஷ்ணார்பணம்

அகரம் முதலே அழியாப் பொருளே

ஆயர் குலமே நேயர் கரமே

இகமும் பரமும் இணையும் இடமே

ஈதல் பரமாம் இதயத் தவமே

உலகக் குடையே உயிரின் கலையே

ஊதும் குழலுள் வேதப் பொருளே

எரியும் கனலில் தெரியும் புனலே

ஏழை மனதில் வாழும் அருளே !

ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே

ஐவர் துணையே அன்புச் சிலையே

ஒளியே விழியே உயிரே வழியே

ஓடும் நதியில் பாடும் அலையே

அவ்வவ் உலகை ஆக்கும் நிலையே

அடியேன் சரணம் சரணம் சரணம் !

🚩 சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணம் 🚩

திருமலை

எம்பெருமான் திருவடிகள் இரண்டினையும் காட்டும் மலை!

இரு வினைகளையும் ஒழிக்கும் மலை!

பரமபதம் இதுவெனவே நிச்சயமாய் காட்டும் மலை!

புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த மலை!

புண்ணியத்தின் இருப்பிடம் எனப் புகழ்பெற்ற மலை!

பரமபதத்து அனுபவங்களை இங்கேயே அடைவிக்கும் மலை!

நித்யசூரிகளாலும் பூலோக மக்களாலும் விரும்பப்பட்ட மலை!

வேதத்தில் போற்றப்பட்ட பிராகசிக்கின்ற திருவேங்கட மலையே

திருமலை ஆகும்!!


எட்டெழுத்தில் உறைபவன்

எட்டெழுத்தில் உறைபவன்

பக்தியில்லார்க்கு எட்டாதவன்

அன்பில்லாரிடம் ஓட்டாதவன்

அடியார்களை விட்டு அகலாதவன்

தூயவன் துயர் துடைப்பவன்

ஆயன் அளவில்லா இன்பம் தருபவன்

நம்மையெல்லாம் காக்க வைகுண்டத்தை விட்டு வந்த மாதவன்

அவனை துதிப்போம்

அவனடியார்களை மதிப்போம்

அல்லல் போக்கும் அவன் திருநாமங்களை சொல்லால் சுவைத்து பாடுவோம்

நில்லாது ஓடும் மனதை நிலை பெற செய்திடுவான்

நிர்மலமான பக்தியுடன் நித்தம் நித்தம் பாடுவோம் அவன் புகழை....

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...