எளிய முறையில் சரணாகதி விளக்கம்
மாட்டு வண்டிக்கு உயிர் இல்லை
ஆனால் மாட்டுக்கு உயிர், அறிவு இரண்டும் உண்டு
உயிரில்லாத வண்டியை அறிவுள்ள மாட்டுடன் பூட்டி.
எந்த இடம் செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்து
வண்டியை செலுத்துவான் வண்டிக்காரன்
எவ்வளவு தூரம் எவ்வளவு நேரம் எவ்வளவு பாரம்
அனைத்தையும் தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே
அறிவிருந்தும் சுமப்பது தானாக இருந்தாலும் மாட்டால்
ஒன்றும் செய்ய இயலாது
அது போல உடம்பு என்ற ஜட வண்டியை ஆத்மா உயிர் என்ற மாட்டுடன் பூட்டி இறைவன் பரந்தாமன் என்ற வண்டிக்காரன்
ஓட்டுகிறான்
அவனே தீர்மானிப்பவன் அவன் இயக்குபவன் மனிதன் இயங்குபவன்
எவ்வளவு காலம் எவ்வளவு நேரம் எவ்வளவு பாரம் தீர்மானிப்பது இறைவனே
இதுதான் நமக்காக இறைவன் போட்டிருக்கும் டிசைன்
இதுதான் பகவான் நமக்கு தந்திருக்கும் அசைன்மென்ட்
இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை
இதை உணராதவனுக்கு அமைதி இல்லை
இருக்கும் காலங்களில் இனியது செய்வோம்
பரந்தாமன் கோவிந்தன் பாதம் பற்றுவோம்
No comments:
Post a Comment