ஓம் ஸ்ரீ பூதேவ்யை நம.
அடியேனுக்கு தாயருக்கும் தாயானவளே ஸ்ரீசீதம்மா ஸ்ரீ பூமி பிராட்டியே அடியேன் தண்டனிடுகிறேன் உமது குழந்தை.
ஒரு கவளம் சோறு (பிரசாதம்) எடுக்கும் போது உன் நினைவு எம்மை வாட்டுகிறது அன்னம் பரப்பிரம்மம் என்பது போல நீயே இந்த குழந்தைக்கு பரப்பிரம்மம் ஆக இருக்கிறாய் தாகம் தீர நீர் தந்தாய் நீரை அதிக விரயம் செய்ய மாட்டேன் உணவு தந்தாய் உணவை ஒரு துளிகூட விரயம் செய்ய மாட்டேன் இருக்க இடம் கொடுத்தாய்.நன்றி கடனாக தினமும் திருமண்ணை சாத்துகிறேன் அம்மா.
மனித வர்க்கத்திற்கு தேவையான அனைத்து பதார்த்தமாய் நீயே ஆகி எங்களை இரட்சிக்கிறாய்.
ஒருகவளம் பிரசாதம் எடுக்கும் போது உன் நினைவு அனைவருக்கும் வந்தால் அகில உலகத்தில் அனைத்து ஊயிர்களூம் பசியில்லாமல் சந்தோஷமாக இருக்கும் தாயே ஒரு அரிசி சோறும் வீணாகாது அம்மா
எத்தனை பிறவி எடுத்தாலும் உந்தன் நினைவில் வாடும் படி அடியேனுக்கு வரமளிப்பாய் தாயே. அனைத்து உயிர்களூம் உஜ்ஜீவனம் ஆகும் படி ஸ்ரீவராஹ சரம் ஸ்லோகம் எங்களுக்கு வாங்கி பிரசாதித்தாயே அம்மா இதனையே ஸ்ரீஆண்டாளாக அவதரித்து திருப்பாவையாக கொடுத்தாயே அம்மா.
ஒருத்தர் அடியேன் மீது எச்சில் துப்பினால் கூட எம்மால் பொறுக்க முடியவில்லை ஆனால் தாயே அனைத்தையும் தாங்கி அதனை செய்பவர்களையும் கோபம் கொள்ளாமல் தன் குழந்தை என்று சகித்து சீராட்டி வளர்க்கிறாயே உமது பொறுமைகடலில் ஒரு அணு பொறுமை இந்த அடியவனுக்கும் கொடு தாயே.
எங்களுக்கெல்லாம் புருஷாகாரியாய் நீயிருந்து ஸ்ரீமந் நாராயணன் அவரிடத்தே சேர்க்கின்றாய் அம்மா.ஆயிரம் திருநாவை உடைய ஸ்ரீஆதீஷேசனால் கூட உன்பெருமை சொல்ல இயலாது தாயே இந்த குழந்தை எம்மாத்திரம் அம்மா.
உன் வயிற்றிலே பிறந்தேன் உன் வயிற்றிலே சந்தோஷமாக மறைவேன் பிறவி மீண்டும் எடுத்தால் உன் பேரருளூக்கு இந்த குழந்தை இருக்கும்படி அருள் செய்தாலே போதுமானது தாயே.
ஜகந்மாமதா ஸ்ரீஆண்டாள் தாயாரே ஸ்ரீ பூமி பிராட்டி உந்தன் கருணைக்கு எத்தனை ஜென்மம் எடுத்து உமை நினைத்தாலும் ஈடு (அடியேனுக்கு)ஆகாது அம்மா..
ஓம் ஸ்ரீ பூதேவ்யை நம
ஓம் ஸ்ரீ பூதேவ்யை நம
ஓம் ஸ்ரீ பூதேவ்யை நம.
No comments:
Post a Comment