Friday, September 14, 2018

வசுதேவன் வேறு! வாசுதேவன் வேறு!

வசு+தேவன்=செல்வம்+மிகுந்தவன்!


வசுதேவன் வேறு! வாசுதேவன் வேறு!
வசுதேவன் மகன் வாசுதேவன் என்று கொண்டாலும், இறைவனுக்கு வாசுதேவன் என்பது மூலப்பெயர்! அவதார காலங்களை எல்லாம் கடந்த பெயர் அது! பர-வாசுதேவன்!)
எப்படி H2O என்பதில் இரு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு உயிர்வளிக்குக் (ஆக்சிஜன்) கட்டப்பட்டிருக்கு?Single Covalent Bond என்பதாலே! இது எத்தனை ஹைட்ரஜன் அணுக்களையும் அதனதன் தன்மைக்கு ஏற்ப ஏற்றுக் கொள்ளக் கூடியது! Thatz why we have more covalent bonds than ionic bonds.

அதனால் தான் H2O என்னும் நீருக்கு அனைத்தும் கரைக்க வல்ல குணம் (Universal Solvent)! நாரணம் என்பதும் இந்த நீர் தான்! இந்த வேதியியல் நீர் என்பதைக் கொண்டே பல நுட்பமான படைப்புத் தத்துவங்களை அறிவியல் பார்வையில் புரிந்து கொள்ள முடியும்!

எப்படி பல ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு உயிர்வளிக்குக் கட்டப்பட்டிருக்கோ, அதே போல பல ஆத்மாக்களும் ஒரே பரம்பொருளுடன் கட்டப்பட்டு இருப்பது பிரணவ நாதம் என்ற சப்த மாத்திரத்தினால்!படைப்புத் தொழிலைப் பிரணவம் கொண்டு செய்கிறேன் என்று பிரம்மன் கூறுவதும் இதனால் தான்!

அது போல ஒரே இறைவன், பல கோபிகைகளுக்கும், பலப்பல கண்ணன்களாய்த் தோற்றம் காட்டுகிறான்! இப்படி மாயம் செய்யும் வசுதேவனின் மகனே, வாசுதேவா! உனை அல்லால் எங்களுக்கு வேறு பரம்/கதி இல்லை!
கள்ளச் சிரிப்பழகன், கருப்பழகன், எழுகமலப் பூவழகன், கண்ணன்! அவனைச் சுற்றிச் சத கோடி கோபியர்கள்! இருவரையும் கட்டி வைப்பது புல்லாங் குழலின் பிரணவ நாதம்!

சரி, கோடி கோபியர்கள் சூழ்ந்தால் ஒரே ஒரு கண்ணன் என்ன செய்ய முடியும்? அத்தனை பேரும் அவரவர் அபிமானித்தாற் போலே, அவரவர்க்கு அவ்வவ்வாறு காட்சி தருகிறான் இறைவன்! இந்தக் க்ளோனிங் எஃபெக்ட் வேறு எந்த அவதாரத்திலும் இல்லை!

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...