Monday, March 26, 2018

#சர்வ_பாவங்களையும்_நீக்கியருளும் #ஆமலாகீ_ஏகாதசி

#சர்வ_பாவங்களையும்_நீக்கியருளும் #ஆமலாகீ_ஏகாதசி (27.03.2018)
-
ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.
-
பங்குனி சுக்ல கிருஷ்ண‌ பட்சத்தில்(வளர்பிறை) வரும் ஏகாதசி திதியை ஷட்திலா ஏகாதசியாக கொண்டாடுவர். ஷட்திலா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம்.
-
80,000 ரிஷி முனிவர்கள் சூத‌ முனிவரின் உபன்யாசத்தைக் கேட்பதற்காக கூடியிருந்த பொழுது சூதர் "முனிவர்களே, முன்பொரு முறை நடந்த சம்பவம் இது. மஹான் ராஜா மாந்தாதா வசிஷ்டரிடம் கேட்டார்" பிரம்மரிஷி வசிஷ்டரே தாங்கள் என்னை ஆசீர்வதிக்க நினைத்தால் மங்களமான நன்மை அளிக்கும் விரதம் ஏதாவது உண்டென்றால், அந்த விரதத்தைப் பற்றிய கதை அதன் மஹிமை இவற்றைப் பற்றி கூறி அருளுங்கள்." என்றார்.
-
மஹரிஷி வசிஷ்டர் "ராஜன் உத்தமமானதும், மோட்சப்பிராப்தியை அளிக்கக் கூடியதும் ஆன ஆமலாகீ ஏகாதசி விரதம் அனைத்து விரதங்களிலும் மேலானது ஆகும்." என்றார். ராஜா மாந்தாதா வசிஷ்டரிடம் "வேதங்களில் பாண்டித்யம் பெற்ற முனி சிரேஷ்டரே அமலாகீ விரதம் உருவான கதை விரதம் அனுஷ்டிக்கும் விதிமுறை இவற்றைப் பற்றி கருணையுடன் விஸ்தாரமாக எடுத்துரைக்க வேண்டும்" என்றார்.
-
ரிஷி வசிஷ்டர் பதிலளிக்கையில் "உத்தமமான ராஜனே நீ கேட்டபடி இந்த விரதத்தைப் பற்றி விவரமாகக் கூறுகிறேன், பங்குனி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியானது "ஆமலாகீ ஏகாதசி" என அழைக்கப்படுகிறது.  இவ்விரத புண்ணிய பலனானது, சர்வ பாபங்களையும் நீக்கி நிவர்த்தியை அளிக்கும். ஓராயிரம் பசுக்களை தானம் அளிப்பதால் கிட்டும் புண்ணியத்திற்கு இணையானது "ஆமலாகீ ஏகாதசி" விரத புண்ணிய பலன்.
-
ஆமலாகீ (நெல்லிக்கனி) யின் மகத்துவம் அதன் நற்குண நலன்கள் இவை தவிர அதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் அது பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ஸ்ரீ முகத்திலிருந்து தோன்றியது ஆகும். ஒரு புராணக் கதையைக் கூறுகிறேன். கதையை கவனத்துடன் கேள்." என்றார். பழங்காலத்தில் வைதிக் என்று ஒரு நகர் இருந்தது. அந்நகரில் பிராமணர், வைசியர், க்ஷத்திரியர், சூத்ரர் என்னும் நாலு வர்ணத்தவரும் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர். நகரில் எப்போதும் வேதகோஷம் ஒலித்துக் கொண்டு இருந்தது.
-
பாவம் புரிந்தோர், துஷ்கர்மம் செய்வோர், தெய்வ நம்பிக்கை இல்லாதோர் (நாஸ்திகர்) இவர்கள் இல்லா நகராக இருந்தது அது. அந்நகரை சைத்ர ரத் என்னும் பெயர் கொண்ட சந்திர வம்சத்து அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் மஹா வித்வானாகவும், கருணை உள்ளம் கொண்டவனாகவும் மற்றும் தார்மீகவாதியாகவும் இருந்தான்.  அவன் ஆட்சியில் எவரும் ஏழையாகவும், கருமியாகவும் இல்லாமல் இருந்தனர். அந்நகரில் வசிக்கும் அனைத்து குடிமக்களும் விஷ்ணு பக்தர்களாக விளங்கினர். விஷ்ணுவின் மீது பக்தி கொண்ட நகரில் பிறந்ததால் குழந்தை முதல் முதியவர் வரை அனைவரும் ஏகாதசி விரதத்தை சிரத்தையுடனும், பக்தியுடனும் விரத வழி முறைப்படி அனுஷ்டித்து வந்தனர்.
-
ஒரு சமயம் பங்குனி மாதம் சுக்ல பட்சத்தில் ஆமலாகீ ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசி திதி வந்தது. அன்றைய தினம் அரசனிலிருந்து ஆண்டி வரை, குழந்தை முதல் முதியவர் வரை அனைத்து தரப்பினரும் பயபக்தியுடன் அந்த‌ ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தனர். ராஜா தனது குடிமக்களுடன் ஆலயத்திற்கு வந்து வந்து, கலசத்தை ஸ்தாபிதம் செய்து, தூபம், தீபம், நைவேத்யம், பஞ்சரத்னம், குடை என்று விமரிசையாக பூஜை செய்தான். அனைவரும் நெல்லிக்கனியை பின்வருமாறு துதிக்க ஆரம்பித்தனர்.
-
"ஹே தாத்ரி தேவா (நெல்லிக்கனி)!, தாங்கள் பிரம்மஸ்வரூபமானவர். பிரம்ம தேவர் மூலமாக உதித்தவர். சகல விதமான பாபங்களையும் அழிக்க வல்லவர். தங்களுக்கு எங்களின் பணிவான நமஸ்காரங்கள். நாங்கள் அளிக்கும் இந்த அர்க்யத்தை கருணையுடன் ஸ்வீகரித்து ஏற்றுக் கொள்ள வேண்டுகிறோம். தாங்கள் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியால் மரியாதை செய்யப்பட்டவர். தாங்கள் எங்களுடைய பிரார்த்தனையை ஏற்று, அனைத்து பாபங்களிலிருந்தும், எங்களுக்கு நிவர்த்தி அளிக்க வேண்டுகிறோம்."
-
அந்த தேவாலயத்தில் அன்று இரவு அனைவரும் கண்விழித்து பகவத் தியானத்தில் ஆழ்ந்திருந்தனர். அச்சமயம், அவ்விடத்திற்கு ஒரு வேடுவன் வந்தான். அவன் மஹாபாபியாகவும், துஷ்டனாகவும் விளங்கினான். அவன் தன் குடும்பத்தை, மற்ற ஜீவன்க‌ளை வதைப்பதன் மூலம் பராமரித்து வந்தான். பசியாலும், தாகத்தாலும் மிகவும் தவித்துக் கொண்டு இருந்தான்.
-
சாப்பிடுவதற்கு ஏதாவது கிட்டும் என்று எண்ணி ஆலயத்தின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டான். அப்போது அங்கு பெளராணிகர் விஷ்ணு கதை மற்றும் ஏகாதசி மஹாத்மிய கதைகளை விவரித்துக் கொண்டிருக்க, அதை கேட்டபடி அமர்ந்திருந்தான். இப்படியாக அந்த வேடுவன், முழு இரவையும், மற்ற குடி ஜனங்களுடன் சேர்ந்து கண் விழித்தபடி கழித்தான். அதிகாலை புலர்ந்ததும் அனைத்து மக்களும் தங்கள் இல்லங்கள் நோக்கிச் சென்றனர். வேடுவனும் தனது இல்லத்திற்கு சென்று அங்கு உணவு உட்கொண்டான்.
-
சில வருடங்கள் கழித்து, அந்த வேடுவன் மரணம் அடைந்தான். அவன் ஜீவ ஹிம்சை புரிந்த காரணத்தால் நரகத்திற்குச் சென்று அங்கு தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பது நியதியாக இருந்தாலும், ஆமலாகீ ஏகாதசி அன்று தான் அறியாமல் பசியுடன் உபவாசம் இருந்து, இரவு முழுவதும் தூங்காமல் பாகவத கதைகளுடன், ஏகாதசி மஹாத்மியத்தையும் கேட்டு கண் விழிப்புடன் விரதத்தை நிறைவு செய்த புண்ணிய பலத்தால், மறு பிறவியில் ராஜா விதுரத் அரண்மனையில் பிறந்தான். அவனுக்கு வசுரத் என்று நாமகரணம் ஆயிற்று. வளர்ந்து பெரியவன் ஆனதும் நான்வித சேனையுடன், தன, தான்யங்கள் நிறைந்து வழிய 10,000 கிராமங்களை நல்ல‌ விதமாக பராமரித்து வந்தான்.
-
அவன் சூரியனுக்கு சமமான தேஜஸ்ஸையும், சந்திரனுக்கு சமமான அழகையும், வீரபராக்கிரமத்தில் மஹாவிஷ்ணுவை போன்றும், பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையில் பூமா தேவியைப் போன்றும் விளங்கினான். ஆழ்ந்த தெய்வ பக்தியும், சத்தியத்தின் வழி நடப்பவனாகவும், கர்ம வீரனாகவும் மற்றும் சிரேஷ்டமான விஷ்ணு பக்தனாகவும் இருந்தான். குடிமக்களை சமமாக மதித்து பராமரித்து வந்தான். தானம் செய்வது அவனின் நித்ய கர்மாவாக இருந்தது.
-
ஒரு நாள் ராஜா வசுரத் வேட்டையாடுவதற்கு காட்டிற்குச் சென்றான். தெய்வாதீனமாக அவன் வனத்தில் வழி தவறி திசை அறியாமல் அலைந்து திரிந்து அயர்ச்சியில் ஒரு மரத்தின் கீழே உறக்கத்தில் ஆழ்ந்தான். அச்சமயம், மலைக் கொள்ளைக்காரர்கள் அங்கு வந்து தனியாக உறங்கும் ராஜாவைக் கண்டதும், "அடி அடி" என்று உரக்கக் கத்திக் கொண்டு ராஜா வசுரத் இருக்குமிடத்தை நோக்கி விரைந்து வந்தனர்.
-
கொள்ளைக்காரர்கள் அவர்களுக்குள் "நம் பெற்றோர், புத்ரர்கள், பெளத்ரர்கள் அனைவரையும் கொன்றதுடன் அல்லாமல் நம்மையும் நாட்டை விட்டு நீக்கி விட்ட இந்த துஷ்டனான ராஜாவை இப்போது கொன்று நமக்கு நேர்ந்த அவமானத்திற்கு பழி தீர்க்கலாம்" என்று கூறிக் கொண்டனர்.
-
இப்படி தங்களுக்குள் கூறிக் கொண்டு அவர்கள் ராஜாவை அடிக்க ஆரம்பித்தனர். ராஜாவின் மீது அஸ்திர சஸ்திரங்களை ஏவினர். அவை யாவும் ராஜாவின் உடம்பின் மீது பட்டதும் நாசமாயிற்று. ராஜா தன்னை யாரோ புஷ்பத்தால் தாக்கியது போல் உணர்ந்தான். சிறிது நேரத்தில் பரமாத்மாவின் திருவிளையாட்டில் கொள்ளைக்காரர்களின் அஸ்திரங்களே அவர்களை நோக்கி திரும்பிப் பாய ஆரம்பித்தன.  அதனால் அவர்கள் யாவரும் மூர்ச்சையடைந்து விழுந்தனர். அவ்வேளையில் ராஜா வசுரத்தின் தேகத்திலிருந்து, அதி அற்புத அழகுடன் அழகிய ஆடை, அணிகலன்கள் அணிந்து அலங்கரிக்கப்பட்ட திவ்ய சொரூபத்துடன் ஒரு தேவி உதித்தாள். அச்சமயத்தில் அவள் காலதேவனைப் போன்று இருந்தாள். அவள் தன் பார்வையால் கொள்ளைக்காரர்கள் அனைவரையும் காலனிடம் சேர்த்து விட்டாள்.
-
ராஜா தன் தூக்கம் தடை பெற்று கண் விழித்ததும் தன்னைச் சுற்றிலும் மரணமடைந்து கிடக்கும் கொள்ளைக்காரர்களைக் கண்டு வியப்படைந்தான். யார் இவர்கள் அனைவரையும் கொன்றிருக்க முடியும்? மேலும் இவ்வனத்தில் எனக்கு உதவியாக இருந்து காத்தவர் யாராக இருக்க முடியும்?!! என்று யோசித்தான். இப்படியாக ராஜா யோசனையில் ஆழ்ந்திருந்த போது, வானத்திலிருந்து அசீரீரி "ஹே ராஜன், இவ்வுலகில் பகவான் மஹாவிஷ்ணுவை தவிர வேறு யார் உன்னை காத்திருக்க முடியும்?" என்றது.
-
அசீரீரி சொன்னதைக் கேட்டதும் ராஜா மஹாவிஷ்ணுவிற்கு, தனது நமஸ்காரங்களை பணிவுடன் சமர்ப்பித்தான். பிறகு நாட்டிற்கு திரும்பி சுகத்துடனும், ஆனந்தத்துடனும் ஆட்சி புரிந்து வந்தான். மஹரிஷி வசிஷ்டர் ராஜா மாந்தாதாவிடம் "ஹே ராஜன் இது அனைத்தும் ஆமலாகீ ஏகாதசி விரதத்தின் புண்ணிய பிரபாவத்தால் விளைந்தது. எவர் ஒருவர் ஏதேனும் ஒரு ஆமலாகீ ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கிறாரோ, அவர் தனது ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவதுடன், வாழ்நாள் முடிவில் விஷ்ணுலோகப் பிராப்தியும் பெறுவர்" என்று கூறினார்.
-
பகவான் மஹாவிஷ்ணுவின் அருட்சக்தி, நமது அனைத்து சங்கடங்களையும் நீக்க வல்லது. மஹாவிஷ்ணுவின் சக்தியானது மனிதர் மட்டுமல்லாமல், தேவர்களையும் ரட்சித்து காக்கும் பூரண சக்தி பெற்றது. இச்சக்தியின் பலத்தினால் தான் பகவான் மஹாவிஷ்ணு, மது - கைடபன் என்னும் இரு அரக்கர்களையும் சம்ஹரித்தார். இதே சக்தியானது உத்பன்ன ஏகாதசி தேவியாக உதித்து மூர் என்னும் அரக்கனை வதம் செய்து தேவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) மஹாபாபியான வேடுவன், அறியாமல் ஒரு தடவை செய்த ஆமலாகீ விரதத்தின் பலன், அவனை ஜென்ம ஜென்மத்திற்கும் பகவான் விஷ்ணுவின் க்ருபா கடாக்ஷத்திற்கு பாத்திரமாக்கியது. ஆகையால் நாமும் வாழ்நாளில் முடிந்தவரை ஆமலாகீ ஏகாதசி விரதம் மட்டும் அல்லாது அனைத்து ஏகாதசி விரதங்களையும் சிரத்தையுடனும், பக்தியுடனும் அனுஷ்டித்து பகவான் மஹாவிஷ்ணுவின் அருட்கடாக்ஷத்தை வேண்டி நிற்போம்.
-
-
|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

இராமானுஜனே சரணாவிந்தம்!!

நெஞ்சே சொல்லுவோம்
அவன் நாமங்களே...



இராமானுஜனே சரணாவிந்தம்!!

Sunday, March 25, 2018

நூற்றியொட்டு_வரிகளில்_எளிய_தமிழில்_ராமாயணம்

#நூற்றியொட்டு_வரிகளில்_எளிய_தமிழில்_ராமாயணம்

வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணம் ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ராமாயணம் முழுவதையும் படிக்க இயலாதவர்கள் இந்த 108 வரிகளைப் படித்துப் பயன் பெறலாம்.
-
01 அசல நிர்குண ஆத்ம ராமா
02 ஆனந்தப் பாற்கடல் அறிதுயில் ராமா
03 இந்திரன் முதல்தேவர் வேண்டிட ராமா
04 இகத்தில் அசுரரை அழித்திட ராமா
05 பரத லக்ஷ்மண சத்ருக்னர் ராமா
-
-
06 கூடவே பிறந்த தசரத ராமா
07 வில் அம்பு வித்தைகள் பல பயின்ற ராமா
08 யாகமும் தபசும் ரக்ஷிக்க ராமா
09 விசுவாமித்திரன் வேண்டிட ராமா
10 சென்று மந்திரம் கற்றனை ராமா
-
-
11 சுபாஹோடு அசுரர் தாடகை ராமா
12 லக்ஷ்மணனுதவியில் வெட்டிய ராமா
13 முனிவர் துதிக்கத் தங்கிய ராமா
14 மூர்க்கர் அண்டாது காத்தயோ ராமா
15 பாலப் பருவம் கடந்திட்ட ராமா
-
-
16 பக்தன் ஞானி ஜனகன் ராமா
17 மகளா முலகத் தாயவள் ராமா
18 உறையும் நகர்க்கே நடந்தாய் ராமா
19 கல்லாய்ச் சமைத்த காரிகை ராமா
20 அடியின் தூளிபட்டெழுந்தனள் ராமா
-
-
21 மிதிலை ஸ்வயம்வர சபைசேர் ராமா
22 முறித்தே வில்லை ஜயங்கொண்ட ராமா
23 ஜானகி தேவியை மணந்தாய் ராமா
24 பரசுராமன் பலம்பறி ராமா
25 அயோத்தி யடைந்த சுந்தர ராமா
-
-
26 பண்டைப் பகைகூனி தூண்டிட ராமா
27 கைகேயி ஏவலால் தசரதன் ராமா
28 வாக்கைக் காத்திடக் கானகம் ராமா
29 சென்றாய் லக்ஷ்மணனுடன் சீதா ராமா
30 நட்பினால் குஹனைத் தழுவிய ராமா
-
31 முனிவர் ஆச்ரமம் உறைந்தனை ராமா
32 தசரதன் மாளப் பரதனும் ராமா
33 சித்திரக் கூடம் அடைந்தனன் ராமா
34 சுந்தரப் பாதுகை தந்தனை ராமா
35 தென்திசை ஆரண்யம் புகுந்தனை ராமா
-
-
36 முனிவர் பலர்முன் தோன்றினை ராமா
37 துஷ்ட விராதனைக் கொன்றனை ராமா
38 தமிழ்முனி அகஸ்தியர் அருள் பெறு ராமா
39 பஞ்சவடித் தலம் உறைந்தனை ராமா
40 சூர்ப்பநகை பங்கம் அடைந்தனள் ராமா
-
41 கரதூஷணர்கள் அழிந்தனர் ராமா
42 ராவணத் துறவி சீதையை ராமா
43 மாயமாய் அகற்றிட அலைந்தனை ராமா
44 கபந்தன்கை கண்டஞ் செய்தருளிய ராமா
45 அன்புறு சபரிகை விருந்துண்ட ராமா
-
-
46 அநும சுக்ரீவர்க் கஞ்சலாம் ராமா
47 அகந்தை வாலியைக் கொன்றுமே ராமா
48 தம்பிக்கே பட்டம் கட்டினாய் ராமா
49 வானர வீரன் அநுமான் ராமா
50 தூதனாய்ச் செல்ல ஏவின ராமா
-
-
51 கணையாழி அடையாளம் தந்தனை ராமா
52 அங்கத ஜாம்பவர் தேடினர் ராமா
53 ஜடாயுமுன் சம்பாதி சொன்னான் ராமா
54 மஹேந்திரப் பெயருடைமலை மேல் ராமா
55 அடியவன் அநுமான் நின்றான் ராமா
-
-
56 அநுமான் கடலைத் தாண்டினான் ராமா
57 லங்கினி கிழித்து லங்கையுள் ராமா
58 நாமத்தின் மகிமையால் நுழைந்தனன் ராமா
59 அசோகவனத்தில் வணங்கினான் தேவியை ராமா
60 தேவிக்கு மோதிரம் தந்தனன் ராமா
-
-
61 ராவண அரக்கனைத் தூஷித்தே ராமா
62 லங்கை எரித்துத் திரும்பினான் ராமா
63 கண்டேன் சீதையை என்றனன் ராமா
64 தேவியின் முடிமணி தந்தனன் ராமா
65 தேவியின் பிரிவால் புலம்பிய ராமா
-
-
66 வானர சைன்யம் கடற்கரை வந்தது ராமா
67 விபீஷணன் சரணம் அடைந்தனன் ராமா
68 ஆழிக் கணையும் கட்டினை ராமா
69 அணிலும் ஆழிக்கணைக்கு மணலை அளித்து ராமா
70 அரக்கன் கோட்டையைத் தகர்த்தே ராமா
-
-
71 தந்திரன் மேல்போர் தொடுத்தாய் ராமா
72 அநுமான் சஞ்சீவி தந்தனன் ராமா
73 கும்பகர்ணன் தலை வெட்டினை ராமா
74 இந்திரஜித்தன் மடிந்தான் ராமா
75 அஹிமஹி ராவணர் அழித்தபின் ராமா
-
-
76 விடுத்துநின் கூரிய அம்பினை ராமா
77 ராவணன் கவசம் பேதித்த ராமா
78 ராவணன் தலைகளை அறுத்தும் ராமா
79 அழியா முக்தி தந்தாய் ராமா
80 விபீஷணன் முடிசூட்டினை ராமா
-
-
81 கண்டே சீதையை அணைந்தாய் ராமா
82 புட்பக விமானத்தில் திரும்பினை ராமா
83 பரதன் உயிரைக் காத்தனை ராமா
84 அயோத்தி புகுந்து குடிகளை ராமா
85 ஆனந்த வெள்ளத் தாழ்த்தியே ராமா
-
-
86 பட்டாபிஷேகம் கொண்டனை ராமா
87 பாரைப் பரம்செய்து ஆண்டனை ராமா
88 மாயப் பழியது தீர்க்கும் ராமா
89 கருப்பிணி யிருந்து காக்கும் ராமா
90 கவிவரன் வால்மீகி பாடிய ராமா
-
-
91 லவகுசர் தந்தை யாகிய ராமா
92 அசுவ மேதம் நடத்திய ராமா
93 கோமள ஜானகி நாயக ராமா
94 மறைகள் போற்றிடும் மன்மத ராமா
95 பண்புடன் எம்மைக் காக்கும் ராமா
-
-
96 ஞானம் தந்தே நிற்கும்ஓ ராமா
97 துஷ்டர் அழியத் தோன்றிய ராமா
98 நல்லோர் காப்பும் அமைத்தபின் ராமா
99 பன்னக சயனனாய்ச் சென்றாய் ராமா
100 முனிவர் கதையும் முடிந்ததே ராமா
-
-
101 பணிவோர் ஜபிக்கும் நாமத்தோன் ராமா
102 கதிரவ குலத்துத் திலகமே ராமா
103 பயமழி மங்கள புங்கவ ராமா
104 நரஹரி ராகவ நாரண ராமா
105 அற்புத மெய்ச்சுக கைவல்ய ராமா
-
-
106 அநுமானிதயத் துறையும் ராமா
107 ராம ராம ஜய ராஜா ராமா
108 ராம ராம ஜய சீதாராமா.
-
-
|| ----------- 🍀ஓம் நமோ பகவதே வாசுதேவாய🍀 ----------- ||

ஸ்ரீராமர்_அஷ்டகம் (ஸ்ரீ வேதவியாசர் அருளியது)

#ஸ்ரீராமர்_அஷ்டகம் (ஸ்ரீ வேதவியாசர் அருளியது)
-
🍀#பஜே_விசேஷ சுந்தரம் ஸமஸ்தபாப கண்டனம்
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸதைவ ராம மத்வயம்🍀
.
அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.
----------- ----------- ----------- -----------
----------- ----------- ----------- ----------- -----------
🍀#ஜடாகலாப சோபிதம் ஸமஸ்தபாப நாஸனம்
ஸ்வபக்த பீதி பஜ்ஜனம் பஜேஹராம மத்வயம்🍀
.
அழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிக்கிறேன்.
----------- ----------- ----------- ----------- ----------
----------- ----------- ----------- ----------- -----------
🍀#நிஜ_ஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்🍀
.
ஆன்மாவின் வடிவினை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சமநிலையிலிருப்பவரும், மங்களத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.
----------- ----------- ----------- ----------- ----------
----------- ----------- ----------- ----------- -----------
🍀#ஸப்ரபஞ்ச கல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்
நிராக்ருதிம் நிராமயம் பஜேஹ ராமமத்வயம்🍀
.
உலகத்தையே காப்பவரும் நாமரூப மற்றவரும், எப்பொழுதுமுள்ளவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன்.
----------- ----------- ----------- ----------- ----------
----------- ----------- ----------- ----------- -----------
🍀#நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்
சிதேகரூப ஸந்ததம் பஜேஹ ராமமத்வயம்🍀
.
பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், ஒளிமயமானவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.
----------- ----------- ----------- ----------- ----------
----------- ----------- ----------- ----------- -----------
🍀#பவாப்தி போதரூபகம் ஹ்யசேஷ தேஹ கல்பிதம்
குணாகரம் க்ருபாகரம் பஜேஹ ராமமத்வயம்🍀
.
சம்சார சாகரத்தினைக் கடக்க உதவும் தோணி போன்றவரும், எல்லோருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக் கடலும் இணையற்றவருமான ஸ்ரீராமனை போற்றுகிறேன்.
----------- ----------- ----------- ----------- ----------
----------- ----------- ----------- ----------- -----------
🍀#மஹாவாக்ய போதகைர் விராஜமான வாக்பதை
பரப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்🍀
.
மஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாயும், எங்கும் நிறைந்திருப்பவராகவும், இணையற்றவருமாக உள்ள ஸ்ரீராமனை பூஜிக்கிறேன். (பரமசிவன் தேவி பார்வதியிடம் ராம என்ற மகாவாக்கியத்தை மூன்று முறை சொன்னாலே போதும், அது ஆயிரம் திருநாமங்களால் வழிபட்டதற்குச் சமம் என்று கூறியதை நினைவில் கொள்ளலாம்.)
----------- ----------- ----------- ----------- ----------
----------- ----------- ----------- ----------- -----------
🍀#சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம் ப்ரமாபஹம்
விராஜமான தேசிகம் பஜேஹ ராமமத்வயம்🍀
.
நன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனன மரண பயத்தைப் போக்குபவரும், அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆசார்யனாய் பிரகாசிக்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை துதிக்கிறேன்.
----------- ----------- ----------- ----------- ----------
----------- ----------- ----------- ----------- -----------
🍀#ராமாஷ்டகம் படத்ய ஸ்ஸுககரம் ஸீபுண்யம்
வ்யாஸேன பாஷித மிதம் ஸ்ருனுதே மனுஷ்ய
வித்யாம் ஸ்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்திம்
ஸம்ப்ராவ்ய தேஹவிலயே லபதேச மோக்ஷம்.🍀
.
வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, செல்வம், கலை, அளவற்ற சுகம், சர்வமங்களம் மற்றும் மங்காத புகழையடைந்து முடிவில் மோட்சத்தையும் பெறுவார் என்பது நிச்சயம்!
-
ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்
-
|| ----------- 🍀ஓம் நமோ பகவதே வாசுதேவாய🍀 ----------- ||

Saturday, March 24, 2018

சகல_சவுபாக்கியம்_தரும்_ஸ்ரீராமன்

#சகல_சவுபாக்கியம்_தரும்_ஸ்ரீராமன் (#ஸ்ரீராம_நவமி - 25.03.2018)

மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும். மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார். ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், பங்குனி மாதம் வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். அன்றைய தினமே ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.
-
ஸ்ரீ ராமர் பிறந்த போது புனர்பூச நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்தனவாம். அசுரர்களின் கொடுமையிலிருந்து உலகைக் காப்பாற்றும் பொருட்டு மகாவிஷ்ணு ஸ்ரீ ராமராக அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்த முனிவர்களும் தேவர்களும் ஸ்ரீ ராமனின் கர்ப்ப வாசத்தைக் கொண்டாடினர். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) அது கர்ப்போற்சவம் எனப்படுகிறது. ஸ்ரீ ராமர் பிறந்ததைக் கொண்டாடுவது ஜன்மோற்சவம் எனப்படுகிறது.
-
ராம நாமமானது அஷ்டாட்சரமான "ஓம் நமோ நாராயணாய" என்பதில் உள்ள "ரா" என்ற எழுத்தையும், பஞ்சாட்சரமான "நமச்சிவாய" என்ற எழுத்தில் "ம" என்ற எழுத்தையும் சேர்த்து "ராம" என்றானது. ராவணனை அழிப்பதற்காக பூமியில் தோன்றிய ஸ்ரீராமனின் அவதார வரலாறு மகிமை வாய்ந்தது.
-
அயோத்தியை ஆண்டு வந்த தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரா, கைகேயி ஆகிய மூன்று மனைவிகள் உண்டு. தனது புஜ, பல பராக்கிரமத்தால் உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டிய தசரதருக்கு, நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாதது பெரும் மனக் குறையாக இருந்தது. இதுபற்றி தனது குலகுரு வசிஷ்ட மகரிஷியிடம் அவர் கூறினார்.
-
வசிஷ்டரின் ஆலோசனைப்படி, மகரிஷி ருஷ்யஷ்ருங்கர் உதவியுடன் புத்திரகாமேஸ்டி யாகம் செய்தார். அந்த யாகத்தின் விளைவாக யக்னேஸ்வரர் தோன்றி பாயசம் நிறைந்த ஒரு கிண்ணத்தை கொடுத்து, அதை மனைவிகளிடம் கொடுக்கும்படி கூறினார். தசரதர் பாயசத்தை தனது மனைவிகளுக்கு கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவரும் கர்ப்பமுற்றனர்.
-
பங்குனி மாதம் நவமியன்று கோசலை ராம பிரானை பெற்றார். கைகேயிக்கு பரதனும், சுமித்ராவுக்கு லட்சுமணன், சத்ருகனன் ஆகியோர் பிறந்தனர். தசரதனுக்கு புத்திரனாக அவதரித்த ராமன், வசிஷ்டரிடம் வித்தைகளை கற்றார். விஸ்வாமித்திரருடன் சென்று தாடகையை வதம் செய்தார். மிதிலையை அடைந்து வில்லை ஒடித்து ஜானகியை மணம் புரிந்தார்.
-
கூனியின் சூழ்ச்சியால் கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் கானகம் சென்றார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தேடிச் செல்லும் வழியில், வாலியை வதம் பின்னர் சுக்ரீவன், அனுமன் ஆகியோர் உதவியுடன் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று போரில் ராவணனை அழித்து விபிஷணனை இலங்கையின் அரசனாக நியமித்தார்.
-
"குலம் தரும், செல்வம் தந்திடும். அருளோடு பெரும் நிலம் அளிக்கும். பெற்ற தாயினும் ஆயினச் செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன். அது நாராயணா என்னும் நாமம்" என்று திருமங்கை ஆழ்வார் நாராயண நாம மகிமை பற்றி குறிப்பிடுவார்.
-
அ#ஷ்டமியும் #நவமியும் #திருமாலிடம் #கேட்ட_வரம்: "நாளும் கோளும் நலிந்தோருக்கு இல்லை" என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர்.
-
இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீ ராமர் அவதரித்த நவமி ஸ்ரீ ராம நவமி என்றும், ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது.ஸ்ரீ ராமனை ஆஞ்சநேயர், தியாகபிரம்மர், ராமதாசன், துளசிதாசன், கம்பன், வால்மீகி ஆகியோர் பூஜித்து பலன்பெற்றனர்.
-
ஸ்ரீ ராமன் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்கள் முன்பத்து எனப்படும். பிறந்த தினத்தில் இருந்து கொண்டாடப்படும் பின்பத்து நாட்கள் பின்பத்து எனப்படும். பல வைணவ ஆலயங்களில் முன்பத்து, பின்பத்து என சிறப்பாக விழா கொண்டாடுவர். ராமாயணம் படிப்பதும் சொற்பொழிவுகளை செய்வதும் உண்டு. ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து மகிழ்வார்கள்.
-
ஸ்ரீ ராம நவமி விழா பல இடங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.  இந்த நாட்களில் ஸ்ரீ ராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.
-
ஸ்ரீ ராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர் மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீ ராம பிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்ரீராம நவமி உற்சவத்தின்போது வட இந்தியாவில் அகண்ட ராமாயணம் என்னும் பெயரில் துளசி ராமாயணத்தைத் தொடர்ந்து ராகத்துடன் பாடுவர்.
-
ராம நவமியன்று வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீ ராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீ ராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள். ஸ்ரீ ராம நவமியன்று ராம நாமம் சொல்வதும், ராம நாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப் படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. இறை ஞானத்தைத் தூண்டுகிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள்கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
-
சீதையைத் தேடிச் செல்லும்போது ராமனால் வானத்தில் பறக்க இயலவில்லை. ஆனால் அனுமன் ராம நாமத்தை ஜபித்தபடியே விண்ணில் பறந்து இலங்கையை அடைந்தான். அனுமனுக்கு இது சாத்தியமானதற்குக் காரணம் ராம நாமத்தின் மகிமையே ஆகும். "பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராம நாமம். நல்லது அனைத்தின் இருப்பிடமும், இக்கலியுகத்தின் தோஷங்களைப் போக்குவதும், தூய்மையைக் காட்டிலும் தூய்மையானதும்- மோட்ச மார்க்கத்தில் சாதகர்களின் வழித்துணையாகவும், சான்றோர் களின் உயிர் நாடியாகவும் விளங்குவது ஸ்ரீ ராம் என்னும் தெய்வீக நாமம் ஆகும். இவ்வாறு முனிவர்கள் சொல்லுகிறார்கள்'' என சிவபெருமான் பார்வதி தேவியிடம் ராம நாமத்தின் மகிமையை எடுத்துரைப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது.
-
"#நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமவென்ற யிரண்டெழுத்தினால்"
-
என்னும் பாடல் இரண்டெழுத்து மந்திரமாகிய ராம நாமத்தின் மகிமையை விளக்குகிறது. ஸ்ரீ ராம நவமியன்று விரதமிருந்து ஸ்ரீ ராமரை வழிபடுவோர், ஸ்ரீ ராமர் அருளோடு ஸ்ரீ ஆஞ்சனேயர் அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.
-
|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||
-
|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

ஸ்ரீ ராமநவமி

#ஸ்ரீ #ராமநவமி


--
பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே #ஸ்ரீ #ராமாவதாரம்.

ராமர் அவதாரம் எடுத்த நாளையே #ராம #நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர்.
--
அஷ்டமி, நவமி திதிகள் என்றாலே, எந்த ஒரு நல்லக் காரியத்திலும் இறங்காமல், இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, "மக்கள் எங்களை ஒதுக்குகின்றனரே., நாங்கள் என்ன பாவம் செய்தோம்?'' என்று வருந்தினவாம். அதற்கு கருணை வடிவே ஆன இறைவன் "உங்களுக்கும் ஏற்றம் தருகிறேன்
அனைத்து மக்களும் உங்கள் இருவரையும் கொண்டாடச் செய்கிறேன்'' என்று வாக்களித்தாராம்.
--
பகவான் உறுதியளித்தபடி, நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள் அவ்விரு திதிகளையும் கொண்டாடச் செய்தாராம்.
--
ஸ்ரீராம நவமியை, வட மாநிலங்களில் பத்து நாள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தென் பகுதியிலும் வைணவ ஷேத்திரங்களில் உற்சவங்களோடு ராமநவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
--
இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், ராமாயணச் சொற்பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.

ராமநவமி அன்று கடைபிடிக்க வேண்டியவையும் பூஜை செய்யும் விதிமுறைகளும்:

ஸ்ரீராம நவமியன்று வீடுகளில் மாவிலை கட்டுவர் மாக்கோலம் போடுவார்கள்.
ராமநவமி அன்று காலை எழுந்து நீராடி, பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்திற்கு பூச்சூடி, பொட்டு வைத்து பூஜைகள் செய்யப்படும்.

நைவேத்தியங்கள் படைத்து ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும்.

ஸ்ரீராமர் பிறந்தது, நன்றாக அனல் கொளுத்தும் வெய்யில் காலத்தில். எனவேதான் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், பருப்பு வடை கோசம்பரி
விசிறி போன்றவற்றைத் தானமாகக் கொடுப்பதுண்டு.

ஸ்ரீராமர் பிறந்ததை, தசரதர் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாடினார்.

மக்களுக்கு நிறைய தான தர்மங்கள் செய்தார். அதை மனதில் கொண்டு இன்றும் கிராமங்களில் பல வீடுகளில் #நெல் #மணிகளும் #பணமும் வைத்து தானமளிப்பது வழக்கமாக உள்ளது.

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், ராமர் 14 ஆண்டுகள் வன வாசம் இருந்த போதும், நீர் மோரையும், பானகத்தையும் தாக சாந்தியாக அருந்தினாராம். அதனால் ராம நவமியில், ராமனுக்கு #நீர் #மோர், #பானகம் படைப்பது முக்கியம்.

படைத்து, பூஜை கைங்கரியங்கள் செய்வதோடு, ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதும்,ராம நாமத்தை பிறர் சொல்லக் கேட்பதும், ஸ்ரீராமபிரானுடைய திருநாமத்தை எழுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும்.

ராமாயணம் படிக்க இயலாதவர்கள், ஸ்ரீராம.... ஸ்ரீராம என்று சொன்னாலே ராமாயணம் படித்த புண்ணியம் கிடைக்கும்.

அன்று, ஸ்ரீ ராமஜயம் எழுதுவது, மற்றும் உபவாசம் இருப்பது இரண்டும், மிக மிக விசேஷம். அன்று ஒரு நாள் இதைச் செய்வது, 24 ஏகாதசி அன்று செய்வதற்குச் சமம்.
--
#ஸ்ரீ #ராமநவமி

ராம மந்திரம் வாழ்க்கையின் தாரக மந்திரம். ராம நாமம் ஜபித்தோருக்கு முக்தி உண்டு. ராம ஜபத்தை தாண்டி வேறு ஒன்றில்லை. இவை எல்லாம் நாம் அறிந்ததே.

இத்தகைய உயர்ந்த பெரியோனாம் ராமனின் பிறந்த தினமாம் ஸ்ரீ ராம நவமியை நாம் விமரிசையாகக் கொண்டாடுவதும் அதனை பற்றிய சிறப்பு செய்திகளை தெரிந்து கொள்ள விழைவதும் இயற்கைதானே?
--
#ராமனின் #தனித்துவம்
தசரத குமாரனாம் ரகுராமன் ஈடு இணை இல்லாதவர். சிறந்த மகனாக, ஏக பத்தினி விரதனாக, நல்ல தமையனாக, எல்லாம் அறிந்த சான்றோனாக திகழ்ந்தவர்.

தசாவதாரத்தில் ஏழாவது அவதாரமாக மஹா விஷ்ணுவின் அம்சமாக விளங்குபவர்.
--
ராவணனாம் கொடிய அரக்கனை அழிக்கவே மானிட உருவெடுத்து வந்தவர். மனிதனாய்ப் பிறந்தவரைத் தவிர யாராலும் கொல்லப்பட மாட்டான் இராவணன் - இது பிரம்மா அவனுக்கு அளித்த வரம்.

அதற்காகவே இந்த பூமியில் மனிதனாய் பிறந்து, சீதையை மணந்து காவியம் படைத்தவர் ராமன்.
--
ராம காவியங்கள் பல. அவற்றுள் நெஞ்சை அள்ளுபவை கம்பர் படைத்த கம்ப ராமாயணமும் வால்மீகியின் காவியமும். வட இந்தியர்கள் துளசிதாசரின் ராம சரித மானசை வெகுவாகக் கொண்டாடுகிறார்கள்.

#ஸ்ரீ #ராம #நவமி எப்போது கொண்டாடுகிறோம்?

ஸ்ரீ ராம நவமி சித்திரை (மார்ச்-ஏப்ரல்) மாதத்தில் வளர் பிறை நவமி அன்று #புனர்பூசம் நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று கோயில்களில் மேள தாளத்தோடு பூஜைகள் நடத்தப்படுகின்றன. #ரகு #வம்ச #ராஜா தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்து ராமனையும் மற்ற மூவரையும் பிள்ளைகளாக பெற்ற கதை நாம் அறிந்ததே. ராமர் பிறந்த தினமே ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ ராம நவமி அன்று தென் இந்தியாவில் சீதா கல்யாண உத்சவம் நடக்கிறது. வசந்த நவராத்திரியின் கடைசி நாளும் இதே. ஸ்ரீ ராம நவமி ஜாதி மதத்தை தாண்டிய உத்சவம்.

உண்மையை கொண்டாடும் யாரும் ராமனின் பெருமை உணர்ந்தவரே. அதனால் ராமனின் பிறந்த தினத்தை மகிழ்வோடு கொண்டாடுவார்கள். இந்த வருடம் ஸ்ரீ ராம நவமி நாளை கொண்டாடப்படுகிறது.
--
#ராம #நாமத்தின் #மகிமை

ராமா என்னும் மந்திரத்தை சாவின் வாயிலில் உச்சரித்தால் மரணத்தின் பிடியில் கூட நன்மை கிடைக்கும். நரக வேதனை இன்றி வைகுண்ட பதம் கிடைக்கும்.

 இந்த நாமத்திற்கு அப்படி ஒரு மகிமை. என்னவென்று தெரியுமா?
--
ராம என்பதில் ‘ரா’ என்பது நாராயணனைக் குறிக்கும். ’ம’ என்பது மகாதேவனைக் குறிக்கும். இரண்டையும் சேர்த்து சொல்லி பாருங்கள்- ராம. ஆம், இந்த இரண்டு எழுத்துகளை வைத்து நாம் மகாவிஷ்ணுவையும், சிவனையும் தொழுகிறோம்.
--
ர என்ற எழுத்து ரவியைக் குறிக்கும் அதாவது சூரியனைக் குறிக்கும். ராமனோ ரகுவம்சத்தை சேர்ந்தவர். அதாவது சூரிய வம்சத்தை சேர்ந்தவர்.

 ராம மந்திரத்தை சொல்லும் போது சூரியன் நமக்கு சக்தியை அதிகரிக்கிறார். சூரியன் சக்தி வடிவானவர் தானே. அதனால் தான் சில கோவில்களில் ராம நவமி அன்று சூரிய வழிபாடு உண்டு.
--
ராம நாமம் தாரக மந்திரம். மந்திரம் என்றால் சக்தி எனப் பொருள். #தாரக என்றால் நம்மை கரை சேர்க்க கூடியது எனப் பொருள். நம்மை பாபமாகிய சாகரத்திலிருந்து கரை சேர்க்கக்கூடிய தாரக மந்திரமே ராம நாமம்.
--
‘ர’ என்பது அக்னியை சார்ந்த ஒலி. ‘ம’ என்பது அகண்ட தத்துவம். ராம என்று சொல்லும் போது நாம் அக்னி மூலமாக ஒரு ஆஹுதியை அகண்ட பரம் பொருளுக்கு சமர்ப்பிக்கிறோம்.

(ர மற்றும் ம ஒலிகளை நாம் மந்திரங்களில் காண முடியும்- க்ரீம், க்ரூம், ஔம்).
--
ஆக ராம நாமத்தை ஜபித்தால் நமக்கு வாழ்வில் தடை கற்களும் இல்லை, முக்தி நிலை உறுதி, மனதில் அமைதியும் கிட்டும்.

இது மட்டுமா?
--
ராம நாமத்தை உச்சரிப்பதன் பலன் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதற்கு ஒப்பானது

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே.
ராமனின் ஒப்பரிய குணாதிசியங்கள்

ராமன் மரியாதைக்குரியவர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என வாழ்ந்தவர். தாய் அன்பு புரிந்தவர்.

மனைவியிடம் நேசம் கொண்டவர். தனது ராஜ்யத்தை செவ்வனே ஆண்டவர். மக்களுக்காக மனைவியை துறந்தவர். கொள்கைவாதி. எந்த ஒரு சூழ்நிலையையும் கண்டு அஞ்சாதவர்.

தாய் கைகேகி காடு செல்ல மன்னன் உத்தரவிட்டதை கூறிய போதும் அஞ்சாதவர். ராவணன் சீதையை கவர்ந்து சென்றதை கேட்டும் மனம் கலங்காதவர். வானர சேனை கொண்டு ராவண சேனை வென்ற வீர புருஷர்.

வினயத்தின் இருப்பிடம். மானிடனாக அவதரித்த மகாவிஷ்ணு. இப்பெருமானின் பிறந்த தினத்தை கொண்டாடுவதே ஒரு பெரிய பாக்கியம்தானே.
ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாடுகிறார்கள்?

ஸ்ரீ ராம நவமி தினத்தன்று காலையிலேயே கோயில் சென்று ராமனைத் துதித்தால் இம்மையின் பாபம் தொலையும். இன்றைய தினம் துளசி தாசர் மற்றும் வால்மீகி எழுதிய இராமாயண கதையை கூறுபவர்கள் உண்டு. #அகண்ட #ராமாயணம் மற்றும் #சுந்தர #காண்டம் படிப்பவர்கள் உண்டு.

அதை காதால் கேட்டாலே நன்மை. அயோத்தி போன்ற இடங்களில் ரத யாத்திரை உண்டு. அதில் ராம, லக்ஷ்மண, சீதா மற்றும் ஹனுமான் உருவ சிலைகளை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து செல்வார்கள்.
--
ராம நாடகம், பஜனை மற்றும் பாடல்கள் ஸ்ரீ ராம நவமியின் சிறப்பு அம்சங்கள்.

பட்டி தொட்டிகளிலும் ராம கதை தெரிந்த ஒன்று, அதனை பாடிய இதயங்கள் பல உண்டு என்பதால் ஸ்ரீ ராமநவமி அன்று ராம காவியம் பாடாத இதயம் இல்லை. அன்று இறுதியாக வாண வேடிக்கை நடக்கும்.
--
ஸ்ரீ ராம நவமி விரதம் மிக விசேஷமான ஒன்று. ராம நாமம் இம்மையில் நன்மை பயக்கும் இரண்டெழுத்து மந்திரமாக அமையும் போது ராம நவமி விரதம் முக்திக்கு வழி தரும் என்பதில் ஐயமென்ன? இந்த விரதத்தை பகல் வரை இருப்பவர் உண்டு, நடு இரவு வரை காப்பவர் உண்டு.

ஒரு வேளை உணவு உண்பவர் உண்டு. பாலும் பழங்களும் மட்டும் உண்பவர் உண்டு. ராம நவமியின் ஒன்பது நாள் கோலாகலத்தில் ஒன்பது நாளும் விரதமிருப்பவரும் உண்டு.

கோவில்களில் சிறப்பு வழிபாடு

அயோத்தி, ரிஷிகேஷ், ராமேஸ்வரம
கோவில்களில் சிறப்பு வழிபாடு

அயோத்தி, ரிஷிகேஷ், ராமேஸ்வரம் போன்ற கோயில்களில் ராம நவமி மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அயோத்தி ராமம் பிறந்த இடம். அங்கு சென்று சரயு நதியில் குளித்து ராமனை தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

ரிஷிகேஷ் ராம வழிப்பாட்டிற்கு சிறப்பான இடம். அங்கும் பக்தர்கள் திரளாக சென்று ராம நவமி அன்று ராமனை வழிபடுகிறார்கள். ராமேஸ்வரத்தில் கடலில் ஸ்நானம் செய்து இராமநாதரை வழிபடுவதையும் புனிதமாக கருதுகிறார்கள்.

ஸ்ரீ ராம நவமி அன்று ஸ்ரீராமரை ஜபித்து ஆன்ம சக்தியும், மன வளமும், வாழ்வில் உன்னதமும் பெறுவோமாக.

Tuesday, March 20, 2018

ராமாநுஜா ராமாநுஜா என்று சொல்லிப் பாடணும்

Wow wonderful song, I just love the lyrics.. Pls watch https://youtu.be/gMdM8rFgZf0


ராமாநுஜர் வைபவம்
ராமாநுஜா ராமாநுஜா என்று சொல்லிப் பாடணும்
நாவிலே வராது போனால் நல்லவரோடு சேரனும்

ஆண்டான் திருப்பாவையை ஆர்த்தியுடனே பாடணும்
அடியார் குழாங்களுடனே கோஷ்டியாகவே கூடணும்

கெஞ்சிக் கெஞ்சிக் கேட்கணும் தஞ்சம் என்றே பணியனும்
அஞ்சன வண்ணன் பாதத்தில் அடிமையாக புகுரணும் (ராமாநுஜா…)

ஆழ்வார்கள் அவதரித்த நாட்கள் கொண்டாடணும்
அவர் அருளிச் செய்த ப்ரபந்தததை அனுஷ்டானத்துடன் படிக்கணும்

பொய்கையார் பூதத்தார் பேயார் பதின்மர் புகழைப் பாடணும்
பாகவதர் தங்களுக்குப் பணிவிடைகள் செய்யணும்

பல்லாண்டு திருப்பாவையைப் பாடிப் பாடி பார்க்கணும்
பாசுரம் வராது போனால் பாகவதருடனே கூடணும்

ஆழ்வார்கள் பாசுரங்களை அனுஷ்டிக்காமப் போனாலும்..(ராமாநுஜா)
திருவரங்கம் திருப்பதியில் இருப்பில்லாமல் போனாலும் (ராமாநுஜா)

கோயில் திருமலையில் குடியாக இருக்கணும்
கோவிந்தன் நாமங்களை கோஷ்டியுடனே படிக்கணும்

அடியார் குழாங்களுடனே யாத்திரையாகவே செல்லணும்
ஹரி நாம கீர்த்தனைகள் ஆடிப்பாடிப் படிக்கணும்

பாண்டுரங்கன் பஜனை நாமம் பாடியாடாமல் போனாலும்..(ராமாநுஜா)

கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றமென்பதைவிடணும்
கோவிந்தா கோவிந்தா என்று நாம சங்கீர்த்தனம் பாடணும்

ஹரிநாம கீர்த்தனைகள் ஆடிப் பாடமல் போனாலும் (ராமாநுஜா)

ஊரிலேன் காணியில்லை உறவில்லை என்பதை உணரணும்
உற்றார் பெற்றார் சாஸ்வதமில்லை என்று உறுதியாகவே கொள்ளணும்

தந்தை நற்றாய் தாரம்/பதி தனயர் பெருஞ்செல்வம்
எந்தனுக்கு நீயே எதிராசா என்றே வாழணும்

ஹரியில்லாமல் தெய்வமில்லை என்பதை நாம் அறியணும்
ஆழ்வாரருளிய பாசுரத்தால் ஆராய்ந்தே நாம் தெளியணும்

ராமாநுஜர் நாமங்களைப் பாராயணம் செய்யணும்
ரட்சிக்கும் தெய்வமென்று பட்சம் வைத்து வாழணும்

இப்பிறவி தீர்ப்பதற்கு எதிராசன் நாமமே
ஏற்றிப் பணிந்தவர்க்கு மாற்றிடும் இச்சென்மமே

ராமாநுஜா ராமாநுஜா என்று சொல்லிப் பாடணும்


Sunday, March 4, 2018

கோவிந்த நாமாவளி

#ஏடு_கொண்டல_வாடா...
#வேங்கட_ரமணா...
#கோவிந்தா_கோவிந்தா....

ஸ்ரீ நிவாசா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சல கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

நித்ய நிர்மல கோவிந்தா
நீலமேக சியாமா கோவிந்தா
புராண புருஷ கோவிந்தா
புண்டரீகாட்சா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

நந்த நந்தன கோவிந்தா
நவநீத சோரா கோவிந்தா
பசுபாலக ஸ்ரீ கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

துஷ்ட சம்ஹாரா கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரி பாலக கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

வஜ்ர மகுட தாரா கோவிந்தா
வராக மூர்த்தி கோவிந்தா
கோபி ஜன லோல கோவிந்தா
கோவர்த்தன உத்தர கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

தசரத நந்தன கோவிந்தா
தசமுக மர்த்தன கோவிந்தா
பட்சி வாகன கோவிந்தா
பாண்டவ ப்ரியா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

மச்ச கூர்ம கோவிந்தா
மதுசூதன ஹரி கோவிந்தா
வராக நரசிம்ம கோவிந்தா
வாமன பரசுராம கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

பலராமா அனுஜ கோவிந்தா
பெளத்த கல்கி தர கோவிந்தா
வேணுகான ப்ரியா கோவிந்தா
வேங்கட ரமணா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

சீதா நாயக கோவிந்தா
ஸ்ரீதா பரி பாலக கோவிந்தா
தரித்ர ஜன போஷக கோவிந்தா
தர்ம சம்ஸ்தாபக கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

அனாத ரட்சக கோவிந்தா
ஆபத் பாந்தவ கோவிந்தா
சரணாகத வத்சல கோவிந்தா
கருணா சாகர கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

கமலா தளாக்ஷ கோவிந்தா
கமிதா பலதாத கோவிந்தா
பாப விநாசக கோவிந்தா
பாஹி முராரே கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

ஸ்ரீ முத்ராங்கித கோவிந்தா
ஸ்ரீ வத்சாங்கித கோவிந்தா
தரணீ நாயக கோவிந்தா
தினகர தேஜா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

பத்மாவதிப் ப்ரிய கோவிந்தா
ப்ரசன்ன மூர்த்தி கோவிந்தா
அபய ஹஸ்த ப்ரதர்சன கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

சங்க சக்ர தர கோவிந்தா
சாரங்க கதா தர கோவிந்தா
விரஜா தீரஸ்த கோவிந்தா
விரோதி மர்த்தன கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

சகஸ்ர நாமா கோவிந்தா
சரசிஜ நயனா கோவிந்தா
லட்சுமி வல்லப கோவிந்தா
லட்சுமணக்ரஜா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

கஸ்தூரி திலகா கோவிந்தா
காஞ்சனா அம்பரதர கோவிந்தா
கருட வாகனா கோவிந்தா
கான லோலா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

வானர சேவித கோவிந்தா
வாராதி பந்தன கோவிந்தா
ஏக சொருபா கோவிந்தா
சப்த கிரீசா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

ஸ்ரீ ராம கிருஷ்ணா கோவிந்தா
ரகுகுல நந்தன கோவிந்தா
ப்ரத்யட்ச தேவா கோவிந்தா
பரம தயாகர கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

வஜ்ர கவச தர கோவிந்தா
வைபவ மூர்த்தி கோவிந்தா
ரத்ன கிரீட கோவிந்தா
வசுதேவ தனயா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

பரம்மாண்ட ரூபா கோவிந்தா
பக்த ரட்சக கோவிந்தா
நித்ய கல்யாண கோவிந்தா
நீரஜ நாபா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

ஆனந்த ரூபா கோவிந்தா
ஆத்யந்த தரகித கோவிந்தா
இக பர தயகா கோவிந்தா
இபராஜ ரட்சகா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

சேஷ சாயினே கோவிந்தா
சேஷாத்ரி நிலையா கோவிந்தா
ஸ்ரீ நிவாசா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...