Friday, October 4, 2024

 #ராமன்

#திருவயோத்தி


இன்று பாலராமனுக்காக ஒரு பாமாலை. கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான் என்ற மெட்டில் இன்று ராமன் வந்ததை ஒட்டி


#பாடல்


ராமன் வந்தான் பாலராமன் வந்தான்

ராஜனுக்கு ராஜனென்று ராமன் வந்தான்


அயோத்திக்கு அழகுசெய்ய ராமன் வந்தான்

அடியவர்க்கு அருள்பொழிய ராமன் வந்தான்


ஆண்டாண்டு தவம்முடிக்க ராமன் வந்தான்

ஆண்டவன் கோதண்டமேந்தி ராமன் வந்தான்


இன்றெனக்கு வாழ்வுதர ராமன் வந்தான்

இல்லமெல்லாம் இன்பமுற ராமன் வந்தான்


ஈரமுள்ள நெஞ்சிலெல்லாம் ராமன் வந்தான்

ஈரெழுத்து மந்திரமாய் ராமன் வந்தான்


உலகமெலாம் வளம் பெறவே ராமன் வந்தான்

உண்மையதன் பெரும்பொருளாய் ராமன் வந்தான்


ஊழ்வினையை வேரறுத்து ராமன் வந்தான்

ஊர் முழுதும் போற்றிடவே ராமன் வந்தான்


எழில்மிகுந்த கோவில்கொண்ட ராமன் வந்தான்

என் மனதின் ஏக்கம்தீர ராமன் வந்தான்


ஏற்றமுடன் பேரரசன் ராமன் வந்தான்

ஏக்கங்களைத் தீர்த்து வைக்க ராமன் வந்தான்


ஐயனவன் அயோத்தியின் ராமன் வந்தான்

ஐயமற கண்ணெதிரே ராமன் வந்தான்


ஒருவழியாய் தன்னகர்க்கே ராமன் வந்தான்

ஒல்லைகளைத் தீர்த்திடவே ராமன் வந்தான்


ஓதறியப்பரம்பொருளாய் ராமன் வந்தான்

ஓய்வறியா மாதவனாம் ராமன் வந்தான்


ஔடதமாய் பாரதத்தின் ராமன் வந்தான்

அவ்வளவும் எனக்களிக்க ராமன் வந்தான்


Raman 🏹

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...