"நித்யா பூஷா நிகம சிரஸாம் நிஸ் ஸமோத்துங்க வார்த்தா
காந்தோ யஸ்யா: கசவிலுலிதை: காமுகோ மால்ய ரத்னை: |
ஸூக்த்யா யஸ்யா சுருதி ஸுபகயா ஸுப்ரபாதா தரித்ரீ
ஸைஷா தேவீ ஸகல ஜனனீ சிஞ்சதாம் மாமபாங்கை: ” ||
ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம்.
பொருள்:
எந்த நாச்சியாருடைய இணையற்ற உயர்ந்த அருளிச்செயல்கள் வேதங்களின் தலையான பாகமான உபநிஷத்தின் ஆபரணங்களாக ஆகிறதோ, எந்த நாச்சியாருடைய காதலன் (எம்பெருமான்) அவள் குழலில் சூடிக்களைந்த மாலையில் மிகவும் ஆசையுடையவனாய் உள்ளானோ, எந்த நாச்சியாருடைய, வேதம் போன்ற மங்களமான திருவாக்கினால் உலகம் நல்விடிவு பெற்றதாக ஆகிறதோ, அப்படிப்பட்ட லோகமாதாவான ஆண்டாள் நாச்சியார் அடியேனைத் தமது திருக்கண் நோக்கமாகிற அமுதமழையாலே நனைத்தருள வேணும்.
No comments:
Post a Comment