ஸ்ரீ இராம ஜெயம்
🙏🌹💧🩸🔆☀️☀️🌲🙏💢🙏
🙏அயோத்தி ஸ்ரீராமனுக்கு காப்பு🙏
திருவடியே ஒரு வழியாய் நின்றோம் - இன்று
ஸ்ரீராமனருளால் திருக்கோயில் கண்டோம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் பலகோடி நூறாயிரம் -அவன்
திருவடிக்கு காப்பென்று நாம் பாடுவோம் திருநாமம் ஓராயிரம்
தயரதனின் மகனாக அவதாரம் செய்தான் -இன்று
அடியார்கள் தவத்தாலே புதிதாக வந்தான்
வனவாசம் கண்டான் ஈரேழு ஆண்டு -அவன்
கோயில் நாம் காண பல நூறு ஆண்டு
தர்மத்தின் வடிவாக தயரதன் ராமனைப் பெற்றான் -அந்த
தர்மத்தின் வழி நின்று அவன் கோயில் பெற்றோம்
சீதையை மீட்டான் ஸ்ரீராமன் அன்று - இன்று
அயோத்தியை மீட்டோம் அவனருளைக் கொண்டு
இராமனின் அருளாலே நாம் கூடி நின்றோம் -அந்த
ராமராஜ்யம் இன்று நாம் கண்டோம்
ஸ்ரீராமஜயம் என்று நாம் எழுதி வந்தோம் -அந்த
ஸ்ரீராமனின் ஜயம் இன்று நாம் கண்டோம்
பாதுகையோ அயோத்தி அரசையாண்டது -திரு
பாதமோ அகலிகை சாபம் அன்று தீர்த்தது -உன்
சாரங்கமோ சீதையின் சிறையிருப்பை மீட்டது -உன்
ஒரு நாமமோ எங்களை நாளும் காத்து நிற்கின்றது
சரணாகதியை சொல்ல வந்தவன் -தன்னை
சரணடைந்தாரைக் காத்து நிற்பவன்
ராமானுஜனை நமக்குத் தந்தவன் -இன்று
ராமராஜ்யம் நம்மைக் காண வைப்பவன்
உன்னையே நீ வணங்கும் திரு அரங்கம் - நீ
பதின்மரையம் பாட வைத்த திவ்யப் பிரபந்தம் -அவர்
பாடல் கேட்க நீ இருக்கும் திவ்யதேசம் -திரு
அயோத்தியே ஸ்ரீராமனின் திவ்யதேசம்
அகிலத்தை காக்கின்ற பரம் பொருளாவை -இன்று
ஆலயத்தின் கல்லெல்லாம் கருவாவை -நீ
பிரகலாதனை காக்க வந்த உருவாவை- ஸ்ரீராமனே
திவ்ய தேசம் காக்க நரசிங்க உருவாவை
No comments:
Post a Comment