Saturday, April 3, 2021

வள்ளி நாயக ஷண்முகனே பாடல்

 ஓம் சரவணபவ

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

வள்ளி நாயக ஷண்முகனே
வடிவேல் ஏந்திடும் ஷண்முகனே

வைத்தியநாதன் திருமகனே
வரமதை வழங்கிடும் குருபரனே

தையல் நாயகி மகிழ் மகனே
ஐயன் எனையாள் ஆறுமுகனே

வழிபடும் அடியவர் வாழ்ந்திடவே
வழங்கிடுவாய் நல்ல அருள்தனையே

குமரா முருகா குருபரனே
குறைகளை எல்லாம் தீர்ப்பவனே

கருணையைப் பொழிந்திடும் கந்தனே வா
கதிதனைத் தந்திட வா வா வா

பக்தியைத் தந்திட வா வா வா
குருபரனே வா வா வா

ஆண்டருள் செய்வாய் ஆறுமுகா
ஆதரித் தருள்வாய் ஆறுமுகா

பாடும் பணியே பணியாக
பார்த்தருள் புரிவாய் பரம்பொருளே

தொழுவார் துயர்களைத் துடைத்திடவே
தோகை மயிலில் வந்திடுவாய்

வறுமையும் பிணியும் போக்கிடுவாய்
வாழ்வில் நலமே வழங்கிடுவாய்

துன்பங்கள் எல்லாம் துடைத்திடுவாய்
இன்பங்கள் எல்லாம் ஈந்திடுவாய்

ஆடிடும் மயிலில் அமர்ந்திடுவாய்
அமைதியும் இன்பமும் அருளிடுவாய்

நாட்டில் நலங்கள் பெருகிடவே
நல்லருள் தன்னை நல்கிடுவாய்

தெய்வ நலங்கள் பெருகிடவே
தெய்வமே நல்லருள் தந்திடுவாய்

உன்னை வணங்கிடும் உத்தமர்கள்
உலகினில் உயர்ந்திடச் செய்திடுவாய்

குமரா என்றுனைக் கும்பிடுவோர்
குடும்பம் தழைக்கச் செய்திடுவாய்

ஓம்முருகா🙏🙏🙏

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...