Sunday, November 22, 2020

நல்ல புத்தி இன்றே கொடு நரசிம்மா !

நரம்பு தளர்ந்து வீழும்போதும் நரசிம்மா - உந்தன் 

நாமம் சொல்ல நாக்கு கொடு நரசிம்மா
நமன் வந்து கவ்வும்போதும் நரசிம்மா - உந்தன் 

நாமம் நினைக்க நினைவு கொடு நரசிம்மா
நரகம் புகும் நிலையிலேயும் நரசிம்மா - உந்தன் 

நாமம் நிலைக்க நல்லருள் செய் நரசிம்மா
நன்மை அடியேன் செய்ததில்லை நரசிம்மா - உந்தன் 

நாமம் நவில நல்லருள் செய் நரசிம்மா
நாளை என்பதுன்னிடத்தில் ஏது - நரசிம்மா 

நல்ல புத்தி இன்றே கொடு நரசிம்மா !

🙏🏼🙇🏾‍♂️🙏


No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...