Monday, November 23, 2020

ஸ்ரீ பகவதி அம்மன் பாடல்

 ஸ்ரீ பகவதி அம்மன் பாடல் 


குலதெய்வமே அம்ப பகவதி 
நெய்யாட்டின்காரா அம்ப ஸ்ரீ பகவதி 
பக்தர் குறை தீர்க்கும் பரமேஸ்வரி - எங்கள் 
குலதெய்வமே அம்ப ஸ்ரீ பகவதி 

குலதெய்வமே அம்ப பகவதி 
நெய்யாட்டின்காரா அம்ப ஸ்ரீ பகவதி 
பக்தர் குறை தீர்க்கும் பரமேஸ்வரி - கீழ
முத்தார அம்மனே ஸ்ரீ பகவதி 
குலதெய்வமே அம்ப பகவதி 

அழகாக ஈசனுடன் ஆடும் ஈஸ்வரி/பகவதி 
அகிலமே கொண்டாடும் ஆதி பராசக்தி நீ  
குலதெய்வமே அம்ப பகவதி 
நெய்யாட்டின்காரா அம்ப ஸ்ரீ பகவதி 
குலதெய்வமே அம்ப பகவதி 

நான்மாட குடலிலே உறையும் மீனாக்ஷி நீ 
நன் எனும் அகந்தையை அழிக்கும் காமாஷி நீ 
நாவார பட மகிழும் பகவதியே - எங்கள் 
குலதெய்வ நாயகியே தருவாய் உன் காட்சியே 

குலதெய்வமே அம்ப பகவதி 
நெய்யாட்டின்காரா அம்ப ஸ்ரீ பகவதி 
பக்தர் குறை தீர்க்கும் பரமேஸ்வரி - கீழ
முத்தார அம்மனே ஸ்ரீ பகவதி 
குலதெய்வமே அம்ப பகவதி 

- நித்யா கல்யாணராமன்
 ( ஆண்டாள் பக்தை )

Sunday, November 22, 2020

நல்ல புத்தி இன்றே கொடு நரசிம்மா !

நரம்பு தளர்ந்து வீழும்போதும் நரசிம்மா - உந்தன் 

நாமம் சொல்ல நாக்கு கொடு நரசிம்மா
நமன் வந்து கவ்வும்போதும் நரசிம்மா - உந்தன் 

நாமம் நினைக்க நினைவு கொடு நரசிம்மா
நரகம் புகும் நிலையிலேயும் நரசிம்மா - உந்தன் 

நாமம் நிலைக்க நல்லருள் செய் நரசிம்மா
நன்மை அடியேன் செய்ததில்லை நரசிம்மா - உந்தன் 

நாமம் நவில நல்லருள் செய் நரசிம்மா
நாளை என்பதுன்னிடத்தில் ஏது - நரசிம்மா 

நல்ல புத்தி இன்றே கொடு நரசிம்மா !

🙏🏼🙇🏾‍♂️🙏


Sunday, November 8, 2020

மரணத்திற்கு பின் ஜீவன் எங்கே போகிறது?

 மரணத்திற்கு பின் ஜீவன் எங்கே போகிறது?


#சனாதன_தர்மம்_சாஸ்திரம்.

ஒரு ஜீவன் மரித்த மூன்று நாள் வரை நீரிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும் அடுத்த மூன்று நாட்கள் ஆகாயத்திலும் வசிக்கிறது.

இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தன் வீட்டிற்கு துக்கம் கேட்கப்போவோர் வருவோரை பார்த்துக்கொண்டு நிற்கிறது.

10வது நாளில் நம் வீட்டிற்குள் அந்த ஜீவன் வருகிது. ஆகவே தான் பத்தாம் நாள் காரியம் முக்கியம் என இந்து சாஸ்திரம் கூறுகிறது.

11வது 12வது நாளில் நம்மால் கொடுக்கப்படும் பிண்டத்தை உண்கிறது.

13வது நாள் தான் யம கிங்கரங்கள் கயிற்றால் இந்த ஜீவனை கட்டி இழுத்துச்செல்ல தன் வீட்டை பார்த்து கதறிய வண்ணம் நாள் ஒன்றுக்கு 247 காத தூரம் பகலிலும் இரவிலும் செல்கிறது.

இவ்வாறு நடந்து செல்லும்பொழுது அந்த ஜீவனுக்கு பசி தாகம் அதிகம் ஏற்படும் பசியோடு நடந்து செல்லும் அந்த ஜீவன் மாதத்தில் ஒரு நாள் அதாவது அந்த ஜீவன் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்க அனுமதி அளிக்கப்படும்.

ஆகவே ஒரு ஜீவன் இறந்த பின் ஒவ்வொரு மாதமுமம் இறந்த திதியன்று மாசிகாபிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க உங்களை வாழ்த்தும்.

இவ்வாறு 12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு ஆண்டு காலம் நடந்து செல்லும் அந்த ஜீவன் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் யமபுரத்தை அடைகிறது.

உடலிலிருந்து நீங்கி ஆன்மா யமபுரிக்கு செல்வதற்கு ஓர் ஆண்டு காலம் பிடிப்பதால் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம் சுபகாரியம் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஒரு ஜீவன் பாவம் செய்திருப்பின் கர்மத்தால் ஆகிய சரீரம் பெற்று யமபுரம் செல்கிறது. அந்த ஜீவன் புண்ணியம் செய்திருப்பின் சூரிய மண்டலம் மார்க்கமாக பிரம்மலோகம் செல்கிறது.

எளிய முறையில் சரணாகதி விளக்கம்...

மாட்டு வண்டிக்கு உயிர் இல்லை

மாட்டுக்கு உயிர், அறிவு இரண்டும் உண்டு ஆனால்...

வண்டிக்காரன் உயிரில்லாத வண்டியை....அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..

எந்த இடம் செல்ல வேண்டும்..என்பதை தீர்மானித்து,வண்டியை செலுத்துவான்.

எவ்வளவு தூரம்...எவ்வளவு நேரம்...எவ்வளவு பாரம்..அனைத்தையும் தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே!

#அறிவிருந்தும்.. சுமப்பது தானாக இருந்தாலும்
மாட்டால் ஒன்றும் செய்ய இயலாது...

#அதுபோல.. உடம்பு என்ற ஜட வண்டியை
ஆத்மா, உயிர் என்ற மாட்டுடன் பூட்டி

இறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான்....

அவனே தீர்மானிப்பவன்.அவன் இயக்குவான்..மனிதன் இயங்குகிறான்

எவ்வளவு காலம்..எவ்வளவு நேரம்..
எவ்வளவு பாரம்.. தீர்மானிப்பது இறைவனே

இதுதான் நமக்காக இறைவன் போட்டிருக்கும் டிசைன்..!

#இதுதான்

இறைவன் நமக்கு தந்திருக்கும் அசைன்மென்ட்..!

இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..

இதை உணராதவனுக்கு அமைதி இல்லை.

இருக்கும் காலங்களில் இனியது செய்வோமே!.

ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

 ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். 


நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம்.

நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.

நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.

நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.

எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.

தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.

பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.

நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.

உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.

சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.

சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்.

சமாதானம் செய்யுங்கள்.

நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .

மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...

இவரைப்பற்றி பேசினாலே நல்லநேரம் வந்துடும்..

 இவரைப்பற்றி பேசினாலே நல்லநேரம் வந்துடும்


 ‌எங்கு சென்றாலும் நல்ல செய்தியைக் கொண்டு சேர்ப்பதில் வல்லவராக ஆஞ்சநேயர் விளங்கினார். 

அவரைப் பற்றி ஒருவர் பேசுகிறார் என்றாலே, அவருக்கு நல்லநேரம் பிறந்து விட்டதாக அர்த்தம். 

முதன்முதலில் சுக்ரீவனுக்கு ராமனின் வரவைத் தெரிவித்ததன் மூலம், சுக்ரீவனின் மனைவி அவனுடன் சேரக் காரணமானார்

அசோகவனத்தில் சிறை இருந்த சீதைக்கு கணையாழியைக் கொடுத்து ஆறுதல் அளித்ததன் மூலம், ராமனுடன் அவள் சேரக் காரணமானார். 

கிஷ்கிந்தையில் இருந்த ராமருக்கு சீதையின் சூளாமணியை அளித்து நற்செய்தி சொன்னதன் மூலம், அவரது உயிர் பிரியாமல் பாதுகாத்தார்.

 அவர் வாயுவின் பிள்ளை என்பதால், பலரது மூச்சுக்காற்று தொடரச் செய்வதில் சிரமமா என்ன! இந்திரஜித் விடுத்த நாகபாணத்தால் லட்சுமணன் மயங்கிக் கிடந்தபோது, தக்கசமயத்தில் சஞ்சீவி மலையைத் தாங்கி வந்து உயிர் கொடுத்தார். 

ராவண சம்ஹாரம் முடிந்தபின் "ஸ்ரீராமஜெயம்' என்னும் வெற்றிச் செய்தியை சீதைக்கு எடுத்துச் சொல்லி மகிழ்ச்சிக்கடலில் திளைக்கச் செய்தார். 

ராமனைச் சகோதரனாக ஏற்றுக் கொண்ட குகனிடம், ராமனின் வருகையை எடுத்துரைத்தார். 

அயோத்தின் எல்லையில் நந்திக்கிராமத்தில் இருந்த பரதனிடம் வனவாசம் முடிந்து ராமன் நாடு திரும்புவதை எடுத்துரைத்தார்.

 இப்படி ராமாயணத்தில் ஆஞ்சநேயர் செல்லும் இடமெல்லாம் நல்லசெய்தியை வழங்குவதைக் காணலாம்.


ஸ்ரீராமஜெயம் ராமா ராமா ராமா ராமா ராமா

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...