Sunday, October 11, 2020

உலகத்திலேயே நல்லவன் யார் தெரியுமா?..

 ● உலகத்திலேயே நல்லவன் யார் தெரியுமா?..


🙏🙏🙏கிருஷ்ண பரமாத்மா உணர்த்திய அற்புத நபர் இவர் தான்...

நல்லவர்களோடு இருக்கக்கூடிய நல்லவனை விட, கெட்டவர்களுடன் இருக்கக்கூடிய நல்லவன் தான் மிகவும் மேலானவன் என்பதை கிருஷ்ண பரமாத்மா உணர்த்தியுள்ளார்.

●உக்கிரமாக மகாபாரத போர்...

மகாபாரதப் போர் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று போரின் 14ம் நாள். மிக கவலை தோய்ந்த முகத்துடன் கிருஷ்ண பரமாத்மா இன்று ஒரு மிகவும் நல்லவன் கொல்லப்படுவான் என்றார். உடனே அனைவரின் கண்களும் தர்மன் பக்கம் சென்றது. தர்மன் தான் இறக்கப்போகிறார் என நினைத்து அனைவரும் கவலையில் ஆழ்ந்தனர்.

ஆனால் அதைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் கிருஷ்ணர் போர்க்களம் நோக்கி தேரை செலுத்தினார். அவரை மற்ற போர் வீரர்கள் பின்தொடர்ந்தனர்.

● ​பீமனை எதிர்த்த விகர்ணன்...

கெளரவர்கள் 100 பேரை தான் கொல்வேன் என சபதம் ஏற்றிருந்தான் பீமன். அன்று பீமன் முன் வந்து நின்றவன் விகர்ணன். பாஞ்சாலியின் துகிலுரிக்கப்பட்ட போது, அந்த அரங்கத்தில் இது மாபெரும் தவறு என கண்டித்து அறங்காவலனாக நின்றான். ஆனால் அவன் சொல்வதை துரியோதனும், சகுனியும் கேட்கவில்லை

அதை நினைவு கூர்ந்த பீமன், என் எதிரில் நிற்காமல் அப்பால் போய்விடு என பணிக்கிறான். ஆனால் அதை விகர்ணன் மறுக்கிறான். உன் நல் உள்ளத்தை கண்டதால் என் கதை கூட உன்னை கொல்ல விரும்பாது அதனால் இங்கிருந்து சென்றுவிடு என எச்சரிக்கிறான். இல்லையென்றால் எங்கள் பக்கம் வந்து விடு என அழைக்கிறார். ஆனால் விகர்ணனோ இல்லை நான் என் அண்ணனுக்காகச் சண்டையிடுகிறேன் என்றான்.

● நல்லவனை கொன்ற பீமன்...

விகர்ணனுடன் வேண்டா வெறுப்பாக சண்டையிடுகிறான் பீமன். தான் ஒரு பெரும் வீரன் என்பதை பீமனுக்கு உணர்த்தினான். சமாளிக்க முடியாத பீமன் இல்லை இவனை தன் கதை முடித்தால் தான் முடியும் என்பதை உணர்ந்தான்.

அதனால் தன் கதாயுதத்தை ஓங்கி வீசினான். விகர்ணனும் உயிர்விட்டு வீழ்ந்தான்.

● யார் நல்லவன்?...

விகர்ணனை கொன்றதால் ஆர்ப்பரித்தனர் பாண்டவர்களின் படை. அங்கு வந்த கிருஷ்ண பரமாத்மா கூறினார், “நல்லவர்களோடு இருக்கும் நல்லவனை விட, கெட்டவர்களுடன் இருக்கும் நல்லவன் தான் மேலானவன். விகர்ணனும் அப்படிப்பட்டவன் தான்” என்றார்.

அதாவது கெட்ட எண்ணங்களுடன் இருக்கும் கௌரவர்களின் பக்கம் இருந்த விகர்ணன், அவர்களின் தவறான செயலை சுட்டிக் காட்டி நல்லவன் என்பதை உணர்த்தினான்.

● விகர்ணன் எனும் நல்லவன்...

அதே போல் தங்கள் பக்கம் வந்து விடு உனக்கு பதவி தருகிறேன் என அழைத்த போதும் கூட அதை ஏற்க மறுத்து சண்டையிட்டான். அதுவும் அவனின் சுய பகை கிடையாது, சுய கெளரவமும் கிடையாது. மாறாக எதையும் எதிர்பார்க்காமல், தன் அண்ணனுக்காக மட்டும் களத்தில் இறங்கிச் சண்டையிட்டு உயிர் துரந்துள்ளான்.

விகர்ணனை விட இந்த உலகில் யார் தான் நல்லவனாக இருந்துவிட முடியும் சொல்லுங்கள் என்றார்.

கிருஷ்ணரின் கூற்றை கேட்ட தர்மரும், பாண்டவர்களும் மனமொத்து ஏற்றுக்
கொண்டனர்.

● விகர்ணன் தந்த ​நீதி:

தான் நல்லவன், தான் செய்வதன் அர்த்தம் இது தான் என நல்லவன் என காட்டிக்கொள்ளப் பல நாடகங்களை நடத்தி வெளியில் மதிக்கப்படுகின்ற நல்லவர்களை விட, எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல், தன் மனதுக்கு எது சரி, தர்மம் என்று படுகிறதோ அதை தான் செய்வதோடு, தன் குடும்பத்தினர், நண்பர்கள் செய்ய விரும்புபவராக, கண்டித்து நல்வழி காட்டுபவராக இருக்கிறாரோ அவரே எல்லா இடத்திலும் நல்லவர்.

விளம்பரம் கொடுத்து நல்லவன் என காட்டிக் கொள்பவர்கள் பலர் இருக்க, விகர்ணனைப் போல பல நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

🙏நல்லவன் வாழ்வான்🙏

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...