Sunday, April 26, 2020

திருமாலிஞ்சோலை அழகன் துதி

திருமாலிஞ்சோலை அழகன் துதி

கோவிந்தா ஹரி கோவிந்தா!!!
கோவிந்தா ஹரி கோவிந்தா!!!
.
துணையுண்டு நீயடா கோவிந்தா - இனி
துயரங்கள் ஏதடா கோவிந்தா.
.
காசு பணம் வேண்டாமே கோவிந்தா - உந்தன்
காலடி போதுமே கோவிந்தா.
.
எண்ணமெல்லாம் நீயடா கோவிந்தா - என்
எல்லாமும் நீயடா கோவிந்தா.
.
கொஞ்சல் சிரிப்பாலே கோவிந்தா - நெஞ்சில்
தஞ்சம் புகுந்தோனே கோவிந்தா.
.
தடையேதும் இல்லையடா கோவிந்தா - உன்னை
தரிசனம் செய்தாலே கோவிந்தா.
.
மகிமைகள் செய்வோனே கோவிந்தா - உன்
மலையேறி வருவோமே கோவிந்தா.
.
திருநாமம் சூடினோம் கோவிந்தா - நிந்தன்
திருமேனி தரிசித்தோம் கோவிந்தா.
.
சொக்கிகிக் கிடப்போமே கோவிந்தா - இனி
சொர்க்கம் என வேண்டுமோ? கோவிந்தா.
.
வாழ்கை செழிக்கிதடா கோவிந்தா - உன்னை
வணங்கிப்போனாலே கோவிந்தா.
.
மறுபடியும் வருவோமே கோவிந்தா - வண்ண
மலர் பூத்த மாறோனே கோவிந்தா.
.
கோவிந்தா ஹரி கோவிந்தா!!!
கோவிந்தா ஹரி கோவிந்தா!!!


No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...