மற்றுமோர் தெய்வ முண்டே? மதியிலா மானிடங்காள்!
உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்று உணர மாட்டீர்
அற்றமே லொன்றறியீர் அவனல்லால் தெய்வமில்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே.
ஆபத்துக் காலங்களில் மட்டும் அவனை நம்புகிறீர்கள்!
மற்ற தருணங்களில் அவனை நினைப்பதில்லை!! மனிதர்களே!
கண்ணனைத் தவிர வேறு ஒரு தெய்வமுண்டோ?
வேதத்தின் சாரமே அவன்தான்! அவனன்றி தெய்வமில்லை!
ஆதலால் அவனது திருவடிகளில் சரணடையுங்கள்!!
No comments:
Post a Comment