Saturday, March 28, 2020

சௌசீல்யம்

சௌசீல்யம்

ஸ்ரீராமனுக்குச் சளைத்தவளா சீதாப்பிராட்டி ?

அயோத்தி அரண்மனையில் ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது ‘அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த…‘ என்று கம்பர் வர்ணித்தபடி அனைவரும் ஆவலுடன் தொண்டாற்றினர். அனுமன் சிங்காதனத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருந்தார். அவர் தனக்குச் செய்த பேருதவியை நினைத்த சீதை அவருக்கு இந்த சமயத்தில் ஏதாவது பரிசளிக்க வேண்டும் என்ற உறுதி கொண்டு, இந்திரன் தனக்கு அனுப்பியிருந்த முத்து மாலையைக் கைகளில் ஏந்திக் கொண்டு தன் அரியாசனத்திலிருந்து எழுந்து பல அடிகள் நடந்து வந்து அனுமனை அணுகி, ராமனிடம் கண் ஜாடையால் அனுமதி பெற்று, அனைவரும் வியக்க அனுமனுக்குப் பரிசாக அளித்தாள். ஒரு ராணி தன் தொண்டன் இருக்குமிடம் சென்று பரிசளித்து தான் சௌசீல்யம்

யாருக்கும் மதிப்பளித்துப் பழகுவதே சௌசீல்யம்.

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...