இடையூற்றுக்கும் இடையூறு உண்டு.
எந்த நல்ல காரியத்துக்கும் இடையூறுகள் குறுக்கிடுவது உண்டு. பெரிய பெரிய காரியங்களுக்குப் பெரிய பெரிய இடையூறுகள் வந்து குறுக்கிடுவதையும் காண்கிறோம். எனவே இக்கன்னியருள் ஒருத்தி இத்தகைய கேள்வி ஒன்றை எழுப்பினாள். 'நாம் நெடுநாளாகச் செய்திருக்கும் பிழைகள் பாவங்கள் எல்லாம் இன்று நாம் செய்யக் கருதும் இந்த நல்ல காரியத்துக்கு இடையூறு விளைக்கலாமே!' என்றாள். அந்த இடையூறுகளை யெல்லாம் அநாயாசமாகத் தொலைத்து எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிப்பதற்கு ஒரு ராஜ வழி இருக்கிறது என்கிறாள் விசேஷ நம்பிக்கையுள்ள ஒரு பெண்.
சுருங்கச் சொன்னால், நாம ஸங்கீர்த்தனம் பண்ணுவதே அந்த வழி என்கிறாள். பகவத் நாம ஸங்கீர்த்தனமும் பண்ணிக் காட்டுகிறாள். அது தீயாகிப் பாவங்களை யெல்லாம் நீறாக்கிவிடும் என்கிறாள்.. நாம ஸங்கீர்த்தன வழிக்கு ஒரு முன்மாதிரியாகவும் பேசுகிறாள். "மாயனை" என்று தொடங்குகிறாள். 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' என்று பாடுகிறாள்.
மேலும் நாம ஸங்கீர்த்தனம் செய்கிறாள். யமுனைத் துறைவன் என்கிறாள். ஆயர்குல மணி விளக்கு என்கிறாள். தாமோதரன் என்கிறாள். இவை பொருள் பொதிந்த பெயர்கள் மட்டுமல்ல, பொருள் புதைந்த பெயர்களும்கூட. முதல் முதல் மாயன் என்ற பெயரைத்தான் பாருங்கள்: இறைவனுடைய வழிகளும் செயல்களும் மாயமானவை – அதாவது ஆச்சரியமானவை.
'வடமதுரை மைந்தன்' என்ற திருப்பெயரைப் பாருங்கள், இவன் பிறக்கும்போதே தாய் தந்தையர்களின் கால் விலங்குகள் இற்று முறிந்து போய் விட்டனவாம்
ஆயர்குல விளக்கு என்று பெயரிட்டு அழைப்பதிலும் புதை பொருள் உண்டு. வேதம் ஓதியும் காண முடியாத கடவுளை மாடு மேய்த்துக் கண்டுகொண்டார்களாம் ஆயர்கள். மறைக்கு முன்னே சென்று மறைந்தவன் மாட்டுக்குப் பின்னே ஆய்ப்பாடி காண நடந்து சென்றானாம். இத்தகைய எளிமையை உணர்த்துகிறது இப்பெயர்.
'தாமோதரன்' என்ற பெயரின் பொருள் மேலும் விசேஷமானது. 'கயிற்றுத் தழும்பை வயிற்றில் உடையவன்' என்பது இப் பெயரின் பொருள். தன் பிறப்பினால் பெற்ற வயிற்றுக்குப் பெருமை தந்தான்; தன் வயிற்றுத் தழும்பினால், தாயை வாழ்வித்தான்; உலகையும் வாழ்வித்தான்.
இப்போது செய்ய வேண்டியது, அகத் தூய்மையுடன் நாம ஸங்கீர்த்தனம் செய்யவேண்டியதுதான். அகத் தூய்மைக்கு அறிகுறியாகத் தூய மலர்களையும் தூவித்தொழுது பேறுபெறக் கூடும் என்கிறாள். எல்லாவற்றுக்கும் மேலாக, "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க" பிழையும் பாவமும் நீறாகிவிடும் என்கிறாள். சாம்பலுமின்றி மாய்ந்து போகும் என்பதையும் குறிப்பாக உணர்த்துகிறாள்.
முன்பு செய்த பிழைகள் மட்டுமா? – இனிமேல் நம்மை அறியாமல் நேரிடத்தக்க பாவங்களும் தீய்ந்து போகும் என்கிறாள்.
எந்த நல்ல காரியத்துக்கும் இடையூறுகள் குறுக்கிடுவது உண்டு. பெரிய பெரிய காரியங்களுக்குப் பெரிய பெரிய இடையூறுகள் வந்து குறுக்கிடுவதையும் காண்கிறோம். எனவே இக்கன்னியருள் ஒருத்தி இத்தகைய கேள்வி ஒன்றை எழுப்பினாள். 'நாம் நெடுநாளாகச் செய்திருக்கும் பிழைகள் பாவங்கள் எல்லாம் இன்று நாம் செய்யக் கருதும் இந்த நல்ல காரியத்துக்கு இடையூறு விளைக்கலாமே!' என்றாள். அந்த இடையூறுகளை யெல்லாம் அநாயாசமாகத் தொலைத்து எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிப்பதற்கு ஒரு ராஜ வழி இருக்கிறது என்கிறாள் விசேஷ நம்பிக்கையுள்ள ஒரு பெண்.
சுருங்கச் சொன்னால், நாம ஸங்கீர்த்தனம் பண்ணுவதே அந்த வழி என்கிறாள். பகவத் நாம ஸங்கீர்த்தனமும் பண்ணிக் காட்டுகிறாள். அது தீயாகிப் பாவங்களை யெல்லாம் நீறாக்கிவிடும் என்கிறாள்.. நாம ஸங்கீர்த்தன வழிக்கு ஒரு முன்மாதிரியாகவும் பேசுகிறாள். "மாயனை" என்று தொடங்குகிறாள். 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' என்று பாடுகிறாள்.
மேலும் நாம ஸங்கீர்த்தனம் செய்கிறாள். யமுனைத் துறைவன் என்கிறாள். ஆயர்குல மணி விளக்கு என்கிறாள். தாமோதரன் என்கிறாள். இவை பொருள் பொதிந்த பெயர்கள் மட்டுமல்ல, பொருள் புதைந்த பெயர்களும்கூட. முதல் முதல் மாயன் என்ற பெயரைத்தான் பாருங்கள்: இறைவனுடைய வழிகளும் செயல்களும் மாயமானவை – அதாவது ஆச்சரியமானவை.
'வடமதுரை மைந்தன்' என்ற திருப்பெயரைப் பாருங்கள், இவன் பிறக்கும்போதே தாய் தந்தையர்களின் கால் விலங்குகள் இற்று முறிந்து போய் விட்டனவாம்
ஆயர்குல விளக்கு என்று பெயரிட்டு அழைப்பதிலும் புதை பொருள் உண்டு. வேதம் ஓதியும் காண முடியாத கடவுளை மாடு மேய்த்துக் கண்டுகொண்டார்களாம் ஆயர்கள். மறைக்கு முன்னே சென்று மறைந்தவன் மாட்டுக்குப் பின்னே ஆய்ப்பாடி காண நடந்து சென்றானாம். இத்தகைய எளிமையை உணர்த்துகிறது இப்பெயர்.
'தாமோதரன்' என்ற பெயரின் பொருள் மேலும் விசேஷமானது. 'கயிற்றுத் தழும்பை வயிற்றில் உடையவன்' என்பது இப் பெயரின் பொருள். தன் பிறப்பினால் பெற்ற வயிற்றுக்குப் பெருமை தந்தான்; தன் வயிற்றுத் தழும்பினால், தாயை வாழ்வித்தான்; உலகையும் வாழ்வித்தான்.
இப்போது செய்ய வேண்டியது, அகத் தூய்மையுடன் நாம ஸங்கீர்த்தனம் செய்யவேண்டியதுதான். அகத் தூய்மைக்கு அறிகுறியாகத் தூய மலர்களையும் தூவித்தொழுது பேறுபெறக் கூடும் என்கிறாள். எல்லாவற்றுக்கும் மேலாக, "வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க" பிழையும் பாவமும் நீறாகிவிடும் என்கிறாள். சாம்பலுமின்றி மாய்ந்து போகும் என்பதையும் குறிப்பாக உணர்த்துகிறாள்.
முன்பு செய்த பிழைகள் மட்டுமா? – இனிமேல் நம்மை அறியாமல் நேரிடத்தக்க பாவங்களும் தீய்ந்து போகும் என்கிறாள்.
No comments:
Post a Comment