Monday, November 26, 2018

ஸ்ரீரங்கம்

#ஸ்ரீரங்கம்

பரவாசுதேவரைக் கண்டேன்
பரமபத வாசலைக் கண்டேன்

கிளி மண்டபம் கண்டேன்
கிழக்கே தன்வந்திரி கண்டேன்

ஆழியான் சன்னதி கண்டேன்
ஆண்டாள் சன்னதியும் அருகில் கண்டேன்

யதிராஜன் சன்னதி கண்டேன்
யதுகுல நந்தன் சன்னதி கண்டேன்

காகுத்தன் சன்னதி கண்டேன்
கண்டாவதாரம் சன்னதி கண்டேன்

மேட்டழகியசிங்கர் சன்னதி
 கண்டேன்
நிகமாந்த தேசிகன் சன்னதி கண்டேன்

ரங்க நாச்சியார் சன்னதி கண்டேன்
ரம்யமான சந்திர புஷ்கரணி கண்டேன்

வான் முட்டும் கோபுரம் கண்டேன்
வணங்கினேன் அழகிய சிங்கரை

அரங்கன் சன்னதி கண்டேன்
அத்புத அழகனை அங்கு கண்டேன்

அஞ்சு குழி மூணு வாசல் கண்டேன்
அகங்காரத்தை இங்கே விட்டு வந்தேன்

சப்த ப்ராகாரம் சுற்றி வந்தேன்
சகல பாபம் தொலைத்து விட்டு வந்தேன்

No comments:

Post a Comment

 அபூர்வ ஸ்லோகம் ராமன் பட்டாபிஷேகத் திருநாளில் அவ்விருவரையும் போற்றி அனுமன் பாடிய ஸ்தோத்திரத் தொகுப்பு இது.  இந்த ஸ்லோகங்களை முடிந்தபோதெல்லாம...